Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி தமிழ்த்தேசிய அரசியலில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் சிங்களப் பேரினவாத அரசின் கோரப் பற்களைப் பிடுங்குவதற்காக சர்வதேச சமூகம் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்ற நிலையில் அதன் தீவிரத் தன்மையையும் கடந்து அவுஸ்திரேலியா சிட்னியில் ஒரு குழுவினர் மிகத் தீவிரமாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பணியினை செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்துகின்ற மிக முக்கிய குழுவாக தம்மை அறிவித்துக்கொள்கின்ற அமைப்பு ஒன்று இந்த நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருகின்றது.

அந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டிருப்பது எதற்காக என்று ஆராய்ந்தால் அது “பண்ணையாரும் பத்மினியும்” என்ற தென்னிந்திய சினிமாப் படத்தினை திரையிடுவதற்கு மக்களைத் திரட்டுவதற்காக என்ற பதிலே கிடைத்திருக்கிறது.

குறித்த அமைப்பின் பெயர் சர்வதேச ரீதியாக குறிப்பாக புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகப் பலம்வாய்ந்த ஒரு சொற்பதமாக நிகழ்காலத்தில் கொள்ளப்படுகின்ற போதிலும் அவுஸ்திரேலியாவில் குறிப்பாக சிட்னியில் தென்னிந்திய சினிமாவான “பண்ணையாரும் பத்மினியும்” திரைப்படத்தினை திரையிடும் நடவடிக்கைக்காக அந்த அமைப்பின் பொறுப்பாளரும் அவருடைய பரிவாரங்களும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர் என்ற கசப்பான உண்மை அரங்கேறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் எமது தமிழினத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட இன அழிப்பு என்ற மிகப் பெரிய கொரூரத்தினை அரங்கேற்றியுள்ள நிலையில் அதற்கான அறுவடைக்களமாக, காலத்தின் பதிலாக ஜெனீவா திகழும் என்று சர்வதேசமும் தமிழ் மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற ஜெனீவாவின் சிங்கள அரசுக்கான மற்றொரு நெருக்கடிக் காலம் நெருங்கியிருக்கின்றது. சிங்கள அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மிகத் தீவிரமாக அனைத்து முயற்சிகளையும் முடுக்கிவிட்டிருக்கின்றது. நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் வெளிவிவகார அமைச்சர் வரையில் ஒவ்வொரு நாடுகளின் கதவுகளையும் தட்டத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களின் முயற்சிகள் வீண் போகவில்லை குறிப்பாக ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வழமைபோலவே தமது ஆதரவினைத் தெரிவித்திருக்கின்றன. அந்த நாடுகளின் தொடராக அவுஸ்திரேலியாவும் இலங்கைக்கு முண்டுகொடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை அவுஸ்திரேலியா வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும் வெப்பியாரத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் தமிழின அழிப்பு மேற்கொண்டிருந்த போதிலும் அதனை மூடி மறைப்பதற்காக மேற்கொள்கின்ற பொய்ப்பரப்புரை நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான வலுவான எதிர்பரப்புரை நிலைப்பாட்டினை எம்மவர்கள் அந்த நாட்டில் கொண்டிருக்கவில்லை. அல்லது அதற்கான முனைப்பு நிலைப்பாடு போதாது என்பதையும் அந்த அரசு இவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க முற்படுவதற்கான ஒரு காரணமாகவும் கருத இடமுண்டு. இந்த இடத்தில் தான் ஜெனீவாக் களம் நெருங்கிவரும் சூழலில் “பண்ணையாரும் பத்மினியும்” திரையிடும் நடவடிக்கையில் சிட்னியைத் தளமாகக் கொண்டு செயற்படும் குறித்த அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

சிட்னியை தளமாகக் கொண்டு செயற்படுகின்ற குறித்த அமைப்பு மேற்கொள்ளும் சினிமா திரையிடுதல் அதன் மூலம் பணம் ஈட்டுதல் நடவடிக்கைக்கு சொல்லிக் கொள்கின்ற காரணம் மிகுந்த வேதனை தருகிறது. வன்னியில் இறுதிப் போரில் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காகவே தாம் சினிமா திரையிடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை ஏற்கனவே சேர்க்கப்படுகின்ற பணம் தமிழர் தாயகத்தில் மாற்றுவலுத் தேவை உடையவர்களுக்காக வழங்கப்படுவதாகத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பண வசூலிப்புக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் உதவிகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்ற போது பாதுகாப்பு என்பதைக் காரணமாகக் காட்டிக்கொண்டு நிதி நடவடிக்கைகள் அனைத்தும் மூடி மறைக்கப்படுகின்றன. நெருங்கிய குடும்ப உறவினர்களை முக்கியஸ்தர்களாகக் கொண்டு செயற்பட்டுவருகின்ற குறித்த அமைப்பு நிதித் தேவையினை மட்டுமே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றதா? என்று எண்ணத் தோன்றும் வகையிலேயே செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

தாயகத்தில் உள்ள விசேட உதவி தேவை உள்ளவர்களுக்கான உதவிகளை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்ற ஈழத்தமிழ்க் குடும்பங்கள் தாமே பொறுப்பெடுத்து மாதா மாதம் வழங்கி வந்திருக்கின்றன. இன்றும் பல குடும்பங்கள் வழங்கி வருன்றன. ஆனாலும் குறித்த அமைப்பின் உதவிகள் யாருக்கு வழங்கப்படுகின்றன என்பது தொடர்பிலான சரியான வெளிப்படைத்தன்மையை குறித்த அமைப்புக் கொண்டிருக்கவில்லை. இது தொடர்பில் கேள்வி எழுப்ப யாராவது தமிழ்த் தேசியவாதிகள் முற்பட்டால் அவர்களை தேசத் துரோகிகளாகச் சித்திரித்துவிடுவதையே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை தமிழ்த் தேசியம் சார்ந்து பொதுவாக முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள், தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான போராட்டங்களுக்கு மக்களைச் செல்லவிடாமல் தடுத்தல் போன்ற இழிவான செயற்பாடுகளையும் குறித்த அமைப்பினர் முன்னெடுத்துவருகின்றனர்.

இதைவிட யார் யார் எமது விடுதலைக்காக உண்மையாக அர்ப்பணிப்பாகச் செயற்படுகின்றார்களோ? அவர்களை துரோகிகளாக சித்திரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக உலகத்தமிழர் பேரவைத் தலைவர் மதிப்புக்குரிய இம்மானுவேல் அடிகளார் அவர்கள் அவுஸ்திரேலியாவிற்கான பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் பங்குகொண்டிருந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு ஈழத்தமிழ் உணர்வாளர்கள் பலர் தடுக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு தடுக்கப்பட்டதற்கான காரணம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது நாங்கள் குறிப்பிடுகின்ற குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்த பதில் “இம்மானுவேல் அடிகளார் இலங்கை அரசாங்கத்திடம் பணம் பெற்றுவிட்டார்” என்பதாக அமைந்திருக்கின்றது.

அதேவேளை தாயகத்தில் இறுதிப் போருடன் வாழ்ந்து அதன் பின்னரும் தற்போது வரையில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு ஊடகப் பணி செய்துவரும் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எழுதிய நாவல் ஒன்று அவுஸ்திரேலியாவில் அண்மையில் வெளியாகியிருந்தமை தெரிந்ததே. குறித்த நாவலுக்கான மதிப்புரை பெறுவதற்காக தமிழகத்தில் இருக்கின்ற தமிழக உணர்வாளர் ஒருவரையும் தமிழகத்தில் வாழ்ந்து வரும் மற்றொரு ஈழத்து எழுத்தாளரையும் தொடர்பு கொண்ட போது குறித்த நாவலை எழுதியவரும் நாவலை வெளியீடு செய்யும் இணையத்தளத்தில் பணி செய்பவர்களும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த முயற்சியினை மேற்கொண்டவரும் இதே சிட்னி அமைப்பின் பொறுப்பாளர்தான் என்பது கால ஓட்டத்தில் அம்பலமாகியிருந்தது. அதேவேளை அந்த நாவல் வெளியீட்டு விழாவில் மக்களைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதிலும் அந்தப் பொறுப்பாளரும் அவரின் பரிவாரங்களும் தீவிரம் காட்டியிருந்த போதிலும் இறுதியில் அது வீண்போயிருந்தது. நிகழ்வு வெற்றிகரமாக அமைவதை அறிந்த அந்த அமைப்பின் பொறுப்பாளர் இறுதி நேரத்தில் தம்மை நிலைநிறுத்தும் நோக்கில் நிகழ்விற்கு வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினை உண்மையாக ஆழமாக நேசிப்பவர்கள் எவருக்கும் துரோகிகள் பட்டம் வழங்கி வைக்கும் அதிகாரத்தினை தமிழீழ விடுதலைப்புலிகள் யாருக்கும் கொடுக்கவில்லை. தேசியத்திற்காக உண்மையாக உழைப்பவர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வழியில் பயணிக்கலாம். காலம் நேரம் சரியாக வரும் போது நேர்மையாக மக்களின் விடுதலைக்காகப் பயணித்தவர்கள் ஒரு கோட்டில் சந்திப்பார்கள் என்பதை வரலாறு வெளிப்படுத்தி நிற்கும் என்பதை ஆணித்தரமாக சொல்லிவைக்க விரும்புகிறோம்.

இன்று “பண்ணையாரும் பத்மினியும்” திரைப்படம் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகின்ற அந்தக் குழுவிற்கு இன்னொரு விடயமும் கண்ணுக்குத் தெரியவில்லை என்று கடல் கடந்து ஆஸியில் தஞ்சத்துக்காக ஏங்கும் இளைஞர்களும் யுவதிகளும் அங்கலாய்க்கின்றார்கள்.

சிங்கள அரசின் கோரப்பிடியில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக பல்லாயிரம் கடல் மைல்களைக் கடந்து நோய், உணவின்மை, கடற்காற்று, கொடும் மழை அனைத்தையும் கடந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஆஸி மண்ணில் ஏறிவிட்டோம் எங்களுக்கு இனி நின்மதியாக மூச்சுவிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடும் என ஏங்கித் தவிக்கும் இளையோருக்காக அவர்களை அந்த மண்ணில் இருந்து திரும்ப நாடுகடத்தாமல் தடுப்பதற்கான எந்த முயற்சிகளையும் குறித்த அமைப்பு முன்னெடுப்பதில்லை. கடந்த வாரமும் 54 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசு நாடு கடத்தியது. தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை நாடு கடத்துவதற்கான முனைப்புக்களில் அந்த நாடு தீவிரம்காட்டி வருகின்றது. இலங்கையில் இருந்து சென்று தங்களுக்கான குடியுரிமையை எந்த வகையில் பெற்றுக்கொள்ளலாம்? என்று ஏங்கித் தவிக்கும் அந்த உறவுகளுக்கு சட்ட ரீதியாக உதவுவதற்கோ, அதற்கான ஆலோசனை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ இந்த அமைப்பு முன்வருவதில்லை என்றும் தம்மை ஒரு எதிரிகளைப் போலவே அந்தக் குழுவினர் பார்ப்பதாகவும் அந்த இளையோர் அங்கலாய்க்கின்றனர்.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் தமிழ்ச்சினிமா திரையிட்டு பணம் ஈட்டும் நபர்கள் உண்மையில் அந்த மக்களுக்கு உதவுவதாக இருந்தால் அதற்கு வேறு மார்க்கங்களைக் கண்டுகொள்ளலாமே தவிர இவ்வாறான வழிகளை கையிலெடுக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளதா? என்பதற்கு அந்தக் குழுவிடம் பதில் உள்ளதா? இன்று ஜெனீவாக் களம் நெருங்கி வரும் சூழலில் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என வலியுறுத்தி ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தினைக் கூட நடத்துவதற்கு அவர்களால் முடியாதா? அல்லது அவர்களின் பின்னால் வேறு ஏதாவது நிகழ்ச்சி நிரல் உள்ளதா? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்-

www.tamilleader.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.