Jump to content

அது சரி... நீங்கள் எப்போ உயரமாக இருப்பீர்கள்?


Recommended Posts

காலையிலா, சாயங்காலத்திலா நீங்கள் உயரமாக இருப்பீர்கள்? இப்படி உங்களிடம் ஓர் கேள்வி கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? முதலில் இது என்ன முட்டாள் தனமான கேள்வி என்று கேட்டு விட்டு, „இரு நேரத்திலும் அதே உயரமாகத் தான் இருப்பேன்“ என்று தானே பதில் சொல்வீர்கள்? சரி, உங்களால் நம்ப முடியாத, முட்டாள் தனமான இந்த விடயத்தை நீங்களே சோதித்துப் பாருங்கள். காலையிலும், சாயங்காலத்திலும் உங்கள் உயரத்தை ஒரு முறை அளந்து பாருங்கள். வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்கள்! ஆம், இந்த விடயம் முற்றிலும் உண்மை தான்! நாம் சாயங்காலத்தில் விட காலையில் சில சென்டி மீட்டர்கள் உயரமாகத் தான் இருப்போம். இந்த அறிவு டோஸில் அதற்கு என்ன காரணம் என்பதை அறியத் தருகின்றேன். 

அது வேறு ஒன்றுமே இல்லை: பொதுவாக எமது முள்ளந்தண்டு, எலும்புகளால் மட்டும் அமைக்கப் படவில்லை. அதில் intervertebral discs என்று அழைக்கப்படும் முள்ளெலும்பிடையான வட்டுகள் காணப்படுகின்றன. இந்த வட்டுகள் எலாஸ்டிக் (elastic) பஞ்சுகள் போன்று வளைந்து நெளிந்து எமது உடல் அசைவுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் இரவில் தூங்கும் போது பஞ்சு போன்ற இந்த வட்டுகள், எமது உடலில் உள்ள நீர்மத்தை (liquid) உறிஞ்சி எடுத்து விடுகின்றன. பின்னர் காலையில் நாம் தூக்கம் கலைந்து எழுந்ததும், இரு விடயங்கள் நடைபெறுகின்றன: முதலாவதாக நாம் நடந்து திரிந்து, விளையாடி, வேலை செய்யத் தொடங்கி விடுகின்றோம். இரண்டாவதாக நாம் எமது இரு கால்களிலும் நிற்கத் தொடங்கியதும், எமது முள்ளந்தண்டில் புவி ஈர்ப்பு விசை செலுத்தப் படுகிறது. இந்த இரு செயல்பாட்டாலும் அந்த வட்டுகளில் உறிஞ்சி எடுக்கப்பட்ட நீர்மம் நேரம் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப் படுகின்றது. அதன் விளைவாக எமது முள்ளந்தண்டின் உயரம் குறைந்து விடுகின்றது. அத்துடன், எமது உடலின் உயரமும் குறைந்து விடுகின்றது. இதை எதிர்பார்த்து இருப்பீர்களா…? 

சரி, உங்கள் உயரம் எப்போதுமே ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால், கவலையே வேண்டாம்! பேசாம ஒரு ஏவூர்தியில் (rocket) விண்வெளி சென்றுவிடுங்கள். ஏனென்றால், அங்கே ஒரு ஈர்ப்பு விசையுமே இருக்காது! உங்கள் விண்வெளிப் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவதற்கு NASA, ESA, ISRO போன்ற விண்வெளி முகமைகளை நாடவும்!

 

 

http://www.arivu-dose.com/எப்போ-உயரம்/

 

 

0025.jpg

 

 

இந்த அறிவு டோஸ் பிடித்ததா?  உங்கள் கருத்துகளை தாராளமாகத் தெரிவியுங்கள்   :).

 

-- நிரோஷன் தில்லைநாதன் --

 

 

Link to comment
Share on other sites

அறிவு டோஸ் அசத்துது.. :D

விண்வெளிக்குச் சென்று வருபவர்கள் உயர்ந்து வருவார்கள் என கிறிஸ் ஹாட்ஃபீல்ட் சொன்னதாக ஞாபகம்.

அதுபோல போர் விமானங்களில் இருந்து துரிதகதியில் வெளியேறுவது (Ejection) உயரம் குறைவதற்குக் காரணமாக அமையுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிரோஷ், உங்களது சில பதிவுகளை வாசித்துப் பார்த்தேன்.
நல்ல சுவராசியமாக உள்ளது. தொடர்ந்து... எழுதுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறையச்  சொல்லுங்கள் , நல்ல விடயங்கள்...! :)

Link to comment
Share on other sites

அறிவு டோஸ் அசத்துது.. :D

விண்வெளிக்குச் சென்று வருபவர்கள் உயர்ந்து வருவார்கள் என கிறிஸ் ஹாட்ஃபீல்ட் சொன்னதாக ஞாபகம்.

அதுபோல போர் விமானங்களில் இருந்து துரிதகதியில் வெளியேறுவது (Ejection) உயரம் குறைவதற்குக் காரணமாக அமையுமாம்.

 

மிக்க நன்றி இசைக்கலைஞன் :). நீங்கள் கூறிய தகவல்களுக்கும் நன்றி.  இதை நான் இன்று வரை அறிந்ததில்லை! 

 

 

நிரோஷ், உங்களது சில பதிவுகளை வாசித்துப் பார்த்தேன்.

நல்ல சுவராசியமாக உள்ளது. தொடர்ந்து... எழுதுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளேன். :)

 

இப்படி ஊக்குவிப்பதற்கு நன்றி தமிழ் சிறி  :)

 

நிறையச்  சொல்லுங்கள் , நல்ல விடயங்கள்...! :)

 

என்னால் முடிந்ததைத் தருகிறேன் suvy  :). நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
    • வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது! யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1400407
    • அஸ்வத்துடன் ஒரு ஆறுதல் ......!   👍  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.