Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீஷெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கினார் மகிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
சீஷெல்ஸ் நாட்டின் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கினார் மகிந்த! 
[saturday, 2014-03-22 17:16:07]
mahinda-rajapaksa-220314-150.jpg

சீஷெல்ஸ் நாட்டிலுள்ள தீவு ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சீஷெல்ஸ் நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படாத 100க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு நிறுவனங்களுக்கும் வழங்க அந்நாடு தீர்மானித்துள்ளது. அவற்றில் ஒன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த தீவு கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவுகள், ஆப்பிரிக்க கண்டத்திற்குரிய நாடாகும்.

  

செல்வந்த நாடாக சீஷெல்ஸ் தீவுகளில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இலங்கை சேர்ந்த பலர் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர்.இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் சுருட்டப்பட்ட பெருந்தொகை பணத்தை ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதன் நிலை அதிகாரிகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக சீஷெல்ஸ் நாட்டின் ஜனாதிபதி கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீஷெல்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த பயணத்தின் போது பிரசாலின் என்ற தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, உலகில் மிகவும் அரிய வகை பறவை இனமான கறுப்பு கிளிகளை எடுத்து வந்து, அலரி மாளிகையில் வளர்த்து வந்தார். அவற்றில் ஒன்று அண்மையில் பறந்து சென்று விட்டதால், அதனை தேடிக் கண்டுப்பிடிக்க பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1700 ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பியர் சீஷெல்ஸ் தீவுகளை கைப்பற்றும் வரை அந்த தீவு அரேபிய மற்றும் ஆசியா இடையில் பயணிக்கும் கப்பல்களை கொள்ளையிடும் கொள்ளையர்களின் புகலிடமாக இருந்து வந்தது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=106232&category=TamilNews&language=tamil

"1700 ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பியர் சீஷெல்ஸ் தீவுகளை கைப்பற்றும் வரை அந்த தீவு அரேபிய மற்றும் ஆசியா இடையில் பயணிக்கும் கப்பல்களை கொள்ளையிடும் கொள்ளையர்களின் புகலிடமாக இருந்து வந்தது."

2014 இலும் ஒரு மாற்றமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"1700 ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பியர் சீஷெல்ஸ் தீவுகளை கைப்பற்றும் வரை அந்த தீவு அரேபிய மற்றும் ஆசியா இடையில் பயணிக்கும் கப்பல்களை கொள்ளையிடும் கொள்ளையர்களின் புகலிடமாக இருந்து வந்தது."

2014 இலும் ஒரு மாற்றமும் இல்லை.

 

பலபடி  முன்னேற்றம்

அவர்கள்  அந்தப்பகுதியில்

கடற்கொள்ளையில் மட்டும்.......... :( 

  • கருத்துக்கள உறவுகள்

"கடல் கொள்ளையன் நாட்டை பகல் கொள்ளையன் வாங்கினான்" ...இதுவே இங்கு தலைப்பு... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

"கடல் கொள்ளையன் நாட்டை பகல் கொள்ளையன் வாங்கினான்" ...இதுவே இங்கு தலைப்பு... :huh:

 

உண்மைதான்

 

தனக்கென்று ஒரு  நாடுள்ள  ஒருத்தன் இன்னொரு நாட்டை  வாங்கி  உருவாக்குகின்றான்

 

ஆனால்  தனக்கென்று எங்குமே ஒரு நாடில்லாத்தமிழன் இப்படி ஒன்றை  இதுவரை வாங்கவில்லை

முயற்சித்தார்கள்

ஆனால் முடிவு தெரியவில்லை

வாங்கணும்

அதற்கு நாமெல்லாம் பங்குதாரராகவேண்டும்.............

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.