Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்பதுகளை நோக்கி; அரச பயங்கரவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது 1983ஆம் ஆண்டுக்கு முன்னைய சில வருடங்கள்! அது தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரச பயங்கரவாதம் தன் கோரக்கரங்களை விரித்து வேட்டையாடிய காலம்!

திடீரென அதிகாலையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்படும். சில இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்! இவர்களில் சிலர் காணாமல் போவதுண்டு. சிலர் சித்திரவதை செய்யப்பட்டு சிறை செய்யப்படுவர்.

வீதிகளில் இராணுவ ரோந்து அணி செல்லும்; திடீரென துப்பாக்கிகள் முழங்கும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் நடமாடியோர் செத்து விழுவர். சில சமயங்களில் வீதியருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் சுடப்படுவர். எந்த வீடுகளும் தீக்கிரையாக்கப்படும்.

வீட்டில் இருந்தாலும் வீதியில் போனாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை! மரணங்கள் மலிந்த நிலமாக தமிழர் தாயகம். இந்த நிலையில் தான் விடுதலைப்புலிகளின் துப்பாக்கிகள் உயர்ந்தன.

வீதிகளில் கண்ணிவெடிகள் முழங்கின. இராணுவ ரோந்து அணிகள் சிதறின.

இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது.

எனினும் எறிகணைகளும் விமானக் குண்டுகளும் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்தன. ஆனால் அவற்றிலிருந்து மக்களை பதுங்கு குழிகள் பாதுகாத்தன.

ஆனால் வீடு வீடாக நடத்தப்படும் இராணுவ வேட்டை தடுத்து நிறுத்தப்பட்டது. கைதுகளும் சித்திரவதைகளும் நிறைவேற்றப்பட முடியாது திணறின.

இப்போ 2009இல் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு -

மெல்ல மெல்ல அரச பயங்கரவாதம் மீண்டும் தமிழர் தாயகம் எங்கும் முளைவிட ஆரம்பித்தது.

ஜெனீவாவில் இலங்கை அரசு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் இவ் வேளையில் மீண்டும் அரச பயங்கரவாதம் தன் மனித குல வேட்டையை ஆரம்பித்தது.

அன்று அரச பயங்கரவாதத்தை தட்டியடக்க விடுதலைப்புலிகள் இருந்தனர். இன்று அவர்கள் இல்லாத வெற்றிடத்தில் மீண்டும் இப்போது அரச பயங்கரவாதத்தின் வெறியாட்டம்.

புனர்வாழ்வுக்கு அகப்படாமல் தப்பிப் போய்விட்ட கோபி என்ற முன்னாள் விடுதலைப் புலியைத் தேடுகிறார்களாம். அவருக்கு உதவி செய்த நவநீதனையும் தேடுகிறார்களாம்.

காட்டிக் கொடுப்பவர்களுக்கு பரிசு பத்து இலட்சமாம்.

கோபி என்பவரும் கஜதீபனும் ஒருவரா அல்லது கோபி என்ற கற்பனைப் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்க கஜதீபன் பலிக்கடாவாக்கப்பட்டாரா? என்பது எவராலும் புரிந்து கொள்ள முடியாத மர்மம்.

கோபி என்பவர் தேடப்படுகிறார் என்ற போர்வையில் காணாமற் போன மகனின் தாயான ஜெயகுமாரியும் சகோதரியான விபூஷிகாவும் இருந்த வீட்டின் முன்பாக பொலிஸ் வாகனம் வந்து நிற்கிறது. வீட்டிற்குள் மறைந்திருந்த கோபி ஒரு பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்பட்டது.

ஜெயகுமாரி இப்போது பூசா தடுப்பு முகாமில். மகள் விபூஷிகா சிறுவர் இல்லத்தில்.

உண்மையில் இலக்குவைக்கப்பட்டது ஜெயகுமாரியா? அல்லது கோபி என்பதா கேள்வி. ஏராளமான பொலிஸார் துப்பாக்கிகளுடன் நின்ற இடத்தில் கோபி வயல்வெளிகளுடாக எப்படி ஓடித்தப்பினார் என்பது தான் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி.

எப்படியோ இப்போது சனல் – 4 ஊடகத்திற்குத் தான் அச்சுறுத்தப்படுவதாகப் பேட்டி வழங்கிய ஜெயகுமாரி இப்போ ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சாட்சியமளிக்க முடியாத வகையில் புசாவில் தடுத்துவைக்கப்பட்டுவிட்டார்.

எனினும் ஜெயகுமாரியின் கைதை நியாயப்படுத்த அடுத்தடுத்த அரச பயங்கரவாத வேட்டை அவிழ்த்துவிடப்பட்டுவிட்டது.

தப்பியோடியதாகக் கூறப்படும் கோபி கஜதீபனாகி இப்போ பத்து இலட்சம் விலையில் தேடப்படுவோர் பட்டியலில். அடுத்தடுத்து முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களில் சுற்றிவளைப்புக்கள்; தேடுதல் வேட்டைகள்!

இதுவரை 3 பெண்கள் உட்பட பதினொரு பேர் கைது! அதில் முன்னாள் போராளியான புனர்வாழ்வு பெற்ற பேக்கரி தொழிலாளியும் ஒருவர்.

அதனைவிடவும் வவுனியாவில் குழந்தைகள் உட்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களில் கோலோச்சிய தேடுதல் வேட்டை யாழ்.மாவட்டத்துக்கும் விரிவாக்கப்பட்டுவிட்டது.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதி சுற்றிவளைக்கப்பட்டு இருபத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களல்லவாம். எனவே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாம்.

விசாரணையின் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனராம்.

கோபியைத் தேடி வட்டுக்கோட்டையிலும் வேட்டை. அகப்பட்டவர்கள் அப்பாவிகள்.

இனியும் அவர்களுக்கு கோபியும் அப்பனும் பல இடங்களிலும் மறைந்திருப்பதாகத் தகவல்கள் கிடைக்கும். இனி அடிக்கடி சுற்றிவளைப்புக்களும் கைதுகளும் மேற்கொள்ளப்படும்.

மீண்டும் 1983இற்கு முன்னைய நிலை உருவாக்கப்படும்.

மக்கள் மட்டுமன்றி, மக்களின் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கையும் காணாமற் போய்விடும்.

ஜெனீவாவில் வடக்கில் மீண்டும் விடுதலைப்புலிகள் அணி திரள்கிறார்கள் எனவும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வடக்கில் இராணுவம் பலப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாத தேவை எனவும் ஒரு கதை அவிழ்த்துவிடப்படும்.

ஜெனீவா கூட்டத் தொடரை முன்னிட்டு வேறு சில கருமங்களும் நடைபெறுகின்றன.

அனுராதபுரம் இராணுவப் பயிற்சி முகாமில் பெண் இராணுவத்தினரை முறைகேடாக நடத்தியமைக்காக சில இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை!

பெலியத்தவில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி ஒரு சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தாது 38 நாட்கள் தடுத்துவைத்தமைக்காகப் பதவி நீக்கம்.

அதாவது இலங்கையில் தவறு செய்யும் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களாம். அப்படியாயின் நேர்மையான நிர்வாகம் இங்கு நடைபெறுகிறதாம்.

ஆனால் வடக்கில் புலிகள் மீண்டும் அணி திரள்வதாலேயே சுற்றிவளைப்புக்களும் கைதுகளும் இடம்பெறுவதாக ஜெனீவாவில் கூறப்படும். அதற்காகத்தானே எல்லாமும்!

இப்படியாக சர்வதேசத்தை ஏமாற்றி தமது இராணுவப் பயங்கரவாதத்தை நிலைநாட்டி இன, ஒடுக்குமுறையை மேற்கொள்ள இப்படி ஒரு தொடர் நாடகத்துக்குப் பல அங்கங்கள்.

இதில் ஜெயகுமாரி தொடக்கம் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களும் தேடப்படுபவர்களும் இனிக் கைது செய்யப்படுபவர்களும் பலியாடுகள் ஆக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இப்பெரும் சூழ்ச்சி சர்வதேச அரங்கில் சரியான முறையில் வெளிப்படுத்தப்படுத்தப்படாதுவிட்டால் தமிழ் மக்கள் 1983க்கு முற்பட்ட காலம் போன்று பல இன்னல்களை அனுபவிக்கவேண்டிவரும் என்பதை எமது தமிழ்த் தலைமைகள் உணரவேண்டும்.

இன்னமும் இராஜதந்திரம், தந்திரோபாயம் எனக் கூறி தங்களின் சரணடைவு நடவடிக்கைகளைத் தொடர்வதை தமிழ்த் தலைமைகள் நிறுத்தவேண்டும்.

எமக்கு உதவி செய்பவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சில சக்திகளின் கையில் நாம் ஆட முடியாது. எமது உறுதியான நிலைப்பாடும் அர்ப்பணிப்புக்களுக்கு அஞ்சாத திடசித்தமும் எமக்கு உதவும் சக்திகளின் முயற்சிகளுக்குச் சரியான பலனை விளைக்கும்.

தமிழ்த் தலைமைகள் தமது பாரிய பொறுப்பை உணர்ந்து செயற்படத் தவறினால் தமிழ் மக்கள் என்றுமே அவர்களை மன்னிக்கமாட்டார்கள்.

தமிழ்லீடருக்காக மாரீசன்

tamilleader

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.