Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''அல்லை பிட்டி இன்று என்ன அத்திபட்டியா....???''

Featured Replies

''அல்லை பிட்டி இன்று என்ன அத்திபட்டியா....???''

மண்டைதீவை ஊடறுத்து விடுதலைப் புலிகள்

அல்லை பிட்டியை கைப்பற்றி அங்கிருந்த

இராணுவ நிலைகளை

தகர்த்தெறிந்து அழித்தொழித்து

சிங்கள படைகளிற்க்கு கடும் சேதத்தினை விளைவித்திருந்தனர் .

அவர்களின் எதிர் பார்த்த இலக்கு நிறைவடைந்ததும்

அவர்கள் மீள் களம் திரும்பினர் .

அந்த நிலையில் அங்கிருந்த மக்கள் மீது பலாலி படை தளத்தில்

இருந்தும் ஏனைய சில நிலைகளில் இருந்தும் சிங்கள படைகள்

அந்த மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகளை வீசி அந்த

அப்பாவி மக்களை கொன்று குவித்தனர் .

ஏதும் அறியாத அந்த மக்கள் மீது தமது கையாலகத்தனத்தை கட்டியிருந்தனர்

அங்கிருந்த சில பெண்களை மணபங்க படுத்தி படு பாதமாய் கொலை செய்து

தமது வெறியாட்டத்தை முடித்திருந்தனர் .

விடுதலைப் புலிகளோடு போரிட திறனற்ற படைகள்

அந்த மக்கள் மீது தமது கோர கொலை வெறியாட்டத்தை ஆடியிருந்தனர் .

இறந்தவர்களை கூட தகனம் செய்ய முடியாத அளவுக்கு அந்த இடத்திலேயே

அப்படியே விட்டிருந்தனர் . காயப் பட்ட மக்களை மருத்து மனைக்கு

செல்ல விடாது தமது கேடயமாக வைத்திருந்தனர் .

உணவுகள் ஏதுமின்றி அந்த மக்கள் அவதிப் பட்டனர்

காயப் பட்ட மக்கள் வேதனையால் துடி துடித்தனர்

இருந்தும் அந்த அரச படைகள் இரக்கமற்று நின்றனர் .

ஊரடங்கு சட்டத்தை போட்டு ஊர் அடைத்து

அந்த மக்களை வெளியே செல்ல விடாது தமது

முற்றுகைக்குள் வைத்திருந்தனர் .

சில மணி நேர ஊரடங்கு விலகல் அவ்வப்போ விட்ட போதும்

மக்கள் பெரிதாக நடமாட முடியாத படி அவர்களின் பிடி இறுகி

இருந்தது .

அப்படி இருந்தும் அதில் ஒருவர் தனது காயத்துடன் நடையாய் நடந்து

அங்கு படும் மக்களின் அவல நிலையையும் அங்கு இறந்த மக்கள்

காயப்பட்ட மக்களின் விடயங்களை அந்த மருத்துவ வட்டாரத்துக்கு தெரிவித்தார் .

இதையறிந்த மதகுருமாரும் வைத்தியர்களும் அந்ந இடத்திற்க்கு செஞ்சிலுவை

சங்க உதவியுடன் சென்று அந்த மக்களில் சிலரை காப்பாற்றி வந்தனர் .

முழு மக்களையும்வெளியேற அந்த படைகள்

அனுமதிக்கவில்லை அதற்க்கு சொன்ன காரணம்

தமது நிலைகளுக்கு அங்கால் செல்ல முடியாதென்பதும்

தம்மால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாதென்பதாகும் .

100க்கு மேற்ப்பட்ட மக்கள் இறந்தும் பல மக்கள் காயமடைந்தும்

இருந்தனர் இவை முதல் வந்த செய்தியாகும்

நேற்று முன் தினம் கிடைத்த செய்தியோ இன்னும்

அங்கு அழுகிய நிலையில் அங்கு உடலங்கள் கிடப்பதாய்

சொன்னார்கள்.

முன்பு அங்கிருந்த மாற்றுக்குளுக்களுடன் இனைந்து அந்த மக்களை

அச்சுறுத்தி புலிகள் என சந்தேகிக்கப் பட்டவர்கள்

பேரணியில் கலந்து கொண்டவர்கள் அதற்க்கு ஆதரவாய் செயற்ப் பட்டவர்கள்

என பலர் கொள்ளப்பட்டார்கள் அதனால் அச்சம் உற்ற

மக்கள் இடம் பெயர்ந்து வன்ன pநிலப் பரப்புக்கு வந்தடைந்தார்கள்.

அப்படி வந்த மக்களையும் முகமாலையில் வைத்து சிறைத்தாங்கல் செய்தே பின்னர்

விட்டனர் . ஆக மொத்தம் இப்போ அந்த பிரதேசம் இப்போ

ஒரு அத்தி பட்டி போல மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்துள்ளது..

அங்கு அந்த மக்கள் இறந்த போது உலக நாடுகள் மௌனம் காத்தனர் .

கண்காணிப்பு குழு போக முடியாதென கைவிரித்தது .

பாதுகாப்பு இல்லையென பறை சாற்றியது .

எம் தமிழர் அழிகையிலே மௌனம் காக்கும் உலகம்

சிங்களவர் இறக்கும் போதும் உரக்க குரல் எழுப்புவதானது என்ன நீதி....???

எங்கள் மக்கள் இறந்தால் அதன் செய்தியை இருட்டடிப்பும்

செய்யும் முக்கிய தொலைக் காட்சிகள் அங்கு சிறு தோடட் வெடித்தாலே

பறந்தடித்து தலைப்பு செய்தியாய் காட்ட முனைவதானது எதை காட்டுகிறது....??

ஆக மொத்தம் அரச படைகள் செய்தால் யாவும் சரியானது புலிகள் செய்தால்

பிழையானதென்ற கருத்தியல் மாயைக்குல் வாழ்வதென்பது

எமது தாயகத்தில் ஒரு நிரந்தர தீர்வை சமதானத்தை நிலை

நாட்டப் போவதில்லை என்பது தின்னம் . எனவே

எங்கள் படைகள் எம் மக்களின் உரிமைகளை மீண்டும் ஆயுத போரின்

முலமே வெல்ல முடியும் என்பது இப்போது தெழிவாகிறது .

ஆனால் தற்ப்போதைய நிலைகளில் அது சாத்தியமா

என்றால் இல்லை என்றே மக்களின் கருத்தாக உள்ளது

பொறுமையிழந்த மக்கள் விடுதலைப்புலிகளின் அடுத்த

கட்டம் என்ன என ஆவலோடு எதிர் பார்த்த படி உள்ளார்கள் .

அந்த மக்களின் இறையாமையை அவர்கிளின் வாழ்வுரிமையை காக்க

வேண்டுமாயின் தமிழ் தேசியம் மீண்டும் ஒரு ஆயுத போரின் மூலமாகவே

அதனை தீர்க்க வேண்டும்.இல்லையெனின் அல்லை பிட்டி ஒரு அத்தி பட்டியாக

மாறுவதை தடுக்க முடியாது .

-வன்னி மைந்தன் -

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

அத்திப்பிட்டி எங்க இருக்கு? அதுக்கு என்ன ஆனது? :roll:

அத்திப்பிட்டி எங்க இருக்கு? அதுக்கு என்ன ஆனது? :roll:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேரத்தில இப்படி ஒரு டயலாக் தேவையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.