Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னும் எரியும் பக்கங்கள் -எனது டயரி .

Featured Replies

ஆடி மாத பின்னிரவு ,அந்த நாள் ஏறித்த கோரவெய்யிலை சற்று தணித்து அதிகாலையை வரவேற்க பச்சை வயல்களை தழுவிய படி  மெல்லிய இளங்காற்று தஞ்சாவூரை வருடுகின்றது .

 

உரத்தநாட்டு கிராமம் - தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் ஓரம்  ஒரு கீற்றுக்கொட்டகையில்  பெற்றோமக்ஸ் விளக்கு ஒளியின் உதவியுடன்  சிற்பிகள் சிலர்  உளியால் கருங்கற்களை செதுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த உளிஓசை இங்கு கேட்டுக்குகொண்டுதான் இருக்கு . கொட்டகையை சுற்றி எங்கும் பெரிய பெரிய கருங்கற்கள் தீட்டபடாமல் நீண்டுகிடக்கின்றன.

 

அங்கிருக்கும் ஒரு பெரிய கருகங்கல்லில் தலைக்கு  கையை கொடுத்தபடி சாய்ந்திருகின்றான் சாரங்கன், அவனருகில் இருந்து இடது கைவிரலை ஆட்டிய படி எதையோ அழுத்திசொல்லும் பொன்னுத்துரை, .சற்று தள்ளி நின்ற சிகரெட் ஊதியபடி கதையில்  கவனமாக காதை விட்டபடி  சுந்தரலிங்கம், இவர்களுக்கு முன்னும் பின்னுமாக  நடந்தபடியே கடும் யோசனையில் செல்வராசா , வாயில் எதோ பாடலை முணுமுணுத்த படி இவர்களுடன் சீசர்.

 

இந்த ஐவரும் மீண்டும் மீண்டும் எதையோ கதைக்கின்றார்கள் விவாதிக்கின்றார்கள் நடந்து திரிகின்றார்கள் .

 

“பிளேன் டீ வாங்கிவரவா “  சுந்தரலிங்கம் நால்வரையும் பார்த்து கேட்கின்றான்.

சிற்பம் செதுக்குபர்களுகாகவும் இரவு வாகன பயணிகளுக்காகவும் வீதியோரம் ஒரு பெட்டிக்கடை இரவு முழுக்க திறந்திருக்கும்.  தேனீர் ,பிஸ்கட் ,வெற்றிலை ,சிகரெட் இதுதான் அவர்கள் வியாபாரம்.

சுந்தரலிங்கத்திடம்  சிகரெட் முடிந்துவிட்டது போல அதுதான் தங்களிடம் தேனீர் கேட்கின்றான் என்பதை புரிந்தவர்களாய் “ஆம்” என்று தலையை ஆட்டுகின்றார்கள் .

“  நாளை நினைத்த படி மகாநாடு நடக்குமா? ராஜனை பற்றி நீர் என்ன நினக்கின்றீர் ? “  சாரங்கன் .

“ராஜனோ,இப்ப நீர் படுத்திருக்கும் சாமான் தான் ஆள்  ”

பொன்னுத்துரை சாரங்கன் சாய்திருக்கும் கருங்கல்லை பார்த்து சொல்லுகின்றான்.

சுந்தரலிங்கம்  பிளேன் டீயுடனும் வாயில் சிகரேட்டுடனும் வருகின்றான் .

“பிளேன்ரீயை குடித்துவிட்டு படுக்க போவம், மூன்று மணியாகின்றது. நாளை காலை மகாநாடு. “ செல்வராசா.

எல்லோரும் தலையை ஆட்டுகின்றார்கள் .

 

இந்த ஐவரும் இந்தியர்களோ அல்ல தமிழ் நாட்டவர்களோ அல்ல, இலங்கை தமிழர்கள்.

இந்தியாவில்- தமிழ்நாட்டில்- தஞ்சாவூரில்- உரத்தநாட்டில் அதிகாலை மூன்று மணிக்கு இந்த ஐவருக்கும் அப்படி என்ன வேண்டிக்கிடக்கு .

இந்த ஐவர் மட்டும் அல்ல மூவாயிரத்திற்கு மேலானா இலங்கை தமிழ் இளைஞர்கள்  இவர்கள் இருக்கும் இதே அயலில் நாளை என்ன நடக்க போகின்றதோ என்ற ஆவலில் உறங்கியும் உறங்காமலும் இருக்கின்றார்கள்.

 

நாளை மகாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் முழு தமிழினத்திற்கும் விடுதலைக்கான ஒரு முடிவாக இருக்கும் என்று நம்பியபடியே பலர் நாளை விடிவிற்காக இன்று தூங்க போய் விட்டார்கள் .

 

இதில் சாரங்கனை தவிர மற்ற நால்வரும் பாலஸ்தீனத்தில் ஒன்றாக பயிற்சி எடுக்கும் போது பழக்கமானவர்கள். செல்வராசாவும்  பொன்னுத்துரையும் ஜெர்மனியில் இருந்து போனவர்கள். சுந்தரலிங்கமும் சீசரும் காந்தியத்தில் இருந்து நட்பு இந்தியாவரை தொடர்ந்து அங்கிருந்து பாலஸ்தீனம் போனவர்கள் . பயிற்சி முடித்து பலத்த பல கனவுகளுடன் இவர்களுடன் சேர்த்து மொத்தம் பதினேழு பேர்கள் பாம்பாயில் இறங்கி  தமிழ்நாடு போகின்றார்கள் .அவர்களுடன் வந்த ராஜன் மட்டும் அப்போது டெல்கியில் நிற்கும் தலைவர் உமாவை சந்திக்க  டெல்கி போகின்றார் .உமாவுடன் டெல்கியில் நின்ற சாரங்கன் அப்போதுதான் முதன்முதலில் ராஜனையும் சந்திக்கின்றான் .

 

சென்னையில் இறங்கி தஞ்சாவூர் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. சந்திக்கும் தோழர்கள் எல்லோரும் முகம் கொடுத்துபேசாமல் ஒரு வித சந்தேக கண்ணுடன்  அந்நியர்கள் போல விலகி போக முனைகின்றார்கள்.

 

இரண்டு மூன்று வாரங்களுக்குள் தமிழ் நாட்டு பயிற்சிமுகாம்களில் பயிற்சிக்கு என்று நாட்டில் இருந்து வந்த இவர்களுக்கு இந்த ஒன்றரை வருடங்களில் என்ன நடந்தது என்பதை முற்றாக அறிந்துகொள்கின்றார்கள். அதைவிட அவர்களுடன் பலாஸ்தீனத்தில் பயிற்சி எடுத்து இவர்களுக்கு முதல் முடித்துவிட்டு புறப்பட்ட பல முக்கிய தோழர்கள் இயக்க நிலை கண்டு விரக்தியில் இயக்கத்தை விட்டே ஓடிவிட்டதாகவும் அறிகின்றார்கள் .

 

தமிழ்நாட்டு பயிற்சி முகாம்களில் மட்டுமல்ல நாட்டிலும் இயக்கம் இதே நிலைதான் என்று அறிந்து மிகவும் குழம்பி இன்னமும் இந்த நிலைமை தொடர அனுமதிக்கமுடியாது என்று தலைமையுடன் விவாதித்து முதல் கட்ட வெற்றியாக முகாம் பொறுப்புகளை தமது கைகளில் எடுக்கின்றார்கள் .

அனைத்து முகாம்களுக்கும் பொறுப்பு செல்வராசா கைகளில் போகின்றது . முகாம்களில் பயிற்சி நிலையில் இருந்து நிர்வாகம் வரை நிலைமை முற்றாக மாற்றம் பெறுகின்றது .தோழர்களும் தமக்கு மாத்திரம் அல்ல தமிழர்களுக்கு விடிவு வர போகின்றது என சந்தோஷத்தில் பயிற்சியில் ஈடுபடுகின்றார்கள்.

இதே நேரம் நாட்டிலும் முக்கிய பல தோழார்களின் நெருக்குதலால் தலைமை நாட்டிலும் பல மாற்றங்களை கொண்டுவருகின்றது.

கொலை ,கொள்ளை ,உட்கொலை,போராளிகள் இயக்கத்தை விட்டு ஓடுதல்,ஓடியவர்கள் கழகத்திற்கு எதிராக செய்யும் பரப்புரை ,இறக்குமதி செய்த ஆயுதங்கள் இந்தியாவால் பறிப்பு. இத்தனை பிரச்சனைகளையும்  முகம் கொடுக்கமாட்டாமல் தான் தலைமை இந்த மாற்றங்களுக்கு தலையாட்டுகின்றது

இயக்க விசுவாசம் என்ற பெயரில் அனைத்து வழிகளிலும் அராஜகம் புரிந்தவர்கள் முகாம்களின் பொறுப்புகளில் இருந்து விலத்தபட்டாலும் தலைமையுடன் இன்னமும் நெருக்கமாகவே வலம்வருகின்றார்கள் .

 

அடுத்த கட்ட ஆயுதம் வாங்கும் முயற்சி ஒரு புறம், முரண்பட்டிருந்த  இந்தியாவிடம் சமரசம் செய்து மீண்டும் ஆயுதம் கேட்டு பார்ப்போம் என்ற நிலை மறுபுறம் என ஆயுதத்திற்காக கழகம் அலைகின்றது .ஆயுதம் வந்தால் தாக்குதல்கள் தொடுக்க  இயக்கத்திற்குள் இருக்கும் அனைத்து பிரச்சனகளுக்கும் தீர்ந்துவிடும் என்று தலைமை நம்புகின்றது .ஆனால் இயக்கத்திற்குள்ளும் வெளியிலும் நடந்த கொலை, கொள்ளைகள்,  அராஜங்களுக்கு மக்களுக்கு பதில் சொல்லாமல் அடுத்த கட்டம் நகரமுடியாது என்று புதுக்க பொறுப்பேற்றவர்கள் விடாப்பிடியாக நின்று நாட்டில்  அனைத்து தோழர்களையும் சேர்த்து ஒரு மாநாடு நடாத்த முடிவெடுக்கின்றார்கள் .

தமிழ் நாட்டில் இருக்கும் தலைமை அரைமனதுடன் வேறுவழியில்லாமல் மாகாநாடு நடாத்த சம்மதிக்கின்றது .சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் உமாவை தவிர அனைத்து முக்கியமானவர்களுடன் வருகையுடன் மாகாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிகின்றது.

 

அந்த மகாநாட்டில் நடந்த கொலை கொள்ளை அனைத்திற்கும் உரிமை கோரி மக்களிடம் மன்னிப்பு கேட்டு இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று அறிவிப்பதாகவும், நாட்டில் முக்கிய பொறுப்புகளில் மாற்றம் கொண்டுவருவது, இந்த மாநாடு போல தமிழ் நாட்டிலும் அடுத்த மாநாடு நடாத்தி புனரமைக்க பட்ட புதுக்கழகமாக ஒற்றுமையாக தோழாமையுடன் அனைவரும் இயங்குவது என தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

எப்பவும் முடிவுகள் எடுப்பது சுலபம் அதை நடைமுறைப்படுத்துவதுதான் கஷ்டம். இதை உணராமல் பல முக்கிய தோழார்கள் தமிழ்நாட்டில் அடுத்த கட்ட மாநாடு நடத்த தஞ்சாவூர் வந்தடைகின்றார்கள்.

 ( தொடரும் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.