Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இராணுவத்திற்கான ஆட்பிடிப்பும் சலுகைகளுக்கு விலைபோன பிரமுகர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இராணுவத்திற்கான ஆட்பிடிப்பும் சலுகைகளுக்கு விலைபோன பிரமுகர்களும்- குளோபல் தமிழ்ச் செய்திகள்:

 

 

recruitment_CI.jpg

வடக்கில்  இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு என்ற வகையில் மேற்கொள்ளப்படும் ஆட்கொள்ளைக்கு பலவிதமான பேரங்கள், சலுகைகள் பேசப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் விநியோகத்திற்கான அனுமதிப்பத்திரம், சாராய பார் அனுமதிப்பத்திரம், மசாச் கிளப் அனுமதிப்பத்திரம் எனப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டே ஆட்சேர்ப்பிற்கான முகவர்கள் செயற்பட வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வடமாராட்சி நெல்லியடிப் பிரதேச இரும்பு மதவடியைச் சேர்ந்த ஒருவரே முக்கியமானவராக செயற்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் வழிநடத்தலின் கீழ் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாகவும், யாழ் புலனாய்வுக் கட்டமைப்பின் தளபதியாகவும்  உள்ள உதய பெரேரோவினால் கையாளப்படும் இவர் சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான இரண்டு அதிசொகுசு வாகனங்களுடன் வடமராட்சியில் நிலைகொண்டு இருப்பதாக தெரியவருகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஊடக மகாநாட்டின் போது அவரது பாதுகாப்பு அணியில் இடம்பெற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் புலிகளால் இவர் வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சர்வதேச பிரிவுடன் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் இலங்கை பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தரப்பினருடன் மேற்கொண்ட பேரம்பேசலின் பின் இலங்கை சென்ற அவர் அங்கு பாதுகாப்பு தரப்பினருக்கு நெருக்கமாக செயற்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் முன்னாள் யாழ் ராணுவத் தளபதி ஹத்துருசின்க, மற்றும் தற்போதைய தளபதி உதயபெரேரோ ஆகியோரை வாரத்தில் 3 நாட்களாவது சந்தித்து விருந்துகளில் கலந்து கொள்வது வழமையான நடவடிக்கைகள் என அறிய வருகிறது.

தன்னை சர்வதேச ஊடகவியலாளர் எனவும் ஒரு இணையத்தின் உரிமையாளர் எனவும் அறிமுகப்படுத்தி தனது கைங்கரியங்களை மேற்கொண்டுவரும் இந்த நபரினால் இயக்கப்படும் மற்றும் ஒருவர் வடமராட்சி கரவெட்டி மாலுசந்திப் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரி என அறியப்படுகிறது. இவரே படையினரின் நல்லிணக்க அமைப்பு என்ற பெயரில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இராணுவத்திற்கு ஆட்பிடிக்கும் முக்கியஸ்த்தர்களில் ஒருவராக செயற்படும் இவர் கிராம மட்டங்களிலும், பிரதேச மட்டங்களிலும் ஆட்பிடிப்பதற்கான பிரச்சாரங்களையும், ஏழ்மையில் உள்ளவர்களை மூளைச்சலவை செய்வதிலும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கை இராணுவத்தின் ஆயுதப் பயிற்சியைப் பெறத் தேவையில்லை வேறு வேலைகளில் அமர்த்தப்படுவர் எனக் கூறியே கரவெட்டிப் பிரதேசத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் 1350 பேரை சேர்க்கும் பணி இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எனினும் இது பற்றி கிராமசேவகர் தனக்கு எதுவும் தெரியாது என கூறுகின்றார். இருந்த போதும் கிராம அலுவலர்கள் ஊடாகவே படிவங்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்தப் படிவங்களில் இந்த நபரியால் நடத்தப்படும் ஹரி இன்ஜினியறிங் என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. நேர்முகப் பரீட்சைக்குரிய மேலதிக தகவல்களை பெற விரும்புபவர்கள் தனது ஒப்பந்த நிறுவனத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டு உள்ளது. இங்கு இராணுவத்திற்கு அல்லாமல் அரச பணிகளுக்காகவே ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதாக கூறியே ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது. எனினும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நேரடியாக இராணுவ அதிகாரிகளே நடத்தி இருந்தனர். நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய அனைவரதும் மூலப்பிரதிகள் பறிக்கப்பட்டு இருந்தன. இதனால் இனிவரும் காலங்களில் வேறுபதவிகளுக்கு இவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான 2ஆம் கட்ட நேர்முகப் பரீட்சை கொக்குவில் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தன்னை சர்வதேச ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்தித் படையினரோடு சேர்ந்து இயங்கும் முதலாம் நபரும் புனைபெயரில் உலாவுகின்ற ஹரி இன்ஜினியறிங் நிறுவனத்தை சேர்ந்தவரும் ஊடகங்களின் முன் அகப்படுவதனை தவிர்த்து வருகின்ற போதும் இவர்களது புகைப்படங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இவர்களுக்கு மிக நெருக்கமானவர்களால் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இன்னும் சில முக்கிய தகவல்களுக்காக காத்திருக்கிறோம் அவை கிடைக்கப்பெற்ற பின் முழுமையாக வெளியிடப்படும்)  இவர்களே படையினருக்கான சேவகர்களை யாழ்ப்பாணத்தில் பிடிப்பதற்கு முழுமூச்சாக தொழிற்படும் அதேவேளை 1350 பேரே சேர்க்கப்பட உள்ளதாக இவர்கள் கூறும் தகவல்கள் பொய்யானவை என்றும் 7500 பேர்வரை படையினரின் பொறிக்குள் சிக்க வைப்பதற்கு முனைவதாகவும் தெரிய வருகிறது.

இவ்வாறு இணைக்கப்படும் அனைவருக்கும் 3 மாதங்கள் பலாலியில் பயிற்சி வழங்கப்பட உள்ளதோடு ஆண்களும் உள்வாங்கப்படுவதாக விளம்பரங்களில் அறிவிக்கப் பட்டாலும் பெண்களே அதிகம் உள்வாங்கப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் எங்குமே பின்பற்றப்படாத ஆட்சேர்ப்பு யாழ்ப்பாணத்தில் தொடர்வதாக பலரும் விமர்சனம் வெளியிட்டு உள்ளனர். குறிப்பாக ஓட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு ஆட்சேர்ப்பு இடம்பெற்றது.

இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் ஹரி இன்ஜினியறிங் இயக்குணருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. வடமாராட்சி கிழக்கு பகுதியில் மணல் அகழ்வுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதேபோல் பருத்தித் துறையின் பிரபல பாடாசாலை ஒன்றிற்கு அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் அமைத்துக் கொடுத்த கட்டடத்திற்கான ஒப்பந்தத்தை பாடசாலை அதிபர் ஹரிகென்ஸ்ரக்ஸனுக்கு கொடுத்ததாகவும் இதற்கான அழுத்தத்தை முதலாவது நபர் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படகிறது. இதன் மூலம் பெருமளவு நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைக்கப்பட்டு வரும் விடுதி

இதனிடையே வடமராட்சியின் நெல்லியடி வதிரி உடுப்பிட்டிப் வீதிப் பகுதியில் தற்போது விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மதுபான விற்பனை மற்றும் மசாச் கிளப் உள்ளிட்ட நட்சத்திர விடுதி ஒன்று கொண்டிருக்கும்  நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் கூறுகின்றன. எனினும் ஆலைய சூழலில் இந்த மையத்திற்கு எவ்வாறு அனுமதி வழங்க முடியும் என முக்கிய அதிகாரிகள் பின்னடிப்பதனால் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  தெரிய வருகிறது.

இதற்கிடையில் சர்வதேச ஊடகவியலாளர் எனக் கூறும் முதலாவது நபரின் ஆழுகைக்கு உட்பட்டுள்ள இணையுமும், பாதுகாப்பு அமைச்சிற்கு விலைபோயிருப்பதாக கூறப்படும் இன்னும் ஒரு சில இணையங்களும் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு நியாயமானது எனக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106308/language/ta-IN/-----.aspx#.U2G5gRyKMT8.facebook

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.