Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுவெடிப்பு,தேசிய புலனாய்வு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
02-chennai-blast45111145-600.jpg

 

சென்ட்ரல் குண்டுவெடிப்பு..தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு..

மத்திய அரசு அதிர்ச்சி!

 

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாக இருக்கலாமோ என்ற கோணத்தில் மத்திய அரசு பார்த்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்த கூற்றை தமிழக அரசு நிராகரித்து விட்டதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸார் யாரையும் இதுவரை பிடித்து வைக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

இதை தீவிரவாத தாக்குதலாக பார்த்தால் அதிமுக அரசின் மீதான இமேஜ் போய் விடும் என்ற பயத்தால் தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கில் மேம்போக்காக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பை தீவிரவாதத் தாக்குதலாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா அந்தக் கூற்றை ஏற்க மறுத்துள்ளார். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்கத் தேவையில்லை என்றும் ஜெயலலிதா கூறி விட்டார். அதற்குப் பதிலாக வெடிபொருள் சட்டத்தின கீழ் இந்த வழக்கை விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

கொலை மற்றும் ரயில்வே சொத்துக்களுக்குச் சேதம் என்ற அளவில் மட்டுமே தற்போது தமிழக அரசு தனது சிபிசிஐடி மூலம் இந்த விசாரணையை நடத்தவுள்ளது.

 

மேலும் தமிழக காவல்துறையும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று மறுத்துள்ளது.

 

முன்னதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு அமைப்பு இதன் பின்னணியில் இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த குண்டு பெங்களூரில்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. இது தீவிரவாத தாக்குதல்தான் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அதன் பின்னர் காவல்துறையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு இதை ஒரு சாதாரண குற்ற வழக்காக பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த தாக்குதலை தமிழக அரசே தீவிரவாதத் தாக்குதல் என்று அறிவித்து விட்டால் அது அதிமுகவின் பெயருக்குக் களங்கமாக அமையும் என்று அதிமுக அஞ்சுகிறதாம். எனவேதான் அதைத் தவிர்க்க இப்படி நடப்பதாக கூறுகிறார்கள்.

 

ஏற்கனவே இந்த குண்டுவெடிப்புக்கு தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம், முதல்வர் இருக்கிறாரா, அமைச்சர்கள் இருக்கிறார்களா, முறையான அரசுதான் செயல்படுகிறதா என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

 

எப்படியோ, தமிழக அரசின் போக்கு மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து பலியான சுவாதி உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்.

 
 
Tamil_Daily_News_2301752568.jpg

Tamil_Daily_News_41834658385.jpg

chennaicental0114.jpg

kovairail0114.jpg
 
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தசுவாதியின் உடலைப் பார்த்து பெற்றோர்கள் கதறியழுத சம்பவம் காண்பவர்கள் நெஞ்சைஉருக்கவதாக அமைந்தது எனத்தெரிவிக்கப்படுகின்றதுசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்ததுஇதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் உயிரிழந்தார்.சுவாதி ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் என்பதும்அவரது பெற்றோர்ராமகிருஷ்ணன் காமாட்சி என்று தெரியவந்ததும்அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
சுவாதியின் உடல் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில்வைக்கப்பட்டிருந்ததுஇதையடுத்து வியாழக்கிழமை மதியம் அவர்கள் சென்னைக்குவந்தனர்ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறிஅழுதனர்சுவாதியின் உடல் ஸ்ரீநகருக்கு எடுத்துச் செல்வதற்காக தனி ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

குண்டுவெடிப்பில் உயிரிழந்த சுவாதிக்கு 2 மாதங்களில் திருமணம் நடக்க இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்குண்டூரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் விவசாயிதாய்காமாட்சி ஆசிரியை ஆவர்சுவாதி இறந்த தகவல் கேட்டு ராமகிருஷ்ணன்-காமாட்சிதம்பதியினர் கண்ணீர்விட்டனர்இவர்கள் இருவரும் மற்ற உறவினர்களுடன் சென்னைக்குவந்துஉயிரிழந்த சுவாதியின் உடலைப் பார்த்து பெற்றோர்கள் கதறியழுத சம்பவம்காண்பவர்கள் நெஞ்சை உருக்கவதாக அமைந்தது எனத்தெரிவிக்கப்படுகின்றது.குண்டுவெடிப்பில் பலியான சுவாதி ஐதராபாத்தில் எம்.டெக் படிப்பு முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் குண்டு வெடிக்கக் காரணம் மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைதான். :blink: அதனால் அவர்கள் விசாரிப்பது முறையாகாது. அவர்கள் தங்களது தவறை ஏற்றுக்கொள்ளவேணுமே தவிர அதிர்ச்சி அடையக்கூடாது..

 

தமிழ்நாடு சிறப்புக் காவல்துறையும் சிறப்பாக விசாரணை நடத்தும் தகமையைக் கொண்டது.. ஏதோ மத்திய அரசு விசாரித்தால்தான் பிரியாணி வேகும் என்பதுபோல் இருக்கு இவர்களது கதை. :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழகத்தில் குண்டு வெடிக்கக் காரணம் மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைதான். :blink: அதனால் அவர்கள் விசாரிப்பது முறையாகாது. அவர்கள் தங்களது தவறை ஏற்றுக்கொள்ளவேணுமே தவிர அதிர்ச்சி அடையக்கூடாது..

 

தமிழ்நாடு சிறப்புக் காவல்துறையும் சிறப்பாக விசாரணை நடத்தும் தகமையைக் கொண்டது.. ஏதோ மத்திய அரசு விசாரித்தால்தான் பிரியாணி வேகும் என்பதுபோல் இருக்கு இவர்களது கதை. :o

 

சரியாய்ச் சொன்னீர்கள், இசை.

மத்திய அரசே.... விசாரித்து, தங்கள் தவறை... சடையப் பார்க்கிறார்கள்.

இந்த விடயத்தில், அம்மாவின் துணிச்சலுக்கு... ஒரு சல்யூட். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.