Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல்வழிப் போக்குவரத்து: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு பு

Featured Replies

கடல்வழிப் போக்குவரத்து: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு புலிகள் பதில் கடல்வழிப் போக்குவரத்து தொடர்பிலான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கடிதத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் அளித்துள்ளனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வதிவிடப் பிரதிநிதி ரூன் வாண்டென்ஹொவ்வுக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அனுப்பியுள்ள கடிதம்:

கடந்த ஒரு மாத காலமாக யாழ்ப்பாண குடாநாட்டில் 5 இலட்சம் மக்கள் முடக்கப்பட்டுள்ளமையை நீங்கள் அறிவீர்கள்.

அங்குள்ள நெருக்கடியான நிலைமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யாழ். அரச அதிபர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

இது தொடர்பிலான எமது கவலையையும் விளக்கி கடந்த ஓகஸ்ட் 31 ஆம் நாள் தங்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தோம்.

யாழ். குடாநாட்டு நெருக்கடியான நிலைமையை பாரிய அவசரமான விடயமாக கருதிச் செயற்பட மீண்டும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஜெனீவா மாநாட்டு சரத்துக்கள் தொடர்பிலும் சர்வதேச விதிககளைக் கடைப்பிடிப்பது தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையான ஈடுபாட்டுடன் உள்ளனர் என்று கடந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

யாழ். குடா நாட்டிலிருந்து ஏ-9 வீதியூடாக பொதுமக்கள் எமது நிர்வாகப் பகுதிக்குள் வருவதற்கும், மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள வாகனங்கள், நோயாளர் காவு வாகனங்கள், அரச சார்பற்ற பணியாளர்கள் பாதுகாப்பாக பயணிக்கும் போது அனைத்து பதில் தாக்குதல்களையும் நிறுத்தி வைக்க தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதி அளித்துள்ளனர்.

இதற்கும் மேலாக அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான கடல் வழிப் போக்குவரத்துக்கான அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளீர்கள். இதுவிடயம் தொடர்பிலான எமது கருத்துக்களை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது கடல் எல்லைகள் நிர்ணயம் தொடர்பில் குறிப்பிட்ட சரத்து ஏதும் இடம்பெறவில்லை.

கடல்வழி பயன்பாடு தொடர்பில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் முன்னர் பிரச்சனைகள் எழுந்தன. இந்தப் பிரச்சனையானது இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இச்சூழ்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடனான கப்பல் செல்வதற்கான பாதுகாப்பை எம்மால் வழங்குவது என்பது சாத்தியமானதாக இல்லை.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடியான நிலப் பகுதிகளில் எமது பிரதேசங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள் செல்வதற்கான பாதுகாப்பை நாம் உறுதிசெய்கிறோம் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28757

அப்படியென்டா நீந்த தெரிஞ்சவை மட்டும் தான்; கடலால போகலாம் என்டுறியள்? பாதைதிறந்தா யாழ் மக்களுக்குமட்டுமல்ல வன்னிமக்களுக்கும் நல்லது. ராணுவப்போக்குவரத்திற்க்கு செஞசிலுவை பாதுகாப்பு வழங்குவது தவறு. இருவரும் ஒத்துவராவிட்டால் செஞ்சிலுவைச் சங்கம் தானே ஒரு கப்பலை அமர்த்தலாம் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்டா நீந்த தெரிஞ்சவை மட்டும் தான்; கடலால போகலாம் என்டுறியள்? பாதைதிறந்தா யாழ் மக்களுக்குமட்டுமல்ல வன்னிமக்களுக்கும் நல்லது. ராணுவப்போக்குவரத்திற்க்கு செஞசிலுவை பாதுகாப்பு வழங்குவது தவறு. இருவரும் ஒத்துவராவிட்டால் செஞ்சிலுவைச் சங்கம் தானே ஒரு கப்பலை அமர்த்தலாம் தானே?

சாணக்கியம் :roll: :roll:

செஞ்சிலுவை சங்கத்துக்கு கப்பலை அமத்துவது வலு சிம்பிள் ஆனா பிறகு வன்னி மக்கள் முற்றாக புறகணிக்கப்பட்டு விடுவார்கள்.........அதற்காகத்தான

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலை முனையில் சண்டை நடக்கும்போது ஏ9 பாதையை எப்படி திறப்பது யாராவது விளக்கம் தருவீர்களா?

முகமாலை முனையில் சண்டை நடக்கும்போது ஏ9 பாதையை எப்படி திறப்பது யாராவது விளக்கம் தருவீர்களா?

அப்ப கடலிலை சண்டை நடக்க இல்லையே...??? சும்மா மீனவர் போனாலே(இந்திய மீனவர்கள் உட்பட) சுட்டுதள்ளுறது பொய்யே...!

அப்படி எண்டாலும் கடல் பாதுகாப்பு எண்டுறீயள்...!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கடலிலை சண்டை நடக்க இல்லையே...??? சும்மா மீனவர் போனாலே(இந்திய மீனவர்கள் உட்பட) சுட்டுதள்ளுறது பொய்யே...!

அப்படி எண்டாலும் கடல் பாதுகாப்பு எண்டுறீயள்...!

கடல் பெருசு ஒரு வேளை விலத்திக்கொண்டும் போகலாம், ஏ9 பாதையிலெ எங்கே அப்பு விலத்திறது.

கடல் பெருசு ஒரு வேளை விலத்திக்கொண்டும் போகலாம், ஏ9 பாதையிலெ எங்கே அப்பு விலத்திறது.

ஏன் போர் நிறுத்தம் அமுலில தானே இருக்கு பிறகேன் சண்டை பிடிக்கினம்...???

அப்பிடி சண்டைதான் பிடிக்க வேணும் எண்டா சொல்ல வேண்டியதுதானே தாங்கள் சண்டைதான் பிடிக்க போகினம் எண்டு...!

கடலிலதான் போகவேணும் எண்டு ஏதாவது வேண்டுதலே...??? கடலில விலத்தி போறனீங்கள் கடைசில கரைக்குத்தானே வரவேணும்...??? அதுவும் பருத்துறைக்கு..! வாற இடத்தில சண்டை நடக்காதோ...??

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ஒத்துகொள்றன்... எனக்கு கடல்கரையைப் பற்றி வடிவாய் தெரியாது போர் நிறுத்தம் இரண்டு பகுதியினரும் தங்களது இராணுவ, நிதி, நிலைகளை பலப்படுத்த....மட்டுமே அமுலில் உள்ளது. இது என்ர அறிவிற்கு எட்டியது

சரி சரி ஒத்துகொள்றன்... எனக்கு கடல்கரையைப் பற்றி வடிவாய் தெரியாது போர் நிறுத்தம் இரண்டு பகுதியினரும் தங்களது இராணுவ' date=' நிதி, நிலைகளை பலப்படுத்த....மட்டுமே அமுலில் உள்ளது. இது என்ர அறிவிற்கு எட்டியது[/color']

:D:D:lol:

நல்லா எட்டிச்சு போங்கோ...! நிதி மட்டும்தான் ஒரு சாராரின் நிலைப்பாடு எண்டால் எதுக்காக ஆயிரக்கணக்கண மக்களும் இளைஞர்களும் போராட்டத்தில் இணையினமாம்...??? நிதியில பங்கு கிட்டும் எண்டே..?? இல்லை சம்பளத்துக்காகவோ..??

உங்கள் சிற்றறிவையும் குறைகூறி பயன் இல்லை... இது எங்கட மக்கள் சிலரின் நிலை..!

சிறிலங்காவின் குற்றச்சாட்டுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதில்

யாழிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதிலளித்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் டேவிட் விக்னதி கூறியுள்ளதாவது:

யாழ்ப்பாணத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் இருதரப்பினரது ஒத்துழைப்புடன்தான் வெளியேற்ற முடியும்.

ஒரு நடுநிலையான அமைப்பு என்கிற வகையில் இருதரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம். ஒருதரப்பினரது ஆதரவை மட்டும் பெற முடியாது என்றார் அவர்.

யாழிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒத்துழைக்கவில்லை என்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல செஞ்சிலுவைச் சங்கம் மறுப்பதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல குற்றம்சாட்டியிருந்தார்.

http://www.eelampage.com/?cn=28773

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.