Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒஸ்லோவில் ஒக்டோபரில் அமைதிப் பேச்சு: இணைத் தலைமை நாடுகள் அறி

Featured Replies

[செவ்வாய்க்கிழமை, 12 செப்ரெம்பர் 2006, 18:59 ஈழம்] [ச.விமலராஜா]

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை ஒக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் என்று இணைத் தலைமை நாடுகள் அறிவித்துள்ளது.

பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் பெனிடா பெரிரோ வால்ட்னெர் கூறியதாவது:

ஒக்டோபர் தொடக்கத்தில் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வையை உள்ளடக்கிய இணைத் தலைமை நாடுகளுக்கு உள்ளது.

ஒக்டோபர் இறுதியில் இணைத் தலைமை நாடுகள் மீண்டும் கூடி நிலைமையை ஆராயும்.

இருதரப்பு யுத்த நிறுத்த ஓப்பந்த மீறல்கள் மற்றும் உரிமை மீறல்களானது பாரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தேவையான சமரசங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

யுத்த நிறுத்தத்துக்கு தனது இராணுவம் கீழ்படிந்து நடக்கிறது என்பதை சிறிலங்கா அரசாங்கமானது உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

ஊடகவியலாளர்களிடம் ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி கூறியதாவது:

நோர்வே அனுசரணையாளர்களிடம் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருப்பதாக தெரிவித்துள்ளமையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பேச்சுக்களுக்கான முதல் நடவடிக்கையாக இருதரப்பும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=28764

யப்பான் தடை செய்யேல்லையாமோ :P :D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வன் கடுமையாகத் தெரிவிக்கின்றார். இவை இப்படிக் கதைக்கினம். சமாதானம் பற்றித் தான் பேசப் போகினமா? இல்லை! சரக்கை விக்கின்றதற்கு பேசப் போகினமா?

விமல் எனி வெளிக்கிடுவார். இலங்கையின் இறைமைக்குள் தலையிட வேணாம் எண்டு. ஆனால் அதை இலங்கை தொலைச்சு நிறைய நாளாச்சு!

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்ய முடியாது அப்ப பேச்சுக்குத்தானே செல்ல வேனும்

கடசிய ஒஸ்லோவிக்கும் உப்பிடி சொல்லிக் கொண்டுதானே சிறீலங்கா தூதுக் குழுபோனது பெரிய எடுப்புச் சாய்புகளோடை. பிறகு புத்துக் கொண்டு வெளிக்கிட்டு வந்தினம். அனுசரணையாளர்களும் ஏதோ திட்டம் எல்லாம் போட்டவை. அதுக்கு பிறகு அக்காசி அனுங்கினார் இப்ப ஒரு சத்தமும் இல்லை.

வேறு நாடுகளையும் கண்காணிப்பு குழுவில அனுமதிச்சிருக்கு என்று றம்புக்வெலவும் கோகென்னவும் அடிக்கடி புலம்பினம் எதே அவையின்ரை வீட்டு வளவிற்க்கை ஆடு மாடு மேய்கிற வேலைக்கு யாரை விடுறது என்று தீர்மானிக்கிறமாதிரி. ஏதோ ஆசை தீர நடத்தட்டும் நடத்தட்டும்.

மேல் உள்ள கருத்து நான் ஏற்கனவே யாழ் களத்தில் எழுதியிருந்தேன்.

கால மற்றும் கருத்து பொருத்தம் கருதி மீண்டும் இங்கும் இணைத்துள்ளேன்.

கடந்த சில வாரங்களாக யாழ் களத்தில் நான் வலியுறுத்தி வரும் சமாதான கோசமே அரச யுத்தத்தை எதிர் கொள்ள தமிழர் தரப்புக்கு இன்றைய இக்கட்டான நிலையில் உள்ள சாத்தியமான தந்திரோபாயம் என்பதையே இத்தலைப்புக்குள் எனது கருத்தாக வைக்கவிரும்புகிறேன்.

சமாதானம் எமது தரப்பால் வெறும் கோசமாக வைக்கப்படுவதில் இருந்து எமக்கு முன் உள்ள நியமான யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளவது என்பதே எம்முன் விடை காணவேண்டிய கேள்வி.

தமிழர் தரப்பு நோர்வே-இந்திய தரப்பின் ஊடாக புதிய யுத்த நிறுத்தம் ஒன்றை கோருவதே தமிழர் தேசத்தில் புதிய ஒரு சூழலை உடனடியாக உருவாக்கும்

''சர்வதேசமே பதில் சொல்'' என்று நாம் தொண்டை கிழிய கத்திக் கத்தி களைக்க போவதுதான் மிச்சம்.

யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு புலிகளை சிறிலங்கா தள்ளியிருக்கிறது: சு.ப.தமிழ்ச்செல்வன்

யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நாளில் இருதரப்பு கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் எந்த வரையறையில் இருந்தனவோ அந்த வரையறைக்குள் மீளக் கொண்டுவரப்படாமல் இனிவரும் காலங்களில் எந்த சமரச முயற்சிகளுக்கு இடமில்லை என்கிற எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாட்டை நோர்வே குழுவினரிடம் முன்வைத்துள்ளோம்.

இவங்கள் என்ன சொல் ஒன்று செயல் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

இம்மை அரசனில் வாற காட்சி ஒண்டு தான் ஞாபகம் வருது. வெள்ளையன், வரி கேட்டு வரும்போது, உத்தமபுத்திரன் தர இயலாது என்று சண்டை பிடிப்பான். வெள்ளையனும் அதற்கு ஏற்றமாதிரிச் சண்டை பிடித்து, சரி பழசை எல்லாம் மறப்பம். வரி தா என்று கேட்கின்ற கதையாகத் தான் இவையின் வேலை!

தங்களின் முதலீடுகளைப் பாதுகாக்கவும், இந்தியாவை விலக்களிக்கவும் ரை பண்ணுகினம். தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக்க குரல் எழும்ப, இந்தியா இதில் ஏதும் பங்கு வகிக்கப்போகுதோ எண்டு அஞ்சி, தங்களின் பக்கம் இரண்டு தரப்பையும் இழுக்கப் பார்க்கினம்!

ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் மூடவனுக்கு கோபம். நாம் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் எம் தலையிலேறி, சம்மாணி கட்டி இருந்து, மொட்டை அடித்து, சந்தனம் பூசி, பூவும் தொடர்ந்து வைக்கிறாங்கள்!!!!!

இனி மறுபடியும் ....... :wink: :wink: :evil:

அதிசயம், ஆனால் உண்மை. சம்பூர்ரை விட்டுக்கொடுத்து விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைக்கு போவது என்பது அதியம்தான், அப்படியாயின் புலிகளும் யுத்த நிறுத்தத்திற்கு பின்பு இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் சில பகுதிகளை கைப்பற்றியிருக்கிறார்களா!

விடுதலை புலிகள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வர சம்மதித்துள்ளதாக Erik Solheim தெரிவித்துள்ளதாகவே நோர்வே Tv radio க்களில் செய்திகள் சொல்லுகிறார்கள். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்ததாக எதுவும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அல்லது நான் சரியாக கவனிக்கவில்லையோ தெரியவில்லை.

எப்படியும் நாளை அறிக்கைகள் வெளிவரும்... பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிசயம், ஆனால் உண்மை. சம்பூர்ரை விட்டுக்கொடுத்து விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைக்கு போவது என்பது அதியம்தான், அப்படியாயின் புலிகளும் யுத்த நிறுத்தத்திற்கு பின்பு இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் சில பகுதிகளை கைப்பற்றியிருக்கிறார்களா!

ஓம் பிடிச்ச இடத்தின் வரைபடம் அரசாங்கத்துக்கு தேவையாம் போய் கீறி கொடுத்திட்டு வாங்க :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட என்னமா யோசிக்கிறாங்க, உங்க சிந்தனைகளுக்கு முன்னால சீ.ஐ.ஏய பிச்சை கேக்கனும்! உங்களிட்ட,

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சில வேளை இது புலிகளின் இராஜதந்திர நகர்வாக்க கூட இருக்கலாம். இன்று வடக்கு கிழக்கில் போர் என்பதற்கு அப்பால், யுத்தநிறுத்தத்தில் இருந்து வெளியேறுவது யார் என்ற போட்டியின் உச்சத்தில், நகர்வாகக் கூட இருக்க கூடும்.

எப்படியும் சிறிலங்கா அரசு, பிடிபட்ட இடங்களை விட்டுக் கொடுக்காது. அதனால் அதற்கு அவமானமே மிஞ்சும். அவ்வாறு விட வேண்டிய நிலை வந்தால் கூட, சிங்கள மக்களுக்கு தன்மானப் பிரச்சனையாகப் போய், தாங்களாகவே யுத்தநிறுத்ததில் வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுக்கலாம்!

அது கூட, எமக்கு ஒருவகை வெற்றி தான்!

மற்றது புலிகளின் பயண ஒழுங்கு விடயமும் சிக்கலானதே! இவ்வாறு யுத்தம் நடக்கும் நேரத்தில், கட்டுநாயக்கா மூலம் புலிகளை அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை, அடிமட்ட சிங்கள மக்களுக்கு வெறுப்பினைக் கக்கலாம்.

வெறுமனே யுத்ததால் மட்டும் வெற்றியைப் பெற்றுப் பிரியோசனம் இல்லை. தமிழீழத்தை உலகம் அங்கிகரிக்க வேண்டிய நிலையையும் உருவாக்க வேண்டியது தான் இன்றைய கடப்பாடாகும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.