Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி பதவியேற்பு விழாவை விஜயகாந்த் புறக்கணித்தது பற்றி புதிய தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: முதல் வரிசையில் இடம் தராததால் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புறக்கணித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 

modi-%20vijayakanth%20.jpg

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கட்சியான தே.மு.தி.க. 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் தனது கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியாவது பெற்று விட வேண்டும் என்று விஜயகாந்த் டெல்லி சென்றார்.

மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார். மோடியும் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மனைவியுடன் சிறந்த முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி பாராட்டினார்.

மோடியின் பாராட்டை வைத்து தே.மு.தி.க.வுக்கு ஒரு அமைச்சர் பதவி அல்லது மாநிலங்களவை எம்.பி. பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் விஜயகாந்த். ஆனால் அவருக்கு எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி டெல்லியில் நடந்த நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவுக்கு விஜயகாந்த் அழைக்கப்பட்டார். இதை ஏற்று அவர் தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் டெல்லி சென்றார். அங்கு ஓட்டலில் தங்கியிருந்த விஜயகாந்த் மாலையில் மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்ல தயாரானார். அப்போது அவருக்கு விழாவில் கடைசியாக பின் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு போதிய அளவுக்கு நுழைவு சீட்டுக்களும் வழங்கப்படவில்லை. ஒரு நுழைவு பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த விஜயகாந்த் கடைசி நேரத்தில் பதவியேற்பு விழாவுக்கு செல்லாமல் ஓட்டலிலேயே இருந்து விட்டார் என்று அவருக்கு நெருக்கமான கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை நேற்று விஜயகாந்த் சந்தித்து பேச முயற்சி செய்தார். ஆனால், சார்க் நாட்டு தலைவர்களுடன் மோடி தொடர்ந்து பேச்சு நடத்தியதால் விஜயகாந்த்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. விஜயகாந்த் மோடியை சந்திக்கும் போது இலங்கை தமிழர் பிரச்னை உள்பட பல்வேறு தமிழக பிரச்னைகளை தீர்க்க கோரி மனு கொடுக்கவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால், மோடியை சந்திக்க அனுமதி கிடைக்காததால் விஜயகாந்த் ஏமாற்றம் அடைந்தார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28396

  • கருத்துக்கள உறவுகள்

2011 இல் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 (??) தொகுதிகளை வென்றார். அதனால் தமிழகத்தில் இவருக்கு 10% வாக்கு வங்கி இருப்பதுபோல ஊடகங்களும் இவரும் ஒரு மாயையை ஏற்படுத்திவிட்டார்கள். இவரது வெற்றிக்கு அதிமுகவின் வாக்குகள் பலமாக உதவியிருக்கும் என்பது வெள்ளிடைமலை.

 

இந்தத் தேர்தலில் மதிமுக, பாமக, பாஜக என்று கூட்டணி கண்ட இவருக்கு 5% வாக்குகள்தான் விழுந்தன. இதில் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் எத்தனை?  :rolleyes:

 

இவருக்கு தமிழகத்தில் 1.5% வாக்கு வங்கிதான் இருக்கும் போல தெரியுது. அதுக்காக இவர் பண்ணுற அலம்பல்தான் அதிகப்படியா இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் தமிழகத்திலேயே தங்கியிருந்தால் கப்டனுக்கு இந்த நிலை வந்திருக்காது.சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி இந்தக் கூட்டணியும் இனி இவருக்குச்  சரிவராது.
1. ஜே  கூட்டணி
2. மோடி கூட்டணி
3. கலைஞர் கூட்டணி ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.