Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்ப் போனவர் -தமயந்தி

Featured Replies

யாரைத் தேடுகிறாய்? 
நான் யேசுவைத் தேடுகிறேன். 
எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன். 
கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய 
அந்த மனிதரைத் தேடுகிறேன். 
  
ஏதற்கு? 
 
நடுவழியில் என்னை தொலைத்துவிட்டு
தலைமறைவாகி விட்டார். 
எனது கையில் துவக்கைத் தந்து  
தனது மந்தைகளை 
மேய்ச்சல் தறையில் விடும்படி பணித்து 
அவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். 
இப்போ அவரது சிலுவைகளையும் நானே சுமக்கிறேன். 
 
மந்தைகள் என்னவாயிற்று? 
 
அவை அந்த மனிதரின் கோத்திரத்தாருக்கு 
உணவாயிற்று. 
  
இப்போ எதற்கு யேசுவைத் தேடுகிறாய்? 
 
இந்தச் சிலுவைகளில் இரண்டை 
அவர் தோளில் சுமத்த.
 
-தமயந்தி
 

 

'தொலைத்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார்' என்பது பாடுவோனின் குரலாகவே இங்கு வெளிப்படுகிறது. யாரிங்கு குறிப்பிடப்படும் இயேசு என்ற விசாரணைக்கு அவசியமே இல்லை. ஏனெனில், இயேசுவைக் காட்டிலும் பாடுவோனே இங்கு வினோதமாய்த் தெரிகிறான். இயேசு திட்டமிட்டுத் தான் இந்த ஆயுததாரியினைக் கழட்டிவிட்டு மறைந்திருக்கிறார். பீடை ஒழிந்தது என்பதுபோன்று உதறிவிட்டு இயேசு ஓடியிருக்கிறார். பாடுவோனின் எந்தப் பண்பு இயேசுவைத் தலைமறைவாக்கியது?
 
இயேசுவின் கோத்திரத்திற்கு ஊனுண்ணும் பழக்கமிருப்பதனாலேயே மந்தைகள் கோத்திரத்திற்குள்; மறைந்தன. இயேசுவின் கடைசிக்கட்டழை 'மந்தையினை மேய்ச்சல் தறையில் கட்டுக' என்பதாக இருந்திருக்கிறது. இங்கு மேய்ச்சல் தறை யாரின் மேய்ச்சலிற்குரியது? அதாவது, அத்தறைசேர்ந்த மந்தையினை இயேசுவின் கோத்திரத்தார் உண்டு தீர்த்தனரென்கையில், இது கோத்திரத்தாரிற்கான மேய்ச்சல் தறையாக இயேசுவாற்; கருதப்பட்டிருக்குமோ? இல்லை மந்தைகளிற்கான தறை தான் என்றாகினும் கூட, உண்பவர் நலன் சார்ந்து மந்தை கொழுப்பதற்கான தறையாயிருக்குமோ?
 
பாடுவோனிற்கே துவக்கைக் கொடுத்திருக்கிறார் என்கையில், இயேசுவிற்குத் துவக்குப் பெறும் வழி கடைசிவரை தெரிந்திருக்கிறது. துவக்கிருக்கும் வரை சிலுவைக்குச் சாத்தியமில்லை. இங்கு, கடைசிச்சந்திப்பில் துவக்கைக் தந்து போனவரின் சிலுவைகளே தனது தோளில் இருப்பதாய் எங்கனம் பாடுவோனால் அடித்துக் கூறமுடிகிறது?  பாடுவோன் வர்ணிக்கும் இயேசுவிற்கு சிலுவை எங்கனம் ஏற்புடையது? துவக்கைத் தந்தவரை இயேசு என்று பாடுவோன் ஏன் அழைக்கிறார் என்பதற்கு ஒற்றைக் காரணந்தன்னும் பாட்டில் இல்லாது போனது பாட்டின் பிழையில்லையா? இயேசுவும் சிலுவையும் கவிதைக்கு அழகான சொற்களென்று ஒரு flowவில இவை இங்கு வந்து விழுந்தனவா?
 
காலாதிகாலமாகச் சிலுவை சுமப்பவனெல்லாம் அதைப் பிறிதொருவன் பெயர்சொல்லியே சுமந்துகொண்டிருக்கிறான். சிலுவை என்பது அறியாமைக்கு இன்னுமொருபெயர். சிலுவைகள் தோளில் இருப்பதாய் உணரின், இயேசுவைத் தேடுவதா இல்லை சிலுவையினைத் தூக்கிப்போடுவதா இலகுவானது? தோள்களிற் தான் சிலுவைகள் இருக்கவேண்டுமா என்ன? சிலுவைகளை எந்தமரமும் சிலுவையாய்க் காய்ப்பதில்லையே! சிலுவையின் உருவாக்கமே கையாலாகாதவனை, அறிவிலியை, வாழத் தகுதியற்றவனைக் கருத்திற்கொண்டுதானே பிறக்கிறது! 
 
எனவே உம் தோழில் சிலுவை காணின், இயேசுவைத் தேடாதீர், தூக்கிக் கீழே போட்டுவிட்டுச் சுதந்திரகீதம் இசைப்பீpராக!
  • தொடங்கியவர்

இன்னுமொருவன்,

 

இங்கு பாடுவோனுக்கு இயேசு துவக்கை மாத்திரம் கொடுக்கவில்லை, தான் சுமந்த சிலுவையும் சேர்த்தே கொடுத்து இருக்கின்றார்.

 

கையில் இயேசு கொடுத்த துவக்குடன், அவர் சுமந்த சிலுவையையும் தூக்கிக் கொண்டு அவரால் மேய்க்கப்பட்டுக் கொண்டு இருந்த மந்தையையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு பாடுவோன் இழுபடுகின்றார்.

 

இங்கு பாடுவோன் அந்த மந்தைக் கூட்டத்தினைச் சேர்ந்தவர் அல்ல. இயேசுவுடன் சேர்ந்து நடந்தவனாக இருக்கலாம். தோளில் பாரமற்று நடந்தவன் பாடுவோன்.

 

எதையும் காவாமல் நடந்து வந்து கொண்டு இருந்தவனிடம் தான் காவிக் கொண்டு வந்த சிலுவையையும், கையில் தூக்கிக் கொண்டு வந்த துவக்கையும், பசியைப் போக்கின்றேன் என்று நம்பிக்கையூட்டி மேச்சுக் கொண்டு வந்த மந்தையும் தூக்கி கொடுத்து விட்டு தலைமறைவாகி விட்டார் இயேசு.

 

வழிகாட்டி வழிமாறிப் போகவில்லை, தப்பி தலைமறைவாகி விட்டார்.

 

இப்போ இயேசுவின் சிலுவையையும் தூக்கிக் கொண்டு மேச்சல் நிலத்தினை  பெரும் பசியுடன் தேடியலையும் மந்தைக் கூட்டத்தினையும் இழுத்துக் கொண்டு, கையில் துவக்குடன் ஆயிரக் கணக்கான வருடங்கள் இயேசுவின் பாவத்தினை சுமந்து திரிகின்றான் பாடுவோன்.

 

 

நன்றி சுபேஸ் மற்றும் சுமேரியர்.
 
நிழலி,
கவிதை என்ன சொல்கிறது என்பது புரிகிறது. அதனோடு என்னால் உடன்படமுடியில்லை. ஏன் என்பதைத் தான் முன்னைய பின்னூட்டத்தில் குறித்திருந்தேன்.
 
இலக்கியத்திற்கு அது சார்ந்த சமூகத்தைச் செப்பனிடும் பலம் இருக்கிறது என நம்புகிறேன். செப்பனிடுதல் என்பது நிகழ்வதற்கு, உள்ளதைத் திருத்துவது அல்லது மாற்றுவது அவசியப்படும். அந்தவகையில் செப்பனிடப்படவேண்டியதாய்த் தோன்றுவனவற்றை உள்ளபடி வைத்திருக்க முயலும் படைப்புக்களோடு தர்க்கம் தானாக வந்துவிடுகிறது. 
 
மந்தை, கோத்திரம் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். சிலுவை என்ற குறியீட்டின் தார்ப்பரியம் என்ன? மீட்பர் என்ற சொல்லிற்குள் ஒளிந்திருக்கும் ஏக்கம் என்ன? துப்பாக்கி என்பது என்னத்தைக் குறியீடுசெய்கிறது.
 
சிலுவை என்பதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அது எவரும் தாமாக விரும்பி எடுத்துப் பிணைத்துக்கொள்ளும் ஒன்று அல்ல. அது இயற்கையானது அல்ல. சிலுவை என்பதில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தே தீரும். சிலுவை என்பதில் ஒரு திணித்தல் இருந்தே தீரும். அந்த நிர்ப்பந்தமோ திணித்தலோ பிறிதொருவரால் தான் நிகழ்த்தப்படவேண்டும் என்பதில்லை. தான் நம்பும் பெறுமதிகளின் காரணமாகக் கூடத் திணித்தல் நிகழலாம். பார்வைகளில் உள்ள பிசிறால் திணித்தல் நிகழலாம். சிலுவை என்பது ஒரு திணிக்கப்பட்ட நிர்;பந்திக்கப்பட்ட திணறலிற்குள் மட்டுமே அர்த்தம் பெறும். அந்தத் திணறல் இருக்கும் வரை, தனது சிலுவையினைத் தூக்கி மற்றொருவன் தோளில் போடும் சுதந்திரம் சுமப்பவனிற்கு எண்ணவே முடியாததாக இருக்கும். ஒருவர் சிலுவை சுமக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டுமாயின் அதை இன்னுமொருவரிற்குக் கொடுத்தல் என்பது முரண்நகை. ஏனெனில் சிலுவை என்ற கருத்தியல் அந்தச்சுதந்திரத்தைப் பறித்தபின்னர் தான் பிரசவிக்கும். 
 
துவக்கு என்பது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. துவக்கு என்பது தன்னால் ஆற்றப்படக்கூடிய அதியுச்ச எதிர்வினையின் குறியீடு. துவக்கு என்பது, அதை வைத்திருப்பவனிற்கு அவனது எதிர்வினையின் வீரியம் சார்ந்து நம்பிக்கை கொடுப்பது. உயிர் பறிக்கும் துவக்கு உயிர்வாழ்வதற்கான நம்பிக்கைக் கீற்று. துவக்கு எதிரிமீது வீரியமிழக்கையில் சிறைப்படாது தன்னைத் தானாக அழிக்கும் மார்க்கத்தைத் துப்பாக்கிதாரிக்குத் திறந்து வைத்திருப்பது. துவக்கு என்பது வாழ்வினை நீட்டிக்கொள்வதற்காக ஓடுவதற்குத் திறந்திருக்கும் பாதைகளை நினைவூட்டுவது. ஓடுவதற்கான பாதைகள் திறந்திருக்கையில் அதன் நடுவே நெருக்குதல் சாத்தியப்படாது. எனவே துவக்கைச் சுமந்திருப்பவனிற்குள் சிலுவையினைத் திணிக்க முடியாது. துவக்கையும் சிலுவையினையும் சேர்த்துச் சுமப்பது அறிவுள்ளோர்க்குச்; சாத்தியப்படாது. மீட்பரிற்கு அது அறவே சாத்தியப்படாது. கல்லைக்கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்பதுபோல், துவக்கைச் சிலுவையாகக் காணின் அங்கு துவக்கு இருக்கமுடியாது.
 
ஓவ்வொரு நான்கு மாதமும் பல பில்லியன்களை இலாபமாய்க் காட்டும் நிறுவனங்களின் தலைவர்கள் திணறிக்கொண்டு வாழ்வதில்லை. நிர்ப்பந்தத்திற்குள் தூங்கி நிர்ப்பந்தத்திற்குள் எழுவதில்லை. போராட்டங்களிற்கு ஆட்சேர்கும் பிரச்சாரங்களில் வேண்டுமாயின் தியாகம் பெரிதுபடுத்தப்படலாம். ஆனால் எந்தப் போராளியும் தியாகத்தை இயங்குசக்தியாகக் கொண்டிருப்பதில்லை. இலக்கு இயல்பாகத் தெரியவேண்டும். இலக்கிற்காய் உழைப்பது உத்வேகம் தரவேண்டும். அல்லாதோர் தலைமைதாங்குதல் சாத்தியமில்லை. மீட்பர் என்பர் பெருந்தலைவர். இலக்கைச் சார்ந்து தெட்டத் தெளிவான பார்வையோடிருப்பவர். இலக்கு நோக்கி இயங்கும் மார்க்கத்தையும் சுதந்திரத்தையும் கொண்டிருப்பவர். துவக்கையும் சிலுவையும் சேர்த்துச் சுமக்கும் எவரும் மீட்பராய் இருக்க முடியாது.
 
ஆனால் இங்கு, துவக்கையும் சிலுவையும் சேர்;த்துச் சுமந்து கொண்டு வந்தவரோடு கூட நடந்தபடி, அவரை மீட்பர் என நினைத்தபடி வந்தது மட்டுமன்றி, மீட்பர் சொன்னார் என்று சிலுவையினையும் துவக்கையும் சேர்த்து இப்போது தான் காவியலைகிறேன் என்ற பாடுவோனின் வாக்குமூலம் வினோதமாய் இருக்கிறது.
அது மட்டும் இன்றி, துவக்கையும் சிலுவையினையும் ஒன்றாகத் தந்த மீட்பர் தப்பித்து ஓடி மறைந்துவிட்டார், சுமக்க முடியவில்லை, அதனால் மீண்டும் இத் துவக்கையும் சிலுவையினையும் மீட்பரிடம் கொடுப்பதற்காக அவரைத் தேடுகிறேன் என்கிறான் பாடுவோன். இருளையும் ஒளியினையும் என் பையிற்குள் ஒருசேரக் கொண்டலைகிறேன் என்கிறான்.
 
ஒரு படத்தில் ஒரு கட்டம். ஒரு தந்தை தனது மகனை மூடிய விளையாட்டுத் திடலில் இருக்கவி;ட்டு உணவு வாங்கச் செல்கிறார். செல்லும் போது தான் வரும் வரை அசையக்கூடாது என்று மகனிற்குக் கட்டழையிட்டுச் செல்கிறார். தந்தை சென்றதும் மூடிய திடல் தீப்பிடித்துக் கொள்கிறது. அனைவரும் ஓடுகின்றனர். மகன் மட்டும் அப்பாவின் கட்டழைப்படி அசையாது இருந்து கருகிப்போகிறான். கட்டழையின் தார்ப்பரியம் புரியாது வார்த்தைமட்டும் கேட்கும் எவரிற்கும் இத்தகைய ஆபத்து சாத்தியம்.
 
வாழ்வைக் கேழ்விக்குறியாக்கும் எந்தக் கட்டழையும் பரிசீலிக்கப்படவேண்டியது. சொன்னவர் யாரென்பதற்கப்பால் சொல்லப்பட்டதை தன்னைச் சார்ந்து சரிபார்த்துக் கொள்ளவேண்டும். சிலுவை வாழ்தலிற்கு எதிரானது. சிலுவை வாழ்வைப் பறிப்பது. தானே வாழத் தவறுபவனால் பிறரை வாழ வைக்க முடியாது. வாழும் வரையே எதுவும் அர்த்தம் பெறும். வாழ்வைப் பறிக்கும் சிலுவை தோளில் இருப்பதை உணரின் பரிசீலனை அவசியம். அங்கனம் செய்யத் தவறுவோர் சிலுவையில் கருகிப்போவர். ஆதாலால் தான் சிலுவை தோழில் இருக்கிறது என்று உணரின் அதை உதறிவிடுவது முதற்தேவை. சிலுவை சுமக்கச் சித்தமாய் இருக்கும் எவரையும் எந்த மீட்பராலும் வாழவைக்க முடியாது.

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.