Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! 
[Friday, 2014-06-13 08:07:28]
 
ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார்.
  
இரு  சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிருவர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதேசமயம், இக்குழுவினருக்கு வெளி நிபுணத்துவ உதவிகள் மற்றும் புலனாய்வு ஒத்துழைப்பை வழங்குவதற்காக இரண்டாம் நிலை உதவிக் குழு ஒன்றும் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் நியூஸிலாந்தின் நீதியரசரான டாம் சிஸ்வியா கார்ட்ரைட்டும் இந்த விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவின் பணி இந்த ஜூன் நடுப்பகுதியில் ஆரம்பித்து, பத்து மாதங்கள் கடந்து 2015 ஏப்ரலில் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.http://www.seithy.com/breifNews.php?newsID=111204&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறவுகள்
விசாரணைக்குழுவில் பன்னிருவர்! உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியது!
 
 
 
ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருக்கின்றார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார். இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிருவர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
 
இதேசமயம், இக்குழுவினருக்கு வெளி நிபுணத்துவ உதவிகள் மற்றும் புலனாய்வு ஒத்துழைப்பை வழங்குவதற்காக இரண்டாம் நிலை உதவிக் குழு ஒன்றும் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் நியூஸிலாந்தின் நீதியரசரான டாம் சிஸ்வியா கார்ட்ரைட்டும் இந்த விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவின் பணி இந்த ஜூன் நடுப்பகுதியில் ஆரம்பித்து, பத்து மாதங்கள் கடந்து 2015 ஏப்ரலில் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

தென் சூடானின் இராணுவத்துக்கு எதிராக போலியான குற்றச் சாட்டுகளை தயாரித்ததாராம்.. சண்ட்ரா பெடஸ்

 



ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருக்கின்றார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பெடஸ் sandra beidas  இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக தொழிற்பட உள்ளார்.. இரு சட்ட மருத்துவ நிபுணர்கள், ஒரு சட்ட ஆய்வாளர், பாலின வல்லுநர் ஒருவர், விசாரணை அதிகாரிகள் எனப் பன்னிரண்டு பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


இதேவேளை, இக்குழுவினருக்கு வெளி நிபுணத்துவ உதவிகள் மற்றும் புலனாய்வு ஒத்துழைப்பை வழங்குவதற்காக இரண்டாம் நிலை உதவிக் குழு ஒன்றும் நியமிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் நியூஸிலாந்தின் நீதியரசரான டாம் சிஸ்வியா கார்ட்ரைட்டும் இந்த விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் பணி இந்த மாதம் (ஜூன்) நடுப்பகுதியில் ஆரம்பித்து, பத்து மாதங்கள் தொடர்ந்து 2015 ஏப்ரலில் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

இதற்கிடையில் இலங்கைக்கு எதிரான ஐநா விசாரணைக் குழுவின் ஆலோசகர் அல்லது இணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள சன்ராட் பெடஸ் sandra beidas, ஏற்கனவே தென் சூடானில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணை  நடத்தியவர் எனவும் அவர் தென் சூடானின் இராணுவத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர் எனவும் இலங்கை தரப்பில் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த விடயம் சர்வதேச ரீதியாகவும்  சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசாங்க தரப்பினர் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

  • கருத்துக்கள உறவுகள்

2002 இல் இருந்துதான் விசாரிக்கப் போகிறார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

2002 இல் இருந்துதான் விசாரிக்கப் போகிறார்கள். :rolleyes:

 

தமிழர்கள்

அக்கிரமான  போரை  எதிர்  கொண்ட

தடுத்தலை  மட்டுமே  செய்த காலம்

வெல்லவேண்டும் என்ற  ஒரு நோக்கோடு அத்தனை  அக்கிரமங்களையும்

அத்தனை கொடிய வழிகளையும் சிங்களம் கைக்கொண்ட காலம்

புலிகள்

ஒரு சிங்கள பொதுமக்களைக்கூட காயப்படுத்தாத  காலம்.

 

இனி

இதற்கு நாம் என்ன  செய்யப்போகின்றோம்................???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.