Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் வேண்டுகோளுக்கு இணங்க கதவடைப்பு இல்லை

Featured Replies

[ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 05:23 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா தலைநகரில் இடம்பெறும் கடத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.09.06) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதவடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று சனிக்கிழமை இரவு கேட்டுக்கொண்டதற்கிணங்க மகிந்த நாடும் திரும்பும் வரை பிற்போடுவது என ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.

கியூபாவுக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ச கொழும்பில் கதவடைப்பு மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படுவதை அறிந்து தனது சகோதரர் பசில் ராஜபக்ச மூலமாக கதவடைப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட அரசியல்வாதிகள் சிலருடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைகளின் போதே கதவடைப்பை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கடத்தல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் மகிந்த தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் இப்படியான கடத்தல் சம்பவங்கள் இடம்பெறாமல் தான் பார்த்துக்கொள்வார் என்றும் மகிந்த தரப்பிலிருந்து உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முழுமையான கதவடைப்பு நடத்துவது என ஏழு கட்சிகள் அடங்கிய குழுவினர் நேற்றுக்காலை தீர்மானித்திருந்தனர்.

இது தொடர்பாக நேற்றுக்காலை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் இடம்பெற்று முழு அளவிலான கதவடைப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றிரவு மகிந்த மேற்கண்ட கோரிக்கையை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கதவடைப்பு போராட்டம் ஒத்திவைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

மகிந்தவினதும், அவரது சகோதரர் பசில் ராஜபக்சவினதும் பசப்பு வார்த்தைகளை நம்பி கதவடைப்பு போட்டத்தை ஒத்திவைத்தமையானது தமிழ் மக்களை பகடைக்காய்களாக்கும் செயற்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் சிங்கள அரசியல்வாதிகள் சிலரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கதவடைப்பு போராட்டத்தை ஒத்திவைப்பதான முடிவு மேற்படி கதவடைப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருடனும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டதாகும்.

எனவே தமிழ் மக்களை கூறுபோட்டு தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இத்தகைய முடிவுகளை மேற்கொண்டவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

அத்துடன் தமது சுயநலத்திற்காக கதவடைப்புப் போராட்டத்தை ஒத்திவைத்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

அதேநேரம் கதவடைப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து அதன் ஏற்பாட்டுக்குழுவில் அங்கம் வகித்தவர்களுக்கு தெரிவிக்கப்படாமையும் கண்டனத்துக்குரியதாகும். இப்போராட்டத்தை ஒத்திவைப்பதற்கு அவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை என்றார் அவர்

http://www.eelampage.com/?cn=28802

  • கருத்துக்கள உறவுகள்

எனி கடத்தல் நடக்காது பார்ப்பதாகச் சொல்வது எல்லாம் சுத்த ஏமாத்து. இவ்வளவு காலமும் பொறுப்புள்ள தலைவராக எங்கே ஒதுங்கியிருந்தார்? ஆக தமிழர் எதிர்ப்பு காட்டும் போது தான், அதைப் பற்றிக் கதைப்பாரா?

இது வரை கடத்திக் கொண்டு போனவர்களின் நிலை என்ன?

திரும்பி வரும் வரை என்ற பதமே, அவரின் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றது. இந்தக் காலத்தில், அவர் புலத்தில் இருக்கின்றபோது வரும் ஆட்சேபனைகளுக்கு, நேரே பதிலளிக்க முடியாது போகும் என்பதால், வரும்வரை பொறுங்கள் என்று நாடகம் போடுகின்றார்.

கவலைப்படாதீர்கள் தமிழ் வர்த்தகர்களே!

மகிந்த வரும்வரைக்கும், அமைதியாக கடத்துபவர்கள் இருப்பார்கள். வந்த பின் பழைய பல்லவி தான். வேணுமென்றால் எங்கும் அடித்துச் சொல்ல முடியும். தனக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் ஏதும் சங்கடம் தருவதைத் தடுக்கத் தான், இப்படி ஒரு நாடகம்!

மகிந்த கொடுத்த டெண்ட்ரர் நாள்முடியுது போல இருக்கு அவ்ர் வந்து புதுசா குடுத்தா பிறகு கதவடைப்பு செய்தால் பிரிய்ப்ப்சனமாய் இருக்கும் எண்டு பிரியப்படுறார் போல

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த, கருணா அம்மானை கொஞ்ச நாளைக்கு ஒருவரையும் கடத்த வேண்டாம் என அறிவுறுத்துவார். கொஞ்ச நாளைக்கு பிறகு வேதாளம் பழயபடி முருக்க மரத்தில் ஏறி விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ராஜபக்சகளின் நரி தந்திரம்.

அவர் அங்கு வெளினாட்டில் அநேக அரசியல் தலவர்களை சந்திங்கின்ற விஷயம் இன்றய தமிழர் போராட்டத்தின் தற்பொழுதைய மிக முக்கிய காலகட்டத்தின் நடைபெருகின்றது.

கொழும்பில் நடக்கும் காரியம் நிச்சயமாக அவர்க்கு மிகவும் தர்மசங்கடமான நிலயை உறுவாக்கும் என்பதில் சிரிதேனும் சந்தேகமில்லை. அவருடைய முகத்திரையை நிச்சயமாக கிழித்தெரியும்.

இவர்ட நரித்தனங்கள பார்கைக்க எனக்கு எப்பொழுதும் 'Itchy & Scratchy'

16.jpg

------------

is25.jpg

வந்தவுடன ஏதாவது அமைச்சர்பதவி குடுப்பார் போல இருக்கு நிப்போன்ல ஏஸில இருந்திட்டு எழும்பி வந்த தலைகளுக்கு. இங்க கதவடைச்சால் கியுூபா வரை கேட்கும என்ட பயம்போல. ரவி ஐயாகவனம் எதிர்த்துப் பேசித்திரியிரிங்க வெள்ளவான் வரப்போகுது.

ஈழத்திலிருந்து

ஐhனா

இன்னொரு கதை இஞ்சை அடிபடுகுது...........முன்னம் (தெரியும்தானே சமாதான காலத்தில்) தோறணம் கட்டின ஆட்களை போட்டு முடிஞ்சுதாம் கனபேர் ஓடியிட்டினமாம் இனி தோறணம் கட்ட எடுத்துக்குடுத்த ஆட்களை போடப்போகினமாம் எண்டு ஒரு கதை இண்டைக்கு அன்புவழிபுரத்திலை 2வயசுப்பிள்ளையும் அந்த லிஸ்டிலை வந்திருக்குது.......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.uthayan.com/Pages/news/today/09.htm]ஐந்து லாம்புச் சந்தியில் நேற்று வர்த்தகர்கள் கூடி ஆர்ப்பாட்டம்

கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப் படுவது, கடத்திக் கொலைசெய்யப்படுவதை எதிர்த்து நேற்று கொழும்பில் ஆறு கட்சிகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின.

கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் நேற் றுக்காலை 10.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான வர்த்த கர்கள், முக்கியஸ்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத் தில் கலந்துகொண்டனர்.

மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இடதுசாரி ஐக்கிய முன்னணித் தலைவர் விக்கிரபாகு கருணாரட்ன, ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய சோசலிச முன்னணித் தலைவர் சிறிதுங்க விஜயரட்ண, கூட்டமைப்பு எம்.பி. நடராஜா ரவிராஜ், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பியுமான அ. விநாயகமூர்த்தி உட்பட எஸ்.குருபரன், பிரபா கணேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தகர்கள் கடத்தப்பட மாட்டினமாம். இப்பபோது வைத்தியர்கள் மீது கை வைக்கினமாம். ஆக மகிந்த தன் வாக்குறுதியைக் காப்பாற்றிப் போட்டார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.