Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாரநாத் புத்த மடத்தில் உள்ள போதி மரத்தின் ஒரு பகுதி முறிந்தது

Featured Replies

Tamil_News_large_100395220140622001202.j

 

வாரணாசி: பகவான் புத்தர், முதன் முதலில், 'தர்மம்' என்பது குறித்து, தன் சீடர்களுக்கு போதனை செய்த, சாரநாத் புத்த மடத்தில் உள்ள, போதி மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்தது.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சாரநாத்தில், 'மூல்கந்த குடி விஹார்' என்னும் புத்தமட வளாகத்தில் போதி மரம் (அரச மரம்) அமைந்துள்ளது.

 

ஞானம் பிறந்தது:

 

கடந்த 2,600 ஆண்டு களுக்கு முன், புத்த கயாவில் அமைந்துள்ள, போதி மரத்தின் அடியில், புத்தருக்கு ஞானம் பிறந்தது. பின், இந்த மரத்தின் ஒரு கிளை, இலங்கையில் உள்ள புத்த மடத்தில், நடப்பட்டு வளர்க்கப்பட்டது. இலங்கையில் இருந்து, இந்த மரத்தின் ஒரு கிளையை, 'மகாபோதி சொசைட்டி ஆப் இந்தியா'வின் நிறுவனரும், புத்த துறவியுமான, அனாகாரிக் தர்மபால், 1931ம் ஆண்டு, சாரநாத்தில் உள்ள, 'மூல்கந்த குடி விஹார்' புத்த மடத்தில் நட்டார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சாரநாத் வரும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், இந்த புனித மரத்தை வலம் வருவதை, தங்களது தர்மமாகக் கொண்டு உள்ளனர்.

 

காயம் இல்லை:

 

இச்சம்பவம் குறித்து புத்தமட நிர்வாகிகள் கூறியதாவது: ஏறக்குறைய, 83 ஆண்டுகள் ஆன நிலையில், மரத்தின் தடிமனான கிளைகளின் பாரத்தை தாங்க முடியாததாலும், தண்டுப் பகுதி வெற்றிடமானதாலும், முறிந்து விழுந்தது. இச்சம்பவம் அதிகாலை, 4:30 மணியளவில் நடந்ததால், பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை. இதனால், மடத்தில் உள்ள, புத்தரின் பல்வேறு நிலைகளைக் காட்டும், 28 சிலைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. புத்தரின் மிகப்பெரிய சிலை மற்றும் ஐந்து சீடர்களுக்கு உபதேசிப்பதாக அமைக்கப்பட்ட சிலைகளும், பாதுகாப்பாக உள்ளன. எனினும், மடத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மற்றும் ஆறு தர்ம சக்கரங் கள் உடைந்துள்ளன.

 

பூஜைக்கு பயன்படுத்தலாம்:

 

முறிந்து விழுந்த மரத்திற்கு, புத்த மத முறைப்படி, பூஜைகள் செய்த பின், வெட்டி அகற்றப்பட்டு, பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. முறிந்து விழுந்த மரத்தில் உள்ள இலைகளை பூஜைக்கு பயன்படுத்தலாம் என்று புத்த தர்மத்தில் கூறப்பட்டுள்ளதால், இலைகள் பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1003952

  • கருத்துக்கள உறவுகள்

கொப்பு பாரம் கூடி முறிஞ்சிட்டுது. அது தான் சொல்லுறது.. மரத்தை வெட்டி வளர்க்கனுன்னு. உந்த விசயத்தில.. மோட்டுச் சிங்களவன் என்றது சரியாவே இருக்கு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொப்பு பாரம் கூடி முறிஞ்சிட்டுது. அது தான் சொல்லுறது.. மரத்தை வெட்டி வளர்க்கனுன்னு. உந்த விசயத்தில.. மோட்டுச் சிங்களவன் என்றது சரியாவே இருக்கு..! :lol:

 

நெடுக்கர்,
 
உதுக்கும் சிங்களவனுக்கும் என்ன தொடர்பு?
 
இந்தியாவில் ஒரிஜினல் மரம் குறித்து சொல்கிறார்கள்  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

 

நெடுக்கர்,
 
உதுக்கும் சிங்களவனுக்கும் என்ன தொடர்பு?
 
இந்தியாவில் ஒரிஜினல் மரம் குறித்து சொல்கிறார்கள்  :lol:

 

 

சந்தில... சிந்து பாடும் போது, யதார்த்தம் பார்க்கக் கூடாது நாதமுனி. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.