Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிர்வாகத்தின் தடையை மீறி யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆற்றுகை நிகழ்வு! [photo's]

Featured Replies

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நாடகமும் அரங்கியலும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆற்றுகையொன்றுக்கு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருக்கின்றது.
 

jaffna-university-art%20%282%29.JPG

குறித்த ஆற்றுகை பல்கலைக்கழக நிர்வாகத்தை அவமானப்படுத்துகின்றது என்றும் இதனை ஆற்றுகை செய்தால் விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய ஏற்படும் என்றும் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். இருந்தபோதும் தடையை மீறி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
 

jaffna-university-art%20%283%29.JPG

நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் கடந்த சில வாரங்களாக இந்த இந்த ஆற்றுகைக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு இது ஆற்றுகை செய்யப்படவிருந்தது. இந்த நிலையில் இந்த ஆற்றுகை தொடர்பாக நேரடியாக வந்து பார்வையிடாத பல்கலைக்கழக நிர்வாகம் புறம்போக்காக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆற்றுகையை தடை செய்துள்ளதாக மாணவர்களின் தகவல்களிலிருந்து அறியமுடிகின்றது.
 

jaffna-university-art%20%284%29.JPG

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வருகின்ற வேண்டத்தகாத செயற்பாடுகளால் மாணவர்கள் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மாணவிகளின் பரீட்சைப் பெறுபேறுகள் நன்றாக அமையவேண்டுமாயின் சில விரிவுரையாளர்களின் பாலியல் இச்சைகளுக்கு அவர்கள் அடிபணிய வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கடந்த பல வருடங்களாகவே மாணவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
 

jaffna-university-art%20%285%29.JPG

இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக மாணவிகள் அண்மையில் பல்கலைக்கழகத்ததில் போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் நீண்ட காலமாக மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்ற வேண்டத்தகாக சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டு ஒரு ஆற்றுகை தயார்செய்யப்பட்டிருந்ததாகவும் அதனை இன்று ஆற்றுகை செய்ய முடிவெடுக்கப்படதாகவும் நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.


jaffna-university-art%20%286%29.JPG

ஆனால், இந்த ஆற்றுகைக்கு நேற்றைய தினத்திலிருந்து அனுமதி மறுக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் பின்னர் இதனை ஆற்றுகை செய்ய முடியும் என்று கூறப்பட்டிருந்தது.


jaffna-university-art%20%287%29.JPG
 

அதனடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் ஆற்றுகைக்கு மாணவர்கள் தயாராகியிருந்தனர்.

ஆனால், இன்று காலை 10 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் ஆற்றுகை மாணவர்களுக்கு அச்சுறுத்தல் கடிதம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.


jaffna-university-art%20%288%29.JPG
 

குறித்த ஆற்றுகையை செய்யவேண்டாமென்றும் மீறி ஆற்றுகை செய்தால் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


jaffna-university-art%20%2811%29.JPG


ஆனாலும், தங்களால் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆற்றுகையை நிறுத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துக்கூறி ஆலோசனை பெறுவதற்காக இன்று பகல் 10.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக துண்கலைத்துறைத் தலைவியைச் சந்திப்பதற்கு மாணவர்கள் சென்றபோது அவர் தனக்கு நேரமில்லை என்ற காரணத்தைக் கூறி மாணவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் தெரியவருகின்றது. இந்த நிலையில் எது வரினும் குறித்த ஆற்றுகையை மேற்கொள்வது என்று முடிவெடுத்த மாணவர்கள் அதனை ஆற்றுகை செய்வதற்கு முற்பட்டு நடத்தி வருகின்றனர்.


jaffna-university-art%20%2812%29.JPG

jaffna-university-art%20%2813%29.JPG

jaffna-university-art%20%2812%29.JPG

jaffna-university-art%20%2814%29.JPG

jaffna-university-art%20%2817%29.JPG

jaffna-university-art%20%289%29.JPG

jaffna-university-art%20%2810%29.JPG

jaffna-university-art%20%2815%29.JPG

jaffna-university-art%20%2816%29.JPG
 

அரசியல் பேசமுடியாத இடத்தை பல்கலை கழகம் என்று அழைக்கமுடியாது.

அரசியலும் ஒரு கலை தான்.

வேண்டுமென்றால் நிர்வாகம் "யாழ் அரசியல் தவிர்த்த பல்கலை கழகம்" என்று பெயர் மாற்றலாம்.

2(3194).jpg
-எம்.றொசாந்த், ற.றஜீவன்

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட நாடகமும் அரங்கியலும் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நாடகம், பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் தடையையும் மீறி நேற்று வியாழக்கிழமை (26) ஆற்றுகைசெய்யப்பட்டது.

குறித்த நாடகம் பல்கலைக்கழக நிர்வாகத்தை அவமானப்படுத்துவதாகவும், இதனை ஆற்றுகை செய்தால் விளைவுகளைச் எதிர்நோக்க வேண்டிய ஏற்படும் என்று நிர்வாகம் கடிதம் மூலம் மாணவர்களை எச்சரிக்கை செய்திருந்தபோதும், மாணவர்கள் அந்த நாடகத்தை ஆற்றுகை செய்துள்ளனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,

யாழ். பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களால், மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்ற வேண்டத்தகாத சம்பவங்களைக் கதையை கருவாகக் கொண்டு, இந்த நாடகம் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும் அதனை நேற்றைய தினம் ஆற்றுகை செய்ய ணிடிவெடுக்கப்பட்டதாகவும் நாடகணிம் அரங்கியலும் மாணவர்கள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் காலை 11 மணியளவில் ஆற்றுகைக்கு மாணவர்கள் தயாராகியிருந்தனர்.

இருந்தும், இன்று (நேற்று) காலை 10 மணியளவில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் குறித்த ஆற்றுகையைச் செய்யவிருந்த மாணவர்களுக்கு அச்சுறுத்தல் கடிதம் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. குறித்த ஆற்றுகையை செய்யவேண்டாமென்றும் மீறி ஆற்றுகை செய்தால் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தங்களால் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆற்றுகையை நிறுத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துக்கூறி ஆலோசனை பெறுவதற்காக, நேற்று பகல் 10.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தiஷவியைச் சந்திப்பதற்கு மாணவர்கள் சென்றபோது அவர் தனக்கு நேரமில்லைஎன்ற காரணத்தைக் கூறி மாணவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார்.
இந்நிiஷயில், குறித்த ஆற்றுகையின் எழுத்துருவைக் கொண்டுவந்து காட்டுமாறு பல்கiஷக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் கோரியிருக்கின்றது.

இந்நிiஷயில் குறித்த நாடகத்தினை ஆற்றுகை செய்யவிருந்த மாணவர்கள், மாணவர் ஒன்றியம், ஊழியர் சங்கம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் குறித்த நாடகத்தை ஆற்றுகை செய்துள்ளனர்.
1(5607).jpg
3(2375).jpg

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/115864-2014-06-26-16-13-53.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.