Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் பார்த்தீனிய செடிக்கு எதிரான யுத்தம்.- வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
வடக்கிற்கு என மாகாண சபை ஒன்று இருக்கின்ற போதும் அதனை உதாசீனம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது என விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.
 
வடக்கு மாகாணத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் கொள்வனவு திட்டம் விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு சிறுப்பிட்டியில் உள்ள ஜனசக்தி பொதுநோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. – செய்தி 
பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை. ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும் போது சில வேளைகளில் அங்கு ஆக்கிரமிப்பு இனமாக மாறிவிடுகிறது.
தொடக்கத்தில் யாழ் மாவட்டத்தில் கோப்பாயில் மட்டும் காணப்பட்ட இக்களை இன்று வடக்கு-கிழக்கெங்கும் எமது விவசாய நிலங்களை, தெருவோரங்களை, ஒரு பச்சை இராணுவம்போல ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
எமது விவசாய நிலங்களில் நிலைகொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோருகின்ற நாம் எமது விவசாய நிலங்களை நிறைத்து நிற்கும் இந்தப் பச்சை இராணுவத்தையும் உடனடியாக விரட்ட வேண்டியவர்களாக உள்ளோம் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை புத்தூர் நிலாவரையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து பார்த்தீனியம் ஒழிப்புச் சிரமதானப் பணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.- செய்தி
.
2
 
 
 
காகிதப்பூ (போகன்வில்லா), உண்ணிச்செடி (Lantana)  போன்ற தென் மற்றும் மதிய அமரிக்க செடிகள் ஈழத்து பற்றைக்காடுகள் தோட்ட நிலங்கள் போன்றவற்றை ஆக்கிரமித்திருந்ததை சின்ன வயசிலேயே பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவை அன்னிய செடிகள் என்பதோ நம் பாரம்பரிய தாவரங்களை அழிப்பவை என்பதோ எனக்குத் தெரியாது. இவற்றை அலங்காரசெடிகளாக வெள்ளையர்கள் மிசனரிகள் ஈழத்துக்குக் கொண்டுவந்தார்கள். இவையும் அழிக்கப்படவேண்டிய தாவரங்கள்.  மிருகங்கள் விரும்பித் தின்னாதமையும் தேனீக்கள் விரும்பி அயல்மகரந்த சேர்க்கையை அதிகரிக்கப் பங்களித்தலும் உள்ள அன்னிய செடிகள் இவை.
பார்த்தீனியமும் மத்திய அமரிக்கச் செடிதான். இந்தியாவில் இவை பரவியபோது பார்த்தீனியம் விதைகள் கோதுமையோடு கலந்து வந்தது என்று சொன்னார்கள். இந்திய இடதுசாரிகளோ  பார்த்தீனியத்தை அமரிக்க சிஐஏ திட்டமிட்டுப் பரப்பிதென்று பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் பார்த்தீனிய விதைகள்  எங்கள் கண்களின் முன்னே இந்திய படைகளின் உணவுக்காக கொண்டுவரப்பட்ட ஆடுகளின் புழுக்கைகளுக்குள் இருந்து ஈழத்தில் பரவியது. இதனால் ஈழத்தில் வடமாகாணச பார்த்தீனிய ஒழிப்பு முயற்சிகளுக்கு உதவிட வேன்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு.   
பார்த்தீனிய ஒழிப்பு ஆய்வில் அனுபவமுள்ள கோவை விவசாய பல்கலைக்களகம்போன்றவை யாழ் பல்கலைக்களகம், கிழக்கு பல்கலைக் களகம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் களகங்களோடு சேர்ந்து ஆய்வுகளில் மேற்கொள்ளவும் இந்தியா உதவிட வேன்டும்.
 
. பார்த்தீனியமும் இப்படித்தான். அதனால் பார்த்தீனியத்தின் வழ்க்கை வட்டத்தை உடைத்தல் கடிமான பணியாக உள்ளது. இத்தகைய சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈழத்து மக்களை அணிதிரட்டும் ஐங்கரநேசனின் முயற்ச்சி விடுதலை சார்ந்ததாகும். உலகத்த் தமிழர்கள் மேற்படி பணிகளை அங்கீகரித்து ஆதரிக்கவேன்டும். . 
 
சென்னை கிறிஸ்துவக்கல்லூரியில் தவரவியல் பிஎ பட்டமும் யாழ் பல்கலைக்களகத்தில் எம் எஸ் சி பட்டமும் பெற்றவர் ஐங்கரநேசன்.  ஈழ விடுதலை ஆர்வலரும் சூழலியலாளருமான ஐங்கரநேசனின் சூழல் மேம்பாட்டுப் பணிகளை உலகத்தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். . 
 
சூழல், காற்று நிலத்தடி நீர் மாசடைதல் ன்பவற்றுக்கு எல்லைகள் இல்லை. ஈழத்தில் வடமாகாணசபையின் பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றிபெறாவிட்டால் சிங்கள தேசத்தையும் பார்த்தீனியம் அழித்துவிடும் என்பதை சிங்கள அரசு உணர்ந்துகொள்ள வேணும். வடமாகாண சபை மேற்கொள்ளும் பார்த்தீனிய ஒழிப்பு முயற்சிகளுக்கு நிதி மற்றும் நிர்வாக முட்டுக்கட்டைகள் போடுவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். 
 
ஈழத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடும் வடமாகாணசபை விவசாய அமைச்சுக்கும் ஈழத்து தொண்டு நிறுவனங்கள் கல்விநிறுவனங்கள் தனி ஆர்வலர்களுக்கும் தாம் வாழும் நாடுகளின் உதவிகளைத் திரட்டித்தருவதில் புலம் பெயநர்நத தமிழர்கள் உறுதுணையாக இருக்க வேணும்.
 

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிழைதிருத்தம்.

 

தோழர் ஐங்கரநேசன் பிஎச்டி மாணவன் என எழுதியிருந்தேன். துரதிஸ்டவசமான போர்ச்சூழலால் அவரது பிஎச்டி பதிவு பின்போடப்பட்டுட்டது என்பதை தற்போதுதான் அறிந்தேன்

அவரது கல்வித்தகமை Bsc in MCC and Msc [Plant Physiology and Horticulture] in University of jaffna. தவற்றுக்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் பார்த்தீனியச் செடிக்கு எதிரான போர் என்பது மிகப்பொருத்தமான தலைப்பு. பார்த்தீனியச் செடியை இலங்கைத் தீவினுள் கொண்டு வந்தது அமைதிப்படை (இந்தியா). அதன் தாக்கங்களை அழிப்பது என்பது பொருத்தமான செயலே.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.