Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்

Featured Replies

vidthalaiek4.jpg

எமது விடுதலைப் போராட்டத்தின் மையநிலமாகவும் -ந்துதளமாகவும், இன்றைய நிலையில், வன்னிப் பெருநிலப்பரப்பு விளங்குகின்றது. இந்தப் போராட்ட மையத்தைப் பாதுகாத்தபடி வன்னியைப் பின்தளமாகக் கொண்டு நிலமீட்புச் சமர்களை நடாத்தப் புலிகள் இயக்கம்

தயாராகிவருகின்றது.

ஆனால் இந்தப் போராட்டமையத்தை நெருக்கடிக்குள் ளாக்கும் விதத்தில் வன்னிநிலப்பரப்பு மீது பாரிய படையெடுப் பொன்றைப் பலமுனைகளில் நடாத்தச் சிங்களப் படைத் தலைமை திட்டமிட்டு வருகின்றது. எதிரிப்படைகளின் படையெடுப்பு முயற்சியை முறியடிக்க வேண்டிய பொறுப்பும் அதேசமயம் புலிகளின் நிலமீட்புச் சமருக்கு உதவவேண்டிய கடமையும் வன்னிவாழ் மக்களிடமே

உள்ளது. ஏற்கனவே இத்தகைய வரலாற்றுப் பொறுப்புகளை

வன்னிவாழ் மக்கள் கனகச்சிதமாகச் செய்துமுடித்து போராட்ட

வண்டியை முன்னோக்கித் தள்ளி வெற்றிப்பாதையில் பயணிக்கச் செய்திருக்கின்றனர்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் புலிகள் இயக்கம் நடாத்திய வீரமிகு போராட்டத்தில் வன்னிவாழ் மக்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது. அதுபோல, வன்னிப் பெருநிலப்பரப்பை இரண்டாகப் பிளந்து போராட்ட இதயத்தை நசுக்கிச் சிதைக்கும் எண்ணத்துடன் ஷஜயசிக்குறு| என்ற பெயரில் சிங்கள அரசு செய்த வன்கவர்ச் சமரைப் புலிகள் இயக்கம் முறியடித்து வெற்றி வாகை சூடியதற்கு வன்னிவாழ் மக்கள் அளித்த போராட்டப் பங்களிப்பு மகத்தானதாகவே இருந்தது.அதே மாதிரியானதொரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வரும்படி வன்னிவாழ் இளையோரிடம் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

பாரியதொரு நிலமீட்புச் சமர்த்திட்டத்தை மனதில் வைத்த படி அதற்கு முன்னேற்பாடாக வன்னி நிலப்பரப்பெங்கும் ஒரு மக்கள் போர்க் கட்டமைப்பைப் புலிகள் திட்டமிட்டு மேற்கொண்டுவந்தனர். எந்தவித சலசலப்புமில்லாமல் மிகவும் நேர்த்தியான முறையில் கட்டப்பட்டுவந்த அந்தப் போர்க் கட்டமைப்பை வன்னிவாழ் மக்களும் ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பையும் உற்சாகமாக வழங்கி தற்காப்புப் பயிற்சிகள் பெற்றுவந்தனர். ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவே மீறும் வகையில், சிங்களப் படைகள், தமிழர் தாயகம் மீது நில ஆக்கிரமிப்புச் சமர்களை நடாத்தத் தொடங்கின. திருக்கோணமலையில் படையினர் தொடங்கிய அந்த நில ஆக்கிரமிப்புச் சமர்கள் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் வன்னி ,அம்பாறை,மன்னார் என விரிந்துசென்றன.

மக்கள் இலக்குகள் மீது பாரிய அளவில் வான் தாக்குதல்

களையும் ,ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்மக்கள் பெரு மளவில் கொல்லப்பட்டும் - பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக

வும் ஆக்கப்பட்டு வருகின்றனர்.

சிங்கள அரசின் இந்த ஒட்டுமொத்த ஒப்பந்த மீறலையும் – தமிழ்மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களையும் சர்வதேச சமூகம் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதேசமயம், போராட்ட மையமான வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது ஒரு பாரிய படையெடுப்பைப் பலமுனைகளில் நடாத்தச் சிங்களப் படைகள் தயாராகிவருகின்றன.

அதற்கு முன்னேற்பாடாக முகமாலை முன்னரங்கங்களில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நடாத்திவரும் எறிகணைத்

தாக்குதல் – வான் தாக்குதல்களால் பளை - யக்கச்சிப்பகுதி

மக்கள் இடம்பெயர்ந்தோடியுள்ளனர். நாகர்கோவில் முன்னரங்கிலிருந்து படையினர் நடாத்தும் கொலைவெறித் தாக்குதலால் வடமராட்சி கிழக்குவாழ் மக்கள் முழுமையாகவே இடம் பெயர்ந்துவிட்டனர். முன்னர் தள்ளாடிப் படைமுகாமிலிருந்து நடாத்தப்படும் தாக்குதல்களால் அடம்பன் மற்றும் அதைச்சூழவுள்ள ஊர்களில் இருந்து மக்கள் அகதிகளாகியுள்ளனர்.

இதுபோன்று வவுனியா மற்றும் கொக்கிளாய்ப்பகுதி படை முகாம்களில் இருந்து படையினர் நாடத்தும் எறிகணைத் தாக்குதல்களால் வவுனியா வடக்கு மற்றும் மணலாறுப் பகுதி

மக்கள் இடம்பெயர்ந்து அல்லலுறுகின்றனர். இவ்விதம் வனன பெருநிலப்பரப்பு நாற் புறமும் தாக்குதலுக்கு உள்ளாகின்றது.இதே சமயம், வன்னிமீது உணவு,மருந்துத் தடைகளையும்,போக்குவரத்து,தொலை

  • Replies 211
  • Views 26.9k
  • Created
  • Last Reply

சமாதானம் சொன்ன எதிர்வு கூறல் எல்லாம் மெய்யாலும் நடக்கப் போகுது போலத்தான் கிடக்கு.

  • தொடங்கியவர்

மேலே உள்ள கட்டுரை பற்றி விமர்சனம் ஒன்றை அண்மையில் தமிழ் இணைய தளம் ஒன்றில் வாசித்தேன். ஆனால் அதன் மூலக்கட்டுரையை படிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

நான் தேடிய கட்டுரையை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் நாரதர்.

அந்த கட்டுரை பற்றி விரிவான எனது அவதானத்தை எழுது முன் நாரதரின் கேள்வி ஒன்றுக்கு அவசரமாக பதில் தரவேண்டியுள்ளேன்.

நான் குறிப்பிட்ட பன்முக அரசியல் என்றால் என்ன? அதை நான் அர்த்தம் தெரியாது எங்கிருந்து பொறுக்கி எடுத்து வந்தேன் ? போன்ற கேள்விகள் எழுப்பிய நாரதரிடம் அதே கேள்விகளை திருப்பிக் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்.

அதனால்தான் எமது தலைமை ஒரு புதிய அரசியல் அறிவிப்புக்கு வரலாம் என்று எழுதினேன். ஈ என் டி எல் எவ் ஒரு புதிய பாத்திரம் வகிக்கும் அரசியல் அரங்கம் ஒன்று திறக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இப்போது அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை.

நான் குறிப்பிட்ட பன்முக அரசியல் என்றால் என்ன? அதை நான் அர்த்தம் தெரியாது எங்கிருந்து பொறுக்கி எடுத்து வந்தேன் ? போன்ற கேள்விகள் எழுப்பிய நாரதரிடம் அதே கேள்விகளை திருப்பிக் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்.

அதனால்தான் எமது தலைமை ஒரு புதிய அரசியல் அறிவிப்புக்கு வரலாம் என்று எழுதினேன். ஈ என் டி எல் எவ் ஒரு புதிய பாத்திரம் வகிக்கும் அரசியல் அரங்கம் ஒன்று திறக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இப்போது அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை.

ஓ உமக்கு எல்லாம் தெரியும் போலா எது உந்த பரந்தன் ராசனின்ட இஎன்டிஎல்போ, நல்லது இதை எப்படி நீர் சொல்லுறீர் அதற்கான ஆதாரம் என்ன? மேலும் நீர் சொல்லும் விடயங்களுக்கு நான் ஆதாரமோ ,விளக்கமோ எப்படிக் கொடுக்க முடியும், நீர் தான் கொடுக்க வேணும்.

புலிகள் கூடமைப்பை உருவாக்கினம் சரி அது கிடக்கட்டும் ,இல்லை இந்த பன்முக அரசியல் எண்ட உமது விளக்கதைத் தான் கேட்டனான், புலிகளின்ர பதிலைக்கேக்கேல்ல. நீர் தானே புலிகள் சரவெதேசம் சொல்லுற மாதிரி பன் முக அரசியலுக்க வரவேணும் எண்டு எழுதுனீர், அதற்குத் தான் உமது விளக்கத்தைக் கேட்டனான்.அதை நீர் இன்னும் விளக்கவில்லை? அமெரிக்கா இந்தியா எல்லாம் தான் அதைச்சொல்லுது ,அவயள் சொல்லுறது தான் உமது விளக்கமா .அப்படியெண்டா சிதார்த்தன்,ஆனந்தசங்கரி, டக்கிளசு எல்லோரும் தமிழரின் பிரதினிதிகள் தான் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லை எண்டு நீர் சொல்லுறீரா இல்லயா என்பது தான் எனது கேள்வி?

மேற்குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்கும் விளக்கம் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே உள்ள கட்டுரை பற்றி விமர்சனம் ஒன்றை அண்மையில் தமிழ் இணைய தளம் ஒன்றில் வாசித்தேன். ஆனால் அதன் மூலக்கட்டுரையை படிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

நான் தேடிய கட்டுரையை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் நாரதர்.

அந்த கட்டுரை பற்றி விரிவான எனது அவதானத்தை எழுது முன் நாரதரின் கேள்வி ஒன்றுக்கு அவசரமாக பதில் தரவேண்டியுள்ளேன்.

நான் குறிப்பிட்ட பன்முக அரசியல் என்றால் என்ன? அதை நான் அர்த்தம் தெரியாது எங்கிருந்து பொறுக்கி எடுத்து வந்தேன் ? போன்ற கேள்விகள் எழுப்பிய நாரதரிடம் அதே கேள்விகளை திருப்பிக் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை.

பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்.

அதனால்தான் எமது தலைமை ஒரு புதிய அரசியல் அறிவிப்புக்கு வரலாம் என்று எழுதினேன். ஈ என் டி எல் எவ் ஒரு புதிய பாத்திரம் வகிக்கும் அரசியல் அரங்கம் ஒன்று திறக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இப்போது அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை.

ஐயா சமாதானம்

பன்முக அரசியல் சுதந்திரம் கண்ணீர்வடிக்கிறதா?

உங்கட பிழைப்புக்கும் கொஞ்சம் வழி பிறக்கட்டும் எண்டா?

அல்ல எம்மக்கள் தெரிவு பிரதிநிதிகளுக்கு மதிப்பு தராத அந்த உலகத்தை மனம் குளிரவைக்கவா?

வேறு என்னய்யா கூட்டணி நடத்தை அவளவு நல்லாய் இல்லயா?

அப்ப எப்படி உவங்கள் புலியளின்ர நடத்தை சொல்லுங்கோ வெக்கப்படாமல்.

உங்கட அரசியல் ஞானம் போடும் பிச்சையிலதானே நாங்கள் உலகத்தைப் படிக்கவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏந்தான் எல்லாரும் உங்கடை நேரத்தை செவிடற்ரை காதில சங்கூதி வீணாக்கிறீங்களோ :!: :!: :!:

  • கருத்துக்கள உறவுகள்

பன்முக அரசியல் என்பது ஏகப்பிரதி நிதித்துவத்தை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஜனநாயகக்கோட்பாடு. சர்வதேச நாடுகள் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அரசியல் கோட்பாடும் இதுதான். புலிகளின் தலைமை அதற்குரிய அரசியல் தீர்வாகத்தான் தமிழர் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது. ஆனால் கள அரசியல் எதிரோட்டத்தை அவர்களால் முகம் கொடுக்கமுடியவில்லை. அவர்களில் பலர் தாம் ஆற்ற வேண்டிய அரசியல் பணி பற்றி எந்தவித தெளிவும் இல்லாதவர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலிகளின் காலை வாரிவிடுவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள். அவர்களின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒரு காலத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்டு மக்களின் மதிப்பிழந்த இவர்களின் உள்ளொன்று வைத்து புறம்மொன்று பேசும் செப்படி வித்தை எமது தலைமைக்கு தெரியாதது அல்ல. இந்திய விஜயத்தில் அவர்களின் உள்முரண்பாடுதான் டெல்கியில் உள்ள சவுத் புளொக்கினால் நன்கு பயன் படுத்தப்பட்டு புலிகளுக்கு எதிரான அரசியலாக அரங்கேறிய நாடகம்.

அதனால்தான் எமது தலைமை ஒரு புதிய அரசியல் அறிவிப்புக்கு வரலாம் என்று எழுதினேன். ஈ என் டி எல் எவ் ஒரு புதிய பாத்திரம் வகிக்கும் அரசியல் அரங்கம் ஒன்று திறக்க வாய்ப்புகள் காணப்படுகின்றது. அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இப்போது அறுதியிட்டு சொல்லமுடியாத நிலை.

தங்கள் தங்கள் தேவைகளுக்காகத் தான் ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு எண்ணங்களையும், சிந்தனைகளையும் உலக நாடுகள் தருமே தவிர, மற்றும்படி எல்லாமே ஏமாற்று வார்த்தைகள் தான். பாகிஸ்தானின் முஸ்ராவ் பன்முக ஆட்சியாக கோட்பாட்டையா மேற்கொள்கின்றார்? பன்முக அரசியல் கொண்ட இந்தியாவை விட, ஜரோப்பிய-அமெரிக்க நாடுகள் பாகிஸ்தான் கூடத் தானே தங்களினின் நட்புறவை கொண்டிருக்கின்றன.

அல்லது சமீபத்தில் லிபியாத் தலைவர், அமெரிக்க ஜரோப்பிய, நாடுகளோடு நட்புறவக்கத்தை மேற்கொண்டாரே, அவர் ஆளுவது என்ன பன்முக அரசியலா?

இலங்கையரசியலில், புலிகள் நுழைந்தால்,அவர்கள்

தமிழ்மக்களுக்கான தீர்வுகள் கிடையாமல், ஒன்றுபட்ட இலங்கையில் வாழ முடியும் என்ற தோற்றப்பாட்டை இலங்கையரசு ஏற்படுத்தும். ஆனால் தமிழ்மக்களின் உரிமைகள் எதையுமே, நியாயபுூர்வமாகத் தவிர்த்து நிற்கும். இவ்வாறன யதார்த்தங்களால் தான் தமிழ்கூட்டமைப்பைத் தலைமை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் முன்னாள் போராளிகளோடு, சமூக அமைப்புக்களில் இருந்து போனவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். அப்படியிருக்க அவர்கள் தலைமையின் எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள்.

தலைமைக்கு இவர்களின் செயற்பாடு தெரியும் என்றால், அவர்களுக்கு சொல்ல வேண்டிய பரிந்துரை பற்றி அவர்களுக்குத் தெரியும். உமது கருத்து என்பது தமிழ் கூட்டமைப்புக்காரர்களை புலிகளுக்குள் பிரச்சனை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி மக்களுக்கு வெறுப்பை உண்டாக்குவது தான் போலிருக்கின்றது.

முன்பு அற்புதனும் தினமுரசின் ஊடாக அதையே செய்தார். புலிகளுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே தான் பிரச்சனை என்ற தோற்றப்பாட்டில் பத்திரிகையில் எழுதி வந்தார். புங்குடுதீவில் ஈபிடிபியோடு நடந்த சண்டையைக் கூட, அது சாதாரணம் போல மறைத்தார். அவ்வாறே டக்ளஸ் மீதான களுத்துறைச் சிறைத் தாக்குதலைக் கூட, சாதாரண விடயமாக்கி மறைத்தார்.

இதனால் அவர்களுக்கு அனுகூலம் இருந்தது. சில தேர்தல்களில் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. தமிழ்மக்களிடம் புலிகளை ஆதரித்து எழுதிய பிரல்யமாக தினமுரசு இருந்தால் ஈபிடிபியின் செயற்பாடு புலிகளுக்கு எதிரில்லை என்று சனம் நம்பிய காலமும் உண்டு.

இப்போது அவர்களின் நிலை வங்குரோத்து நிலைக்குப் போக்க காரணமே, விடுதலைப்புலிகளோடு, தமிழ் கூட்டமைப்பு கொண்டுள்ள நெருக்கமாகும். இதனால் பலருக்குச் சங்கடமே! ஆனந்தசங்கரியாருக்கு 5,000 வாக்குகள் கூடத் தேறவில்லை. ஈபிடிபியிருக்கு 15,000, சித்தாத்தனுக்கு ஒரு சீட் கூட இல்லை. ஈபிஆர்எல்எவ்வுக்கு சொல்லவே வேண்டாம்.

எனவே, தமிழ் கூட்டமைப்பில் உடைவு ஏற்படுத்த வேண்டும் என்று, பலர் விரும்புவது ஒரு காரணமில்லாமல் இல்லை. இவர்களின் பிழைப்பு அதில் தான் இருக்கின்றது.

ஈஎன்டிஎல்எவ், எப்போது அரசியல் செய்தது? கொலைகளையும், வழிப்பறிகளையும் தானே செய்தது. ஆனால் இந்தியா தொடர்ந்து பிச்சை போடுமா என்ற சந்தேகம் தான் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். பாவம்!

பத்தோடு, பதினென்றாக பெயரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளட்டுமன். என்ன இலங்கையரசியலில், வாக்கே எடுக்காமல், தோற்றுப் போன கட்சி என்ற ரெக்கோட் யாருமே எடுக்கவில்லை. இவர்களாவது முயற்சிக்கட்டுமன்!

ஓ உமக்கு எல்லாம் தெரியும் போலா எது உந்த பரந்தன் ராசனின்ட இஎன்டிஎல்போ, நல்லது இதை எப்படி நீர் சொல்லுறீர் அதற்கான ஆதாரம் என்ன? மேலும் நீர் சொல்லும் விடயங்களுக்கு நான் ஆதாரமோ ,விளக்கமோ எப்படிக் கொடுக்க முடியும், நீர் தான் கொடுக்க வேணும்.

புலிகள் கூடமைப்பை உருவாக்கினம் சரி அது கிடக்கட்டும் , இல்லை இந்த பன்முக அரசியல் எண்ட உமது விளக்கதைத் தான் கேட்டனான்,.அப்படியெண்டா சிதார்த்தன்,ஆனந்தசங்கரி, டக்கிளசு எல்லோரும் தமிழரின் பிரதினிதிகள் தான் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லை எண்டு நீர் சொல்லுறீரா இல்லயா என்பது தான் எனது கேள்வி?

மேற்குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்கும் விளக்கம் தேவை.

இதைத்தான் விளக்கமாக மாங்கு மாங்கு எண்டு சொல்லுறார் உங்களுக்கு விளங்காத்துக்கு என்ன செய்யலாம்...

புலிகள் தியாகங்கள் செய்து கட்டமைப்பான ஒரு அமைப்பை நிறுவி... பலப்பிரயோகத்தின் மூலம் ஆட்ச்சியாளர்களை ஆட்டம் காணவைத்து, அரசாங்கத்தை பேச்சு வார்த்தைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்... தமிழர் தரப்பு சிங்களவனுக்கு சமனாக மேடையில் பேச அமருகிறது எண்றால் புலிகளின் இராணுவ பலம்தான் காரணம்... அதனால் புலிகளை ஆதரிக்கிறார். உவர்... அப்படி புலிகள் இல்லாட்டால் பேச்சு வார்த்தையும் பேரம்பேசலும் சாத்தியம் இல்லை பாருங்கோ....!

ஆனாலும் எம்மின மக்களின் உரிமைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் பேரம்பேசி விற்க்கப்பட வசதியாக மாற்றுக்குழுக்களை பேச்சுவார்த்திக்கு உள்ளே விடப்பட்ச வேண்டுமாம்... அப்பதானே அரசாங்கம் இப்ப மாசம் மாசம் குடுக்கிறதை தங்கட பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்...

அதுக்காக புலிகள் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டும்படுத்தி மற்றவர்களையும் உள்ள விடட்டாம்.... அப்பதான் புலிகளை ஓரங்கட்டி எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாம் எண்ட நப்பாசைதான்...!

இந்தியாவின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்து இவர் போடும் தப்புகணக்கு உது... புலிகள் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவார்கள் எண்டுவேற நினைக்கிறார்... புலிகளால் அங்கீகரிக்க பட்டு, தமிழீழத்திக்கு வேண்டிய அளவு கட்ச்சிகள் இருக்கிண்றன... தேசியத்துக்கு ஆதரவான மக்களை கொண்றவர்களை புலிகள் அங்கீகரிக்க வில்லை... அப்படி அங்கீகரித்தால் அது புலிகளின் நோக்கத்துக்கு எதிரானது...

தல கொஞ்சம் பொறுக்கங்கப்பா மனிசர் தங்கட கொள்கைகளை விளக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கோ,பொறுமையா இருங்கோ.சமாதானத் தம்பி நீங்க சொல்லுங்க நாங்கள் கேக்கிறம்,உங்களிட்டப் படிக்கக் கனக்கக் கிடக்கு.

எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கோ.

1)புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லையா?

2)அப்படியாயின் தமிழ் மக்களின் மற்றைய பிரதி நிதிகள் யார்?

3) யாரை நீங்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகக் கருதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானம்

உம்பதிவுகள் தேசியத்துரோகத்துக்காய் மாரடிப்பதை

புரிந்து கொள்ளாத ஒரு களஉறவை உம்மால் காட்டமுடியுமா?

தன்னோக்கத்தை அம்பலம் செய்துதான் ஒரு துரோகச்செயல் களம் அமைக்கும், என்றுதான் உமது புத்திசாலித்தனம் நினைத்துக் கொண்டிருக்கிறதோ?

எட்டப்பத்தனப் பிழைப்புக்கு இக்களத்தை உபயோகப் படுத்தாதே!

களமே காறி உமிழு உம்கருத்துக்களுக்கு சுரணை இன்றிய அந்த உள்நுளைவுவிருப்பத்தின் காரணம் எதுவோ?

ஊர் உண்ணி மனைவியர் கொண்டோர்க்கு

சுரணை கொண்டால் வாழ்வு உண்டா என்கிறீரா?

  • கருத்துக்கள உறவுகள்

சமாதனாம் அண்ணா போட்டுதாக்குகிறார்........

இந்த மாவீரர் நாள் உரையில் தலைவர் புதிதாக புதிய விடயம் கூறப்போகின்றாராம்........

ஐயோ......ஐயோ.....

நான் இது நாள்வரையில்...... தலைவர் இந்த முறை போன வருடத்து உரையைத்தான் திரும்பவும் வாசிக்க போகிறார் என்று எண்ணிகொண்டிருந்தேன்.

என்னைப்போல் எண்ணிகொண்டிருந்த மற்ற கள உறவுகளுக்கும் சமாதானம் அண்ணா நற் செய்தி தந்திருக்கிறார். அவருக்கு உங்களால் முடிந்தால் நன்றியை தெரிவியுங்கள்.

நன்றி சமாதானம் அண்ணா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதனாம் அண்ணா போட்டுதாக்குகிறார்........

இந்த மாவீரர் நாள் உரையில் தலைவர் புதிதாக புதிய விடயம் கூறப்போகின்றாராம்........

ஐயோ......ஐயோ.....

நான் இது நாள்வரையில்...... தலைவர் இந்த முறை போன வருடத்து உரையைத்தான் திரும்பவும் வாசிக்க போகிறார் என்று எண்ணிகொண்டிருந்தேன்.

என்னைப்போல் எண்ணிகொண்டிருந்த மற்ற கள உறவுகளுக்கும் சமாதானம் அண்ணா நற் செய்தி தந்திருக்கிறார். அவருக்கு உங்களால் முடிந்தால் நன்றியை தெரிவியுங்கள்.

நன்றி சமாதானம் அண்ணா!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

இதைத்தான் விளக்கமாக மாங்கு மாங்கு எண்டு சொல்லுறார் உங்களுக்கு விளங்காத்துக்கு என்ன செய்யலாம்...

புலிகள் தியாகங்கள் செய்து கட்டமைப்பான ஒரு அமைப்பை நிறுவி... பலப்பிரயோகத்தின் மூலம் ஆட்ச்சியாளர்களை ஆட்டம் காணவைத்து, அரசாங்கத்தை பேச்சு வார்த்தைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள்... தமிழர் தரப்பு சிங்களவனுக்கு சமனாக மேடையில் பேச அமருகிறது எண்றால் புலிகளின் இராணுவ பலம்தான் காரணம்... அதனால் புலிகளை ஆதரிக்கிறார். உவர்... அப்படி புலிகள் இல்லாட்டால் பேச்சு வார்த்தையும் பேரம்பேசலும் சாத்தியம் இல்லை பாருங்கோ....!

ஆனாலும் எம்மின மக்களின் உரிமைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் பேரம்பேசி விற்க்கப்பட வசதியாக மாற்றுக்குழுக்களை பேச்சுவார்த்திக்கு உள்ளே விடப்பட்ச வேண்டுமாம்... அப்பதானே அரசாங்கம் இப்ப மாசம் மாசம் குடுக்கிறதை தங்கட பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்...

அதுக்காக புலிகள் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளை மட்டும்படுத்தி மற்றவர்களையும் உள்ள விடட்டாம்.... அப்பதான் புலிகளை ஓரங்கட்டி எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாம் எண்ட நப்பாசைதான்...!

இந்தியாவின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்து இவர் போடும் தப்புகணக்கு உது... புலிகள் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவார்கள் எண்டுவேற நினைக்கிறார்... புலிகளால் அங்கீகரிக்க பட்டு, தமிழீழத்திக்கு வேண்டிய அளவு கட்ச்சிகள் இருக்கிண்றன... தேசியத்துக்கு ஆதரவான மக்களை கொண்றவர்களை புலிகள் அங்கீகரிக்க வில்லை... அப்படி அங்கீகரித்தால் அது புலிகளின் நோக்கத்துக்கு எதிரானது

டெலோ வின் அட்டகாசம் அபாயகட்டத்தை தொட்டபோதுதான் புலிகள் அவர்களை தடைசெய்ததோடு அவர்களின் தலைமையையும் அழித்தது வெறும் அதிகார ஆசையினால் அல்ல. அதன் பின் டெலோவுக்கு தலைமை ஏற்ற செல்வம் அடைக்கலநாதன் பிரேமதாச காலத்தில் சிங்கள ஒட்டுப்படையாக இருந்து தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக எத்தனையோ சமூகவிரோத செயல்களை செய்தும் காலத்தின் தேவைகருதி தமிழர் தேசிய கூட்டமைப்பில் எமது தலைமையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு தற்செயல் அல்ல.

அதேபோல் இந்திய அமைதி காக்கும் படையுடன் ஒட்டுப்படையாக இயங்கிய ஈ பி ஆர் எல், நாபா கொலை செய்யப்பட்ட பின் அதற்கு தலைமை கொடுத்த சுரேஸ் பிரேமசந்திரன் எப்படி வன்னிக்கு வந்து தலைவருடன் ஒரு மேசையில் அமர்ந்து உணவு அருந்த முடியுமோ அதேபோல் தான் சில வேளை ஈ என் டி எல் எவ் தலைமையினால் தேவை கருதி பயன்படுத்தப்படலாம் என்று நான் குறிப்பிட்டேனே தவிர அவர்கள் ஏதோ புனிதர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

கருணா - பரந்தன் ராஜன் பிரிவை புலிகள் எப்படி பயன்படுத்தபோகிறார்கள் என்பதில் இருந்துதான் எனது அவதானத்தை சொன்னேன். ஆனால் அது பற்றி அறுதியிட்டு எதையும் சொல்வதற்கில்லை.

  • தொடங்கியவர்

...

எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கோ.

1)புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லையா?

2)அப்படியாயின் தமிழ் மக்களின் மற்றைய பிரதி நிதிகள் யார்?

3) யாரை நீங்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகக் கருதுகிறீர்கள்?

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல. அதனால்தான் தேர்தலில் தோற்றுப்போன சங்கரிக்கும் யுனெஸ்கோ விருது கிடைத்தது. தேர்தலில் நின்று தோற்றுப்போனவர்களும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சொல்லிக்கொள்வதை உலகு ஏற்றுக்கொள்கிறது நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட.

ஆக தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் அரசியல் மற்றும் இராணுவ பலமிக்க பிரதான தலைமை புலிகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உம் கருத்தில் இருந்து மாறுபடுவது மட்டுமல்ல, மிகவும் குழப்பாக இருக்கின்றது. மக்களால் ஆதரிக்கப்படாத ஆனந்தசங்கரியாருக்கு, விருது கிடைத்ததன் மூலம், அவர் ஏகபிரதிநிதியாகிவிட்டார் என்ற தோற்றப்பாடு தெரிகின்றதே!

எம் மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவரை உலக நாடுகள் எவ்வாறு தெரிவு செய்யத் தகுதியைக் கொண்டிருக்கின்றன? ஆனந்தசங்கரியாருக்கு கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் விருது, முக்கியத்துவமானதே இல்லை. ஆனால் எதிரிகளின் அடிவருடி ஒருவருக்கு விருது கிடைக்கப் போகின்றதே என்பது தான் எம் ஆதங்கம். அவ்வளவே!

உலகு என்பது தனக்கு தலையாட்டிகளாக ஆகக்கூடிய ஆட்களை வைத்துக் காய்களை நகர்த்துவது என்பது புதிய விடயமல்ல. இந்தியா தமிழரின் விருப்பு வெறுப்புக்களை மதியாமல் கொண்டு வந்த வடக்கு-கிழக்கு மாகாணசபையில், வரதராஜப் பெருமாளை முன்நிறுத்தியது கூட புலிகளை ஓரம் கட்டவே! ஆனால் மக்களிடம் எடுபடாததால், அது தோற்றுப் போனது. இப்போது, யுனோஸ்கோ என்ற பெயரில் முயற்சிக்க சில நாடுகள் முனைவது போலத் தெரிகின்றது. சொல்லப் போனால், ஜ.கே குஜராலும் இந்தத் தேர்வுக்குழுவில் நிற்பதால், இந்தியாவுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கலாம் என்று நம்பத் தோன்றுகின்றது.

எனவே அவ் விருதால், ஏதோ ஆனந்தசங்கரியார் தமிழ்மக்களால் அங்கிகரிக்கப்பட்டவர் என்ற தோற்றப்பாட்டோடு எழுதுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

டெலோ வின் அட்டகாசம் அபாயகட்டத்தை தொட்டபோதுதான் புலிகள் அவர்களை தடைசெய்ததோடு அவர்களின் தலைமையையும் அழித்தது வெறும் அதிகார ஆசையினால் அல்ல. அதன் பின் டெலோவுக்கு தலைமை ஏற்ற செல்வம் அடைக்கலநாதன் பிரேமதாச காலத்தில் சிங்கள ஒட்டுப்படையாக இருந்து தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக எத்தனையோ சமூகவிரோத செயல்களை செய்தும் காலத்தின் தேவைகருதி தமிழர் தேசிய கூட்டமைப்பில் எமது தலைமையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு தற்செயல் அல்ல.

அதேபோல் இந்திய அமைதி காக்கும் படையுடன் ஒட்டுப்படையாக இயங்கிய ஈ பி ஆர் எல், நாபா கொலை செய்யப்பட்ட பின் அதற்கு தலைமை கொடுத்த சுரேஸ் பிரேமசந்திரன் எப்படி வன்னிக்கு வந்து தலைவருடன் ஒரு மேசையில் அமர்ந்து உணவு அருந்த முடியுமோ அதேபோல் தான் சில வேளை ஈ என் டி எல் எவ் தலைமையினால் தேவை கருதி பயன்படுத்தப்படலாம் என்று நான் குறிப்பிட்டேனே தவிர அவர்கள் ஏதோ புனிதர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

கருணா - பரந்தன் ராஜன் பிரிவை புலிகள் எப்படி பயன்படுத்தபோகிறார்கள் என்பதில் இருந்துதான் எனது அவதானத்தை சொன்னேன். ஆனால் அது பற்றி அறுதியிட்டு எதையும் சொல்வதற்கில்லை.

ரொலோ மக்களை கொண்றது எண்றோ இல்லை சுரோஸ் பிரேமச்சந்திரனோடு இருக்கும் EPRLF காறர் மக்கள் விரோத்யப்போக்கோடு இயங்கினார்கள் என்பதுக்கு உம்மால் ஆதரம் தரமுடியுமா...???

புலிகள் விரோதப்போக்குடன் இருந்தவர்கள் எல்லாம் மக்களை கொண்றவர்கள் துன்புறுத்தியவர்கள் ஆகமாட்டார்கள்... பலம் பெறுவதுக்கும் முன்னர் அதுக்கு தடையாக இருந்தவர்களை புலிகள் தடை செய்தார்கள்... பலமானவர்களான பின் அவர்களில் இருந்த களைகள் தானாக அகண்ற பின்னர் தாங்களாக இணைத்துக்கொண்டார்கள்...!

புலிகளால் சேர்த்துக்கொள்ளப்படாத PLOT , EPRLF(வரதர் குழு ) , ENDLF , EPDP கூட்டம் போல TELO வோ ,இல்லை சுரேஸ் பிரேமச்சந்திரன்(EPRLF) அமைப்போ மக்களை கொண்றார்கள்... துன்புறுத்தினார்கள் எண்று உம்மால் நிறூபிக்க முடியுமா...???

  • தொடங்கியவர்

உம் கருத்தில் இருந்து மாறுபடுவது மட்டுமல்ல, மிகவும் குழப்பாக இருக்கின்றது. மக்களால் ஆதரிக்கப்படாத ஆனந்தசங்கரியாருக்கு, விருது கிடைத்ததன் மூலம், அவர் ஏகபிரதிநிதியாகிவிட்டார் என்ற தோற்றப்பாடு தெரிகின்றதே! ...........

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல. அதனால்தான் தேர்தலில் தோற்றுப்போன சங்கரிக்கும் யுனெஸ்கோ விருது கிடைத்தது. தேர்தலில் நின்று தோற்றுப்போனவர்களும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சொல்லிக்கொள்வதை உலகு ஏற்றுக்கொள்கிறது நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட.

ஆக தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் அரசியல் மற்றும் இராணுவ பலமிக்க பிரதான தலைமை புலிகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

ஆனந்தசங்கரியாருக்கு கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் விருது, முக்கியத்துவமானதே இல்லை. ..........

ஆனால் எதிரிகளின் அடிவருடி ஒருவருக்கு விருது கிடைக்கப் போகின்றதே என்பது தான் எம் ஆதங்கம். அவ்வளவே! .

முக்கியம் இல்லாத விடயத்துக்கு ஆதங்கப்படவேண்டியது இல்லை... தூயவன்

...எனவே அவ் விருதால், ஏதோ ஆனந்தசங்கரியார் தமிழ்மக்களால் அங்கிகரிக்கப்பட்டவர் என்ற தோற்றப்பாட்டோடு எழுதுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

.. தேர்தலில் நின்று தோற்றுப்போனவர்களும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சொல்லிக்கொள்வதை உலகு ஏற்றுக்கொள்கிறது நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட..

ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவாகி இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், தேர்தலில் தோற்றவர்களும் அச்சமூகத்தில் இருக்கும் சிறுபான்மையை பிரதிநிதிப்படுத்தும் பிரதிநிதிகள்தான்.

ஆக, ஏகபிரதிநிதித்துவம் என்பதை உலகில் எந்த கலாச்சார சமூகமும் ஏற்றுக்கொள்வதில்லை.

ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல. அதனால்தான் தேர்தலில் தோற்றுப்போன சங்கரிக்கும் யுனெஸ்கோ விருது கிடைத்தது. தேர்தலில் நின்று தோற்றுப்போனவர்களும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருவராக சொல்லிக்கொள்வதை உலகு ஏற்றுக்கொள்கிறது நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட.

ஆக தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் அரசியல் மற்றும் இராணுவ பலமிக்க பிரதான தலைமை புலிகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

ஒரு இனத்தின் பிரதினிதிகள் என்றால் அந்த இனத்தின் அங்கதுவர்கள் எல்லோரும் அல்ல.ஒரு இனக் குழுவைப் பிரதினிதிதுவப் படுத்த ஜனனாயக ரீதியாக நடைபெறும் தேர்வின் மூலம் பிரதினிதிகள் தேர்வு செய்ய படுகின்றனர்.அவர்கள் தான் ஜன நாயக ரீதியா அந்தக் குழுமத்தைப் பிரதினிதித்துவம் செய்கிறார்கள்.இங்கே பன்முகத்தன்மை என்று சொல்வதே அவாறான ஜன நாயக முடிவுக்கு எதிரானதாக இருக்கிறது.ஜன நாயக ரீதியாக நடை பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப் பட்ட பிரதினிதிகளுக்கும் இடம் கொடுங்கோ என்று சொவது தான் ஜன நாயக விரோதமானது.

நீர் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நேரடியாகப் பதில் சொல்லவில்லை, நான் உம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது அதைத்தான்.தமிழ் மக்களின் பிரதி நிதிகள் தமிழ் மக்களால் தான் தேர்வு செய்ய பட முடியும் அது தான் ஜனன நாயகம்.இந்தியாவலோ அல்லது அமெரிக்காவலோ அல்லது சிறிலங்கா அரசாலோ தேர்ந்தெடுக்கப் பட்ட கைக்கூலிகள் தமிழ் மக்களின் பிரதி நிதிகள் ஆக முடியாது,ஜன நாயக மோசடி என்றால் அது தான்.மீண்டும் எனது கேள்விக்கு உமது பதில் என்ன?

1)புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லையா?

2)அப்படியாயின் தமிழ் மக்களின் மற்றைய பிரதி நிதிகள் யார்?

3) யாரை நீங்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகக் கருதுகிறீர்கள்?

  • தொடங்கியவர்

ரொலோ மக்களை கொண்றது எண்றோ

புலிகள் விரோதப்போக்குடன் இருந்தவர்கள் எல்லாம் மக்களை கொண்றவர்கள் துன்புறுத்தியவர்கள் ஆகமாட்டார்கள்... பலம் பெறுவதுக்கும் முன்னர் அதுக்கு தடையாக இருந்தவர்களை புலிகள் தடை செய்தார்கள்... பலமானவர்களான பின் அவர்களில் இருந்த களைகள் தானாக அகண்ற பின்னர் தாங்களாக இணைத்துக்கொண்டார்கள்...!

புலிகளால் சேர்த்துக்கொள்ளப்படாத PLOT , EPRLF(வரதர் குழு ) , ENDLF , EPDP

1985 மே மாத ஆரம்பத்தில் டெலோ புலிகளால் தடை செய்யப்பட்டு அத்தடை 2001 ஏப்பிரலில் ரி என் ஏ தோற்றம் பெறும் வரை மிக இறுக்கமாக புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டிட்ருந

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சமாதானம்

ஒவ்வொரு பிராந்திய வல்லாதிக்கமும் தம் எடுபிடிகளுக்கு அரசியல் முத்திரை குத்துவதற்க்காக பயன்படுத்தும் அரசியல் சதுரங்கம் தான் இவை.

கருணா,ENTLF,EPDP,PLOT இந்த அமைப்புகளுடன் கூட்டணி வேண்டுமா? இந்த அமைப்புக்களின் அத்திவாரமே அரசவாதம்தான் என்று உமக்கு தெரியாதா?

அப்பு போய் வேற பிழைப்பைப் பார்.

யார் உம் அரசியல் ஞானத்தை ஆரூடம் சொல்லச் சொல்லிக் கேட்டது.

உன்வீட்டு புருசஉத்தியோகத்தை ஊரவன் பொறுப்பில கொடுத்திட்டு வேண்டாத வேலயெல்லாம் ஏன் உனக்கு ராசா போய் அந்தவேலயைப் பார்.

இதே அளவுகோலை நாமும் பாவித்தால் தேர்தலில் தோற்ற ரணிலும், ஏன் விகிரமாபாகுவும் சிங்கள மக்களைப் பிரதினிதுதுவப் படுத்த மேசையில் உக்கார வேண்டி இருக்கும்.இங்கே முடிவுகளை யார் எடுப்பது? மகிந்தவா,ரணிலா அமரவன்ஸவா அல்லது விகிரமாபாகுவா?

அமெரிக்காவின் அரசியல் முடிவுகளைத் தேர்தலில் தோற்றவர்களா எடுகிறார்கள்? உலகில் எந்த நாட்டில் இப்படியான நடை முறை இருகிறது.கேலிக்குரியாதாக இருக்கிறது உமது வியாக்கியானங்கள்.இவ்வாறு முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதானால் தேர்தல்களே தேவையில்லயே.

பன்முகத்தன்மையின் பிரதினிதிகள் யாரோ, கருணா,டக்கிளசு,ஆனந்தசங்கரி, ராதிகா குமாரசாமி? சரத் பொன்சேகா? நான், நீர் மற்றும் இங்குள்ளவர்கள் எல்லோருமா? நகைப்புகிடமானது இந்த பன்முகத் தன்மை.

தயவு செய்து கருதாடலைத் திசை திருப்ப வேண்டாம் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் நேரடியாகப் பதில் தாரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 2001ம் ஆண்டு வரை ரெலோ மீது புலிகள் இறுக்கமான போக்கினைக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது மிகவும் தப்பானது.

வவுனியாவில் 90களின் பிற்பகுதியில் புளோட் மாணிக்கதாசன், ரெலோவிற்கிடையில் நடந்த சண்டையின் போது, புளோட் தான் படு அநியாயங்களைச் செய்தது! லக்கி முகாம் என்று, ஒரு சித்திரைக் கூடமே இருந்தது.

ஆனால் புளோட் காரர்கள் தான் தண்டிக்கப்பட்டார்களே தவிர, ரெலோவில் தப்பு என்று புலிகள் அக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே புலிகள் 90களின் பிற்பகுதியில் பெற்ற ஓரளவு நன்மதிப்பினூடகத் தான், புலிகளோடு நெருக்கமானார்கள் என்று சொல்லலாம்.

அவ்வாறே, சுரேஸ் பிரேமச்சந்திரன் வரதரின் தப்பியோட்டத்துக்கு பிறகு தலைவராக இருந்தாலும், யாழ்பாணத்தில் சுபத்திரன், சிறீ தரன் கொட்டமும், வவுனியாவில் இலிங்கேஸ், என்று பிராந்தியத் தாதா நிலையில் தான் அவர்கள் இருந்தனர்.சொல்லப் போனால், அக்காலப்பகுதியில் சுரேஸ் முகவரி இழந்தவராகவே இருந்தார்.

எனவே, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டே, ஏற்றுக் கொள்ளப்பட்டனர் எனலாம். ஆனால் ஈஎன்டிஎல்எவ், நேற்று வரைக்கும் கருணாவோடு நின்று அநியாயப் படுகொலைகளைச் செய்து போட்டு, கருணா பிரிந்தவுடன், அவர்களை உள்வாங்குவது என்பதற்கு, இது ஒன்றும், சாக்கடை அரசியல் அல்லவே!

  • தொடங்கியவர்

1)புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதினிதிகள் இல்லையா?

2)அப்படியாயின் தமிழ் மக்களின் மற்றைய பிரதி நிதிகள் யார்?

3) யாரை நீங்கள் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகக் கருதுகிறீர்கள்?

1. ஏகபிரதிநிதித்துவம் என்பது ஒரு ஜனநாயகக்கோட்பாடு அல்ல. தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல சிங்கள, முஸ்லிம், மலையக மக்களுக்கும் ஏகபிரதிநிதிகள் என்று எவரும் இல்லை.அதனால்தான் அரசியல் தீர்வு பற்றி அனைத்து கட்சிகள் மாநாடு கூட்டவேண்டிய ஜனநாயகக் கடைமைப்பாட்டை வலியுறுத்தி கொழும்புக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன.

2. தேர்தலில் வென்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள்....தமிழர் தேசிய கூட்டமைப்பு. ஈ பி டி பி - டக்கிளஸ்.

தேர்தல் மூலம் அங்கிகாரம் பெறத்தவறிய பிரதிநிதிகளில்............. அதாவது தேர்தலில் நின்று ஆசனங்கள் எதையும் பெறாத ஈ பி ஆர் எல் எவ் - சிறிதரன், ரி யு எல் எவ் - சங்கரி, பி எல் ஓ ரி ஈ - சித்தார்தன்.

3. தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் அரசியல் மற்றும் இராணுவ பலமிக்க பிரதான தலைமை புலிகள்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை

வர்த்தகர்களிடம் கப்பம் பெற புளொட் நடமாடும் சேவை

ஜ03 - ழுஉவழடிநச - 2006ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ

வவுனியா பிரதேசங்களில் இயங்கும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்த (புளொட்) உறுப்பினர்கள் அங்குள்ள வர்த்தகர்களை அழைத்து ஏற்கனவே அமைப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாதாந்தப் பணவசூலிப்பு மறு படியும் ஆரம்பிக்கப்படுவதாகவும் இதனால் இனிமேல் மறுபடியும் வர்த்தகர்கள் புளொட் அமைப்புக்கு மாதாந்தம் வரிப் பணம் செலுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

இவ்வாறு வவுனியாவிலுள்ள வர்த்தகர்களால் நடத்தப்படும் வியாபாரம் எத்தகையதுஇ அதற்கான முதலீடுஇ விற்பனை இலாபம் என்பனவற்றுக்கேற்ப வர்த்தகர்கள் புளொட் அமைப்புக்கு மாதாந்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமென அமைப்பினால் தீர்மானம் செய்யப்பட்டு அது பற்றிய விபரங்களை அமைப்பு வர்த்தகர்களுக்கு அறிவித்துள்ளது.

புளொட் அமைப்பின் மேற்படி தீர்மானங்களுக்கேற்ப வவுனியாவில் வர்த்தகம் செய்யும் உரிமையாளர்கள் முதலில் ஒரு மாதத்துக்கு ரூபா 5இ000 தொடக்கம் ரூபா 35இ000 வரையிலான பணத்தை புளொட் அமைப்புக்குச் செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் பணத்தொகையைக் கொடுக்கும் பட்சத்தில் இரண்டாவது மாதம் வர்த்தகர்கள் ரூபா 500 தொடக்கம் ரூபா 7இ500 வரை புளொட் அமைக்குக் கொடுக்க வேண்டும். மேலும் இவ்வாறு வவுனியாவில் தொழில் செய்யும் வர்த்தகர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காகப் புளொட் அமைப்பின் நடமாடும் பண வசூலிப்புப் பிரிவுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நன்றி........திவயின :30.09.2006

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.