Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரேண்ட்பாஸில் ஒரு மினி யுத்தம்

Featured Replies

2009 ஆம் ஆண்டு யுத்­தத்தின் பின்னர் பாதாள உலகக் கோஷ்­டி­யி­னரின் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­து­வதில் பாது­காப்பு தரப்பு அதீத அக்­கறை எடுத்­தது. அத­னாலோ என்­னவோ தலை நகரில் தலை­வி­ரித்­தா­டிய பாதாள உலகக் குழுக்­களின் நட­மாட்­ட­மா­னது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது. போதைப் பொருள் கடத்தல், ஒப்­பந்த கொலை­களை செய்தல், மிரட்­டுதல் போன்­ற­வையே பாதாள உலகக் குழுக்­களின் முக்­கிய வரு­மான மார்க்­க­மாக இருந்­தது. 
 
இந் நிலையில் பல முக்­கிய பாதாள உல­கத்­த­லை­வர்கள் என இனம் காணப்­பட்ட பலரும் பொலி­ஸா­ருடன் சட்ட அமு­லாக்­கலின் போது முரண்­பட்டு உயிர் துறந்­த­துடன் மேலும் சிலர் வெளி நாடு­க­ளுக்கு தப்பிச் சென்­றனர். எனினும் நாட்டில் இடம்­பெற்­று­வந்த போதைப் பொருள் வர்த்­தகம், ஒப்­பந்த கொலைகள் மற்றும் அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட பாதாள உலகச் செயற்­பா­டுகள் குறைந்­த­பா­டில்லை. இது பாதாள உலக கும்­பல்­களின் நட­வ­டிக்கை தலை நகரில் முற்­றாக முடங்­க­வில்லை என்­ப­தையே பிர­தி­ப­லிக்­கின்­றது. வெளிப்­ப­டை­யாக தற்­போது பாதாள செயற்­பா­டுகள் தலை நகரில் அவ்­வ­ள­வாக இடம்­பெ­றாத போதும் தலை­
ம­றைவு வாழ்க்கை வாழும் பாதாள உலகக் குழுவின் தலை­வர்­களால் இர­க­சி­ய­மாக இந்த செயற்­பா­டுகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டே வரு­கின்­றன.
இதனை மேலும் உறு­திப்­ப­டுத்­து­வ­தாக கடந்த ஜூன் 29 ஆம் திகதி கிராண்ட்பாஸ், அன்­று­கே­வத்தை,87 ஆவது தோட்­டத்தில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் பார்க்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் விசா­ர­ணை­களை கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸாரும் கிராண்ட்பாஸ்  பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவும் மேற்­கொண்­டுள்ள நிலையில் இந்த சந்­தே­கத்தை வலுப்­ப­டுத்தும் சான்­றுகள் அவர்­க­ளுக்கு கிடைத்­துள்­ளன.
D2d15d40d.jpg
போதைப் பொருள் கடத்தல் போட்­டியில் அல்­லது வர்த்­தகப் போட்­டியில் இதனை ஒத்த ஒரு சம்­பவம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்­ளி­ரவு தெமட்­ட­கொடை பிர­தான சந்­தியின் வீதி சமிக்ஞை விளக்­க­ருகே இடம்­பெற்­றது. இதன் போது கொலன்­னாவை பகு­தி­யி­லி­ருந்து ராஜ­கி­ரிய நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த புளூமென்டல் பகு­தியின் பிர­பல பாதாள உலகத் தலைவ­னாக கரு­தப்­படும் சங்க உள்­ளிட்ட குழு­வி­னரே இலக்­காக கொள்­ளப்­பட்­டி­ருந்­தனர். 
சங்க பய­ணித்த ஹைப்ரிட் ரக நவீன சொகுசு காரை ஜீப் ரக வாகனம் ஒன்றில் பின் தொடர்ந்து வந்த தெமட்­ட­கொடை பகு­தியின் பிர­பல பாதாள உலகத் தலை­வ­னாக கரு­தப்­படும் தெமட்­ட­கொடை சமிந்­தவின் ஆட்கள் தெமட்ட கொட சந்­தியில் வைத்து அந்த காரை இடை­ம­றித்து சர­மா­ரி­யான துப்­பாக்கிச் சூட்­டினை நடத்­தி­யி­ருந்­த­தாக அப்­போ­தைய பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­தி­ருந்­தது. இதன் போது புளூ­மெண்டல் சங்­கவின் நம்­பிக்­கைக்­கு­ரிய கையா­ளான பொர­ளையை சேர்ந்த சஜித் என்ற 27 வய­து­டைய  இளைஞன் ஒருவன் உயி­ரி­ழந்­தி­ருந்தான். குறித்த நபரே சம்­ப­வத்தின் போது சங்க பய­ணித்த ஹைப்ரிட் ரக காரின் சார­தி­யாக செயற்­பட்­டி­ருந்தார். இது தொடர்பில் அப்­போது கேசரி முழு­மை­யான விப­ரங்­களை பிர­சு­ரித்­தி­ருந்­தது. இந்த சம்­ப­வத்தை அடுத்து புளூ­மெண்டல் சங்­கவும் தெமட்ட கொடை சமிந்­தவும் தலைம­றைவு வாழ்­வொன்றை தொடர்ந்து வந்த நிலையில் அவர்­களின் பழி வாங்கும் பட­லத்தின் இரண்­டா­வது கட்டம் கடந்த ஜூன் 29 ஆம் திகதி (அதா­வது தெமட்­ட­கொடை சம்­ப­வத்தின்  8 மாதங்­களின் பின்னர் ) கிராண்ட்பாஸ், அன்­று­கே­வத்­தையில் அரங்­கே­றி­யது.
 
கடந்த 29 ஆம் திகதி மாவத்தை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தின் திரு­வி­ழாவின் பவனி அன்­று­கே­வத்தை பகு­தியின் ஊடாக செல்லும் படி­யாக ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதனால் திரு­விழா பாது­காப்பு பணிக்­காக பொலி­ஸாரும் குறித்த பகு­தி­களில் கட­மையில் இருந்த நேரம் அது.
 
திருவிழா­வுக்­காக பிர­தே­சமே களை­கட்­டி­யி­ருந்த அந்தப் பொழுதில் தேவா­லயம் சென்று வந்த பலர் ஆங்­காங்கே கூடி நின்று திரு­விழா பவனி காணும் வரை வீதி­களில் பேசிக்­கொண்­டி­ருந்­துள்­ளனர்.
 
இவர்­களில் ஒரு குழு­வா­கவே ஜனித் சாமர உட­வத்த , சுப சிங்க ஆரச்­சிகே கவிந்த கெலும்,சாமர சம்பத் மற்றும் சஷி குமார் ஆகிய நால்வர் கொண்ட குழு­வி­னரும் அன்­று­கே­வத்தை 87 ஆம் தோட்­டத்தில் வீதியில் இருந்­த­வாறே பேசிக்­கொண்­டி­ருந்­துள்­ளனர்.
 
ஜனித் சாமர உட­வத்த , சுப சிங்க ஆரச்­சிகே கவிந்த கெலும்,சாமர சம்பத் ஆகிய மூவரும் குறித்த பிர­தே­சத்­தையே வதி­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள் என்­ப­துடன் சஷி குமார் மட்டும் தெமட்­ட­கொடை பகு­தியை சேர்ந்­தவர். இந் நிலையில் அனைவர் மனங்­க­ளிலும் அந்­தோ­னியார் தேவா­லய திரு­விழா நிலைத்­தி­ருக்க யாரும் எதிர்­பா­ராத வித­மாக அந்த சம்­பவம் பதி­வா­னது.
 
அப்­போது நேரம் இரவு சுமார் 8.00 மணி இருக்கும். கிராண்ட்பாஸ் அன்­று­கே­வத்தை வீதியில் மிக வேக­மாக வந்த மோட்டார் சைக்­கி­ளொன்று சென்­றது. W P TK -0135 என்ற இலக்­கத்­த­கட்­டினைக் கொண்­டி­ருந்த அந்த மோட்டார் சைக்கிள் 87 ஆவது தோட்­டத்தில் மேற்­சொன்ன நால்­வரும் கதைத்­துக்­கொண்­டி­ருந்த இடத்தை அண்­மித்த பகு­தியில் போய் நின்­றது.
 
முகத்தை துணி­யொன்­றினால் சுற்றி கண்கள் மட்டும் தெரியும் படி­யாக மறைத்து அதற்கு மேலால் தலைக்­க­வசம் அணிந்­தி­ருந்­துள்ள அவ்­வி­ரு­வரில் மோட்டார் சைக்­கிளின் பின்னால் அமர்ந்­தி­ருந்­த­வ­ரிடம் ஒரு பயணப் பை இருந்­துள்­ளது. மோட்டார் சைக்கிள் நிறுத்­தப்­பட்ட மறு­க­ணமே பையி­லி­ருந்து ரீ - 56 ரக துப்­பாக்­கியை வெளியே எடுத்­துள்ள அந்த நபர் ஜனித் சாமர உட­வத்த , சுபசிங்க ஆரச்­சிகே கவிந்த கெலும்,சாமர சம்பத் மற்றும் சசிகுமார் ஆகியோர் மீது சர­மா­ரி­யான துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை இடை விடாது மேற்­கொண்­டுள்ளார். இதனால் அந்த நால்­வரும் ஸ்தலத்­தி­லேயே நிலத்தில் சரிந்­தனர். இதனை அடுத்து நிலத்தில் வீழ்ந்­த­வர்­களின் அருகே இறங்கி சென்­றுள்ள துப்­பாக்கி தாரி ஜனித் சாமர உட­வத்தை மற்றும் சுப­சிங்க ஆரச்­சிகே கவிந்த கெலும் ஆகியோர் மீது மேலும் பல சூட்­டுக்­களை நடத்தி விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். சம்­பவம் இடம்­பெறும் போது அந்­தோ­னியர் ஆலய உற்­ச­வமும் இடம்­பெற்று வந்த நிலையில் பட்­டாசு கொளுத்­தப்­ப­டு­வ­தா­கவே பொது­மக்­களில் பலர் நினைத்­துள்­ளனர்.
 
துப்­பாக்கிச் சூட்டை அடுத்து தாம் வந்த மோட்டார் சைக்­கி­ளி­லேயே தப்பிச் செல்ல அவ்­விரு சந்­தேக நபர்­களும் முயற்­சித்த போதும் அப்­போது ஏற்­பட்ட பதற்ற சூழலால் மோட்டார் சைக்­கிளை திருப்பும் போது அது அருகில் இருந்த கானுக்குள் வீழ்ந்­துள்­ளது. இதனை அடுத்து பய­ணப்­பை­யையும் மோட்டார் சைக்­கிளையும் அவ்­வி­டத்­தி­லேயே கைவிட்டு அந்த வீதியால் வந்த முச்­சக்­கர வண்­டியை சந்­தேக நபர்கள் தப்பிச் செல்ல பயண்­ப­டுத்­தி­யுள்­ளனர். முச்­சக்­கர வண்டி சார­தியை இழுத்து வீசி­யுள்ள சந்­தேக நபர்கள் கண்­ணி­மைக்கும் பொழுதில் அன்­றுகே வத்­தைக்கு விடை­கொ­டுத்­தனர். இந் நிலையில் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கான 28 வய­து­டைய ஜனித் சாமர உட­வத்த , 26 வய­து­டைய  சுப சிங்க ஆரச்­சிகே கவிந்த கெலும் ஆகியோர் ஸ்தலத்­தி­லேயே துடி துடித்து உயி­ரி­ழந்­தனர். அத்­துடன் படு­கா­ய­ம­டைந்த 27 வய­து­டைய சாமர சம்பத் மற்றும் 33 வய­து­டைய சசி குமார் ஆகியோர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் அவ­சர சிகிச்சைப் பிரிவில் உடன் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.
இதனை தொடர்ந்து கிராண்ட்பாஸ் பொலி­ஸா­ரி­னதும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலி­ஸா­ரி­னதும் ஸ்தல விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. விசா­ர­ணைகள் தற்­போதும் தொடரும் நிலையில் பல முக்­கிய தக­வல்கள் பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்­ளன. அதன் அடிப்­ப­டையில் இது ஒரு போதைப் பொருள் வர்த்­தகப் போட்டி கார­ண­மாக இடம்­பெற்ற சம்­பவம் என்ற உறு­தி­யான அனு­மா­னத்­துக்கு விசா­ரணைக் குழு­வினர் வந்­துள்­ளனர்.
 
இது தொடர்பில் கேச­ரிக்கு பதி­வான தக­வல்­களின் பிர­காரம்,ஜனித் சாமர உட­வத்த என்ற 28 வய­து­டைய நப­ருக்கு இன்­னொரு பெயர் உள்­ளது. அது தான் 'சுது மஹத்­தயா'. சுது மஹத்­தயா தெமட்­ட­கொடை சமிந்­தவின் நெருங்­கிய நபர்­களில் ஒரு­வ­ராக இருந்­துள்­ள­துடன் அவ­ரது உற­வினர் எனவும் கூறப்­ப­டு­கின்­றது. இந் நிலையில் கிராண்ட்பாஸ், கொட்­டாஞ்­சேனை உள்­ளிட்ட பகு­தி­களில் குடு சமிந்த அல்­லது தெமட்­ட­கொடை சமிந்த என்ற பாதாள உல­கத்­த­லை­வனின் ஹெரோயின் வியா­பா­ரத்தை முன்­னெ­டுத்­தவர் சுது மஹத்­தயா என்­பதை பொலிஸ் விசா­ர­ணைகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.
 
இந் நிலையில் புளூ மெண்டல் பகு­தியை மைய­மாக வைத்து ஹெரோயின் வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வரும் சங்க தனது பிர­தே­சத்தில் தெமட்­ட­கொடை சமிந்த ஆதிக்கம் செலுத்­து­வதை விரும்­பி­யி­ருக்­க­வில்லை. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் இவ்­விரு பாதாள உல­கத்­த­லை­வர்­க­ளான சமிந்­தவும் சங்­கவும் இது தொடர்பில் பல­முறை தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் எனினும் அவர்­களால் ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வர முடி­யாமல் போயுள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 
ஏற்­க­னவே கடந்த 2013 ஆம் ஆண்டு சமிந்த சங்­கவை போட்­டுத்­தள்ள முயற்­சித்­தி­ருந்த நிலையில் அந்த திட்­டத்தில் மயி­ரி­ழையில் உயிர் தப்­பி­யி­ருந்த சங்க சமிந்­த­விற்கு சங்­கூ­தவும் காத்­துக்­கொண்­டி­ருந்த நிலை­யி­லேயே இந்த சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது.
 
அர­சியல் பாது­காப்பு உள்ள சமிந்த ஊடாக பெற்று சுது மஹத்­தயா விற்­பனை செய்த ஹெரோயின் சுத்­த­மா­னது எனவும் நிறை­யிலும் எவ்­வித குறை­பாடும் அற்­ற­தா­கவும் உள்­ள­தாக போதைப் பொருள் பாவ­னை­யா­ளர்கள் பலர் குறிப்­பிட்­டுள்­ளனர். அதே நேரம் சங்­கவின் ஆட்கள் விற்­பனை செய்யும் ஹெரோ­யினோ கலப்­படம் செய்­யப்­பட்­டது என அவர்கள் குறிப்­பி­டு­வ­தாக பொலிஸ் தக­வல்கள் குறிப்­பிட்­டன. இதனால் சங்­கவின் போதைப் பொருள் வர்த்­தகம் வீழ்ச்சி காண ஆரம்­பித்­துள்­ளது. இந் நிலை­யி­லேயே சமிந்­தவை தீர்த்துக் கட்ட முன்னர் சமிந்­தவின் போதைப் பொருள் வர்த்­த­கத்தை முன்­னெ­டுத்து வந்த சுது மஹத்­தயா எனும் ஜனித் சாமர உட­வத்­தவை தீர்த்துக் கட்­டு­வது என்ற சங்­கவின் திட்டம் அன்று அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது.
 
சந்­தேக நபர்கள் விட்டுச் சென்ற பய­ணப்­பை­யி­லி­ருந்து ரீ - 56 ரக துப்­பாக்­கிக்குப் பயன்­ப­டுத்­தப்­படும் மகஸின் ஒன்று கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. இதனை விட துப்­பாக்கிச் சூடு இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து 18 வெற்று தோட்­டாக்கள் ஸ்தல விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த குற்­ற­வியல் தொடர்­பி­லான தட­ய­வியல் பொலி­ஸா­ரினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
 
இவ்­வி­ரட்டை கொலையின் பின்னர் சந்­தேக நபர்கள் தப்பிச் சென்ற முச்­சக்­கர வண்­டி­யா­னது பேலி­ய­கொடை, கட்டு நாயக்க அதி­வேக பாதையின் நுழை­வா­யிலை அண்­மித்த ஒரு இடத்­தி­லி­ருந்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளது. கைவி­டப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே அந்த முச்­சக்­கர வண்டி இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளது. இதனை விட கொலைக்கு வருகை தந்த மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்­த­க­டா­னது போலி­யாக பொருத்­தப்­பட்­டுள்­ளது என்­பது தெரி­ய­வந்­துள்­ள­துடன் அந்த வண்டி திரு­டப்­பட்­டது என்­பதும் புல­னா­கி­யுள்­ளது. பேரா­தனை பல்கலைக்கழக பட்டப் படிப்பு மாணவன் ஒரு­வ­னுக்கு சொந்­த­மான அந்த மோட்டார் சைக்கிள்  சப்­பு­கஸ்­கந்த பகு­தியில் நண்பன் ஒரு­வனின் வீட்டில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த போது காணாமல் போன­தாக அப்­போதே  சப்­பு­கஸ்­கந்த பொலிஸ் நிலை­யத்தில் இது தொடர்பில் முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ளது.
 
இந்த இரட்டை கொலை­யினை செய்­த­வர்கள் தொடர்பில் உறு­தி­யாக கூற முடி­யாமல் உள்ள போதும் சங்க குழு­வினர் மீதான சந்­தே­கங்கள் வலுத்­துள்­ளன. இந்த கொலையின் நிமித்தம் புளூ­மெண்டல் சங்­கவின் குழுவின் பிம்­ச­ருடன் இன்­னொ­ருவர் வந்­தி­ருக்க வேண்டும் என நம்­பப்­ப­டு­கின்­றது. எனினும் இவை அனைத்தும் பொலி­ஸாரின் விசா­ர­ணை­களின் இறுதி­யி­லேயே அறிய முடி­யு­மாக இருக்கும். 
 
தெமட்­ட­கொடை சந்­தையில் கரு­வேப்­பிலை விற்ற சமிந்த ஹெரோயின் ஊடாக இன்று கோடீஸ்­வ­ர­னாகி தற்­போது தலை­ம­றைவு வாழ்க்கை வாழ்ந்து வரு­கின்றார். புளூ­மெண்டல் பிர­பல பாதாள உல­கத்­த­லைவன் சஞ்­சீவ கதிர்­காமம் சென்று வரும் போது அவரது குழுவினருடன் காணாமல் போய் இன்றுவரை மர்மம் துலங்காது நீடிக்கும் நிலையில் அக்குழுவின் முக்கிய நபரான சங்க தற்போது அந்த குழுவுக்கு தலைமை தாங்கி ஹெரோயின் வர்த்தகத்தை முன்னெடுக்கின்றார்.
இவ்விரு குழுக்களுக்குமிடையே இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகப் போட்டி காரணமாக கடந்த வருடமும் இந்த வருடமும் மூவர் கொல்லப்பட்டுவிட்டனர். ஒருவர் சங்கவின் குழுவை சேர்ந்தவர். மற்றைய இருவரும் சமிந்தவுக்கு நெருக்கமானவர்கள். இந் நிலையில் தலைமறைவு வாழ்வு வாழும் சங்கவையும் சமிந்தவையும் பொலிஸார் சட்டத்தின் முன் நிறுத்தாது போனால் இதன் மூன்றாவது கட்ட தாக்குதல் ஒன்றும் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இல்லாமலில்லை.
 
எனவே நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள போதைப் பொருள் வர்த்தகத்துக்கு சாவு மணி அடிக்க பொலிஸ் மா அதிபர் புதிதாக அறிவித்துள்ள விஷேட புலனாய்வுப் பிரிவு ஊடாக தகவல்களை திறட்டி இவ்வாறானோரை விரைவில் கைது செய்ய வேண்டும். அப்போதே நாட்டில் போதைப் பொருள் கலாசாரமும் அதுசார்ந்த கொலைகளையும் கட்டுப்படுத்த முடியும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அனேகமானோர் காட்டுமிராண்டிகள் அவன்களிடம் தற்போது அடிவேண்டிக்கொண்டு இருக்கும் முஸ்லீம்களின் ஒருவர் வீரகேசரியில் பக்கம் பக்கமாய் சிங்களவர்களின் கொல்லுபாடுகளை எழுதி குத்தி முறிகிறார்.என்னைய்யா நடக்குது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.