Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வான் கும்பலை சேர்ந்த பத்து பேர் வெட்டி கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதன் நிருபர்கள் புதினம், சங்கதி, பதிவு போன்ற இணைய செய்தித் தளங்களும், உதயன், மட்டு. ஈழநாதம், வீரகேசரி போன்ற நாளேடுகளின் இணையத்தளங்களுமே. (புதினம் தனது செய்தியில் புதினத்தின் நிருபர் குறிபிபட்டார் என்றால் அச்செய்தியை நிதர்சனம் கொப்பியடிக்கும்போது நிதர்னத்தின் நிருபர் குறிப்பிட்டார் என்று மாற்றப்படும்)

மின்னல், நீங்கள் மேலே குறிப்பிட்ட வசனம் உண்மையானது.

ஆங்கில ஊடகங்களில் இருக்கின்ற கண்ணியம் தமிழ் ஊடகங்களிலும் அதிலும் சமகாலத்தில் செய்திகளை தந்து கொண்டிருக்கின்ற இணையத்தளங்களிலும் இல்லை என்பது உண்மையே.

இவ்வளவும் ஏன், வெள்ளை வானில் சென்ற பத்துப் பேர் படுகொலைச் செய்தியானது ஏதாவது ஒரு பத்திரிகைச் செய்தியில் தானும் ஊகச் செய்தியாக வெளிவந்ததா? இல்லையே. தாமாக உருவாக்கி போட்ட ஒரு தளத்தின் செய்தியை நிதர்சனம் போன்ற தளங்கள் பொறுப்பற்ற தன்மையில் எடுத்துப் போட்டிருக்கின்றது.

"நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன"

நிதர்சனத்தை வெறுமனே கரித்து கொட்டுவதை நிறுத்தி விட்டு அதன் செய்தியை செய்தியாக பாருங்கள். உங்களில் எத்தனைபேர் இங்கு நிதர்சனத்தை கரித்து கொட்டிவிட்டு பீபீசி போன்ற இணையத் தளங்கள் வரம்பு மீறுகையில் கைபொத்தி வாய் பொத்தி நின்றீர்கள் என்பதும் தெரியும்.

மற்றைய தளங்கிளலிருந்து கொப்பிடியடித்து அப்படியோ போடப்படும் செய்திகள் மாத்திரமே நிதர்சனத்தில் செய்தியாக இருக்கும். மற்றைவையெல்லாம் செய்தி என்ற வகைக்குள் அடங்காது.

பீ.பீ.சி போன்ற நிறுவனங்கள் செய்திகளில் தவறிழைக்கும் போது நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஏன் பீபீசியின் இணையத்தில் வெளியான செய்தியின் தலைப்பையே மாற்றி வைத்திருக்கிறோம்.

செஞ்சோலைப் படுகொலை நடந்போது கொழும்பில் பாகிஸ்தானிய து}துவர் மீதான குண்டுத்தாக்குதலையே முதன்மைப் படுத்தி அச்செய்திக்குள்ளேயே செஞ்சோலைப் படுகொலை தொடர்பான செய்தியையும் இணைத்திருந்தது.

ஆனால் யாழ். கள உறவுகள் உட்பட உலங்கலுமிருந்து பெருமளவான எம்மவர்கள் பிபிசி நிறுவனத்திற்கு தொலைபேசியு_டாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் கண்டனம் தெரிவித்ததையடுத்த தலையங்கத்தை மாற்றினார்கள்.

ஆனால் நிதர்சனத்திற்கு அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது என்பது என்னத்தின் மீதோ மழை பெய்தமாதிரி.

நிதர்சனம் நம்மவரால் நடத்தப்படுவது தானே அந்த இளக்காரத்திற்கு காரணம்.

தமிழ்நெட் புதினம் சங்கதி எல்லாமும் நம்மவரால்தானே நடத்தப்படுகிறது. தமிழ்நெட்டின் செய்திகளை யாராவது இங்கு விமர்சனம் செய்திருக்கிறார்களா??

நீங்கள் கூறும் நிதர்சனத்தின் மீதான இளக்கத்திற்குக் காரணம் தம்மை ஊடகவியலாளர்கள் என்று கருத்திக் கொண்டு சில மண்டை பழுதானதுகள் நடத்தும் கூத்தே.

எனக்கு நிதர்சனம் மீது காதல் இல்லை. அந்த இணையத் தளம் சில வேளைகளில் வரம்பு மிறுவது தான் பிரச்சனை. ஆனால் வெறும் வாய் சவடாலுக்கு நிதர்சனத்தை எதிர்ப்பதை நான் எதிரக்கிறேன்.

உங்களிற்கு நிதர்சனம் மீது காதல் இல்லை. ஆனால் நிதர்சனத்தை நடத்தும் அவருடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு பட்டிருக்கிறீர்களா? :wink: :lol:

நீங்களே கூறும் நிதர்சனத்தின் வரம்பு மீறல் பிரச்சினை மற்றும் கொப்பியடித்தல் மற்றும் கற்பனைச் செய்திகளை வெளியிடுதல் போன்றவற்றையே இங்கே விமர்சிக்கிறார்கள், கிண்டல் செய்திறார்கள். இது ஒன்றும் வெறும் வாய்ச்சவாடலுக்கான எதிர்ப்பு அல்ல.

மின்னல் நிதர்சனம் வெளியிட்ட செய்திகளில் உண்மை இருக்கும் ஆனல் அது மிகைப்படுத்தப்பட்டிருக்கும

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை கொப்பியடிப்பவர்ளை சாடியே "நக்குகிற நாய்க்கு செக்சென்ன சிவலிங்கம் என்ன" என்று குறிப்பிட்டிருந்தேன்.

உண்மையில் தமிழ் ஊடகத்துறை சரியான வளர்ச்சிப்போக்கில் வெளிவர வேண்டும் என்பதனையே விரும்புகிறேன்.

மூதூர், சம்பூர், மாவிலாறு, மண்டைதீவு, முகமாலை முன்னரங்க நிலைகளில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் சில இணையத்தளங்கள் மிகப்படுத்தி வெளியிட்ட செய்திகளால் புலம்பெயர் தமிழர்கள் குழப்பமடைந்திருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம் சில இணையத்தளங்கள்.

மின்னல் நிதர்சனம் வெளியிட்ட செய்திகளில் உண்மை இருக்கும் ஆனல் அது மிகைப்படுத்தப்பட்டிருக்கும
  • கருத்துக்கள உறவுகள்

இராசயன ஆயுதங்கள் பாவிக்கிப்படுகின்றன என்று சந்தேகிப்பதில் தப்பில்லை. அது குறித்து ஆராய வேண்டியது அவசியமாகும். ஆதாரம் கிடைக்கும் வரை, சிங்களவனின் தாக்குதலுக்கு பொத்திக் கொண்டு இரு என்று சொல்வது சரியல்ல!

மேலும், சிங்கள இராணுவம் தடை செய்யப்பட்ட இராசயன ஆயுதத்தைப் பாவிப்பது குறித்தான சந்தேகம் புதிதல்ல. ஆனையிறவு முன்னரங்கள நிலைகளில், ஒரு தடவை அவ்வாறு பாவித்து, அங்கிருந்த போராளிகளின் சாம்பல் கூட, கிடைக்கவில்லை என்று கூடச் செய்தி வந்திருந்தன.

எனவே நிதர்சனம் சரியா தவறா என்றது Nவுறு விடயம். ஆனால் எதற்கெடுத்தாலும், குற்றம் கணிக்கும் பாணி தவறானது!

செய்திகளை கொப்பியடிப்பவர்ளை சாடியே "நக்குகிற நாய்க்கு செக்சென்ன சிவலிங்கம் என்ன" என்று குறிப்பிட்டிருந்தேன்.

உண்மையில் தமிழ் ஊடகத்துறை சரியான வளர்ச்சிப்போக்கில் வெளிவர வேண்டும் என்பதனையே விரும்புகிறேன்.

மூதூர், சம்பூர், மாவிலாறு, மண்டைதீவு, முகமாலை முன்னரங்க நிலைகளில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் சில இணையத்தளங்கள் மிகப்படுத்தி வெளியிட்ட செய்திகளால் புலம்பெயர் தமிழர்கள் குழப்பமடைந்திருந்தனர்.

இதற்கெல்லாம் காரணம் சில இணையத்தளங்கள்.

நிர்மலன், தனியே இணையத்தளங்கள் மாத்திரமல்ல.

அவற்றை விட மேலாக ஐரோப்பாவின் முதன்மை தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி என்பன மிக முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டும்.

இணையத்தளங்களை விட இவர்களே மக்களைக் குழப்பியடித்ததில் பெரும்பங்கை நீங்கள் குறிப்பிடும் சம்பவங்கைள செய்தியாக்கியதில் கொண்டிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் ஒலிபரபாகும் வானொலியொன்றும், தொலைக்காட்சியொன்றும்தான் மின்னல் குறிப்பிட்டது போன்று மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டிருந்தது தொடர்பாக பலர் கூறி அறிந்து கொண்டேன்.

தூயவன் நிதர்சனத்தின் செய்திகளில் உண்மையிருக்கும் ஆனால் மிகையானது என்ற ஈழவனின் கருத்திற்கே நிதர்சனத்தின் ஊகிப்பான அச்செய்தியை உண்மைச் செய்தியல்ல என்ற உதாரணமாக அதனைக் குறிப்பிட்டிருந்தேன். எதெற்கெடுத்தாலும் அதனை நாம் குறை சொல்லவில்லை. அவற்றின் தவறை மாத்திரமே தெரிவிக்கிறோம்.

நடக்காத விடயத்தை நடந்ததாகத் தெரிவித்து மக்களை குழப்பிட விட்டு பின்னர் நடக்கும் போது மக்கள் எப்படி நம்பப் போறார்கள்.

ஆனால் சிங்கள இராணுவம் தேர்மோ பெரிக் என்றவகை ஆயுதத்தை ஆனையிறவு மீட்பின் பின்னர் பல்குழல் பீரங்கள் வந்தபின்னர் பயன்படுத்தியிருக்கிறார்கள். அச்செய்தி வந்தது நிதர்சனம் வெளியிட்டது போன்று ஊகத்தினால் அல்ல வலுவான ஆதாரத்தின் மூலமே.

ரணில் பிரதமர் பதவியில் இருந்த போது ஆழ ஊடுருவும் படையின் கொழும்பில் இரகசிய இருப்பிடம் காவல்துறையினரால் பிழையாக விளங்கப்பட்டு முற்றுகையிடப்பட்டபோது இந்த வகை ஆயுதம் அங்கிருந்து மீட்கப்பட்;டது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னலாரே மின்னலாரே நானு உங்களை இந்த யாழ் களத்திலை பாத்து வரகிறன். நீரும் ஏதோ ஒரு பகதியை குறை கூறி வரகிறீர் நல்ல விடயம் உமது ஆலோசனைகளும் விளக்கங்களம் உங்கள் ஊடகத்திலைதான் பிகுது பாரங்கோ நிங்கள் சொல்லிறமாதிரி செய்தி சொல்ல வேனும் என்டால் தமிழ் தொலைக்காட்சிகள் தமிழ் வானொலிகள் எல்லாம் செய்தியை சொல்லி என்று புதினம் செய்தி வெளியிட்டுள்ளது என்று சங்கதி வெளியிட்டள்ளது என்று உதயன் வெளியிட்டுள்ளது என்று சொல்லலாம் அல்லது என்று பி.பி.சி வெளியிட்டள்ளது அல்லது றெயட்டர் வெளியிட்டுள்ளது என்று சொல்லலாம்.

ஏன் எந்த தமிழ் ஊடாகமும் அனைத்து சார்வதே செய்திகளையும் விசேடமாக ஒளி வடிவத்தை ஏதோ ஒரு இடத்தில் திருடி அதை தமது சார்வதேச செய்தியாக ஒளி மற்றும் ஒலிபரப்புகிறது

உதாரனத்திற்கு அமரிக்காவில் கதரீன அடிக்கும்போதும் ஆபிரிக்காவில் ஆட்சி கவிளும்பொதும் நிங்கள் வக்காளத்த வாங்கும் தமிழ் ஊடகங்கள் தமது செய்தியாளரை அனுப்பியோ செய்தி சொல்லகினம்.

அல்லது அப்படி சொல்வதை விட செய்திகளை புதினத்திலையும் சங்கத்தியிலையும் பொய் பாக்கலாம் என்று கூறி 2 வரிகளில் 3 நேர செய்தியையும் முடித்தவிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.