Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரைநகர்க் குழந்தையொன்றின் கண்ணீர் வேண்டுகோள்..

Featured Replies

ஈனப் பிறவிகளின் இழிசெயலைத் தாங்காமல்

ஈழம் துறந்தெங்கோ இருக்கை அமைத்தவரே

வேசப் பிறவிகளின் வெங்கொடுமை தாங்காமல்

வேரை விட்டேங்கோ விழுதாய்ப் படர்ந்தவரே

 

எங்கே சென்றாலும் எவ்விடத்தில் தரித்தாலும்

எமக்காக நீரிருப்பீர் எப்போதும் நினைத்திருப்பீர்

என்று நினைத்தோமே எண்ணிக் களித்தோமே

எல்லாமே பொய்யாச்சே எம்நினைப்பும் மண்ணாச்சே

 

உக்ரேய்ன் எல்லையிலே உருக்குலைந்து போனவர்க்காய்

உருக்கத்தை பிழிகின்றீர் உரிமையுடன் கொதிக்கின்றீர்

காசா மண்ணினிலே கண்மூடிப் போனவர்க்காய்

கவலை கொள்கின்றீர் கண்ணீரை விடுகின்றீர்

 

புலத்து மண்ணினிலே எம்தமிழர் சேர்ந்தாலும்

புற்றீசல் போல்கிடக்கும் பத்திரிகை மேய்ந்தாலும்

முகநூலில் நீர்பதியும் பதிவுகளைப் பார்த்தாலும்

முகமனுக்காய்க் என்றாலும் எங்களுக்காய் அழுதீரோ

 

காரைநகரினிலே காமுகர்கள் கைகளிலே

கசங்கிப் போனபிஞ்சை கடிதேனும் நினைத்தீரா

கதறி அழுதீரா கண்ணீர் விட்டீரா

கயவர்கள் செய்கையினை கடியத்தான் செய்தீரா

 

நாடுவிட்டு நாடுசெல்ல நாதியற்ற சோதரர்கள்

நரகத்து அவலத்தை நாலுவரி வடித்தீரா?

கூடுவிட்டுச் சென்றங்கே குறைவாழ்க்கை கண்டதுமே

விடுதலைக்காய் அழுகின்ற எங்களையும் மறந்தீரா

 

உலகத்து அவலத்தை உமதாய் உணர்பவரே

உம்மண்ணின் மைந்தரெங்கள் உயிர்காக்க முயல்வீரா

எங்கோ இறப்பவர்க்காய் கட்டாயம் குரல் தாரும்

அத்தோடு நில்லாது எமக்காயும் நீர்எழுதும்….

Edited by Manivasahan

புலத்து மண்ணினிலே எம்தமிழர் சேர்ந்தாலும்

புற்றீசல் போல்கிடக்கும் பத்திரிகை மேய்ந்தாலும்

முகநூலில் நீர்பதியும் பதிவுகளைப் பார்த்தாலும்

முகமனுக்காய்க் கூடநீவீர் எங்களுக்காய் அழுதீரோ

காரைநகரினிலே காமுகர்கள் கைகளிலே

 

கசங்கிப் போனபிஞ்சை கடிதேனும் நினைத்தீரா

கதறி அழுதீரா கண்ணீர் விட்டீரா

கயவர்கள் செய்கையினை கடியத்தான் செய்தீரா ? :(

 

நியாயமான கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் மூலையொன்றில்,

விமானமொன்று விழுகின்றது..!

 

உலகமே கொதிக்கின்றது...!

 

இன்னுமொரு மூலையில்...,

இருக்கின்ற தேசமொன்றின் தலைவன்,

படையனுப்பத் துடிக்கிறான்!

 

ஆதாரங்கள் தொலைந்து விடுமாம்...!

 

ஐ நாவின் அதிகாரிகள்....!

அநியாயம் நடந்ததெனக் கொக்கரிக்கிறார்கள்...!

 

இது தான் உலகம் தோழனே..!

 

ஆரியம் எமதினத்தைக்,

கூறு போட்டிருக்கின்றது...!

 

வருணாச்சிர தர்மத்தின் வெற்றி..!

 

பிரம்ம தேவனின் சிரசுக்கும்,

அவனது காலின் பெருவிரலுக்கும்,

உள்ள வித்தியாசம் இது..!

 

உலகத்தையே ஏமாற்றுகின்றது,

ஆரியத்தின் மூலம்..!

 

காரைநகர்ச் சிறுமியும்,

கறுத்த நிறம் கொண்ட...,

நீயும் நானும்....!

பிரம தேவனின்,

பெரு விரலில் உதித்தவர்கள்..!

 

உலகம் எமக்காக அழுதாலும்,

ஓடோடிச் சென்று.....,

அழுவது பாவம் என்று,

ஆரியம் கூறி நிற்கும்...!

 

  • கருத்துக்கள உறவுகள்

----

புலத்து மண்ணினிலே எம்தமிழர் சேர்ந்தாலும்

புற்றீசல் போல்கிடக்கும் பத்திரிகை மேய்ந்தாலும்

முகநூலில் நீர்பதியும் பதிவுகளைப் பார்த்தாலும்

முகமனுக்காய்க் என்றாலும் எங்களுக்காய் அழுதீரோ

-------

உலகத்து அவலத்தை உமதாய் உணர்பவரே

உம்மண்ணின் மைந்தரெங்கள் உயிர்காக்க முயல்வீரா

எங்கோ இறப்பவர்க்காய் கட்டாயம் குரல் தாரும்

அத்தோடு நில்லாது எமக்காயும் நீர்எழுதும்….

 

 

உலகத்தின் மூலையொன்றில்,

விமானமொன்று விழுகின்றது..!

 

உலகமே கொதிக்கின்றது...!

 

இன்னுமொரு மூலையில்...,

இருக்கின்ற தேசமொன்றின் தலைவன்,

படையனுப்பத் துடிக்கிறான்!

 

ஆதாரங்கள் தொலைந்து விடுமாம்...!

 

ஐ நாவின் அதிகாரிகள்....!

அநியாயம் நடந்ததெனக் கொக்கரிக்கிறார்கள்...!

---

 

பிரம்ம தேவனின் சிரசுக்கும்,

அவனது காலின் பெருவிரலுக்கும்,

உள்ள வித்தியாசம் இது..!

----

காரைநகர்ச் சிறுமியும்,

கறுத்த நிறம் கொண்ட...,

நீயும் நானும்....!

பிரம தேவனின்,

பெரு விரலில் உதித்தவர்கள்..!

-----

 

 

11 வயது,

அவளை.... 7 கடற் படையினர், வன்புணருகின்றார்கள்.

அந்தக் கடற் படையினரை தண்டித்தால்.... மற்றைய பாதுகாப்பும் படையனரின்.... மன நிலை பாதிக்கப் பட்டு விடும் என்ற ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்தவின் உத்தரவுக்கு இணங்க..... அந்த 7 கடற் படையினரும் காலி கடற்படை முகாமுக்கு, பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் படுகின்றார்கள். இது... செய்தி.

 

அந்த 11 வயதுச் சிறுமியின், மன நிலையைப் பற்றி,உலகம் தான்.... சிந்திக்கவில்லை.

 

யாழ்களத்தில் வந்த, இந்தப் பதிவுகளுக்கு எத்தனை பேர்,  தமது ஆதங்கத்தை தெரிவித்தார்கள் என்று பார்த்தால்.... ஏக்கமே மிஞ்சுகின்றது.

 

------

 

அந்தச் சிறுமியைப் பற்றிய இணைப்புகள்....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142729

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142757

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142832

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142976

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.