Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

மீனா தேவராஜன்

vegan.jpg

மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன.

பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. மேலும் அப்படி வந்தவர்களில் சிலர் இங்கேயே தங்கி நம் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டவர்களுமுண்டு. எனவே உணவுப் பழக்க வழக்கங்கள் பல கலந்து விட்டன என்றே கூறலாம்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரீஸ் நாட்டு அலெக்ஸாண்டர் வந்தவர், நம் நாட்டுச் சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லவில்லையா?

பின் வந்த முகமதியர்களின் தாக்கத்தால் தென்னிந்தியாவைவிட வட இந்தியாவின் பழக்க வழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன என்று வரலாற்றின் வழி நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்திய உணவாகக் கருதப்படும் பிரியாணி எங்கிருந்து வந்தது? பூண்டின் பயன்பாட்டை நாம் கற்றுக் கொண்டது எப்படி? அதே போன்று சைவ அசைவ உணவுப் பழக்கங்கள் வந்திருக்கக்கூடும் அல்லவா?.

ஆங்கில நாட்டுப் பழக்கங்களை நம்மில் பலர் இந்தியாவில் கைகொண்டுள்ளனர். அதுதான் சிறந்த நாகரீகம் என்று கருதுவோரும் உண்டு. அவர்கள் போல் உணவு உண்பது. அதாவது முள் கரண்டி, கரண்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது. தட்டுகளில் சாப்பிடுவது, தண்ணீருக்குப் பதில் கோக்கொலா குடிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவர்கள் நாடு குளிர் மிகுந்த நாடு. கைகளில் அணியப்பட்டிருக்கும் கையுறையைக் கழற்றினால் குளிர் தாங்காது, கையால் சாப்பிட்டால் கை கழுவ முடியாது. அது அந்த நாட்டுச் சூழல். இப்போது நம் நாட்டிலிருந்து அங்கு போய் வாழும் மக்கள் அந்தப் பழக்கங்களைப் பினபற்றினால் தப்பில்லை, ஏனென்றால் ரோம் நகரில் வாழ்ந்தால் ரோமாபுரியனைப் போல்தான் வாழ வேண்டும். இல்லையென்றால் அந்நாட்டு இயற்கைச் சூழல் நம்மைப் பாதிக்கும் அல்லவா?

மேலை நாட்டில் உள்ளவர்கள் உணவில் அதிக வெண்ணெய் பாலாடைக்கட்டி ஆகியவற்றை உண்பார்கள். அவை அவர்களை குளிரிலிருந்து காக்கும். அது அவர்களுக்கு மது பானமும் தேவை. ஆனால் நம் இந்தியா வெப்பமுடைய நாடு இத்தகைய சூழலுக்கு அவை தேவையா?

ஒவ்வொரு நாட்டில் கிடைப்பவைதான் அந்நாட்டு மக்களுக்குரிய உணவாக இருந்து வந்திருக்கின்றன. அக்காலத்தில் சார்ஸ் நோயும் எச்1எம்1 நோயும் ஏற்படவில்லை. கோழிக் கறி கிடைக்காவிட்டாலும் பிற நாடுக்களிலிருந்து இறக்குமதி செய்து உலகளாவிய வணிப முறை இப்போது வந்துவிட்டது? மேலும் அபரிதமான செல்வச் செழிப்பும் வளர்ந்து விட்டது. அதாவது பணத்தைக் கொண்டு வாங்கும் திறன் (purchasing power of money) வளர்ந்து விட்டது. எனவே எனக்கு விருப்பமுள்ளவற்றை நான் விரும்பிச் சாப்பிடுகிறேன் என்ற நிலை உருவாகி விட்டது.

இந்துக்களும்பன்றிக்கறியைதவிர்க்கக்காரணம் அவர்கள் இந்துகள் அவர்கள் இந்து மதக் கொள்கையைப் பின் பற்றுகிறார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பன்றிக்கறியைச் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் பின்பற்றும் மதக் கொள்கை. இது தனி மனித சுதந்திரம்.

அன்று கண்ணப்பர் சிவனுக்கு மாமிசம் படைத்தார் என்றால் அன்று கண்ணப்பர் வேட்டுவத் தொழிலைச் செய்தார். எனவே தான் உண்ணும் உணவை அன்பினால் ஆண்டவனுக்குக் கொடுத்தார். சிவச்சாரியார் பழங்கள் பூக்கள் ஆகியவற்றைப் படைத்து மகிழ்ந்தார்.

கோயில்களில் சைவ உணவு படைக்கப்படுகிறது ஏன் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு ஏற்பட்டு உள்ளது. கோயில் என்பது வழிபாட்டு இடம் எந்த மதத்தவருக்கும் இது பொருந்தும். மேலும் அது பலர் கூடும் இடம் . அவ்விடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. அசைவ உணவுகளை அவ்விடங்களில் பயன்படுத்தினால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு. ஆடு, மாடு, கோழி ஆகியவற்றிலிருந்தும் தொற்ற நோய் பரவ வாய்ப்பு உண்டு என்பதால் பொது இடங்களில் அசைவ உணவு பயன்படுத்தப்படாமலிருந்திருக்கலாம். அவ்விடங்களில் தூர்நாற்றமும் ஏற்படக்கூடும். அவ்விடங்களைச் சுத்தம் செய்வதும் சிரமம்.

இங்கு நான் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். நாம் ஆடைகள் அணியும் முறை மேலைநாட்டுப் பாணியில்தான். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வேட்டி அணிவோருக்குத் தடை என்ற அறிவுப்புதான். இதில் பண்பாட்டுச் சிக்கலுள்ளதா?

அன்று பழைய பாடல் ஒன்று சொல்கிறது, “ உண்பவை நாழி உடுப்பவை இரண்டே!” என்று . இது இன்றும் எல்லா நாட்டிற்கும் பொருந்தும். ஒரு கால் சட்டை, ஒரு மேல் சட்டை, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் சில இடங்களில் நாம் ஏன் மேலைநாட்டவரின் உடைகளைக் கட்டாயப்படுத்த வேண்டும்? இது நாம் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

உதாரணமாக பள்ளிச் சீருடையை எடுத்துக் கொள்வோம். அல்லது அலுவலகத்திற்குப் போகும் அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். பாண்ட், சட்டை சரி ! அதற்கு மேலாக பூட்ஸ் தினப்படி தேவையா? அது கூட காலணி என்பது கல்லும் முள்ளும் குத்தாமலிருக்க பாதுகாப்பு, அதற்குள் ஒரு காலுறை (ஸாக்ஸ்?) ஏன்? சிக்கெனப் பிடித்த காலணிக்குள் காலுறை வேறு. காற்றே புகாமல் காலணியையும் காலுறையும் மாற்றும் போது ஏற்படும் நாற்றம் தேவையா? கழுத்தைப் பிடிக்கும் டையும் நம் நாட்டிற்குத் தேவையா? வியர்வையால் சீருடை அணியும் சிறுவர்கள் தவிப்பதை நான் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். நான் முன் கூறியதைப் போல் மேலைநாட்டு வானிலைக்கு அவை அவசியம். இவை நமக்குத் தேவையா? சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். நாம் வாழும் இயற்கைச் சுழலுக்கும் நம் உடம்புக்கும் ஏற்ற பழக்கங்களைப் பின்பற்றுவதே நல்லது.

சைவமா? அசைவமா? என்பது பண்பாட்டுச் சிக்கல் அல்ல? பழக்கங்கள் மாறுவதால் ஏற்படும் சிக்கல்தான். “நீ சைவனாக இருக்க விரும்பினால் நீ இரு. நீ எவ்வழியால் இறைவனை அடைய விரும்புகிறயோ அவ்வழியில் நீ இறைவனை அடை “ என்ற முழு சுதந்திரம் உள்ளது. நமக்கு வேண்டியவற்றை நாம் அறிந்து நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவற்றை, நம் உடலுக்கு ஏற்புடையதை நாம் உண்டால் சிக்கல் ஏற்படுவதற்கு வழியில்லை. நீ வாழும் ஊரில் கிடைப்பதை நீ உன் விருப்பம் போல் உண்.” என்ற கொள்கை நமக்கு ஏற்புடையது. அவன் சாப்பிடுகிறான், நான் சாப்பிடக் கூடாதா? யாகத்தில் போடலாம், போடக் கூடாது என்பது உன் வீட்டு யாகத்தையும் உன் விருப்பத்தையும் பொருத்து”. என்ற எண்ணினால் பிரச்சினை என்பது கிடையாது. சைவஉணவுமுறைஅசைவஉணவுமுறையைவிடஎவ்விதத்திலும்உயர்ந்ததுஅல்ல, அசைவம்எவ்விதத்திலும்மக்களைதாழ்த்துவதில்லைஎனும்சூழல்சமூகத்தில்நிலவவேண்டும் என்பது நம் கைகளில்தான் உள்ளது. ஒரு தனி மனிதன் மாறினால் ஒரு குடும்பம் மாறும், ஒரு குடும்பம் மாறினால் ஒரு சமுதாயம் மாறும். ஒரு சமுதாயம் மாறினால் ஒரு நாடு மாறும்.

http://puthu.thinnai.com/?p=26069

சைவ உணவு – பழக்கமா? பண்பாடா?

மீனா தேவராஜன்

vegan.jpg

மனிதன் வாழ்வு என்பது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமையும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்காலத்திலிருந்தே இந்தியர்கள் சைவ உணவு உண்பார்களா? அசைவ உணவு உண்பார்களா? என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதேபோல் உடை உடுத்தும் பழக்கங்களும் விவாதத்திற்குட்பட்டவையாக அமைகின்றன.

பலஇன மதத்தவர்கள் வாழும் இந்தியாவில் உணவு பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுவதற்கு முக்கிய காரணங்கள் இந்தியா தொன்று தொட்டு பல நாட்டவர்களின் ஆட்சிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. மேலும் அப்படி வந்தவர்களில் சிலர் இங்கேயே தங்கி நம் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டவர்களுமுண்டு. எனவே உணவுப் பழக்க வழக்கங்கள் பல கலந்து விட்டன என்றே கூறலாம்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த கிரீஸ் நாட்டு அலெக்ஸாண்டர் வந்தவர், நம் நாட்டுச் சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லவில்லையா?

பின் வந்த முகமதியர்களின் தாக்கத்தால் தென்னிந்தியாவைவிட வட இந்தியாவின் பழக்க வழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன என்று வரலாற்றின் வழி நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது. இந்திய உணவாகக் கருதப்படும் பிரியாணி எங்கிருந்து வந்தது? பூண்டின் பயன்பாட்டை நாம் கற்றுக் கொண்டது எப்படி? அதே போன்று சைவ அசைவ உணவுப் பழக்கங்கள் வந்திருக்கக்கூடும் அல்லவா?.

ஆங்கில நாட்டுப் பழக்கங்களை நம்மில் பலர் இந்தியாவில் கைகொண்டுள்ளனர். அதுதான் சிறந்த நாகரீகம் என்று கருதுவோரும் உண்டு. அவர்கள் போல் உணவு உண்பது. அதாவது முள் கரண்டி, கரண்டி ஆகியவற்றைப் பயன்படுத்துவது. தட்டுகளில் சாப்பிடுவது, தண்ணீருக்குப் பதில் கோக்கொலா குடிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவர்கள் நாடு குளிர் மிகுந்த நாடு. கைகளில் அணியப்பட்டிருக்கும் கையுறையைக் கழற்றினால் குளிர் தாங்காது, கையால் சாப்பிட்டால் கை கழுவ முடியாது. அது அந்த நாட்டுச் சூழல். இப்போது நம் நாட்டிலிருந்து அங்கு போய் வாழும் மக்கள் அந்தப் பழக்கங்களைப் பினபற்றினால் தப்பில்லை, ஏனென்றால் ரோம் நகரில் வாழ்ந்தால் ரோமாபுரியனைப் போல்தான் வாழ வேண்டும். இல்லையென்றால் அந்நாட்டு இயற்கைச் சூழல் நம்மைப் பாதிக்கும் அல்லவா?

மேலை நாட்டில் உள்ளவர்கள் உணவில் அதிக வெண்ணெய் பாலாடைக்கட்டி ஆகியவற்றை உண்பார்கள். அவை அவர்களை குளிரிலிருந்து காக்கும். அது அவர்களுக்கு மது பானமும் தேவை. ஆனால் நம் இந்தியா வெப்பமுடைய நாடு இத்தகைய சூழலுக்கு அவை தேவையா?

ஒவ்வொரு நாட்டில் கிடைப்பவைதான் அந்நாட்டு மக்களுக்குரிய உணவாக இருந்து வந்திருக்கின்றன. அக்காலத்தில் சார்ஸ் நோயும் எச்1எம்1 நோயும் ஏற்படவில்லை. கோழிக் கறி கிடைக்காவிட்டாலும் பிற நாடுக்களிலிருந்து இறக்குமதி செய்து உலகளாவிய வணிப முறை இப்போது வந்துவிட்டது? மேலும் அபரிதமான செல்வச் செழிப்பும் வளர்ந்து விட்டது. அதாவது பணத்தைக் கொண்டு வாங்கும் திறன் (purchasing power of money) வளர்ந்து விட்டது. எனவே எனக்கு விருப்பமுள்ளவற்றை நான் விரும்பிச் சாப்பிடுகிறேன் என்ற நிலை உருவாகி விட்டது.

இந்துக்களும்பன்றிக்கறியைதவிர்க்கக்காரணம் அவர்கள் இந்துகள் அவர்கள் இந்து மதக் கொள்கையைப் பின் பற்றுகிறார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பன்றிக்கறியைச் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் பின்பற்றும் மதக் கொள்கை. இது தனி மனித சுதந்திரம்.

அன்று கண்ணப்பர் சிவனுக்கு மாமிசம் படைத்தார் என்றால் அன்று கண்ணப்பர் வேட்டுவத் தொழிலைச் செய்தார். எனவே தான் உண்ணும் உணவை அன்பினால் ஆண்டவனுக்குக் கொடுத்தார். சிவச்சாரியார் பழங்கள் பூக்கள் ஆகியவற்றைப் படைத்து மகிழ்ந்தார்.

கோயில்களில் சைவ உணவு படைக்கப்படுகிறது ஏன் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு ஏற்பட்டு உள்ளது. கோயில் என்பது வழிபாட்டு இடம் எந்த மதத்தவருக்கும் இது பொருந்தும். மேலும் அது பலர் கூடும் இடம் . அவ்விடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. அசைவ உணவுகளை அவ்விடங்களில் பயன்படுத்தினால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு. ஆடு, மாடு, கோழி ஆகியவற்றிலிருந்தும் தொற்ற நோய் பரவ வாய்ப்பு உண்டு என்பதால் பொது இடங்களில் அசைவ உணவு பயன்படுத்தப்படாமலிருந்திருக்கலாம். அவ்விடங்களில் தூர்நாற்றமும் ஏற்படக்கூடும். அவ்விடங்களைச் சுத்தம் செய்வதும் சிரமம்.

இங்கு நான் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். நாம் ஆடைகள் அணியும் முறை மேலைநாட்டுப் பாணியில்தான். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு வேட்டி அணிவோருக்குத் தடை என்ற அறிவுப்புதான். இதில் பண்பாட்டுச் சிக்கலுள்ளதா?

அன்று பழைய பாடல் ஒன்று சொல்கிறது, “ உண்பவை நாழி உடுப்பவை இரண்டே!” என்று . இது இன்றும் எல்லா நாட்டிற்கும் பொருந்தும். ஒரு கால் சட்டை, ஒரு மேல் சட்டை, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் சில இடங்களில் நாம் ஏன் மேலைநாட்டவரின் உடைகளைக் கட்டாயப்படுத்த வேண்டும்? இது நாம் எல்லாரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

உதாரணமாக பள்ளிச் சீருடையை எடுத்துக் கொள்வோம். அல்லது அலுவலகத்திற்குப் போகும் அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். பாண்ட், சட்டை சரி ! அதற்கு மேலாக பூட்ஸ் தினப்படி தேவையா? அது கூட காலணி என்பது கல்லும் முள்ளும் குத்தாமலிருக்க பாதுகாப்பு, அதற்குள் ஒரு காலுறை (ஸாக்ஸ்?) ஏன்? சிக்கெனப் பிடித்த காலணிக்குள் காலுறை வேறு. காற்றே புகாமல் காலணியையும் காலுறையும் மாற்றும் போது ஏற்படும் நாற்றம் தேவையா? கழுத்தைப் பிடிக்கும் டையும் நம் நாட்டிற்குத் தேவையா? வியர்வையால் சீருடை அணியும் சிறுவர்கள் தவிப்பதை நான் கண் கூடாகக் கண்டிருக்கிறேன். நான் முன் கூறியதைப் போல் மேலைநாட்டு வானிலைக்கு அவை அவசியம். இவை நமக்குத் தேவையா? சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். நாம் வாழும் இயற்கைச் சுழலுக்கும் நம் உடம்புக்கும் ஏற்ற பழக்கங்களைப் பின்பற்றுவதே நல்லது.

சைவமா? அசைவமா? என்பது பண்பாட்டுச் சிக்கல் அல்ல? பழக்கங்கள் மாறுவதால் ஏற்படும் சிக்கல்தான். “நீ சைவனாக இருக்க விரும்பினால் நீ இரு. நீ எவ்வழியால் இறைவனை அடைய விரும்புகிறயோ அவ்வழியில் நீ இறைவனை அடை “ என்ற முழு சுதந்திரம் உள்ளது. நமக்கு வேண்டியவற்றை நாம் அறிந்து நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவற்றை, நம் உடலுக்கு ஏற்புடையதை நாம் உண்டால் சிக்கல் ஏற்படுவதற்கு வழியில்லை. நீ வாழும் ஊரில் கிடைப்பதை நீ உன் விருப்பம் போல் உண்.” என்ற கொள்கை நமக்கு ஏற்புடையது. அவன் சாப்பிடுகிறான், நான் சாப்பிடக் கூடாதா? யாகத்தில் போடலாம், போடக் கூடாது என்பது உன் வீட்டு யாகத்தையும் உன் விருப்பத்தையும் பொருத்து”. என்ற எண்ணினால் பிரச்சினை என்பது கிடையாது. சைவஉணவுமுறைஅசைவஉணவுமுறையைவிடஎவ்விதத்திலும்உயர்ந்ததுஅல்ல, அசைவம்எவ்விதத்திலும்மக்களைதாழ்த்துவதில்லைஎனும்சூழல்சமூகத்தில்நிலவவேண்டும் என்பது நம் கைகளில்தான் உள்ளது. ஒரு தனி மனிதன் மாறினால் ஒரு குடும்பம் மாறும், ஒரு குடும்பம் மாறினால் ஒரு சமுதாயம் மாறும். ஒரு சமுதாயம் மாறினால் ஒரு நாடு மாறும்.

http://puthu.thinnai.com/?p=26069

இதை கொஞ்சம் கேளுங்களேன்....

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சைவர்களின் உணவும் பழக்கவழக்கங்களும்,பண்பாடுகளும் அந்த நாடுகளின் இயற்கையோடு ஒன்றிப்பிணைந்தது. அது போல் மேலைத்தேயவர்களின் உணவும் பழக்கவழங்கங்களும் காலசூழ்நிலகளுக்கேற்ப ஒன்றிணைந்துள்ளது.
 
கையால் சாப்பிடுவதை கேவலமாக  இங்கேயும்.......கோட் சூட் போட்டால் உயர்வாக அங்கேயும் பார்க்கும் கண்களில் தான் வித்தியாசங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.