Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ், கருணா, கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தது பெருந்தவறு! - என்கிறார் ரொஹான் குணரட்ன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
டக்ளஸ், கருணா, கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தது பெருந்தவறு! - என்கிறார் ரொஹான் குணரட்ன. 
[Thursday 2014-08-21 09:00]
rohan-gunaratna-200-news.jpg

ஆயுதப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அரசியல் நீரோட்டத்தில் இணைத்து, அவர்களை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்து அரசு மாபெரும் தவறிழைத்து விட்டது. இது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார், சர்வதேச தீவிரவாதம் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான ரொஹான் குணரட்ண. 'மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் இலங்கை -இந்திய உறவு' என்ற தலைப்பில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  

அவர், மேலும் தெரிவிக்கையில், அரசியலுக்குள் இனம், மதங்களை உட்புகுத்துவதும் சிங்கள, தமிழ்த் தேசியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதும் நாட்டை அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும். வட இந்தியாவுடன் உறவுகளைப் பலப்படுத்துவதுபோல தென்னிந்தியாவுடனான உறவையும் இலங்கை அரசு பலப்படுத்த வேண்டும். இலங்கை - இந்திய உறவில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. "இலங்கை - இந்திய உறவு வரலாற்றுக் காலம் முதல் இன்றுவரை தொடர்கிறது. ராஜீவ் காந்திக்குப் பின்னர் இந்தியாவின் சிறந்ததொரு தலைவராக மோடி உருவாகியுள்ளார். அரசியல், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்சென்று பொருளாதாரம் குறித்தும் தனது மூன்றாவது கண்ணூடாக தூரநோக்குடன் மோடி சிந்திக்கின்றார்.

தனது பதவியேற்பு நிகழ்வில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தனது தலைமைத்துவத்தின் சிறப்பை வெளிப்படுத்தினார். சார்க் நாடுகளின் கூட்டமைப்பை மோடி சிறந்த முறையில் கட்டியயழுப்புவார். இந்தியாவுடனான வரலாற்று உறவை மேம்படுத்திக்கொள்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். இலங்கை - இந்திய உறவில் தமிழ்நாட்டின் உறவு மிக முக்கியமானதாகும். தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியன இலங்கை தொடர்பான தவறான புரிந்துணர்வுடன் உள்ளன.

வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பு, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அல்ல. அவை சமூக அமைப்புகள். எனவே,அவை குறித்து நாம் கருத்தில்கொள்ளத் தேவையில்லை.

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா முன்வைக்கும் தீர்வு எமக்குப் பொருந்தாது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினூடாகக் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் அனறைய காலகட்டத்துக்கு மட்டுமே பொருந்தும். அது அந்தக் காலத்துடன் முடிந்துவிட்டது. நாம் எமக்குத் தேவையான உள்நாட்டுப் பொறிமுறையினூடாகத் தீர்வுகாண வேண்டும். எனவே, இலங்கை - இந்திய ஒப்பந்தம், 13 ஆவது திருத்தம் தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களுக்குமிடையில் பேச்சுநடத்தி ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

ஆயுதப் போராட்டத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தரப்பினருக்கு யுத்தம் முடிவடைந்தகையுடன், தண்டனை வழங்கியிருக்க வேண்டும். அல்லது புனர்வாழ்வளித்திருக்க வேண்டும். தீவிரவாதத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு அரசியலில் பிரவேசிக்க இடமளிக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=115353&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.