Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்தடுத்த அடிகள்... சரியக் காத்திருக்கிறது, சன் டிவி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Karunanidhi%20-%20maran.jpgnov43.jpg

 

அடுத்தடுத்த அடிகள்... சரியக் காத்திருக்கிறது சன் டிவி சாம்ராஜ்யம்!!

 

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமானது அடுத்தடுத்த நெருக்கடிகளால் மிகப் பெரியவை சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது.

 

திமுக ஆதரவுடன் தொடங்கப்பட்ட சன் டிவி. அதன் பின்னர் அத்தனை அதிகார பலத்தையும் பயன்படுத்தி வலுவான அஸ்திவாரம் போட்டு பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டது.

 

இந்த சன் டிவி சாம்ராஜ்யத்தை மக்கள் அதிகம்பேர் விரும்புகிறார்கள் என்ற கட்டமைப்பை உருவாக்க கேபிள் தொழிலிலும் குதித்தது. எஸ்.சி.வி. என்றாலே இதர கேபிள் ஆபரேட்டர்கள் நடுநடுங்கும் வைக்கும் அளவுக்கு ஏகபோகம் கொண்டதாக இருந்தது எஸ்.சி.வி.

 

ஊடக நிறுவனங்கள் நடுக்கம்..

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மட்டுமல்ல.. பிற மாநில முன்னணி ஊடக நிறுவனங்களும்தான்.. தமிழில் ஒரு தொலைக்காட்சி தொடங்கினால் எஸ்.சி.வி. தயவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.. அவர்கள் நம்மை முடக்கிவிடுவார்கள் என்று அஞ்சியே ஒதுங்கிப் போயிருக்கும் வெளிமாநில ஊடக நிறுவனங்கள் ஏராளம்..

 

இழுத்தடிப்பு.

இந்த வழக்குகள் ஆக முடிந்தமட்டும் எவ்வளவு காலத்துக்கு இழுத்தடிக்கப்படுமோ அவ்வளவு காலத்துக்கு ஜவ்வாக இழுக்கப்பட்ட கதைதான் அரங்கேறிக் கொண்டிருந்தது.. இப்போது காலமும் மாற காட்சிகளும் அதிரடியாக மாறிக் கொண்டிருக்கின்றன.

 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடியும் உச்சநீதிமன்றம் கடிந்து கொண்ட பின்னரும்கூட குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் இருந்து. இப்போது எந்த நேரத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்கிற நிலை உறுதியாகி இருக்கிறது.

 

உச்சநீதிமன்றத்தில் தயாநிதி.

இதனால்தான் இதுநாள் அவரை எதுவும் நடக்காது என்று கருதிக் கொண்டிருந்த தயாநிதி மாறன் இனி எதுவும் நடக்கலாம் என்று விழுந்தடித்து உச்சநீதிமன்றத்தில் போய், குற்றப்பத்திரிகையில் என் பெயரை சேர்க்கக் கூடாது என்று ஒரு மனுவைப் போட்டு வைத்திருக்கிறார்.

 

உச்சநீதிமன்றத்தின் நிலை.

ஏற்கெனவே மலேசியா ஆவணங்களை விட்டுவிட்டு இருக்கின்ற ஆதாரங்களை வைத்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று சொன்னதே உச்சநீதிமன்றம். இருந்தாலும் கதவைப் போய் தட்டியிருக்கிறார் தயாநிதி மாறன்.. தாழ் திறக்குமா என்பது இனிதான் தெரியவரும்.

ஜாமீன் கிடைக்குமா?

அத்துடன் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நீண்ட இழுத்தடிப்பினால் உச்சநீதிமன்றம் அதிருப்தியில் இருக்கிறது,, இதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலையில் தயாநிதிக்கும் கலாநிதிக்கும் ஜாமீன் கிடைக்குமா என்பதெல்லாம் பெரும் சந்தேகம். இதனால் சன் டிவி குழுமம் சரிவை சந்திக்க ஆயத்தமாகும் நிலைக்கு தள்ளப்படும்.

 

எஸ்.சி.வி.

இந்த நிலையில் சன் டிவியின் வருவாய்க்கு கவச குண்டலமாக இருந்த எஸ்.சி.வி.க்கு ஆப்பு வைத்திருக்கிறது மத்திய அரசு. எஸ்.சி.வி. முடங்குவதன் மூலம் பல இடங்களில் சன் குழும தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பே இல்லாமலேயே போவதற்கு அதிக சாத்தியங்கள்.

 

படுபாதாளத்தில் ரேட்டிங்.

அப்படி நிகழும் நிலையில் சன் டிவியின் ரேட்டிங் என்பது படுபாதாளத்துக்கு போய் படுக்கத் தொடங்கும்.

 

வருவாய் வீழ்ச்சி.

ரேட்டிங் குறைந்து போனால் மெல்ல மெல்ல சன் டிவியில் இருந்து விளம்பர நிறுவனங்கள் விலகி எந்த தொலைக்காட்சி ரேட்டிங்கில் முன்னணியோ அங்கே வரிசையில் காத்திருக்க போய்விடும். இதனால் சன் டிவியின் வருவாய் முழுவதுமாக அடிபட வாய்ப்பிருக்கிறது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன் டிவிக்கு பின்னடைவு! எஸ்.சி.வி.க்கான உரிமம் ரத்து!!

மத்திய அரசு அதிரடி!!

 

சென்னை: சன் டிவி குழுமம் கேபிள் ஒளிபரப்பில் மேலாதிக்கம் செலுத்த மிகப் பெரும் பக்கபலமாக இருந்து வரும் சுமங்கலி கேபிள் விஷன் எனப்படும் எஸ்.சி.வியை நடத்துவதற்கான உரிமத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ள சன் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 

சன் டிவி குழுமம் ஏராளமான தொலைக்காட்சிகளை நடத்தி வந்த போதும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக கேபிள் ஒளிபரப்பு உரிமத்தையும் தம் வசமாக்கி வைத்திருந்தது. இதற்காக கல் கேபிள்ஸ் (Kal cables) என்ற பெயரில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தையும் பெற்றிருந்தது சன் டிவி குழுமம்.

 

28-sun-tv4545-600-jpg.jpg

 

இந்த கல் கேபிள்ஸ் நடத்தும் நிறுவனம்தான் சுமங்கலி கேபிள் விஷன். தமிழகம் முழுவதும் ஒருகாலத்தில் சுமங்கலி கேபிள் விஷன் மட்டுமே இருந்து வந்தது. இதனால் தமிழக அரசும் கேபிள் ஒளிபரப்பில் குதித்தது.

 

தற்போது சென்னையைத் தவிர பிற நகரங்களில் பெரும்பாலும் சுமங்கலி கேபிள் விஷன் மூலமே டிவி ஒளிபரப்பு நடைபெற்றும் வருகிறது.

 

இந்த நிலையில் அதிரடியாக கல் கேபிள்ஸ் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 17 கேபிள்ஸ் நிறுவனங்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

 

இந்த கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளிக்க வேண்டிய பாதுகாப்பு அடிப்படையிலான ஒப்புதல் மறுக்கப்பட்டதாலேயே உரிமங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

 

கல் கேபிள்ஸ் நிறுவனமானது முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மற்றும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமான டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குரியது.

 

சென்னை பெருநகரில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய 2012 ஜூன், 12ம் தேதி, நிரந்தர உரிமமும், இரண்டாம் நகர பகுதியில் டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய, 2013 மார்ச் 7ம் தேதி தற்காலிக உரிமமும் பெற்றுள்ளது. இந்த இரண்டு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

 

தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்குள் எஸ்.சி.வி.யானது (கல் கேபிள்ஸ்) தனது ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான அறிவித்தலை ஸ்குரோலிங் மூலமாக சந்தாதாரர்களுக்கு அந்நிறுவனம் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதேபோல் சென்னை அயனாவரம் ஜோதிசங்கர் அண்ணாமலை, தஞ்சாவூரைச் சேர்ந்த காவிரி டிஜிட்டல் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமமும் ரத்து செய்யப்ப்ட்டுள்ளது.

 

தற்போது சென்னையில் கேபிள் டிவிக்களை ஒளிபரப்பு செய்ய, ஆதார் டிஜிட்டல் விஷன், அக் ஷயா டிஜிநெட் கேபிள் விஷன், தமிழக கேபிள் 'டிவி' கம்யூனிகேஷன், ஜாக் கம்யூனிகேஷன், ஏர் மீடியா நெட்வொர்க் ஆகியவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு நிரந்தர டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

 

பிற நகரங்களில் மேன் பவர் மீடியா நெட்வொர்க் (அரக்கோணம்), சுபம் டிஜிட்டல் கேபிள் சர்வீஸ் (ராஜபாளையம்), சூரியா டிஜிட்டல் பிராட்காஸ்டிங் (சேலம்), சிட்டி 'டிவி' (கோவை), நாகை டெலிவிஷன் நெட்வொர்க் (நாகப்பட்டினம்) ஆகியவற்றுக்கு நிரந்தர உரிமம் அளிக்கப்பட்டு உள்ளது.

 

தங்களது கல் கேபிள்ஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது. எந்த ஒரு முன்னெச்சரிக்கை விளக்க நோட்டீஸும் கொடுக்காமல் திடீரென உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

-தற்ஸ் தமிழ்-

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாதிரி இந்தக் கருமத்தைத் தடை செய்து விட்டால் எத்தனை பேருக்குச் சந்தோசம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலை இருந்த சண் அலுவலகத்தையும் காணேல்லையெண்டு சொல்லுறாங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.