Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசாரணை தேவையில்லை, அதிகாரப்பகிர்வே அவசியம்! - என்கிறார் தயான் ஜயதிலக.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை தேவையில்லை, அதிகாரப்பகிர்வே அவசியம்! - என்கிறார் தயான் ஜயதிலக. 

[saturday 2014-08-30 18:00]
Dayan-jeyathilake-150.jpg

தற்போது, சர்வதேச விசாரணையோ அல்லது உள்ளக விசாரணையோ அவசியமில்லை. அதிகாரப்பகிர்வே உடனடியாகத் தேவையாகவுள்ளதென ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பிரச்சினைகள் - விவரணை III எனும் வெளியீடு தொடர்பாக விமர்சன ரீதியிலான கலந்துரையாடலொன்று நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் வினாவொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

  

அங்கு கலாநிதி தயான் ஜயதிலக்க தொடந்து உரையாற்றுகையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த மூன்று கூட்டத்தொடர்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2007ஆம் ஆண்டின் முற்பகுதியில் நான் ஜெனீவாவுக்குச் சென்றபோது சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான ஷாருகா பெர்னாண்டோ 2006 ஆம் ஆண்டிலேயே இலங்கை தொடர்பான மாதிரி தீர்மான வரைபொன்றை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டு மேற்குலக நாடுகள் அதனைப் பகிர்ந்துள்ளதாக தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மக்கள் உயிரிழந்ததாகவும் குற்றமிழைக்கப்பட்டதாகவும் கூறப்படும் தீர்மான வரைபு 2006இலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. எமது இராஜதந்திரிகள் அக்காலப்பகுதியில் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள். அதேநேரம் 2009 மே 9இல் வெளியான விக்கிலீக்ஸின் தரவுகளின் பிரகாரம் இலங்கைக்கு எதிரான தீர்-மான வரைபுக்கு ஆதாரவாக வாக்களிக்கும்படி ஹிலாரி கிளின்டன் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதியிருந்ததை வெளிப்படுத்தியிருந்தது. அவ்வாறான நிலைமைகள் அந்தக் காலத்தில் காணப்பட்டன.

நாட்டில் முப்பது வருடங்களுக்கு மேலாக அசாதாரண நிலைமைகள் காணப்பட்டன. இதன்போது பல்வேறு உயிர்பலிச் சம்பவங்கள் இடம்பெற்றன. வடமாகாண சபை இயங்காதிருந்தது. வடக்கில் நிர்வாகச் செயற்பாடுகள் செயலிழந்திருந்தன. சர்வதேச சட்டங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்க்கையில் குறிப்பாக ஒரு நாட்டின் பிரஜைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளால் பல பொதுமக்களின் உயிர்கள் இழக்கப்பட்டன. குறிப்பாக தலதா மாளிகை தாக்குதலைக் குறிப்பிடலாம். அதில் பொதுமக்களே இறந்தார்கள். அவ்வாறான நேரத்தில் விடுதலைப் புலிகளை சர்வதேசத்தில் பலதரப்பட்ட தரப்பினரும் பயங்கரவாதிகளாகவே கருதினார்கள். பலநாடுகள் தடைகளை விதித்திருந்தன. யுத்தம் எப்போது நிறைவடையும். விரைவிலேயே நிறைவடைந்துவிடுமா என்று வினவிக்கொண்டேயிருந்தார்கள். தற்போது இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டு சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என வலிந்து கூறிவருகின்றார்கள்.

ஒன்றரை இலட்சம் மக்கள் இந்தோனேசியாவில் கொல்லப்பட்டார்கள். ஆனால் அங்கு சர்வதேச விசாரணையோ அல்லது உள்ளக விசாரணை நடத்தப்பட்டிருக்கவில்லை. பங்களாதேஷில் நாற்பது `வருடங்களாக போர் இடம்பெற்றது. இலத்தீன் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் நீண்டகாலமாக யுத்தம் இடம்பெற்றிருந்தது. பிரேசில் ஜனாதிபதியின் விடயத்தில் நாற்பது வருடங்களின் பின்னரே விசாரணை-யொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆகவே, விசாரணையொன்று முன்னெடுக்கப்படுவதற்கு முன்னதாக சமூகங்கள் அதற்கு முன்வரவேண்டும். சகல தரப்பினரிடையேயும் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். ஆயுதப்படைகள் அதனை அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறான நிலைமையே ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கும். எனவே சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் தருணமும் தற்போதைய நிலையில் முற்றாக கடந்து விட்டது. அதேநேரம் உள்ளக விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கும் இது தக்க நேரம் கிடையாது. அதற்கு இன்னும் கால அவகாசம் தேவையாகவுள்ளது. தற்போது உடனடித் தேவையாக இருப்பது அதிகாரப்பகிர்வே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

www.seithy.com/breifNews.php?newsID=115879&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.