Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வள்ளிபுனத்தில் உயிர்பிழைத்த மாணவியையும் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வள்ளிபுனத்தில் உயிர்பிழைத்த மாணவியையும் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம்: மருத்துவ அறிக்கையில் அம்பலம்

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப் படை நடத்திய கோரத் தாக்குதலில் உயிர்பிழைத்த மாணவியரில் ஒருவரை தடுப்புக் காவலில் வைத்து எதுவித சிகிச்சையும் அளிக்காமலே சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்துள்ளமையானது வவுனியா மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளது.

வான்படைத்தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் கண்டிக்கு 3 மாணவிகள் கொண்டு செல்லப்பட்டனர்.

அம்மாணவிகள் சிறிய அளவில் தேறிய நிலையிலேயே அவர்களை சிறிலங்கா காவல்துறையினர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தனர்.

அவர்களில் ஒரு மாணவி கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றைய இரு மாணவிகளும் கண்டியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டிய நிலையிலும் 5 நாட்களுக்கு ஒருமுறையே மருத்துவர் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் தடுப்புக்காவலில் இருந்த மாணவிகளை நீதிபதி பார்வையிட்டு அவர்களை விடுவிக்கப் பணித்துள்ளார். அதன்பின் அவர்கள் உடல்நலம் தேறிவிட்டார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்து அவர்களைச் செல்லப் பணித்துள்ளனர்.

ஆனால் மாணவிகள் பாதிப்புற்ற நிலையில்தான் இருந்தனர். அவர்களால் நடக்க முடியாத நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் கண்டியிலிருந்து வவுனியா கொண்டுவரப்பட்ட இரு மாணவிகளும் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் விசுவமடு மகாவித்தியாலய (2007) உயர்தர மாணவியான தம்பிமுத்து தயாளினி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்புச் செய்தியானது தமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதிய சிறிலங்கா அரசாங்கத் தரப்பானது கொழும்பிலிருந்து காவல்துறை உயர் அதிகாரிகள் குழுவை வவுனியாவுக்கு அனுப்பியது.

மாணவியின் இறப்பு தொடர்பாக பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வவுனியா நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் சிறிலங்காவின் சுகாதார அமைச்சு ஊடாக மாணவியின் உடலை பரிசோதனைக்கு கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவை வவுனியா மருத்துவமனைக்கு சிறிலங்கா காவல்துறையினர் அனுப்பியிருந்தனர்.

இதனிடையே வவுனியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று வவுனியா நீதிபதி கடுமையான உத்தரவிட்டார். அப்படி முடியாவிட்டால் அதனை எழுத்தில் தருமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து வவுனியாவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் "மாணவிக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாததால் உடல் நிலைமை மோசமாகி மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்" என்று வவுனியா மருத்துவமனையால் அறிக்கை வழங்கப்பட்டது.

இதன் பின் சிறிலங்கா காவல்துறையினரால் மற்றொரு மாணவியான பாலசிங்கம் சுமித்ரா பலவந்தமாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட கொடுஞ் செயலால் உயிர்பிழைத்த மாணவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளமையை வவுனியா மருத்துவர்கள் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

http://www.eelampage.com/?cn=29040

இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவாகளிடம் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள்

இந்தச் சிறுமிகளை கண்டிக்குக் கொண்டு செல்ல அனுமதித்தது யார்? கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளா? செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலமாகத் தான் கொண்டு செல்லப்பட்டனர் என்பதனால் இந்தச் சம்பவங்கள் குறித்து யாராவது செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் கேள்வி எழுப்பினார்களா? அவாகளிடம் இருந்து எதாவது பதில் கிடைத்ததா? இதுதொடர்பாக சிறுவர்கள் தொடர்பான ஐநா நிறுவனங்களிடம் உத்த்யோகபுூர்வமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டனவா? :shock: :?

இலங்னை அரசின் இந்த திட்டமிட்ட படுகொலையை

கண்டித்து எம் மக்கள் மீண்டுமொரு தடவை

இந்த உலக நாடுகளின் கவனர்தை இந்த அரச செய்யும்

படு பாதகமான கொலைகள் மீது திருப்ப வேண்டும்...

வற்புறுத்தி பேட்டி கண்டு ருபவாகின ஒலி பரப்பியதையும்

அதை அடுத்து இந்த மாணவி களை திட்ட மிடப்பட்டு மருத்துவ சிகிச்சை

அளிக்காது முடக்கி அந்த மனித உயிரை பறித்தமையானது

சிங்கள அரசின் கொடிய இனவாத முகத்தை கோடிட்டு காட்டியுள்ளது .

மின்னஞ்சல்; ஊடாகவோ இல்லை ஊடகங்கள் ஊடாகவோ

மீண்டும் ஒரு முறை இந்த சிறார்களுக்கு நடந்த கதியை

அந்த சிறார் நலன் அமைப்புகளிற்கும் மனித உரிமை அமைப்புகளிற்கும்

மிண்டும் ஒரு முறை இடித்து உரைக்க வேண்டும்.

நாளை மற்றய காயப் பட்ட உறவுகளிற்கும் இந்த நிலை நீடிக்காது

என்பதற்கு உத்தர வாதமில்லை .

எனவே அந்த உயிர்களை காக்க மனித உள்ள மனிதங்கள் ஒன்றினைய

வேண்டும் .

புத்தி ஜீவிகள் அறிஞர்கள் .பல்மொழி பயிற்சியுடையோர்

மற்றும் ஊடகங்கள் இதனை கண்டித்து இந்த செயலை உலகிற்கு எடுத்துரைக்க

வேண்டும்...

நடந்து வரும் யுத்தத்தில் சிறார்களும் பொது மக்களுமே மிக தொகையில்

சிங்கள அரசால் கொன்று குவிக்கப் பட்டுள்ளார்கள் .

எத்தனை நாளிற்கு இதை பார்த்து கொண்டிருக்க முடியும்....??

எனவே எம் தமிழ் பேசும் மக்களே மீண்டும் ஒரு முறை நாங்கள் களம்

இறங்க வேண்டும். எம் மக்களை காக்க உரத்து குரல்

கொடுக்க வேண்டும்....

அதற்காக ஒன்றிணையுங்கள்...

இந்த கொடிய செயலால் உயிர் நீத்த அந்த மாணவிக்கு

எம் இதய கணக்கும் கண்ணீர் அஞ்சலியை

செலுத்தி கொள்கிறோம்...

- வன்னி மைந்தன் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நான் சொல்லவில்லையே நண்பரே புதினம் செய்தியில் போடப்பட்டுள்ளது நண்பரே அதைத்தான் நான் போட்டேன் நண்பரே புதினத்தில் பார்க்கவும் நண்பரே

இலங்னை அரசின் இந்த திட்டமிட்ட படுகொலையை

கண்டித்து எம் மக்கள் மீண்டுமொரு தடவை

இந்த உலக நாடுகளின் கவனர்தை இந்த அரச செய்யும்

படு பாதகமான கொலைகள் மீது திருப்ப வேண்டும்...

வற்புறுத்தி பேட்டி கண்டு ருபவாகின ஒலி பரப்பியதையும்

அதை அடுத்து இந்த மாணவி களை திட்ட மிடப்பட்டு மருத்துவ சிகிச்சை

அளிக்காது முடக்கி அந்த மனித உயிரை பறித்தமையானது

சிங்கள அரசின் கொடிய இனவாத முகத்தை கோடிட்டு காட்டியுள்ளது .

மின்னஞ்சல்; ஊடாகவோ இல்லை ஊடகங்கள் ஊடாகவோ

மீண்டும் ஒரு முறை இந்த சிறார்களுக்கு நடந்த கதியை

அந்த சிறார் நலன் அமைப்புகளிற்கும் மனித உரிமை அமைப்புகளிற்கும்

மிண்டும் ஒரு முறை இடித்து உரைக்க வேண்டும்.

நாளை மற்றய காயப் பட்ட உறவுகளிற்கும் இந்த நிலை நீடிக்காது

என்பதற்கு உத்தர வாதமில்லை .

எனவே அந்த உயிர்களை காக்க மனித உள்ள மனிதங்கள் ஒன்றினைய

வேண்டும் .

புத்தி ஜீவிகள் அறிஞர்கள் .பல்மொழி பயிற்சியுடையோர்

மற்றும் ஊடகங்கள் இதனை கண்டித்து இந்த செயலை உலகிற்கு எடுத்துரைக்க

வேண்டும்...

நடந்து வரும் யுத்தத்தில் சிறார்களும் பொது மக்களுமே மிக தொகையில்

சிங்கள அரசால் கொன்று குவிக்கப் பட்டுள்ளார்கள் .

எத்தனை நாளிற்கு இதை பார்த்து கொண்டிருக்க முடியும்....??

எனவே எம் தமிழ் பேசும் மக்களே மீண்டும் ஒரு முறை நாங்கள் களம்

இறங்க வேண்டும். எம் மக்களை காக்க உரத்து குரல்

கொடுக்க வேண்டும்....

அதற்காக ஒன்றிணையுங்கள்...

இந்த கொடிய செயலால் உயிர் நீத்த அந்த மாணவிக்கு

எம் இதய கணக்கும் கண்ணீர் அஞ்சலியை

செலுத்தி கொள்கிறோம்...

- வன்னி மைந்தன் -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.