Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழின அழிப்புக்கு நீதி கோரி செல்லும் ஈருருளிப்பயணம் - நாள்2

Featured Replies

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் ஈருருளிப்பயணம் இன்று இரண்டாவது நாளாக 120 KM தூரத்தை தாண்டி Wellin எனும் நகரத்தை சென்றடைந்தனர் . செல்லும் வழிகளில் இடையிடையே  வேற்றின மக்களுக்கான தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.


அத்தோடு இன்றைய நாளில் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளுபவர்களுடன் தாயகத்தில் இருந்து ஒரு சகோதரன் தொலைபேசியில் இவர்களின் மாந்தநேய பணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் , தாங்கள் புலம்பெயர் மக்களை நம்பி இருக்கின்றனர் என்பதை தெரிவித்துள்ளார் .

அந்தவகையில் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்பவர்கள் தமது பயணம் நிச்சயம் தமிழீழத்துக்கான பயணமாக அமையும் என்பதை உறுதியோடு தெரிவித்துள்ளனர் .
நாளைய பயணம் லக்சம்புர்க் நாட்டை நோக்கி செல்ல இருக்கின்றது .

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. இன அழிப்பு  புரிந்துள்ளது. இதில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது சிறீலங்கா அரசு. ஆனாலும் நீதி சாகாது. குற்றமிழைத்தவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வரை, தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை, புலம் பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய நடைப்பயணங்கள், ஈருருளிப் பயணங்கள் தொடர்ந்தும் வீறு நடைபோட்டு தொடர்கின்றன.

வீழமாட்டோம். வீழ்ந்தாலும் மீண்டு எழுவோம். தொடர்கிறது நீதிக்கான போராட்டங்கள்.

day2.2.JPG

 ஈருருளிப்பயணத்தின்  ஐந்து அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு அமைகின்றது :

1.பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்துஇ அனைத்துலகச் சட்டங்களை மதித்துஇ நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவர்களை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுக்கு பின்வரும் இலக்கங்களை தொடர்புகொள்ளவும் :0032 488328941

day2.3.JPG

cleardot.gif

day2.1.JPG
--


Fur further Information / மேலதிக தொடர்புகளிற்கு
 
 
 

http://www.pathivu.com/news/33634/57/2/d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.