Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

Featured Replies

டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
 

 

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை வெற்றியோடு முடிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

 

இந்திய அணி ஷிகர் தவன், ரஹானே, கோலி, ரெய்னா, ராயுடு, கேப்டன் தோனி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பெயர் போன இந்திய படை இந்த போட்டியில் வாணவேடிக்கை காட்டும் என எதிர்பார்க்கப்படு கிறது.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

 

இங்கிலாந்து அணி இயோன் மோர்கன் தலைமையில் களமிறங் குகிறது. அறிமுக வீரராக இடம்பெற்றிருக்கும் ஜேசன் ராய் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அலெக்ஸ் ஹேல்ஸ், மோர்கன், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் உள்ளிட் டோர் இங்கிலாந்தின் பேட்டிங் கிற்கு பலம் சேர்க்கின்றனர்.

 

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஷிகர் தவன், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்ஜூ சாம்சன், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கரண் சர்மா, மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, தவல் குல்கர்ணி, புவனேஸ்வர் குமார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6388108.ece

  • தொடங்கியவர்

இங்கிலாந்து 'திரில்' வெற்றி : இந்தியா ஏமாற்றம் : கோஹ்லி ஆட்டம் வீண்

 

 

பர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி 5 டெஸ்ட், 5 ஒருநாள் , ஒரே ஒரு சர்வதேச 'டுவென்டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணியும், ஒருநாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றின. ஒரே ஒரு சர்வதேச 'டுவென்டி-20' பர்மிங்காமில் இன்று நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், முதலில் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

ராயுடு வாய்ப்பு:இந்திய அணியில் அம்பதி ராயுடு, கரண் சர்மா அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் தனது முதல் 'டுவென்டி-20'யில் களமிறங்கினார்.

சொதப்பல் துவக்கம்:இங்கிலாந்து அணிக்கு அறிமுக வீரர் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் துவக்கம் அளித்தனர். போதிய அனுபவம் இல்லாத ஜேசன் ராய் (8) முகமது ஷமி வேகத்தில் அவுட்டானார். இவரை தொடர்ந்து வந்த மொயின் அலி 'ட்க அவுட்டானார்'. அடுத்து வந்த ஜோ ரூட் (26) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் அடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் (40) ஓரளவு கைகொடுத்தார்.

 

மார்கன் அதிரடி:இதன் பின் வந்த கேப்டன் இயான் மார்கன், ஆரம்பம் முதல் அதிரடியாக ரன் சேர்க்க துவங்கினார். முதலில் அஷ்வின் பந்தில் சிக்சர் அடித்த மார்கன், ஜடேஜா பந்தில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து கரண் சர்மா வீசய அடுத்த ஓவரில் இரண்டு சிக்சர் பறக்கவிட்ட மார்கன், ஷமி வேகத்தில் சிக்சர் அடித்து 'டுவென்டி-20' அரங்கில் தனது 6வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து மோகித் சர்மா வேகத்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த மார்கன், தனது 50வது 'டுவென்டி-20' போட்டியில் 71 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் ஷமி வேகத்தில் இங்கிலாந்தின் போபாரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது.

ரகானே ஏமாற்றம்:கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே ரகானே (8) ஏமாற்றினார். சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்த மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் (33) ஓரளவு கைகொடுத்தார். பின் வந்த விராத் கோஹ்லி, வந்த வேகத்தில் ரன் வேட்டையை துவங்கினார். முதலில் குர்னே வேகத்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவங்கிய கோஹ்லி, வோக்ஸ் வீசிய அடுத்த ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். பின் போபாரா பந்தில் பவுண்டரி அடித்த கோஹ்லி, மொயில் அலி பந்தை சிக்சருக்கு அனுப்பினார். மீண்டும் வோக்ஸ் பந்தில் 2 பவுண்டரி அடித்த கோஹ்லி (66), 'டுவென்டி-20' அரங்கில் தனது 9வது அரைசதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார். ரெய்னா (25) தாக்குபிடிக்கவில்லை. பின் வந்த ரவீந்திர ஜடேஜா (7) ரன் அவுட்டானார்.

தோனி மந்தம்:இதன் பின் ராயுடு கம்பெனி கொடுக்க, நெருக்கடியான நேரத்தில் கேப்டன் தோனி மிகவும் கூலாக செயல்பட்டார். குர்னே வீசிய போட்டியின் 19வது ஓவரில் மொத்தம் 9 ரன்கள் எடுக்கப்பட, இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. வோக்ஸ் வீசிய போட்டியின் கடைசி ஓவரின் முதல் பந்தில் கேப்டன் தோனி ஒரு சிக்சர் அடித்தார். இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தை வீணடித்த தோனி, நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். பின் 5வது பந்தில் ரன்கள் எடுக்க வாய்ப்பு இருந்தும் ரன் ஓடாத தோனி, கடைசி பந்தில் ஒரே ஒரு மட்டும் எடுக்க, இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1064644

 

இலகுவாக வெல்ல வேண்டிய ஆட்டத்தை தான் படம் காட்ட வெளிகிட்டு வீணாக இந்தியாவையே தோற்க பண்ணிவிட்டார் தோனி.

ரயாடுவை முதலில் விட்டிருந்தால் அடித்து முடித்திருப்பார் . :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியின் கடைசி பகுதி பார்த்தேன், இந்தியா வெல்ல வேண்டியது, தோனியின் சுயநலத்தால் கோட்டை விட்டது. அர்ஜுன் உங்களின் கருத்து சரி.

  • தொடங்கியவர்

தோனியின் அதீத நம்பிக்கை: இந்தியாவை 3 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து

 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாயிருக்க இந்தியாவால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே மோயின் அலி வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கோலி, மறுமுனையில் இருந்த தவானுடன் கை கோத்து அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். வோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் கோலி தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை எடுத்தார்.

 

கோலி, தவான் அபாரம்

தவானும் தனக்கு வீசப்பட்ட மோசமான பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விளாசினார். 6-வது ஓவரிலேயே 50 ரன்களை எட்டிய இந்திய அணி, 10 ஓவரிகளில் 89 ரன்களை எடுத்திருந்தது. வோக்ஸ் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தை லெக் சைடில் அடிக்க முயன்ற தவான், பந்தைத் தவறவிட்டு, ஸ்டம்பை பறிகொடுத்தார். 28 பந்துகளில் 33 ரன்களுக்கு அவர் பெவிலியன் திரும்ப, ரெய்னா களமிறங்கினார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த கோலி, 34 பந்துகளில், 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் அரை சதம் எடுத்தார். தொடர்ந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய கோலி, 15-வது ஓவரில் ஃபின் வீசிய ஷார்ட் பிச் பந்தை சரியாகக் கணிக்காமல் அடிக்க, அது ஹேல்ஸின் கைகளில் சரணடைந்தது. 41 பந்துகளில் 66 ரன்களுக்கு கோலி வீழ்ந்தார்.

 

ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட நிலையில் ரெய்னாவுடன் தோனி இணைந்தார். ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே வர, ரெய்னாவும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த ஜடேஜா 17-வது ஓவரில் தான் அடித்த பந்தில் இரண்டாவது ரன் ஓட முற்பட்டபோது ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராயுடும், தோனியும் களத்தில் இருந்தனர்.

 

ராயுடுவை தடுத்த தோனி

19-வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே வர, 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட, தோனி 20-வது ஓவரை சந்தித்தார். வோக்ஸ் வீசிய முதல் பந்தையே தோனி சிக்ஸருக்கு விளாச, மீண்டும் ஒரு கடைசி ஓவர் வெற்றியை தோனி தேடித் தருவார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்தது. அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த தோனி, ஷார்ட் பிட்சில் வந்த மூன்றாவது பந்தை மிட் விக்கெட் திசைக்கு விரட்டினார். ஒரு ரன் வந்திருக்க வேண்டிய அந்த தருணத்தில், தோனி ராயுடுவை ரன் ஓட வேண்டாம் என நிறுத்தினார்.

4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தோனி, 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை டீப் ஸ்கொயர் பகுதிக்கு திருப்பி அடித்தார். எளிதாக ஒரு ரன் வந்திருக்க வேண்டிய அந்த பந்திலும், பாதி தூரம் ஓடி வந்த ராயுடுவை தடுத்து பின்னால் அனுப்பினார் தோனி. கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தோனியால் 1 ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் ராயுடு, சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தாலும், கடைசி ஓவரில் அவரை ஆட விடாமல் தோனி மட்டுமே அனைத்து பந்துகளையும் எதிர் கொண்டது பல கிரிக்கெட் விமர்சகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பல ஆட்டங்களில் தோனி கடைசி ஓவரில் அணிக்கு வெற்றி தேடித்தந்திருந்தாலும், நேற்றைய ஆட்டத்தில், எளிதாக வந்திருக்க வேண்டிய இரண்டு ரன்களை தோனி தடுத்தது பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

 

அள்ளிக் கொடுத்த அஸ்வின்

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸும், ஜேசன் ராயும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அஸ்வின் வீசிய முதல் ஓவரில் ராய் ஒரு பவுண்டரியை அடிக்க, ஹேல்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விரட்டினார். இதனால் அந்த ஓவரில் இங்கிலாந்து 17 ரன்கள் எடுத்தது. இதனிடையே ஜேசன் ராய் 8 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த மொயீன் அலி ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஜோ ரூட் 8 ரன்களில் இருந்தபோது அஸ்வின் கோட்டைவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்தார்.

 

மோர்கன் 71

தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஹேல்ஸ், ஜடேஜா வீசிய 10-வது ஓவரில் சிக்ஸர் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வந்த கேப்டன் மோர்கன் சிக்ஸர் அடித்து, ரன் கணக்கைத் தொடங்க, மறுமுனையில் ஜோ ரூட் 26 ரன்களில் (29 பந்துகள்) வீழ்ந்தார்.

இதையடுத்து ஜோஸ் பட்லர் களமிறங்க, இங்கிலாந்தின் ரன் வேகம் குறைந்தது. ஆனால் ஜடேஜா வீசிய 16-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், கரண் சர்மா வீசிய அடுத்த ஓவரில் இரு சிக்ஸர்களையும் மோர்கன் விரட்ட, ரன் வேகம் எகிறியது. அடுத்த ஓவரில் ஜோஸ் பட்லர் 10 ரன்களில் வெளியேற, போபாரா களம்புகுந்தார். மறுமுனையில் வெளுத்துக் கட்டிய மோர்கன், 26 பந்துகளில் அரைசதம் கண்டார். மோஹித் சர்மா வீசிய 19-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும், இரு பிரம்மாண்ட சிக்ஸர்களையும் விளாசிய மோர்கன், கடைசி ஓவரில் எல்லைக்கோட்டில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார். அவர் 31 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற சாதனையை கெயிலுடன் பகிர்ந்து கொண்டார் மோர்கன்.

அடுத்த 3 பந்துகளில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை போபாரா விளாச, ஆட்டத்தின் கடைசி பந்தில் கிறிஸ் வோக்ஸ் ரன் அவுட்டாக, இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. போபாரா 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்தார்.

இந்தியத் தரப்பில் முகமது சமி 4 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-3-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6389205.ece

 

  • தொடங்கியவர்

20 ஓவர் போட்டித் தோல்விக்கு பொறுப்பேற்கும் தோனி
 

 

இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியதற்கு கேப்டன் தோனி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 181 ரன்கள். ஆனால் 177/5 என்று இந்தியா பின் தங்கியது.

“முதல் பந்தில் பவுண்டரி அடித்தேன், நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் 2 பந்துகளை நான் அடித்திருக்க வேண்டும் ஆனால் அடிக்கவில்லை. பந்தை சரியாக மட்டையில் வாங்காத ஒரு தினமாக நேற்று அமைந்தது. பந்து மட்டையின் கீழ்ப் பகுதியில் பட்டது. ஆகவே தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதுதான் சரி.

ராயுடு அப்போதுதான் களமிறங்கியிருந்தார். 6 அல்லது 7ஆம் நிலையில் களமிறங்கி நேரடியாக பெரிய ஷாட்களை அடிப்பது அவருக்குக் கடினமாக இருந்திருக்கும். அவருமே பந்துகளை மட்டையின் நடுப்பகுதியில் அடிக்க முடியாமல் இருந்தார். அதனால்தான் நானே நின்று முடிக்க முடிவெடுத்தேன், அந்தச் சமயத்தில் அப்படித்தான் யோசித்தேன். ஆனால் வெற்றி பெற முடியாமல் போனது.

 

அந்த ஓவரின் தொடக்கத்திலேயே நானே ஆட்டத்தை வெற்றிக்கு இட்டுச் செல்வது என்ற முடிவை எடுத்தேன். ராயுடுவும் கூட வெற்றியைச் சாதித்திருக்க முடியும், ஆனால் முடிவு நேர ஆட்டம் எனது பலம், அதனால் நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்” என்றார் தோனி.

பந்து வீச்சு பற்றி கூறிய தோனி, "யார்க்கர்கள் இன்னும் பெரிய கேள்வியாகவே உள்ளது. 3 ஸ்பின்னர்கள் இருந்தனர். ஆனாலும் பந்து அவர்களுக்குச் சாதகமாக இல்லை.

யார்க்கர்கள் வீச முடியவில்லை எனும் போது லைன் மற்றும் லெந்த்தை மாற்றியிருக்க வேண்டும், பந்து வீச்சாளர்களால் உடனடி சாதுரியத்துடன் வீச முடியவில்லை.” என்றார் தோனி.

 

http://tamil.thehindu.com/sports/20-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6390926.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.