Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூரில் பிரசுரம் வீசியது புலிகள் அல்ல: கண்காணிப்புக் குழு

Featured Replies

மூதூரில் பிரசுரம் வீசியது புலிகள் அல்ல: கண்காணிப்புக் குழு

மூதூர் முஸ்லிம்களை வெளியேறுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை வீசியது விடுதலைப் புலிகள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கண்காணிப்புக் குழுவினரின் கடந்த வார அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மூதூரில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.

மூதூரில் மீளக் குடியேறுமாறு சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=29063

இதை தானே புலிகள் மதல் சொன்னவ..

இப்ப தான் இவையல் கண்டு பிடிச்சவயலே....

இது மேன...

கண் காணிப்பு குழ அல்ல...

கண் துடைப்பு குழு....

புலிகள் அடிச்சா ஏறி இருந்து கத்துவான்கள்...

அமி அடிச்சா...மூடிக் கொண்டு இருப்பாங்கள்...

அப்ப உவையல என்னண்டு சொல்லிறது....

நல்ல பெயர் இது....

கண்துடைப்பு குழு....

கா...கா...கா...

உவையல பற்றி ஒரு ஆய்வு செய்தல் நல்லம் தான்....

நன்நி...

வன்னி மைந்தன்

மூதூரிலை இருக்கிற முதலாளிமார் நல்ல மலிவாய் காணி புூமி வாங்கிச் சேர்க்கலாமெண்டு உந்தவேலையைச் செய்திருப்பினம்.

அங்கை இப்ப காணிகளின்ரை விலை நல்லா விழுந்துட்டுதாம்.

தமிழனுக்கு போராட்டத்திலை இப்ப வேண்டியது ஒரு திருப்புமுனை கண்டியளே. எங்கடை போராட்ட வடிவங்கள் பல காலகட்டங்கள்ளையும் மாறிகொண்டுதான் வந்திருக்கு இல்லையெண்டு சொல்லேல்லை ஆனால் எதிரிக்கு உறைக்கிறமாதிரி குடுக்கோணுமெண்டால் போரைத்தவிர மாற்றுவழியில்லை. நாங்களென்ன மகாத்மா காந்தியோடையே போர் செய்யிறம். முதல்லை எதிரியின்றை மொழியிலையே நாங்களும் கதைக்கவேணுமெண்டதைப் புரிஞ்சு கொள்ளவேணும்.

மேல்நாடுகள் இணைத்தலைமை நாடுகள் அவன் அடிக்கேக்கை பாத்துக்கொண்டு கப்சிப் எண்டுதானே இருந்தவை. இது அவங்களின்ரை அனுமதியில்லாமை நடுக்கிற காரியமில்லை.

சொல்லிப் போட்டுத்தான் செய்திருப்பானுங்கள். அவன் யசுகி அக்காசியும் நோர்வே தூதுவரும் வன்னிக்கு வரவோ எண்டு கேக்கேக்கை அவைக்கு வன்னிலையிருந்து அழைப்புக்கிடைக்கேல்லை. அதுக்குப் பதிலடிதான் இந்த இராசதந்திர நாடகம்.

எதிரி மூலமா தமிழனுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவிலை கஷ்டத்தைக் கொடுக்கப்பண்ணினாத்தான் தமிழன் முன்நிபந்தனையில்லாமை பேச்சுவாத்தைக்குப் போவான் அப்பதானே நோர்வேயும் நல்ல குசாலா காலுக்குமேலை கால்போட்டுக்கொண்டிருந்து கதைக்கலாம். நோர்வே எடுத்திருக்கிற பாத்திரத்துக்கு தமிழர் பிரச்சினையைத் தீர்க்கவேணும் எண்ட கட்டாயம் கிடையாது. பிரச்சினைக்குள்ள காலாதிகாலத்துக்கு தலையைப்போட்டுக்கொண்டு இருந்தாலே அவங்களின்ரை மரியாதை சர்வதேசளவிலை கொடிகட்டிப் பறக்கும் கண்டியளே.

இலாபமில்லாமல் எவனும் எதையும் செய்யமாட்டான் கண்டியளே.

உது எங்கடை போராட்டத்துக்கும் நல்லாப் பொருந்தும்.

ஆனா அது சுய இலாபமா அல்லது பொது இலாபமா எண்டுறதுதான் கேள்வி.

நோர்வீஜியன், அடிக்க ஏலும் எண்டா தானே அடிக்கலாம்.. உம்மட ஆதங்கங்களிற்கு பதில் இதில இருக்கு.

http://www.hindustantimes.com/news/7598_18...00500020002.htm

அப்ப இனி ஈஎண்டிஎல்எப் தான் அந்த திருப்புமுனைய தரப்போகுது போல கிடக்கு.

  • தொடங்கியவர்

நோர்வீஜியன், அடிக்க ஏலும் எண்டா தானே அடிக்கலாம்.. உம்மட ஆதங்கங்களிற்கு பதில் இதில இருக்கு.

http://www.hindustantimes.com/news/7598_18...00500020002.htm

கருணா அம்மான் எண்டு சொல்லி இவருக்காக இவரின் பாதுகாப்புக்காக பலியான வீரர்களின் இறுதி வார்த்தையையே கொச்சைபடுத்திவிட்டான் இவன் தனது சுயநல்த்துக்காக புலிகளின் தாகம் தமிழீழ்ம் என சொல்லி மடிந்த வீரர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் இவர் விடுதலையை பெற்றுதருவாராம் பாருங்கோ மகாஜனங்களே :evil: :evil: :evil:

உவன் கருணாவை ஜே.வி.பி தலைவர் சோமவன்சவின்ரை சகோதரி வீட்டிலை பாத்ததெண்டும் உங்கை ஒரு கதை அடிபடுகுது. டக்கி நாயும் இவனும் தோள்ளை கையப்போட்டுக்கொண்டு உள்ளுக்கு போகேக்க கனபேர் பாத்திருக்கினம். சரி அதை விடுவம்.

நாங்கள் தமிழர் அடுத்தடுத்து வந்த சிங்கள அரசுகளாலை காலங்காலமா வஞ்சிக்கப்பட்டனாங்களெல்லே. சிங்களவன் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் காத்தோடையெல்லே விட்டவன். வெளிநாட்டுக்கு போய் மூண்டாந்தரப்புக்கு முன்னாலை இருந்து பேசி ஒத்துக்கொண்ட விஷயங்களையே இன்னும் இவனுகள் நடைமுறைப்படுத்தேல்லை அதுமட்டுமே பாருங்க அதை குடடா எண்டு சொல்றதுக்கு இந்த மூண்டாந்தரப்புக்கு வக்கில்லை கண்டியளே. பிறகு இவனுகள் இருந்தென்ன இல்லையெண்டாலென்ன?

நான் கதையோடை கதையா மறந்து போடுவன் தம்பி, இவள் மனிசி வீடெல்லாம் ஒழுகத் தொடங்கீற்றுதுதெண்டு சொல்லுறாள். மாரிகாலமெல்லே வந்திட்டுது. தம்பி உங்காலை கிடுகு வண்டில் ஏதும் வந்தால் என்னட்டை ஒருக்கா அனுப்பிவிடுறீரே. சட்டம்பியார் முத்துக்குமாரு வீட்டுக்கு முன்வீடு எண்டு அவங்களிட்டைச் சொல்லும் வண்டிக்காரனுகளுக்கு தெரியும். நீர் நாலு தெருவும் போய் வாறனீர் அதனாலை தான் உம்மட்டை சொல்றன். மறந்து போயிடாதையும்.

எங்கை விட்டனான் ஓ.. இவையை வைச்சிருக்கிறதாலை மக்களுக்கு என்ன இலாபம்?. இந்த போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு அரசாங்கத்தை தட்டிக்கேக்கிறதுக்கு என்ன அதிகாரங்களிருக்கெண்டு எனக்கொருக்கா சொல்லுங்கோ. இவன்கள் நடக்கிறதையெல்லாம் பாத்துக்கொண்டுதானே இருக்கிறான்கள். சிறிலங்காவிலை நாட்டம் வைச்சிருக்கிற வேறை நாடுகளுக்கு உள்ளாலை இரகசியமா உளவுசொல்ற வேலையும் நடக்குது. கண்காணிப்புக்குழு எண்டால் பிரச்சினைகள் நடக்கிற இடத்துக்குள்ளை லேசிலை போகலாம் வரலாம் அதுதான் இவனுக்கு முக்கியம். பிறகு இவனுகள் வெறும் அறிக்கையெல்லே விடுகிறானுகள். அதுவும் அறிக்கையை சிங்களவனிட்டை முதல்லை குடுத்து தாங்கள் எழுதினது சரியோ எண்டு பாத்திட்டல்லோ வெளிவிடுறான்கள்.

ஓம் ஓம் அந்தக்காலத்திலை களிசான் போட்டுக்கொண்டு பொடியங்களாத் திரியேக்கை செய்த போராட்டம் மாதிரி இண்டைக்கி செய்யேலாதுதான். எல்லாரும் குடும்பகாரராயெல்லே போயிட்டம். பிள்ளை குட்டியெண்டு வரேக்கை நாலையும் பாத்துத்தான் செய்வினம். பின்னை?

அதுக்காக துரோகிகளெல்லாரும் எண்டைக்கும் இளமையாயிருப்பினமெண்டு சொல்லேலாது.

அவைக்கு பிள்ளை குட்டி குடும்பம் பிரச்சினை இல்லாதவை

எண்டும் சொல்லேலாது.

உவர் சொல்றது வெறும் பம்மாத்து கண்டியளே. என்னைப் பொறுத்தளவிலை அண்டைக்கும் இண்டைக்கும் ஏன் சொல்லப்போனா எண்டைக்குமே அசைக்க முடியாத தலைவனெண்டால் அது எங்கடை தம்பியெண்டுதான் நான் சொல்லுவன் கண்டியளே. இதைச் சொல்லேக்கை பாட்டொண்டு நினைவுக்கு வருகிது சொல்றன்:

"உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்

உதவும் நாள் கண்டு துடிப்பான்

சுற்றிப் பகை வந்து சுூழும் திருநாளில்

வெற்றித் தோள்கொண்டு முடிப்பான்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.