Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அன்பு' இல்லம் 'பாரதி' 'செஞ்சோலை' இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கிழக்கிற்கு சுற்றுலா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'அன்பு' இல்லம் 'பாரதி' 'செஞ்சோலை' இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கிழக்கிற்கு சுற்றுலா

09 செப்டம்பர் 2014

EASTERN_TOUR_04_CI.jpg

வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு (நெர்டோ) அமைப்பினால் நடாத்தப்பட்டு வரும் ஆண்களுக்கான 'அன்பு' இல்லம், பெண்களுக்கான 'பாரதி', 'செஞ்சோலை' இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுலாப் பயணத்தினை மேற்கொண்டு இருந்தனர்.

ஓகஸ்ட் மாதம் 19, 20, 21 ஆம் நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக 215-க்கும் அதிகமான சிறுவர்கள் மூன்று பேருந்துகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கிய பூரண நிதி உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர்.

சுற்றுலாவின் தொடக்கத்தில் உலகின் அதிசயமான திருகோணமலை, கிண்ணியா வெந்நீரூற்றுப் பகுதியினை சிறுவர்கள் சென்று பார்வையிட்டு இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நிலாவெளியில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆலயத்தினை சிறுவர்கள் வழிபாடு செய்ததுடன், ஆலய நிர்வாகத்தினர் வழங்கிய மதிய உணவிலும் கலந்து கொண்டனர்.

அன்று மாலை திருகோணமலை கடற்பரப்பினை சிறுவர்கள் படகில் சுற்றிப் பார்வையிட்டதோடு, அப்பகுதி கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.

இரண்டாவது நாளான 20 ஆம் நாள் ஈழத்தின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தினை சிறுவர்கள் வழிபட்டு- தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தினை நோக்கி தமது பயணத்தினை தொடங்கினர்.

சுமார் மூன்று மணி நேர பயணத்தின் பின்னர் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையினை சென்றடைந்த சிறுவர்கள், மூன்று மணி நேரத்துக்கு மேலாக கடலில் நீராடி தமது பொழுதினை இனிதே கழித்தனர்.

அன்று மதியம் கன்னங்குடா கண்ணகி அம்மன் ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகமும் அப்பகுதி மக்களும் சிறுவர்களுக்கு சிறப்பான முறையில் மதிய உணவு தயாரித்து வழங்கி இருந்தனர்.

அன்றைய பொழுது தாந்தாமலை முருகன் ஆலய வழிப்பாட்டுடன் நிறைவு பெற்று இருந்தது.

சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான 21 ஆம் நாள், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வழிபாட்டுக்குப் பின்னர், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனுக்குச் சென்று அப்பகுதியினையும் சுற்றிப் பார்வையிட்டு இருந்தனர். இங்கு இராமகிருஷ்ண மிசன் தலைவர் சிறுவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று பின்னர், மட்டக்களப்பில் அண்மையில் திறக்கப்பட்ட கல்லடி பாலத்தினையும் சிறுவர்கள் பார்வையிட்டு இருந்தனர்.

அங்கிருந்து மீண்டும் திருகோணமலை திரும்பிய சிறுவர்கள், அங்கு உள்ள பளிங்கு கடற்கரையில் நீராடி மகிழ்ந்து- தமது சுற்றுலாவினை இனிதே நிறைவு செய்தனர்.

இந்த சிறுவர்களில் பெருமளவிலானோர் போரில் சாவடைந்த போராளிகளினதும் பொதுமக்களினதும் பிள்ளைகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு (நெர்டோ)

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111410/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்...

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கிய பூரண நிதி உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர்.
நல்ல விடயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.