Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் நிலக்கரி மின் நிலையம் - இந்தியாவு டன் ஒப்பந்தம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் நிலக்கரி மின் நிலையம் நிறுவ முடிவு

இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்து

அமைச்சர் செனவிரத்ன தகவல்

சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலை யம் ஒன்றை நிறுவுவதற்கு வாய்ப்பான சூழல் உள்ளதா என்பதைக் கண்டறிய நிபு ணர்கள் குழு ஒன்று விரைவில் அங்கு செல்ல வுள்ளது.

மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன இத்தகவலை நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.

மின்சார சபையின் பொறியியல் வல்லு நர்கள் குழு அங்கு சென்று இடத்தைப் பார்வையிட்டு அனல் மின்நிலையம் நிறுவ அது பொருத்தமான இடமா என்பதை முடிவு செய்த பின்னர் அனல் மின் நிலையத்தை அங்கு நிறுவுவது தொடர்பாக இந்தியாவு டன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று அமைச்சர் செனவிரத்ன கூறியிருக்கிறார்.

கேள்வி: அண்மையில்தான் அங்கு விடு தலைப் புலிகளுடன் கடும் மோதல்கள் இடம் பெற்றன. அப்படியான ஓர் இடத்தில் அனல் மின்நிலையத்தை நிறுவுவது பாதுகாப்பா னதா?

செனவிரத்ன: அந்தப் பகுதி தற்போது பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடற்படை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினோம். அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்று அவர்கள் கூறினார்கள். எனவே சம்பூர் பகுதியை இதுபோன்ற திட்டத்துக்குப் பயன்படுத்தலாம்.

கேள்வி: நிலக்கரியை உற்பத்தி செய் யாத ஒரு நாடு என்ற வகையில் நிலக்கரி யைப் பயன்படுத்தும் இந்த வகையான அனல் மின் நிலையங்களை உருவாக்குவது என்பது பொருளாதார ரீதியாக லாபம் தரக்கூடிய ஒரு நடவடிக்கையா?

செனவிரத்ன: நிலக்கரியைப் பல நாடு கள் இறக்குமதி செய்கின்றன. உதாரணமாக மலேசியா தனது திட்டங்களுக்குத் தேவை யான நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது. அது போல நாங்கள் எமக்குத் தேவையான நிலக்கரியை இந்தோனேசியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம்.

இதேவேளை

மூதூர் கிழக்கு, சம்பூர் பகுதியில் நாட்டின் இரண்டாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலை யத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன என்று எரிபொருள் மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந் தது. எனினும், அரச படைகள் தற்போது சம் பூரைக் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு இந்த நிலையத்தை நிறுவுவது செலவு குறை வானது. அத்துடன் திருகோணமலைத் துறை முகத்துக்கும் பாதுகாப்பானதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெஹாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படவுள்ளது.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் அனல் மின் உலை திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு இல்லை

இந்தியாவின் பங்களிப்புடன் சம்பூரில் 1000 மெகாவாட் அனல்மின் உலைத் திட்டம் மேற்கொள்ளப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதை புதுடில்லி வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.

சீனக் குடாவிலேயே அனல் மின் உலை அமைப்பதில் இந்தியா ஆர்வம் காட்டியதாகவும், கொட்டியாரக்குடாவுக்கு அப்பால் உள்ள சம்பூரில் மின்உலை அமைப்பதில் இந்தியா ஆர்வம் காட்டவில்லையெனவும் புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி `இந்துஸ்தான் ரைம்ஸ்' பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஆனால், சம்பூரில் மின் உலை அமைக்கப்பட்டால் அது இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பாரியளவிலான அரசியல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குமென அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

திருமலைத் துறைமுகத்தை நோக்கியவாறுகேந்திர முக்கியமான இடமாக சம்பூர் உள்ளது. ஆனால், இது அரசாங்கத்துக்கு, விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சர்ச்சைக்குரிய இடமாகவுள்ளது. அதேசமயம் மோதல் களமாகவும் அது காணப்படுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சம்பூரில் அனல் மின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு 5,000 கோடி ரூபாவை (இலங்கை நாணயம்) வழங்குவதற்கு இந்தியா இணங்கியிருப்பதாகவும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படுமெனவும் மின்சக்தி, எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்னவை மேற்கோள்காட்டி செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அனல் மின் உலை சீனக் குடாவில் அல்லாமல் சம்பூரிலேயே அமைக்கப்படவேண்டுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகாவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொடவும் தெரிவித்திருந்ததையடுத்து சம்பூரில் அனல் மின்உலை அமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக `டெய்லிமிரர்' பத்திரிகை தெரிவித்திருந்தது.

சீனக் குடாவில் விமானத்தளம் மற்றும் பாதுகாப்பு நிலைகள் அமைந்திருப்பதால் இவற்றின் செயற்பாடுகளுக்கு அங்கு அனல் மின் உலை அமைப்பதால் இடையூறு ஏற்படுமென இராணுவ உயர்மட்டம் அரசாங்கத்திடம் கூறியுள்ளதுடன் சீனக்குடா பொருத்தமான இடமல்ல என்றும் தெரிவித்திருந்தது.

இதேவேளை, சீனக்குடாவில் இந்தியா - இலங்கை இணைந்து அனல்மின் உலை அமைக்கும் திட்டமும் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இந்தக் கூட்டுத் திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்னமும் கைச்சாத்திடப்படவில்லை. `நடுவர்' தொடர்பான சரத்தை இதில் சேர்ப்பதற்கு இலங்கைத் தரப்பு இணக்கம் தெரிவிக்க வேண்டியிருப்பதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம், அப்பலோ ஆஸ்பத்திரி போன்ற இந்திய முன்னணி முதலீட்டாளர்களின் மகிழ்ச்சியற்ற அனுபவத்தை தொடர்ந்து இந்திய முதலீட்டாளர்கள் (தனியார் துறையினராகவோ, அரச துறையினராகவோ ஆயினும்) முன் எச்சரிக்கையுணர்வுடன் உள்ளனர்.

அப்பலோ இலங்கையை விட்டு வெளியேறியுள்ளது. இந்திய எண்ணெய் கம்பனியானது மானியம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக இலங்கை அரசதரப்புடன் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறது. இந்த இரு நிறுவனங்களுமே நட்டத்தில் இயங்கின.

இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு சீனக்குடாவில் கூட்டு முதலீட்டில் ஈடுபடுவது தொடர்பாக புதுடில்லி அதிக கரிசனை காட்டாது என்று கருதப்படுகிறது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.