Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது மக்கள் படுகொலை தொடர்பாக ஐ.நா.விசாரணை நடத்த வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கில் அப்பாவி பொது மக்கள் படுகொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்

இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் இடம்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் படுகொலைகள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

உலகின் முன்னணி மனித உரிமைகள் அமைப்புகளில் ஒன்றான மனித உரிமைகள் இல்லமே (Homefor Human Rights-HHR) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்தப் படுகொலைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மதகுருமார், மாணவர்கள், தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

முல்லைத்தீவில் தற்காலிக பாடசாலையொன்றில் விமானப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 51 மாணவிகள் கொல்லப்பட்டதும் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரையான படுகொலைகள் குறித்து பூரண விபரங்களை மனித உரிமைகள் இல்லம், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளரான பிலிப் அல்ஸ்ரன், ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குநர் லூயிஸ் ஆர்பர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளதுடன் இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஐ.நா.விரிவான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதியாக கடந்த டிசம்பரில் மகிந்த ராஜபக்ஷ தெரிவான பின்னரும் போர் நிறுத்த உடன்பாடு மிக மோசமாக மீறப்பட்ட பின்னருமே இந்தப் படுகொலைகள் ஆரம்பமானதாக மனித உரிமைகள் இல்லம் கூறுகின்றது.

யாழ்.குடாநாட்டில் அண்மைக்கால வன்முறைகளையடுத்து இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததுடன், உணவுப் பொருட்களுக்கான விநியோகப் பாதை தடை செய்யப்பட்டதால் அங்கு பட்டினி நிலை தோன்றியுள்ளதாகவும் மனித உரிமைகள் இல்லம் தெரிவித்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோரது படுகொலைகள் தொடர்பாக இந்த மனித உரிமைகள் இல்லம் தனது இணையத் தளத்தில் அனைத்து விபரங்களையும் விரிவாக வெளியிட்டுள்ளது.

இதில் படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியதாக நான்கு மாதக் குழந்தை மற்றும் ஐந்து தமிழ் மாணவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை, நால்வரைக் கொண்ட குடும்பமொன்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டமை, தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலையை நேரில் பார்த்த மதகுரு ஒருவர் பற்றிய விபரங்களுமுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆர்பருக்கு மனித உரிமைகள் இல்லம் அனுப்பிய கடிதத்தில், போராளிகள், பொது மக்கள் மற்றும் சிறுவர்களை அழிப்பதற்கு அரசு துணைப்படைகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் இந்தத் துணைப்படைகளுக்கு கப்பம் வழங்க மறுத்த பொது மக்களே பெருமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புலிகளும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொது மக்கள், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளை அவர்கள் கொன்றுள்ளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் படுகொலைகள் குறித்தெல்லாம், தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் பிரஸ்தாபிக்குமாறும், இந்த மாநாட்டில் இலங்கையும் கலந்து கொண்டுள்ளதாகவும் மனித உரிமைகள் இல்லம் தெரிவித்துள்ளது.

- தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்:சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மஹிந்த ராஜ பக்ஷ கடந்த நவம்பரில் பதவியேற்ற பின்னர், சட்டத் துக்கு முரணான வகையில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதி கமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சுட் டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, இதற் காக அரசின் மீதும் புலிகள் உட்பட ஆயுதம் தாங்கிய குழுக் கள் மீதும் குற்றம் சுமத்தியிருகின்றது. இந்த விடயம் குறித்து ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புக் கோரியிருக்கின்றது.

"மனித உரிமைகளுக்கான இல்லம்' (Home For Human Rights) என்ற முன்னணி மனித உரிமைகள் அமைப்பே இப்படிச் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

அது மட்டுமல்ல. இவ்வாறு சட்டத்துக்கு முரணான முறையில் கொல்லப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோ ரின் விவரங்களையும் அது வெளியிட்டிருக்கின்றது. கொல் லப்பட்டவர்களின் பெயர்கள், ஏனைய விவரங்கள், இடங் கள் போன்றவை எல்லாம் அந்த அமைப்பின் இணையத் தளத்தில் விலாவாரியாக வெளியாகியிருக்கின்றன.

இந்தப் பட்டியல் மற்றும் விவரங்களை, சட்டவிரோதக் கொலைகள் தொடர்பான ஐ.நா. விசேட பிரதிநிதி பிலிப் அஸ்டன், மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் லுயிஸ் ஆர்பர் போன்றோரி ட மும் அந்த அமைப்பு சமர்ப் பித்திருக்கின்றது. இலங்கை விமானப்படைக் குண்டு வீச்சினால் முல் லைத்தீவில் அறுபதுக்கும் அதிகமான பாடசாலை மாண வர்கள் பலியானமை, நான்கு மாத தமிழ்ச் சிசுக் கொலை, திருமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை, மன்னார் வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டமை, அல்லைப்பிட்டி தேவாலயப் படுகொலைகளை வெளிக் கொணர்ந்த மதகுரு ஒருவர் மாயமாக மறைந்தமை உட்பட நாடாளுமன்ற உறுப்பினர், பத்திரிகையாளர்கள், மதகுருமார்கள், மாணவர்கள் எனப் பலர் காவு கொள்ளப்பட்டமை குறித்தெல்லாம் விசாரிக் கும்படி அந்த மனித உரிமைகள் குழு, சர்வதேச சமூகத்தை வேண்டியிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதை அடுத்து, அமைதி முயற்சிகள் குழம்ப, இந்தப் படுகொலை கள் தீவிரமடைந்தன என்ற உண்மையையும் அந்த அமைப்புச் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 4 ஆம் திகதி அரச ஊடகமான "டெய்லி நியூஸ்' ஓர் அதிரடி அறிவிப்பை விடுத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹவானாவில் அணி சேரா மாநாட்டில் பங்குபற்றுவதற்காகவும், அமெரிக்கா வில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற் காகவும் புறப்பட இருக்கையில் அந்த அறிவிப்பு வெளி யானது.

அதாவது, இலங்கையில் இடம்பெறும் இந்த மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச சமூகத்தின் கருத்துக்களை அழுத்தங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை எழுந்த கட்டத்தில் அந்த அறிவிப்பு வெளியானது.

""நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இடம்பெற்ற ஆட் கடத்தல்கள், காணாமற் போதல், படுகொலைகள் என் பன குறித்து விசாரிப்ப தற்கு சுதந்திரமான சர்வதேச ஆணைக் குழுவை அழைப்பதற்கு ஜனாதிபதி முடிவு'' என்று அந்த அறிவிப்புத் தெரிவித்தது. கடந்த மாதம் 12, 13 ஆம் திகதிகளில் பிரஸல்ஸில் கூடிய இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலை மைகளின் கூட்ட முடிவில் வெளியான கூட்டறிக்கை, சர்வதேச விசாரணைக் குழுவை அழைக்கும் இலங்கை அரசின் அந்த முடிவை வரவேற்றதோடு, அந்த முயற்சி தொடர்பாக இலங்கை ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பும், வழிகாட்டலும் வழங்க இணைத் தலைமைகள் தயா ராகக் காத்திருக்கின்றன என்றும் தெரிவித்தது.

ஆனால், சர்வதேச சமூகத்துக்குக் காதில் பூச்சுற்ற விடுக்கப்பட்ட அந்த அறிவிப்பு, அப்போதைய அறிவிப் போடு கிணற்றில் போட்ட கல்லாயிற்று. அதன் பின்னர் அது விடயத்தில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழு அமைக்கும் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை ஏதும் இடம்பெறவில்லை. "சுதந்திரமான சர்வதேச விசார ணைக்குழு' என்ற நிலைமை "சர்வதேச பார்வையாளர்கள்' என்ற தரத்துக்கு அதாவது உள்ளூர் விசாரணைகளைப் பார்வையிடும் சர்வதேசப் பிரதிநிதிகள் நிலைக்கு கீழி றக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்.

இந்தப் பின்னணி நிலைமையிலேயே ஐ.நா. அமைப் புக்களை, இந்தச் சட்டவிரோதக் கொலைகள் தொடர் பான விவகாரங்களை விசாரிக்கும்படி இப்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. துணை இராணுவப் படைகளால் அச்சுறுத்திக் கேட்கப் படும் கப்பப் பணத்தைச் செலுத்த மறுக்கும் சிவிலியன் களும் படுகொலை செய்யப்பட்டு வருகின்றார்கள் என்றும் மேற்படி மனித உரிமைகளுக்கான இல்லம், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்புகளிடம் சுட்டிக்காட்டியிருக் கின்றது.

ஜெனிவாவில் தற்போது நடைபெறும் உலகின் மனி த உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் உயர் மட்ட மாநாட்டில் இலங்கையின் இந்த விவகாரம் விரிவாக ஆரா யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மனித உரிமைகளை மோசமாக மீறும் செயல்களில் ஈடுபடும் தரப்புகளுக்கு "சூடு' கொடுக்கும் வகையி லான அறிவிப்புகள் ஜெனிவா கூட்டத் தொடரின் முடி வில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி: உதயன்

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.