Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா பாராளுமன்றத்தில் திடீரென்று பரவிய துர்நாற்றம்

Featured Replies

சிறிலங்கா பாராளுமன்றத்தில் திடீரென்று பரவிய துர் நாற்றம் காரணமாக சபை நடவடிக்கைகள் 20 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்தாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் பாராளுமன்றத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அதேவ

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்களின் இருக்கைகள் பக்கம்

திடீரென எழுந்த "கெமிக்கல்' நாற்றம்

நாடாளுமன்று உடன் ஒத்திவைப்பு; தேடுதலில் ஒருவகைத் தூள் கண்டுபிடிப்பு

நாடாளுமன்றத்தில் திடீரென இரசாய னப் பொருள்களின் ("கெமிக்கல்') நாற்றம் வீசியதாகக் கூறப்பட்டதை அடுத்து நேற்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுநேரம் ஒத்தி வைக்கப்பட்டன. பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து அமைச்சர்கள் அமரும் முன்வரிசை ஆசனங்களைத் துருவித் துருவிச் சோதனை செய்தனர்.

சோதனை நடத்திய பொலிஸாரும், அதி ரடிப்படையினரும் அந்த ஆசனங்களின் கீழும், மேசைகளுக்குள் இருந்தும் தூள் போன்ற பொருளை எடுத்தனர்.

இந்தப் பரபரப்பின் மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.

நேற்றுக் காலை 9.30 மணிக்கு நாடாளு மன்றம் சபாநாயகர் தலைமையில் கூடிய போது, ஜே.வி.பியின் எம்.பி. அநுரகுமார திஸநாயக்க இலங்கையில் கனியவள ஆய்வு தொடர்பாக நோர்வேயுடன் செய்து கொள் ளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை சபையில் சமர்ப் பித்து அதன் மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது 10.45 மணியளவில் அமைச் சர் தினேஷ் குணவர்த்தன ஒழுங்குப் பிரச் சினையை எழுப்பி சபையில் ஒரு வகையான "கெமிக்கல்' நாற்றம் வீசுவதாகக் கூறினார்.

அது பற்றி சோதனை நடத்துவதற்காக 10 நிமிடங்கள் சபை நடவடிக்கைளைத் தாம் ஒத்திவைக்கிறார் என சபாநாயகர் அறிவித்தார்.

அதனையடுத்து, பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் சபைக்குள் வரவழைக் கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட் டது. "கெமிக்கல்' நாற்றம் முன்வரிசையில் அமைச் சர்கள் அமரும் ஆசனப் பக்கத்திலிருந்து தான் வருவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவ்வாசனங்களின் கீழ் சோதனை நடத்தப்பட்டது.

ஆசனங்களுக்கு முன்பாகவுள்ள மேசை களின் மீது இருந்த அமைச்சர்களின் புத்த கங்கள், ஆவணங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் துருவித் துருவிச் சோதனை செய்யப்பட்டன.

அவ்வாசனங்களின் கீழ் இருந்து தூள் போன்ற பொருள்களைப் பொலிஸார் எடுத் துச் சென்றனர்.

சபையைத் தொடர்ந்து நடத்த முடியும் எனத் தெரிவித்துப் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு உத்தர வாதமளித்தனர்.

இதன் காரணமாக சபை நடவடிக்கைகள் சுமார் 35 நிமிடங்கள் தாமதித்து முற்பகல் 11.20 மணியளவில் மீண்டும் தொடங்கின.

இவ்விவகாரத்தால் சபையில் ஒரு வகையான பரபரப்பும், பீதியும் நிலவின.

இத்தனை பரபரப்புக்கும், பீதிக்கும் மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சபையின் மத்தியில் அமைதி யாக அமர்ந்திருந்து தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை இடைவிடாமல் தொடர்ந் தனர்.

-உதயன்

இலங்கையிலே துர்நாற்றம் பிடித்த சாக்கடைகள் அனைவரும் ஒன்றுகூடி இருக்கையில் துர்நாற்றம் தவிர் :evil: க்கமுடியாத ஒண்டுதானே

ஜே.வி.பி உறுப்பின்கள் சிலர் தமது காலை கொடுக்கல் வாங்கல்களை முடிக்காமல் வந்ததால் இருக்குமா???????? :lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.