Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் அரசன்!

Featured Replies

10685394_709946139061161_358031006774397

 

 

புத்தர் ஒரு நகரத்துக்கு வருகிறார்.அந்த நாட்டின் அரசனுக்கு அவரை எதிர்கொண்டு வரவேற்பதில் தயக்கம். "நானோ அரசன். அவரோ ஆண்டி." 

ஆனால் அவருடைய மந்திரி, வயதில் மூத்தவர், விவேகி சொல்லிவிடுகிறார்."நீங்க வந்து அவரை எதிர் கொண்டு வரவேற்கிறீர்கள்.இல்லையேல் நான் விலகி விடுகிறேன்."

அது சற்றே தர்மசங்கடமான விஷயம்.அந்த மந்திரியின் சேவை நாட்டுக்கு அத்தியாவசியம். அரசனுக்கு அவர் இல்லாமல் எந்தக் காரியமும் ஓடாது. அவரில்லாமல் முடியாது. "ஏன்? ஏன் இப்படி அடம் பிடிக்கிறீங்க? அவர் ஓர் ஆண்டி. நான் அரசன்." 

அவர் சொன்னார். "வெளிப்படையாகச் சொல்லணும்னா அவர் தான் ராஜா. நீ ஓர் ஆண்டி.என் கூட வந்து அவரைப் பார்த்து மரியாதை செய்து கூட்டிக்கிட்டு வா. இல்லை என்றால் என் ராஜினாமாவை எடுத்துக் கொள். இவ்வளவு சாதாரண விஷயத்தைக் கூட புரியாத ஆளுக்காக நான் வேலை செய்ய முடியாது. புத்தர் தான் உண்மையில் உலகை வென்றவர். உன்னிடம் என்ன இருக்கிறது? சில பல பொருட்கள். சாவு வர்ரப்போ அத்தனையும் உன் கிட்ட இருந்து எடுத்தாயிரும். ஆனா அவர் கிட்ட இருக்கிறத யாரும் எடுத்துக்க முடியாது. மரணம் கூடஎடுத்துக்க முடியாது. அவர் தன்னையே வென்றவர். தன்னை வெல்வது உலகத்தை வெல்வது."

அந்த இளம் வயது அரசனுக்கு வேறு வழியில்லை. போனான். புத்தர் காலில் விழுகிறான். புத்தர் சொல்கிறார். " ஆண்டியின் காலில் விழ வேண்டியதில்லை!"

அரசனுக்கு திடுக்கிட்டது. "இவருக்கு எப்படித் தெரிந்தது?" அந்த அதிர்ச்சியில் அவன் கண்கள் திறந்து கொண்டன. புத்தரைப் பார்த்தான். அந்த அருள் ததும்பும் முகத்தைப் பார்த்தான். அந்த அழகு, சாந்தம், ஒளி, அன்பு, வேறு எங்கும் கண்டதில்லை. மீண்டும் அவர் காலில் விழுந்தான். 

புத்தத் சொல்கிறார். " இது சரிதான். இது உன்னுடைய நெஞ்சத்தின் மொழி. இதுவரை உன் மந்திரி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாய். இப்போது உண்மையாகவே என்னை வணங்குகிறாய். ஏனென்றால் என்னைக் கண்டு கொண்டாய்." 

ஒரு புத்தரைக் காண்பது அரிது. அதனினும் அரிது அவரைத் தெரிந்து கொள்வது. நீதான் உன் வாடிக்கையான கண்களைக் கொண்டு பார்க்கிறாயே. உன் வாடிக்கையான முட்டாள்தனமான மனதோடு பார்க்கிறாயே. உன் முட்டாள் மனம் புத்தமையைப் பார்ப்பதில்லை. பொருட்களை மட்டுமே பார்த்துப் பழகியிருக்கிறது. பொருளைத் தாண்டி இருப்பதைப் பார்ப்பதில்லை. அற்புதத்தைப் பார்ப்பதில்லை. வடிவம் கொண்டதை மட்டுமே பார்க்கிறது. ஸ்தூலமானதைப் பார்ப்பதில்லை. 

புத்தர்கள் மட்டுமே செல்வந்தர்கள். உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பொருட்களை மட்டுமே தங்களை சுற்றி வைத்திருப்பவர்கள். உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள். செல்வந்தர்கள் என்று தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றி கொண்டு இருக்கும் ஏழைகள்.
 
 
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
புத்தர் பிறப்பாலும் செல்வந்தர், இறப்பாலும் செல்வந்தர்தான். அவரைப் பின்பற்றுபவர்கள் மட்டும் ஏன்? கொல்வந்தர்களாக உள்ளனர்??. :(
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.