Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாத் தமிழ் மக்களும் டக்களஸ் தேவானந்த அல்லர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பிரதேசங்களை விட்டு

அரசாங்கம் வெளியேறிவிட வேண்டும்அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காட்டம்

கொழும்பு,ஒக்ரோபர் 6

அரசாங்கத்தால் தமிழர்களைச் சரியான முறையில் கவனிக்க முடியாவிட்டால் எங்கள் பிரதேசங்களை விட்டு அரசு வெளியேறி விடவேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளு மன்றத்தில் காட்டமாகத் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அவர் இவ் வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தமது உரையில் கூறியதாவது:

அரச படையினர் வடக்கு கிழக்கில் தமி ழர்கள் மீது மேற்கொண்டு வரும் அடாவடித் தனங்கள் அட்டூழியங்கள் போன்றவை அதிகரித்துவிட்ட நிலையில் தமிழர்கள் நிம் மதியாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது. எனவே, அரச படையினர், வடக்கு கிழக்கில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். தமிழர்களை அவர்கள் பாட்டில் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும்.

""வடக்கு கிழக்கில் இராணுவ நடவடிக்கை பெரும் எடுப்பில் நடைபெறுகிறது. தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யுள்ளது. இந்நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும், 4 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள் ளனர். பொருள் சேதமும் படையினரால் ஏற் படுத்தப்பட்டுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கைகள் காரண மாக இடம்பெயர்ந்த தமிழர்கள் மீளக் குடிய மர முடியாமல் உள்ளனர். மூதூர் கிழக்கில் இடம்பெயர்ந்த தமிழர்கள் மீளக்குடியமரவில்லை.

2 லட்சத்து 60 ஆயிரம் பேர்

உள்ளக ரீதியாக இடம்பெயர்வு

அப்பிரதேசத்தில் தமிழர்களின் உடை மைகள் திருடப்படுகின்றன. 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந் துள்ளனர். இந்தியாவுக்கு 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவை தவிர, தமிழர்கள் தினமும் கடத் தப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். அரச கட் டுப்பாட்டுப் பகுதிகளில் வெள்ளை வான் களில் வருபவர்கள்தான் இவ்வாறு தமிழர் களைக் கடத்திச் சென்று கொலை செய்கின்ற னர்.

மாணவர்கள், தொழிலாளர்கள், வர்த் தகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவி லியன்கள் என அனைவரும் கொல்லப்படு கின்றனர். கொலையாளிகளில் ஒருவரையேனும் அரசு கைது செய்யவில்லை. கொலைப் படலம் தொடர்கிறது.

வெள்ளை வானில் வருபவர்கள் இவற்றை யெல்லாம் செய்து விட்டு இராணுவச் சோத னைச் சாவடி ஊடாகத் தப்பிச் செல்கின்றனர்.

இவ்வருடம் ஜனவரி மாதம் 5 தமிழ் மாண வர்கள் திருமலையில் கொல்லப்பட்டனர். இதை ஜனாதிபதியிடம் முறையிட்டோம். கொலையாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தார்கள் என எமக்கு ஜனாதிபதி யும், பொலீஸ் மா அதிபரும் உறுதியளித்த னர். ஆனால், அதற்கான எந்த முயற்சிகளும் நடைபெறவில்லை.

ஓகஸ்ட் 4 இல் திருமலையில் 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட் டனர். இதனுடன் தொடர்பட்ட எவரையும் கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆணைக்குழு

நியமிக்கப்படவில்லை

இவர்களின் கொலை தொடர்பாக விசா ரணை நடத்த சிவில் சமூகத்தவர்கள் உள் ளிட்ட சர்வதேச ஆணைக்குழு ஒன்று அமைக் கப்படும் என ஜனாதிபதி கூறியிருந்தார். கடந்த மாதம் 8 ஆம் திகதி இச்செய்தியை "ஹிந்து' பத்திரிகை வெளியிட்டது. ஆனால், ஆணைக் குழு நியமிக்கப்படவில்லை. இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆணைக்குழு வேண்டும் என சர்வதேச மன் னிப்புச் சபை கோரியுள்ளது. அதனால், சர்வ தேச ஆணைக்குழுவால் இலங்கைக்கு வர முடியாத நிலையுள்ளது என அரசு தெரிவிக் கின்றது. உண்மை அம்பலமாகி விடும் என் பதால்தான் அரசு இப்படிச் சொல்கிறது.

அரசு யுத்த நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக மீறிவிட்டது. தொடர்ச்சியான ஷெல், வான் தாக்குதல்களைத் தமிழர் பகுதி களில் மேற்கொண்டதன் மூலம் இதை மீறியி ருக்கின்றது.

யுத்தநிறுத்த உடன்படிக்கை முறிவடைந் தமைக்கு ஜெனிவாப் பேச்சின் தீர்மானத்தை அரசு நடைமுறைப்படுத்தத் தவறியமையும் ஒரு காரணம். சர்வதேச நாடுகள் இதை ஏற் றுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில் செம்மணி விடயம் என்ன வாயிற்று? 400 முதல் 500 தமிழர்கள் கொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட் டுள்ள னர். அதற்கான விசாரணை நடத்தப்படும் என அரசு கூறி அதை அப்படியே நிறுத்திவிட் டது. பிந்துனுவௌ சம்பவமும் அவ்வாறேதான் ஆனது. தமிழர்கள் கொலை செய்யப் படும்போது மட்டும் விசாரணை நடத்தப்படுவதில்லை. அல்லது விசாரணை இடையில் நிறுத்தப்படுகிறது.

தமிழர்கள் மீது அடக்குமுறை

விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீற வில்லை என நாம் சொல்லவில்லை. ஆனால், அரசு மீறிய விதம் படுமோசமானது. தமிழர்கள் மீது அடக்குமுறையை அரசு மேற்கொண்டுள்ளது.

சர்வதேசப் பணியாளர்கள் தமிழர் பகுதி களில் சென்று பணியாற்ற அரசு தடை விதிக் கின்றது. தமிழர்களின் நிலையை சர்வதேசம் கண்டுவிடும் என்று அரசு நினைக்கிறது. தமிழர் களுக்குச் சேவை செய்யக் கூடாது, அவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்றே அரசு கருதுகிறது போலும்.

தமிழர்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கி யுள்ளனர். அத்தியாவசியத் தேவைகள் இன்றி மரத்தின் கீழ்தான் அவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக் கவும் அதற்கான பொருள்களைத் தமிழ்ப் பிர தேசத்திற்குக் கொண்டு செல்லவும் அரசு தடை விதிக்கின்றது.

கதிரவெளி, வாகரை போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்குக் கூடாரங்களை அமைத் துக்கொடுக்க செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வினர் தயாரான போதும் அரசு அதனைத் தடைசெய்கிறது. இப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள் இல்லை. தொற்று நோய் பரவும் அபாயம் தென்படுகிறது. சர்வதேச பணியாளர்களை அங்கு செல்ல அனுமதித்தால் இப்பிரச்சினை தீர்க்கப்படும்.

யாழில் மக்களுக்கு உண்ண உணவில்லை. வர்த்தகர்கள் மாத்திரம் ஓரளவு இத்தேவையை நிறைவேற்றுகின்றனர். இருந்தும் அவர்களால் பொருள்களை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்ல முடியாதுள்ளது. கப்பலில் அனுப்பப்ப டுகின்ற பொருள்களின் அளவும் போதாது. தமிழ்மக்களைப் புறக்கணித்து அரசு இவ்வாறு செயற்பட ஜே.வி.பியினரும், ஜாதிக ஹெல உறுமயவினருமே காரணம்.

எல்லாத் தமிழ் மக்களும்

டக்களஸ் தேவானந்த அல்லர்

இவர்கள்தான் ஆழிப்பேரலை பொதுக்கட்டமைப்பையும், இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையையும் தடை செய்தனர். இவை வழங்கப்பட்டிருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும்.

இவர்கள் நோர்வேத் தூதரகம் முன்பாகச் சென்று நோர்வேயினரை விரட்டுகின்றனர். சமாதானப் பேச்சு வேண்டாம் என்கின்றனர். இந்த நிலையில் எப்படி சமாதானத்தைப் பற்றி அரசு பேச முடியும். ஏன் அரசு எம்மை எம் பாட்டில் விடக் கூடாது. அரசால் எங்களைச் சரியான முறையில் கவனிக்க முடியாவிட் டால் அரசு எங்கள் பிரதேசங்களை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

இது புலிகளுக்கு எதிரான போராட்டம் எனக் கருதி தமிழ் அப்பாவி மக்களைக் கொலை செய்கிறது அரசு.

தமிழர்கள் தன்மானம் உள்ளவர்கள்

எம்மை அடிமையாக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. எல்லாத் தமிழர்களும் டக்ளஸ் தேவானந்தா அல்லர் என்பதை அரசு விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் தன்மானம் உள்ளவர்கள். தமிழர்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை நிச் சயம் நீண்ட காலம் நீடிக்காது. ஜயந்த தன பால, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்குத் தகுதியானவராக இருந்தும் கூட அவரால் வெற்றிபெற முடியாமல் போனது. சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு நல்ல தொரு பெயர் இல்லாமையே இதற்குக் கார ணம். இதை அரசு உணர்ந்து செயற்பட வேண் டும்.'' என்றார்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.