Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்சேவின் சூழ்ச்சியால் ஜெயலலிதா கைது.?- நாஞ்சில் சம்பத்

Featured Replies

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி இடம்பெற்றுள்ளதாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
 
அதில் பேசிய அவர்,சுப்பிரமணியசாமியால் கற்பனையால் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்ற தகவல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மனதை புண்படுத்தியுள்ளது.
 
தீர்ப்பை நீதிபதி படித்தபோது, "நீங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்," என ஜெயலலிதாவைப் பார்த்து கூறியுள்ளார். எதை வைத்து இப்படி கூறினார்.
 
வதோதரா, ராஜஸ்தான், உ.பி.,யில் நடந்த இடைத்தேர்தல்களில் மக்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஜெயலலிதா கைது பின்னணியில் சர்வதேச சதி நடந்துள்ளது.
 
தமிழ் இனத்தை திட்டமிட்டு அழித்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், ஐ.நா.வில் சிலர் ராஜபக்சவுடன் கை குலுக்குகினர்.
 
காவிரி பிரச்னை உள்ளிட்ட பல தமிழக உரிமைகளை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. இனப்பகையாலும் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம்.
 
தற்போது மூன்றடுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் சிறைக்குள் ஜெயலலிதாவிற்கு கொடுமை நடக்கிறதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
 
இருப்பினும் பெங்களூரு நீதிமன்றத்தில் தீர்ப்பு படிப்பதற்கு முன்பே கோபாலபுரத்திற்கு ஜெயலலிதாவிற்கு கொடுக்க இருந்த தண்டனை விவரம் எப்படி கசிந்தது.
 
எப்படி இருந்தாலும் வழக்கை சட்டப்படி சந்தித்து, ஜெயலலிதா விடுதலையாவார். அநீதிக்காக கண்ணகி நீதி கேட்ட இந்த வைகை கரையில், நாங்களும் நீதி கேட்டுள்ளோம். விரைவில் வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுக்கும் நேரம் வரும். - என தெரிவித்தார். http://www.pathivu.com/news/34225/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல டக்ளஸ் தேவானந்தா போன்றோரின் சதி வேலையும் நிச்சயம் இதில் இருக்கும்.
விரைவில் ஜெயா அம்மையார், வெளியே... வந்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

subra-dog2.jpg 
 

mahind-and-Subramaniyaswamy-436x306.jpg 

 

இவர்கள் அடிக்கடி... ஏன் சந்தித்தவர்கள் என்பதன் இரகசியம் இப்ப தான் புரிந்தது.
அத்துடன்... அண்மைக்காலமாக, சுப்பிர மணியசாமி, மகிந்த ராஜ பக்சவையும் அடிக்கடி சந்தித்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.
படு பாவிகள்.... தமிழக முதல்வரை, ஜெயிலில் இருக்க வைத்து விட்டார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல டக்ளஸ் தேவானந்தா போன்றோரின் சதி வேலையும் நிச்சயம் இதில் இருக்கும்.

விரைவில் ஜெயா அம்மையார், வெளியே... வந்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்.

 

 

எண்ணெய் ஊற்றவேண்டிய  விடயமிது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.