Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை! 10 ஆண்டுகளாக இல்லை என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது: - ராம்ஜெத்மலானி வாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை! 10 ஆண்டுகளாக இல்லை என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது: - ராம்ஜெத்மலானி வாதம்

[Tuesday 2014-09-30 20:00]
ramjethmalany-300-india.jpg

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

  

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு விடுமுறைகால கோர்ட்டு நீதிபதி ரத்னகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவுக்காக வாதாடுவதற்கு, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜாராகி இருந்தார். இதற்கிடையே கர்நாடக அரசு வழக்கறிஞராக தான் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறிய பவானி சிங், அதற்கான கர்நாடக அரசின் அறிவிப்பாணை தன்னிடம் இன்னும் வந்து சேரவில்லை என்று கூறினார். பவானி சிங் கால அவகாசம் கேட்டார். இதனையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

 

 

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, "உடனடியாக ஜாமீன் அளிக்கலாம், ஏனெனில் சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக இல்லை என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது" என்று வாதாடினார். "அரசு தரப்பு வாதங்களைக் கேட்காமல் ஜாமீன் மனுவை உடனடியாக பரிசீலிக்க இயலாது" என்று கூறிய நீதிபதி ரத்னகலா வழக்கை அக்டோபர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஜாமீன் மனுவை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றால் கர்நாடக ஐகோர்ட் பதிவாளரை அணுகலாம் என்று கூறிய நீதிபதி ரத்னகலா கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டார்.

 

இதனையடுத்து ஐகோர்ட் பதிவாளரை ஜெயலலிதா வழக்கறிஞர்கள் நாடினர். 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட மனுவை அவசர மனுவாக நாளையே விசாரிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சிறை தண்டனை காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் இல்லை என்பதால், 389 (1) பிரிவின் கீழ், அரசு தரப்பு பதில் இல்லாமலேயே ஜாமீன் பெற முடியும். எனவே ஜாமீன் மனுவை நாளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை ஏற்று கர்நாடக பதிவாளர் மனுவை நாளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா ஜாமீன் மனு கர்நாடக ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. மேல்முறையீட்டு மனுவை விடுமுறைகால கோர்ட்டு நீதிபதி ரத்னகலா நாளை விசாரிக்கிறார்.

 

ஜெயலலிதா ஜாமீன் மனுவை சிறப்பு அமர்வு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரிக்கும் என தெரியவருகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=117810&category=IndianNews&language=tamil

தமிழீழம் பெற்றுக் கொடுப்பேன் என்று சொன்னவருக்கு - ஜாமீன் பெற்றுக் கொடுக்க யார் யாரோ ஓடித்திரியிறாங்க :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் பெற்றுக் கொடுப்பேன் என்று சொன்னவருக்கு - ஜாமீன் பெற்றுக் கொடுக்க யார் யாரோ ஓடித்திரியிறாங்க :D:icon_idea:

 

வெட்கப்படவேண்டியது அவரல்ல அஞ்சரன்

நாங்கள்.....

 

கணணி  கிடைத்துவிட்டால்  எதையும் தட்டலாம் என்பதற்கு இந்த எழுத்து சான்று.... :(  :(  :(

எதையும் மறந்து போகும் அளவு அவர் நடந்துகொண்டவர் இல்லை எமக்கும் வன்மம் இருக்கு கொத்து கொத்தா செத்து விழ அசால்ட்டா கதை சொன்னவர் ..

 

இப்பொழுதாவது விளங்கியதா தமிழ்நாடு தமிழன் ஆண்டாள் என்ன ஹிந்தி ஆண்டாள் என்ன இந்தியா என்னும் ஒரு தேசம் என்ன முடிவு எடுக்குதோ அதுதான் நடக்கும் ..

 

ஜெயா ஒன்று மக்களுக்கு குரல் கொடுத்து சிறை செல்லவில்லை 18 வருடம் சாக்கு போக்கு சொல்லி கடசியா கூட புலியை இழுத்து விட்டவர் அவ்வளவு சீக்கிரம் அவரை மன்னிக்கும் பக்குவம் எமக்கில்லை . :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் மறந்து போகும் அளவு அவர் நடந்துகொண்டவர் இல்லை எமக்கும் வன்மம் இருக்கு கொத்து கொத்தா செத்து விழ அசால்ட்டா கதை சொன்னவர் ..

 

இப்பொழுதாவது விளங்கியதா தமிழ்நாடு தமிழன் ஆண்டாள் என்ன ஹிந்தி ஆண்டாள் என்ன இந்தியா என்னும் ஒரு தேசம் என்ன முடிவு எடுக்குதோ அதுதான் நடக்கும் ..

 

ஜெயா ஒன்று மக்களுக்கு குரல் கொடுத்து சிறை செல்லவில்லை 18 வருடம் சாக்கு போக்கு சொல்லி கடசியா கூட புலியை இழுத்து விட்டவர் அவ்வளவு சீக்கிரம் அவரை மன்னிக்கும் பக்குவம் எமக்கில்லை . :unsure:

 

இங்கு  ஒருவர் நல்லவரா  கெட்டவரா என்பதல்ல எமது பார்வை

அவரது பிழைகளுடன்

எமக்கு  செய்த நல்லவற்றை கோர்ப்பதே....

அப்படி கோர்க்கத்தொடங்கினால்

எவரும் மிஞ்சார்

நான் உட்பட......... :(  :(  :(

http://www.yarl.com/forum3/index.php?/topic/146724-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0/

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்காக களமிறங்கி யிருக்கும் வழக்கறிஞர்களிடம் விவேகத்தைவிட ஆவேசம்தான் அதிகம் தெரிகிறது. இதுபோதாதென்று ராம் ஜெத்மலானி வேறு..

நுட்பமாக செயல்பட்டால் பத்து பதினைந்து நாளில் வாங்கவேண்டிய ஜாமீனை இரண்டு மாதங்களுக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில், ''எதிர்'' பக்கம் ஆட்டம் பலமாக இருக்கிறது..

 

ஒரு நண்பரின் கருத்து இது .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா.. சுப்பு.. கருணாநிதி எல்லோரும் புலிகளை தங்களைப் பாதுகாக்க பாவித்தவர்களே. கருணாநிதி.. இதோ புலிகளோடு சேர்ந்து தன்னை கொலை செய்ய வை.கோ சதி என்று சொல்லித்தான்.. வை.கோவை திமுகவை விட்டு வெளியேற்றியவர்.

 

ஜெயா.. கருணாநிதி.. சுப்பு எல்லோரும் ஹிந்திய ஆளும் வர்க்கங்களை சரிக்கட்டி.. ஈழத்தமிழர் துயரில்.. குளிர்காய பின்நிற்காதவர்கள்.

 

இன்று ஜெயா.. ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கிறார் என்றால்.. அது தமிழக மக்களின் மனங்களில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் ஏற்பட்ட மனமாற்றங்களை அடுத்தே. அதனை அந்த மக்கள் மத்தியில் கொண்டு வந்தவர்கள் சீமான் உள்ளிட்ட தமிழ் தேசிய ஆதரவுள்ள ஈழத்தமிழர் நலன் விரும்பிகளே.

 

இன்றேல் இப்போதும் ஜெயா எமக்கு எதிராகவே பகிரங்கமாக செயற்பட்டுக் கொண்டிருந்திருப்பார்.

 

ஆனால்.. ஜெயாவின் வெளிப்படையான மனமாற்றத்தை எமக்குச் சார்பாக பாவிக்க வேண்டியது எமது இன்றைய கட்டாய தேவையாகவும் உள்ளது. அந்த வகையில்.. அதிமுக வோடு திமுக வோடு பல முரண்பாடுகள் இருந்தாலும்.. தமிழக மக்களின் ஆதரவு என்பதை தக்க வைத்துக் கொள்ள இந்தச் சக்திகளின் செயற்பாடுகளில் எமக்கு ஆதரவாக வருபவற்றை ஆதரித்தே செல்ல வேண்டிய தேவை உள்ளது. இவர்களை வெளிப்படையாக வெறுப்பதன் மூலம்.. சிங்களத்தின் நோக்கங்களையும் ஹிந்திய மேலாதிக சக்திகளின் தேவைகளையுமே நாம் அதிகம் பூர்த்தி செய்வோம். இந்த விடயத்தில் நாங்கள் மதில் மேல் பூனைகளாக நடந்து கொள்வதே சிறந்தது..!!! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.