Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு வந்த சீன ட்ராகன் – சுபத்ரா (கட்டுரை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வந்த சீன ட்ராகன் – சுபத்ரா (கட்டுரை)
tragan-680x365.jpg
 
 

 

சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் இலங்கை வந்­தி­ருந்த போது, அவ­ருக் குப் பாது­காப்பு அளிப்­ப­தற்­காக, சீனக் கடற்­ப­டையின் நீர்­மூழ்கி ஆத­ரவு விநி­யோக போர்க்­கப்பல் ஒன்றும், அதி­ந­வீன நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்­தி­ருந்­த­தாகக் கூறப்­படும் விவ­காரம் சர்ச்­சை­யாக மாறியிருக்கிறது.

சீன ஜனா­தி­பதி கொழும்பு வர­முன்­னரே, இந்தப் போர்க்­கப்­பல்கள் கொழும்­புக்கு வந்து சேர்ந்து விட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சீன ஜனா­தி­பதி கொழும்பை விட்டுப் புறப்­பட்ட பின்னர் தான், இவையும் கிளம்பிச் சென்­ற­னவாம். சீன ஜனா­தி­பதி வந்­தி­ருந்த போதே, இந்த நீர்­மூழ்­கியின் வருகை குறித்து இணைய ஊட­கங்­களில் தக­வல்கள் வெளி­வந்­தன.

ஆனால், அதனை இலங்கைக் கடற்­படை உறு­திப்­ப­டுத்­த­வில்லை. எனினும், கொழும்புத் துறை­மு­கத்தில் சீனா­வினால் கட்­டப்­பட்ட கொழும்பு சர்­வ­தேச கொள்­கலன் முனை­யத்தில்  இந்த இரண்டு  போர்க்­கப்­பல்­களும் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக சர்ச்­சைகள் உரு­வா­கி­யுள்­ளன.

அது­பற்­றிய ஒளிப்­ப­டங்­களும் கூட வெளி­யா­கி­யுள்­ளன. எனினும், கொழும்­புக்கோ, திரு­கோ­ண­ம­லைக்கோ வரும் வெளி­நாட்டுப் போர்க்­கப்­பல்கள் பற்­றிய பதி­வு­களை மறைக்­காமல் உட­னுக்­குடன் வெளி­யிட்டு வரும் இலங்கைக் கடற்­படை, சீனாவின் முக்­கி­ய­மான நீர்­மூழ்­கிக்­கப்பல் மற்றும் விநி­யோக போர்க்கப்பல் ஆகி­ய­வற்றின் வருகை தொடர்பில் எதுவும் கூற­வில்லை.

சீனப் போர்க்­கப்­பல்கள் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து சேரும் வரை அது­பற்­றிய தக­வல்கள் இலங்கைக் கடற்­ப­டைக்குக் கூடத் தெரி­யாது என்றும் கூறப்­பட்­டது.

இது எந்­த­ள­வுக்கு உண்மை என்ற கேள்வி இருந்­தாலும், சீன ஜனா­தி­ப­திக்­கான பாது­காப்புத் திட்­டங்­களை இலங்­கையும் கூட முழு­மை­யாக அறிந்­தி­ருக்­காது என்­பதில் சந்­தே­க­மில்லை. முக்­கி­ய­மான தலை­வர்­க­ளுக்கு வெளி­நா­டு­களில், வெளியில் தெரி­யாத பாது­காப்பு முன்­னேற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வது வழக்­கமே.

எனினும், கொழும்புத் துறை­மு­கத்தில் சீன நீர்­மூழ்கி தரித்து நின்ற விவ­காரம் அதற்கு அப்­பாற்­பட்­ட­தாக பார்க்­கப்­ப­டு­கி­றது. சில மாதங்­க­ளுக்கு முன்னர், 500 மில்­லியன் டொலர் செலவில் கொழும் புத் துறை­மு­கத்தில் சீனா கட்டிக் கொடுத்த கொள்­கலன் இறங்­கு­துறை, சீனப் போர்க்­கப்­பல்கள் தரித்­தி­ருப்­ப­தற்கு வசதி­யாகி விட்­டது.

இந்த கொள்­கலன் இறங்­கு­து­றையின் 85சத வீத உரிமை சீனா­வுக்கே உள்­ளது, எஞ்­சிய 15 சத வீதம் மட்­டுமே இலங்­கைக்குச் சொந்தம்.

எனவே இந்த இறங்­கு­து­றையில் சீனப் போர்க்­கப்­பல்­களால் எந்தச் சிக்­க­லு­மின்றி, தரித்து நிற்க முடியும். இங்­கு­மட்­டு­மல்ல, ஹம்­பாந்­தோட்­டை­யிலும் இதே கதிதான்.

hambantota_port.jpgஹம்­பாந்­தோட்டைத் துறை­மு­கம்

ஹம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தில் சீனாவின் எக்சிம் வங்­கியின் 808 மில்­லியன் டொலர் கட­னு­த­வியில் இரண்­டா­வது கட்ட கொள்­கலன் முனையம் புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த திட்­டத்தில், ஏழு இறங்­கு­துறை மேடைகள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. இவற்றில், நான்கு இறங்­கு­துறை மேடைகள் 35 ஆண்­டு­க­ளுக்கு சீனாவின் வசமே இருக்கப் போகி­றது.

இதன் வரு­மா­னத்தில், 53 சத வீதம், சீனா­வுக்கும், 47 சத வீதம் இலங்­கைக்கும் பகி­ரப்­படும். சீன ஜனா­தி­ப­தியின் வரு­கையின் போது செய்து கொள்­ளப்­பட்ட உடன்­பாடு இது.

கொழும்பில் அமைக்­கப்­ப­ட­வுள்ள துறை­முக நக­ரத்­திலும் கூட 20 ஹெக்­ரெயர் நிலம் முற்­றிலும் சீனா­வுக்கே சொந்­த­மாகப் போகி­றது. மேலும், 88 ஹெக்ரெயர் நிலம் 99 வருட குத்­த­கைக்கு சீனா­வுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இவை­யெல்­லாமே, சீனாவின் பாது­காப்பு நலன்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு வச­தி­யான விட­யங்கள்.

ஹம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தை சீனா அமைத்த போது, அதில் எந்தப் பாது­காப்பு நலனும் கிடை­யாது என்றும், முற்­றிலும் வர்த்­தக நோக்கம் கொண்டது என்றும் சீனாவும் இலங்கை அரசும் கூறின.

அது­போ­லவே, கொழும்பு சர்­வ­தேச கொள்­கலன் முனையக் கட்­டு­மா­னத்தின் போதும் கூறப்­பட்­டது. ஆனால், கொழும்புத் துறை­முக கொள்­கலன் முனையத்தில், சீனப் போர்க்­கப்­பல்கள் வந்து தரித்து நின்று விட்டுச் சென்ற விவ­கா­ரத்தில் இரு­நா­டு­க­ளுமே வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் நடந்து கொள்ளவில்லை.

அதா­வது, இதில் எந்த ஒளி­வு­ம­றைவும் இல்­லை­யென்றால், பகி­ரங்­க­மா­கவே இரு நாட்டு அர­சாங்­கங்­க­ளி­னாலும் கூறி­யி­ருக்க முடியும்.

இந்த விவ­காரம் சர்ச்­சை­யாக எழுந்த பின்னர், தான் சீனா வாய் திறந்­தது.

அதுவும், கடந்த 25ஆம் திகதி பெய்­ஜிங்கில் நடந்த செய்­தி­யாளர் சந்­திப்பில், சீனாவின் தேசிய பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் மூத்த கேர்ணல். ஜெங்யன்செங்­கிடம், செய்­தி­யாளர் ஒருவர் கேள்வி எழுப்­பிய பின்­னரே, சீன நீர் மூழ்கி கொழும்புத் துறை­முகம் சென்­றது என்­பதை சீனா ஒப்­புக்­கொண்­டது.

ஆனால், இலங்கை இன்­னமும் இதனை ஒப்புக் கொள்­ள­வில்லை.

சீன ஜனா­தி­பதி கொழும்பு வரு­வ­தற்கு மூன்று நாட்கள் முன்­ன­தா­கவே கடந்த 7ஆம் திகதி கொழும்பு சர்­வ­தேச கொள்­கலன் முனை­யத்­துக்கு வந்து சேர்ந்து விட்ட, சீன கடற்­ப­டையின், 861ஆம் இலக்க போர்க்­கப்­பலும், 329ஆவது இலக்க நீர்­மூழ்­கியும், கடந்த 13ஆம் திக­தியே இங்­கி­ருந்து புறப்­பட்டுச் சென்­றன.

சீன ஜனா­தி­ப­தியின் பய­ணத்­துடன் இவற்றின் கொழும்­புக்­கான பயணம் முடிந்து விடப் போவ­தில்லை.

இந்த சீனப் போர்க்­கப்­பல்கள் மீண்டும் வரும் ஒக்­ரோபர் மாதமும், நவம்பர் மாதமும் கொழும்பு வர­வுள்­ள­தா­கவும், அதற்கு ஏற்­க­னவே ஒப்­புதல் அளிக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் கூட தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

ssn405.jpg

கொழும்­புக்கு வந்­தது, சீனக் கடற்­ப­டையின் சாங்செங்-2 (Changzheng 2), என்ற 091 ரக ஹன் வகை அணு­சக்தி நீர் மூழ்­கியே (Type 091 Han- class nuclear -powered submarine) என்று இணை­யத்­தளம் ஒன்று படத்­துடன் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

சீனக் கடற்­ப­டையின் வட­கடல் கப்பல் பிரிவைச் சேர்ந்த சாங்செங்-2 நீர்­மூழ்கி C-801 ரகத்தைச் சேர்ந்த கப்­பல்­க­ளுக்கு எதி­ரான ஏவு­கணை தாங்­கி­யது என்பதும், 80 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால், இந்த நீர்­மூழ்கி சீனக் கடற்­ப­டையால் அண்­மைக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று சீன செய்தி நிறு­வனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. உண்­மையில் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்­தது, சொங் (song) வகையைச் சேர்ந்த 039 வகையைச் சேர்ந்த மர­புசார் நீர்­மூழ்­கியே என்றும் அந்தச் செய்தி கூறு­கி­றது.

இத­னுடன் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்த போர்க்­கப்பல், வடக்கு கப்­பல் ­ப­டை­யி­லுள்ள நீர்­மூழ்கி மீட்புக் கப்­ப­லான சங்­சிங்­டாவோ (Changxingdao) தான் என்றும் அந்த தகவல் கூறு­கி­றது.

அது­மட்­டு­மன்றி, இந்­தியப் பெருங்­க­டலில் உள்ள நாடு ஒன்­றுக்கு, சீன நீர்­மூழ்கி ஒன்று வெளிப்­ப­டை­யான பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளதும் இதுவே முதல் முறை­யாகும் என்­கி­றது, வெளி­நாட்டில் இருந்து சீனர்­களால் இயக்­கப்­படும் டோவெய் நியூஸ் என்ற இணை­யத்­தளம்.

song_class_l2.jpg(Song” class)

கொழும்­புக்கு வந்த நீர்­மூழ்­கியின் முழுப் பெயர் பெருஞ்­சுவர் இல.329 (Great Wall No.329) ஆகும். இவை நேட்டோ நாடு­களால், சொங் வகை (Song” class) என்று அழைக்­கப்­ப­டு­கின்­றன. சீனாவின் இரண்­டாந்­த­லை­முறை மர­புசார் நீர் மூழ்­கி­யான இவை, சீனா­வினால் சொந்­த­மாக வடி­வ­மைத்துக் கட்­டப்­பட்­டது.

இந்த நீர்­மூழ்கி 74.90 மீற்றர் நீளத்­தையும், டீசல் இலத்­தி­ர­னியல் இயந்­தி­ரத்­தையும். 60 கடற்­ப­டை­யினர் இதில் பணி­யாற்­று­கின்­றனர்.

கிலோ வகையை (Kilo- class) சேர்ந்த 039ஏ (type- 039A) வகை மற்றும் 039பி வகை (type- 039B) மர­புசார் நீர்­மூழ்­கி­களை அண்­மைய ஆண்­டு­களில் சீனக் கடற்­படை, பெற்­றுள்ள போதிலும், 039 வகை நீர் மூழ்­கி­களே இன்­னமும், சீன நீர்­மூழ்கிப் படையின் முக்­கி­ய­மான அங்­க­மாக இருந்து வரு­கி­றது.

இது தெற்­கா­சி­யா வில் ஆயுதப் போட்­டியை அதி­க­ரிப்­ப­தற்­கான சீனாவின் முயற்சி என்­பதில் சந்­தே­க­மில்லை.

அண்­மையில் இந்­தி­யா­வுக்கு பயணம் மேற்­கொண்டு விட்டுத் திரும்­பிய சீன அதிபர் ஷி ஜின்பிங், பிராந்­தியப் போரை எதிர்­கொள்ள சீனப்­ப­டை­யினர் தயாராக இருக்க வேண்டும் என்று எச்­ச ரிக்­கையை விடுத்­தி­ருக்­கிறார்.

அதற்கு முன்னர் தான், சீனாவின் நீர்­மூழ்கிக் கப்பல் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்­தது. இதன்­மூலம், இலங்­கையில் சீன ஆதிக்கம் உறுதிப்படுத்தப்­பட்டு விட்­ட­தாக இந்­தியா கவலை கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இலங்­கையில் மட்­டு­மன்றி, பங்­க­ளா­தே­ஷையும் மாலை­தீ­வையும் கூட, வளைத்துப் போட்­டுள்­ளது சீனா.

பங்­க­ளா­தேஷில் சிட்­டகொங் துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்து அதனைத் தன் கைக்குள் போடும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ள சீனா, எல்லை மோதலைக் கொண்­டி­ராத பங்­க­ளா­தே­ஷுக்கு சொங் வகையைச் சேர்ந்த நான்கு நீர்­மூழ்­கி­களை வழங்கப் போகி­றது.

சீனா நீர்­மூழ்­கி­களின் பலத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்­கி­றது. சீனா­விடம் 8 அணு­சக்தி தாக்­குதல் நீர்­மூழ்­கிகள், 51 மர­புசார் தாக்­குதல் நீர்­மூழ்­கிகள். 6 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவு­க­ணை­களைக் கொண்ட அணு­சக்தி நீர்­மூழ்­கிகள் இருக்­கின்­றன.

இந்­தி­யா­வி­டமோ, ஒரே­யொரு அணு­சக்தி நீர்­மூழ்கி உள்­ளிட்ட 14 நீர்­மூழ்­கிகள் தான் இருக்­கின்­றன. எனவே, இந்­தியா தனது நீண்ட கடற்­ப­கு­தியைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்கு, ரஷ்­யா­விடம் இருந்து நீர்­மூழ்­கி­களை அவ­ச­ர­மாக பெறும் முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

ஆனால், இது தாம­த­மான முடி­வா­கவே தெரி­கி­றது. ஏனென்றால், இதற்கு முன்னர், சீன நீர்­மூழ்­கிகள் இந்­தியப் பெருங்­க­டலில் வெளிப்­ப­டை­யாக நட­மா­ட­வில்லை. இந்­தி­யா­வுக்கு அருகே சீன நீர்­மூழ்­கி­களின் நட­மாட்டம் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தா­கவும், இலங்­கையும் அதற்கு ஒத்­து­ழைப்­ப­தா­கவும் முன்னர் இந்­தியா குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.

இப்­போது நிலைமை தலை­கீ­ழாக மாறி­யி­ருக்­கி­றது. சீன நீர்­மூழ்­கிகள் அதி­கா­ர­பூர்­வ­ம­ா­கவே இந்­தியப் பெருங்­க­டலில் மட்­டு­மன்றி, இலங்­கை­யிலும் சஞ்­சாரம் செய்யத் துவங்­கி­யுள்­ளன. இது இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் ஆதிக்க விரி­வாக்கம் என்ற குற்­றச்­சாட்டை சீனாவின் தேசிய பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் மூத்த கேணல் ஜெங் யன்செங் நிரா­க­ரித்­தி­ருக்­கிறார்.

சீன நீர்­மூழ்கி, கொழும்பு சென்­றது உண்மை தான், அது ஏடன் வளைகுடா வில் சோமாலியா அருகே, கடற் கொ ள்ளையர்களிடம் இருந்து கப்பல்களு க்கு பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட் டுள்ளது. விநியோகத் தேவைக்காக கொழும்பு சென்றது.

இவ்வாறான தேவைக்காக அருகி லுள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்வது வழக்கமே என்று அவர் நியா யப்படுத்தினார். சீன நிர்மூழ்கிகள், விநியோகத் தேவை க்காகவே கொழும்பு வந்தது உண்மை யென்றால், ஏன் அதை மறைக்க வேண்டும்?

ஏனைய நாட்டுப் போர்க்கப்பல்கள் கொழும்பு வரும்போதெல்லாம், பெரும் வரவேற்பு அளிக்கப்படுவது போலவே, வெளிப்படையான வரவேற்பை அளித் திருக்கலாம். அது தான் வெளிப்படை யான அணுகுமுறை. ஆனால், சீனா தனது நோக்கத்தை மறைப்பதற்கு சோமாலிய கடற்கொள்ளையர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது இந்தி யாவுக்கு எழுந்துள்ள மிகப் பெரிய பாது காப்புச் சவால்.

மோடி அரசாங்கம் ஒருபுறத்தில் சீனா வுடன் கைகுலுக்கிக் கொண்டாலும், இந்தியாவை சுற்றிவளைப்பதில் சீனா குறியோடு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

 

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.