Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுக்காக நாரிமன் வாதாடியது தெளிவான விதிமீறல்: முன்னாள் நீதிபதி சந்துரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி எஸ் நாரிமன் ஆஜராகி வாதாடினார். அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

அதேசமயம், பாலி எஸ் நாரிமன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் ஆஜரானது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காரணம் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு உள்பட ஜெயலலிதாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளை எதிர்த்து ஜெயலலிதா முன்னர் வழக்கு தொடுத்தபோது, இதே நாரிமன், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பாகவும், திமுக சார்பாகவும் ஜெயலலிதாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திலும், இந்திய உச்சநீதிமன்றத்திலும் வாதாடியிருப்பதாக கூறும் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இப்படி கடந்தகாலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர், அதே வழக்கு தொடர்பான இந்த முன் ஜாமீன் கோரும் வழக்கில் ஜெயலலிதாவின் சார்பில் வாதாடுவது வழக்கறிஞர்களுக்கான தார்மீக நெறிமுறைகளை மீறும் செயல் என்று சண்முகசுந்தரம் விமர்சித்திருந்தார்.

 

சண்முகசுந்தரம் முன்வைக்கும் விமர்சனம் சரியே என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே சந்துரு. இதில் நாரிமன் வெறும் தார்மீக நெறிமுறைகளை மட்டும் மீறவில்லை; மாறாக வழக்கறிஞர்களுக்கான இந்திய பார் கவுன்சிலின் நடத்தை விதிமுறைகளையும் தெளிவாக மீறியிருப்பதாக கூறும் நீதிபதி சந்துரு, இதற்காக நாரிமன் மீது டில்லி பார் கவுன்ஸிலும், இந்திய பார் கவுன்ஸிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

 

அத்துடன், பாலி எஸ் நாரிமனின் மகன் இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சூழலில் நாரிமன் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கறிஞராக பணிபுரிவதே தவறு என்கிறார் நீதிபதி சந்துரு. இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்கள் யாரும் அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதிநீதிமன்றங்களில் பணிபுரியக்கூடாது என்று இதே இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி, வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார் நீதிபதி சந்துரு.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களின் உறவினர்களில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் அந்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கூட அப்படியே பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, இது தொடர்பில் இந்திய பார் கவுன்ஸில் வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் ஒரு சிறு திருத்தம் செய்வது இதை மேலும் வலுப்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2014/10/141017_chandru

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் ஜாமீன் விசாரணை, இன்று.
அவருக்கு, ஜாமீன் கிடைத்ததா.... இல்லையா?
செய்தி நீளமாக உள்ளதால், வாசிக்க பஞ்ச்சியாய் இருக்கு. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

 

என்று சொல்லியிருக்கிறாங்க... பாஸ்

 

  • கருத்துக்கள உறவுகள்

அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

 

என்று சொல்லியிருக்கிறாங்க... பாஸ்

 

அப்போ... அவர்கள், வெளியில் வந்து விட்டார்கள் என்று...

அர்த்தம் கொள்ளலாமா? நிதர்சன்.

அப்படி என்றால்... இன்று.. தமிழ்நாட்டில் பெரிய கொண்டாட்டமாக இருந்திருக்குமே......

  • கருத்துக்கள உறவுகள்

உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி அறிக்கை வெளியிட்டார் ஜெ.! அதிமுகவினர் அமைதி காக்க வேண்டுகோள்!
----

உச்சநீதிமன்றத்தில் உறுதி..

உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது இன்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது பாஜகவின் சுப்பிரமணியசாமி, தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். ஆனால் ஜெயலலிதா அதைத் தடுக்கும் வகையில் வேண்டுகோள் வைக்கவில்லை என்றார்.

அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி இருந்த பாலி நாரிமன், தமது கட்சியினரை அமைதி காக்குமாறு ஜெயலலிதா வேண்டுகோள் விடுப்பார்.. அரசியல் தார்மீக நெறிகளை அவர் கடைபிடிப்பார் என்று உறுதியளித்திருந்தார்.

உறுதியளித்தபடி ஜெ. அறிக்கை

இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள், ஆதரவாளர்கள், அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்து ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:

ஒரு தலைவனைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறும் போது, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார். பேரறிஞர் அண்ணா வழியில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் அவர்களுடைய வழியில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.

எனது வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் விவரம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

என் மீதுள்ள பாசத்தின் காரணமாகவும் பற்றின் காரணமாகவும் அன்பின் காரணமாகவும் நீதிமன்றத் தீர்ப்பு குறித்தோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்தோ நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குறித்தோ யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும்

நீதித்துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் யார் மீதும் எந்தவிதக் குற்றச்சாட்டையும் சுமத்த வேண்டாம் என்றும்

யாரும் குறை கூற இடமளிக்காத வகையில் அமைதி காத்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கினை எப்பொழுதும் போல செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும்

எனது அன்பார்ந்த தமிழக மக்களையும் எனது ஆதரவாளர்களையும் என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீதிமன்றத்தில் நான் செய்துள்ள மேல்முறையீட்டில் எனக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.