Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபையின் செயற்திறனின்மை தொடர்பில் அரசாங்கம் அதிருப்தியுடனேயே உள்ளது

Featured Replies

வட மாகாண சபையில் ஆட்சி செய்கின்றவர்கள் புலம்பெயர் மக்களின் தேவைக்கு ஏற்பவே செயற்பட்டுவருகின்றனர். அவர்கள் வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதைவிடுத்து புலம் பெயர் மக்களின் தேவையை நிறைவேற்றிவருகின்றனர். வட மாகாண சபையின் செயற்திறனின்மை தொடர்பில் அரசாங்கம் அதிருப்தியுடனேயே உள்ளது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

Untitled-1gggggggggggg.jpg

வட மாகாண சபைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பங்கு இதுவரை செலவிடப்படாமல் உள்ளது. வட மாகாண சபையை நிர்வகிக்கின்றவர்களுக்கு மக்களுக்கு சேவையாற்றத் தெரியவில்லை. அல்லது சேவையாற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. வட மாகாண சபையின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக அவர்கள் வேறு எதனையோ செய்துகொண்டிருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று ஆளும் கூட்டணியினால் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதாவது மாகாண சபையின் ஊடாக மக்களுக்கு அதிக சேவையை வழங்க யதார்த்தபூர்வமான யோசனைகளுடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி வரவு செலவுத்திட்டத்தின்போது ஏன் அழைப்பு விடுத்தார் என்றே ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பினர்.

இந்நிலையில் அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது,

வட மாகாண சபையை நிர்வகிக்கின்றவர்களுக்கு வடக்கு மக்களுக்கு சேவையாற்றும் எண்ணம் இல்லை. மாறாக அவர்கள் வடக்கு மக்களுக்கு சேவை செய்வதைவிடுத்து புலம் பெயர் மக்களின் தேவையை நிறைவேற்றிவருகின்றனர். இதனால் வட மாகாண சபை செயற்திறனற்றுப் காணப்படுகின்றது.

வட மாகாண சபைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பங்கு இதுவரை செலவிடப்படாமல் உள்ளது. இஙகு ஒரு விடயம் நன்றாக தெரிகின்றது. அதாவது வட மாகாண சபையை நிர்வகிக்கின்றவர்களுக்கு மக்களுக்கு சேவையாற்றத் தெரியவில்லை. அல்லது சேவையாற்றும் எண்ணம் இல்லை. வட மாகாண சபையின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதிலாக அவர்கள் வேறு எதனையோ செய்துகொண்டிருககின்றனர்

இந்த விடயத்தில் மத்திய அரசாங்கம் திருப்தியற்ற நிலையிலேயே உள்ளது. எனினும் வட மாகாண சபை மக்களுக்கு சேவையாற்றாவிடினும் மத்திய அரசாங்கம் வடக்கு மக்களுக்கு சேவையாற்றிவருகின்றது. குறிப்பாக வெளிநாட்டு கடனைப் பெற்று மத்திய அரசாங்கம் வடக்கு மக்களுக்காக ரயில் பாதையை நிர்மாணித்தது. இந்த வரவு செலவுத்திட்டத்திலும் மாகாண சபைகளுக்கு பல வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வட மாகாண சபையும் உள்ளடங்குகின்றது.

கேள்வி: வரவு செலவுத்திட்ட உரையின்போது ஜனாதிபதி கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தாரே?

பதில்: பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறே ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

கேள்வி: தேநீர் விருந்தின்போது ஜனாதிபதி கூட்டமைப்பை சந்தித்தமை?

பதில்: ஆம். வரவு செலவுத்திட்ட உரையின் பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்தில் ஜனாதிபதி கூட்டமைப்பின் ஆர். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

கேள்வி: ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவைப் பெற போகின்றீர்களா?

பதில்: அதற்காக சந்திப்பு நடைபெறவில்லை. ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுமாறு ஜனாதிபதி கோரினார்.

கேள்வி: வட மாகாண சபையின் இயக்கம் குறித்து அரசாங்கம் திருப்தியடையவில்லையா?

பதில்: திருப்தியடையவில்லை. அவர்கள் புலம் பெயர் மக்களின் தேவையையே வட மாகாண சபையில் நிறைவேற்றிவருகின்றனர். ஏன் இவ்வாறு செய்கின்றனர் என்று தெரியவில்லை. முதலில் வட மாகாண சபைக்காக வழங்கப்பட்ட நிதியையே முழுமையாக செலவிடவில்லை. முதலில் அந்த நிதியை செலவிட்டுவிட்டு மேலதிக நிதியை கேட்கவேண்டும். ஆனால் வட மாகாண சபை அதனை செய்யவில்லை.

24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் வடக்கு சென்றது. அது மக்களுக்கான சேவையை வழங்கும் செயற்பாடு. அவ்வாறு மக்களுக்கு சேவையாற்றும் ஒரு முக்கிய நிகழ்வுக்கு வடக்கு முதலமைச்சரும் ஏனையவர்களும் வரவில்லை என்றால் அதன்மூலம் நிலைமையை புரிந்துகொள்ள முடியும். ஆனால் வடக்கு மக்கள் வட மாகாண சபையின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை. வடக்கு மக்கள் யாழ்தேவி ரயிலை பார்வையிட வந்தனர். அவர்கள் முண்டியடித்துக்கொண்டு ரயிலை பார்த்தனர். எனவே மக்கள் வட மாகாண சபை போலன்றி வேறு நிலைப்பாட்டில் இருக்கின்றமை அவர்களின் முகங்களை பார்க்கும்போது தெரிகின்றது.

கேள்வி: வட மாகாண சபை உரிய முறையில் செயற்பட மத்திய அரசாங்கம் போதுமான அதிகாரங்களை வழங்கியுள்ளதா?

பதில்: தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை. அவற்றைக்கொண்டே மாகாணத்தை அபிவிருத்தி செய்யலாம். குறிப்பாக 1993 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின்போது நாங்கள் மேல் மாகாணத்தை கைப்பற்றினோம். நான் முதலமைச்சராகவும் இருந்துள்ளேன். அன்று எங்களினால் மக்களுக்கு சேவையாற்ற முடியுமாயின் ஏன் வட மாகாண சபையினால் தற்போது முடியாது.

 

http://virakesari.lk/articles/2014/10/27/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.