Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சைப் `பட்டி' கும்பலால் அம்பாறையில் பதற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் மீண்டும் கட்டுமீறிய கடத்தல் பச்சைப் `பட்டி' கும்பலால் அம்பாறையில் பதற்றம்! -(தேசியன்)

கிழக்கில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடாவடித்தனங்கள் கடந்த வாரத்தில் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளமையால் மக்கள் செய்வதறியாது பீதியில் உறைந்து போயுள்ளனர். அரச படைகளும் அவற்றின் `எடுபிடிப்படை'களும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டு வரும் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் போன்றவற்றால் தமது பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் பெற்றோரும் பெற்றோருக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் பிள்ளைகளும் பதற்றம் நிறைந்த வாழ்க்கையை தொடர்கின்றனர்.

வீதியில் செல்லும் போது சுட்டுக்கொலை, கடத்தல், வீட்டுக்குள் சென்று இழுத்துவந்து சுட்டுக்கொலை, கடத்திச் சென்று அடித்துக் கொலை, கோயில் திருவிழாவுக்குள் புகுந்து சுட்டுக் கொலை, வைத்திய சாலைக்குள் வைத்து சுட்டுக் கொலையென அப்பாவி மக்களை தொடர்ந்து வரும் பயங்கரம், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கலைத்துப் பிடித்து கடத்தல், பாடசாலையில் கற்பித்துக் கொண்டிருக்கும் ஆசிரியரை பாடசாலைக்கு முன்பாலிருக்கும் `காவலரணிலிருந்து' சுட்டு படுகொலை செய்தல் என்றளவுக்கு காடைத்தனம் கடந்த வாரத்தில் கட்டுமீறிவிட்டது.

கடந்த புதன் கிழமை காலை மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் வகுப்பறையில் கற்பித்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசு சிவஞான செல்வன் (வயது 30) என்ற ஆசிரியர் மாணவர்களின் கண்முன்னே சுடப்பட்டார். குருதி பாய உணர்விழந்து வீழ்ந்த ஆசிரியர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அதீத இரத்தப் போக்கால் உயிரிழந்தார்.

மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான அம்பலாந்துறை நாகமுனைப் பகுதியைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு நகர்ப்பகுதியிலுள்ள நல்லையா வீதியில் தங்கியிருந்து பாடசாலைக்கு சென்று வந்திருந்தார். சம்பவதினத்தன்று வழமை போல் பாடசாலைக்கு சென்ற சிவஞானச்செல்வன் ஆசிரியர், பிள்ளைகளுக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்தார். குறித்த வகுப்புக்கு கற்பிப்பதற்கு முன்னர் பாடசாலைக்கு முற்புறமாகவுள்ள காவலரணிலுள்ள படையினர் ஆசிரியரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணைகள் முடிந்து பாடசாலைக்குள் வந்து பாடமெடுத்துக் கொண்டிருந்த போதே சிவஞானச் செல்வன் ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டது யார்...? பாடசாலைக்கு முன் `காவலரண்' அமைத்துள்ள படையினரே தமது ஆசிரியரை சுட்டுக் கொன்றதாக கூறிய மாணவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். பாடசாலைக்குள் வந்த படையினர் மாணவர்களை கண்டபடி தாக்கினர். பாடசாலைக்கு அருகிலிருந்த தச்சுத் தொழிற் கூடமொன்றிலிருந்தவர்கள் வீதியால் சென்றவர்களென ஆண், பெண் வேறுபாடின்றி படைகள் தாக்கி அட்டகாசம் செய்தன. ஆசிரியரை படைகள் ஏன் கொன்றது என்பது தெரியவில்லை.

தமது கண்முன்னே தமது ஆசிரியர் சுட்டுக் கொல்லப்படுவதை கண்ட மாணவர்கள் அச்சத்தில் நடுநடுங்கிப் போயுள்ளனர். காவலரணிலிருந்து கொண்டு பாடசாலைக்குள் படிப்பித்துக் கொண்டிருக்கும் ஆசிரியரை சுட்டுக் கொல்லும் அளவுக்கு அரச படைகள் நடந்து கொள்கின்றன ரென்றால் எமது நிலை என்ன..." என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

இது இவ்வாறிருக்க, கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 4 மணியளவில் அம்பாறை-திருக்கோவில் - தம்பட்டை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் சுமார் 35 பேரை, வெள்ளை வான்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கும்பல் கலைத்துப் பிடித்து குண்டுக் கட்டாக, தூக்கி வாகனங்களுக்குள் போட்டு கொண்டு சென்றுள்ளன.

வெள்ளைவான் வருகிறது என்பதை அறிந்த சிறுவர்கள் சிதறியோடினர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 50 சிறுவர்களில் 35 பேரை மைதானத்தில் வைத்த விரட்டிப் பிடித்த பச்சை `பட்டி'அணிந்தி ருந்த குழு அக்கரைப்பற்று-திருக்கோவில் வீதியில் சின்னமுகத்துவாரம் (40 ஆம் கட்டை) பகுதியில் விசேட அதிரடிப்படைகளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமது முகாமுக்கு கொண்டு

சென்றன. தமது பிள்ளைகளில் `பிள்ளை பிடிக்கும்பல்' கை வைத்து விட்டதை அறிந்த பெற்றோரும் உறவினரும் பதறியடித்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தனர். பின்னர் சின்னமுகத்துவாரத்துக்கே சென்று தமது பிள்ளைகளை தருமாறு மன்றாடினார்கள். கடத்தப்பட்டவர்களில் 17 பேரை கும்பல் விடுவித்ததாக கூறப்பட்ட போதும் இருவர் மாத்திரமே விடுவிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது. இருவரில் ஒருவர் பறங்கியினத்தைச் சேர்ந்தவரெனவும் அவரை பாதிரி யார் ஒருவரே விடுவிக்க முயற்சித்ததாகவும் தெரிய வருகின்றது. ஏனைய சிறுவர்கள் இன்னமும் பச்சைப் `பட்டி' கும்பலிடமே உள்ளனர். திங்கள் முதல் பெற்றோரும் மன்றாடியே வருகின்றனர்.

இந்த கடத்தல் தொடர்பாக அனைத்துத் தரப்பிடமும் முறையிட்ட போதும் எதுவித பயனுமில்லை. யுனிசெப் உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும் வாய் திறக்கவில்லை. தம்மையும் அரசு நாட்டை விட்டு துரத்திவிடுமோ என்ற அச்சம் `யுனிசெப்'பிடம் உள்ளதோ தெரியவில்லை.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி வெள்ளைவான் கும்பலால் கடத்தப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடாதிபதி பாலசிங்கம் சுகுமார் (வயது 50) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி விலகினாலேயே பீடாதிபதியை விடுவிப்போம் என்ற நிபந்தனையை கடத்தல் கும்பல் முன்வைத்தது. துணைவேந்தர் பதவி விலகியதன் பின்னர், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல் குறித்த சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்;

பீடாதிபதி கடத்தப்பட்டதில் பாதுகாப்பு படைகளுக்கோ அல்லது அதனுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களுக்கோ தொடர்புகள் உள்ளன. இக்கடத்தல் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணைகளை நடத்தவில்லை. இலங்கை தேசிய மனிதவுரிமை ஆணைக்குழு போன்ற அமைப்புகளிடம் கூட இது குறித்த விசாரணை அறிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் அரச படைகளதும் அவற்றுடன் செயற்படும் பச்சைப்பட்டி கும்பலினதும் அராஜகம் தொடர்ந்து கொண்டேயுள்ளது. வீட்டு வறுமையால் அன்றாடத் தொழிலுக்குச் செல்லும் உயர்தரம் கற்கும் பல மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது குடும்பங்கள் பரிதவித்துள்ளன.

மதுபோதையில் வரும் ஒட்டுக் குழு உறுப்பினர்கள், மக்களை தாக்குவதும் அவர்களது வாகனங்கள் செல்லிடத் தொலைபேசிகள் போன்றவற்றை பறித்துச் செல்வதும் அதிகரித்து வருகின்றன.

அண்மையில் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற சண்டையில் இந்த ஒட்டுப் படையினர் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர். கையில் பச்சைப் பட்டியுடன் இறந்து கிடந்த இவர்களை அரச படைகள் புலிகளென ஊடகங்களுக்கு கூறிவிட்டு அவசர அவசரமாக அடக்கம் செய்து விட்டன.

தென் தமிழர் தாயகமான கிழக்கு மாகாணத்தில் மக்கள் அரச படைகளாலும் இந்த பச்சைப் பட்டி கும்பலாலும் படும்பாடு சொல்லிமாளாதவை.

- தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.