Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தமிழர்கள் என்ன செய்யவேணடும்

Featured Replies

இந்திய தமிழர்கள் என்ன செய்யவேணடும் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.எங்களின

உங்கள் கடற்படைத் தளபதி அண்மையில் இலங்கைக் கடைப்படைக்கு ஒரு தொகை ஆயுதங்களை இந்தியா வழங்க அனுமதி அளித்திருப்பதாகக் கூறி உள்ளார். இது பற்றி உங்கள் கருத்தென்ன?

இதனைத் தடுப்பதற்கு இந்தியரான நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? தமிழ் நாட்டு மக்களும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் இந்தியர் இல்லையா? எம்மை அழித்தொழிக்க நீங்கள் ஏன் இலங்கைக் கடற்படைக்கு ஆயுதங்களை வழங்குகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா சென்ற தமிழர் அரசியல் குழுவையே தங்களை சந்தித்துப் பேசவே முன்னுரிமை கொடுக்காததுமல்லாமல் தங்கள் அரசியல் பொறாமை சாக்கடையில் இழுத்துப் பிரித்து இணைத்தளங்களில் பகிரங்கமாக பலவீனப் படுத்தியிருக்கிறார்கள், இந்த இந்திய இமயங்கள்! இவனுகளா தமிழ் பற்றுள்ளவர்கள். தற்போது நடக்கும் தேர்தல் வன்முறைகளையே தடுக்க முடியாத இந்த இவனுகளா? நம்பாதீர்கள்!

இந்த இந்தியப் படையே இத்தனை நாட்களாக சும்மாவா இருந்தார்கள். மறைமுகமாக எத்தனை உதவிகளை சிங்கள அரசாங்கத்திற்கு செய்தவர்கள், செய்து கொண்டும் இருக்கிறார்கள்! இவர்கள் ஆயுத உதவி கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டல்ல் என்ன, சிங்களவன் போர் வெறி குறைந்தா போய்விடும்! இந்தியா எமக்கு திரும்ப திரும்ப முதுகில்தான் குத்தும். ஏனெனில் இந்தியா, தமிழ்நாடல்ல, தமிழன் நாடல்ல! இந்தியாவின் ஆளும் வர்க்கத்தில் அடியில் இருக்கும் ஒரு மாநிலம் தமிழ்நாடு!

அதனுடன் பதவி மோகம் பிடித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இருக்குமட்டும் தமிழன் கண்ணீர் வடிக்கவேண்டியதுதான். தமிழ்நாட்டு தொலைகாட்சிகளில் "உருட்டுக்கட்டை" "காவல்துறை வன்முறை" என்று தேர்தலுக்கே ஒரே ஒளிமயமாக இருக்கும் பொழுது எப்படியப்பா ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கப் போகிறானுங்க?

அய்யா பிச்சுமணி

சிறீலங்கா அரசின் பிரச்சாரங்களை மாத்திரம் இலங்கை செய்தியாக சொல்லுவதில் மாற்றங்கள் முதலில் தேவை.

இந்திய ஊடகங்கள் தமிழர் தரப்பு கருத்துக்கள் நிலைப்பாடுகளை உரியவர்களை மேற்கோள் செய்து தமிழீழத்தின் அவலங்களை அழிவுகளை இந்திய மக்களிற்கு சொல்லும் தார்மீக கடமையை செய்ய முயற்சிக்க வேண்டும்.

புலிகளின் பேச்சாளர்களை இல்லாவிட்டாலும் எத்தனையே தமிழர் தொண்டர் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் ஆரம்பிக்கலாம்.

அத்தோடு அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்ய விளங்கப்படுத்த ஊடகர்கள் கல்விமான்கள் மனிதஉரிமை ஆவலர்கள் கொள்கைவகுப்பாளர்கள் அவதானிகள் அரசியல்வாதிகள் பங்கு கொள்ளகூடிய நிரந்தர தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகள் தேவை. இவற்றில் உண்மையான ஈழத் தமிழ் பிரதிநிதிகள் (தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுபினர்கள், ஊடகர்கள், கல்விமான்கள்) போன்றோர் பங்குபற்ற சந்தர்ப்பங்கள் வேண்டும்.

களத்தில் செல்லாக்காசுகளான மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒட்டுக்குழுக்களையும் கைகூலிகளையும் ஜனநாயகம் பன்முகம் மாற்றுக்கருத்து என்று உபசாரம் பண்ணி இந்தியாவால் களத்தில் நிலமைகளை மாற்றமுடியாது ஈழத் தமிழருக்கு உதவ முடியாது. இது யதார்த்தத்தை உணராதவர்களால் அல்லது உணர்ந்தும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறவர்களின் பரிதாபகரமான நடத்தை. இதற்கு உயிர்களை விலையாக கொடுப்பவர்கள் ஈழத்தமிழர்கள்.

அடுத்து "புலிகள் வேறு மக்கள் வேறு" "புலிகளின் தற்போதைய தலமையில் மாற்றம் வேண்டும்" என்று கனவு காண்பவர்கள் விழித்து எழ வேண்டும் என்ற குரல்கள் இந்தியாவில் தெளிவாக நிதானமாக ஒலிக்க வேண்டும். இந்த யதார்த்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதை வெளியில் இருந்து அதுவும் ஈழத்தில் இருந்து திணிக்க முடியாது. இந்தியாவின் உள்ளே இருந்து பொறுப்புள்ள இந்தியர்களால் தான் தரமான அறிவுபூர்வமான ஆய்வுகள் விவாதங்கள் மூலம் செய்யமுடியும்.

இந்த அடிப்படை விடையங்களை முதலில் அமுல்படுத்தினால் அடுத்து ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் இலகுவில் தெளிவாகிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உவத்திரவம் செய்யாது இருந்தால் சாலவும் நன்று...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.