Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"போத்தல், பத்தரே, பரணயக்கடே"....'கோடீஸ்வரர்களுக்கு இல்லாத நிம்மதி எனக்கு இருக்கிறது.' -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(சிலாபம் திண்ணனூரான்)

 

'எல்லாத் தொழிலிலும் பொறாமையும் போட்டிகளும் உள்ளன. எனது தொழிலில் இவ்வாறான நிலை இல்லை. ஒரே வீதியில் பத்துக்கும் மேற்பட்டோர் வியாபாரத்திற்காக பயணிப்போம். எங்களுக்குள் ஒருவித பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மாட்டோம். இதுவே, எங்கள் வியாபாரத்தின் தர்மமாகும்' என்கிறார் பழைய பொருட்களை சேகரித்து விற்கும் எஸ். சந்திரசேகர். 

 

'எனக்கு 54 வயதான வயதாகிறது. கொழும்பு முகத்துவாரத்தில் வசிக்கிறேன். முதலில் கொழும்பு  புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெருவில் சுமை தொழிலாளியாக வேலை செய்தேன். மிகவும் கஷ்டமான தொழில் இது. சுமைகளுடன் மாடிப்படிகளின் ஏறி இறங்குவது மிகவும் சுலபமான காரியமல்ல. பார்ப்பவர்களுக்கு மிகவும் சுலபமாகத்தான் தெரியும். அத்தொழிலை செய்கையிலேயே அதன் முழுமையான வடிவமைப்புத் தெரியும் அத்தொழிலை எனது முப்பது வயதில் கைவிட்டேன்' என அவர்  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

116DSC05842.jpg

'தற்போது செய்யும் பழைய பொருட்கள் வியாபாரத்தை எனது நண்பர் மூலமாக பழகிக் கொண்டேன். மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டே உழைக்கின்றன். போத்தல், பத்திரிகைகள், புத்தகங்கள், கார்ட்போட், பழைய இரும்பு, பிளாஸ்டிக், அலுமினியம், பித்தளை, செம்பு என  அனைத்து பழைய பொருட்களையும் வீதி வீதியாக அலைந்து திரிந்து சேகரித்து போத்தல் கடைக்கு மொத்தமாக விற்பேன்.

 
நான் பயன்படுத்தும்  தள்ளு வண்டிக் கூட பழைய பொருட்களை கொள்முதல் செய்யும் போத்தல் கடையால் வழங்கப்பட்டதாகும். இதற்கு நாட்கூலியாக ஐம்பது ரூபாய் வழங்க வேண்டும். முகத்துவாரம் முதல் மட்டக்குளி சமிட்புர வரை தினமும் வண்டியை  தள்ளிக் கொண்டு போத்தல், பேப்பர் என கூவிக் கொண்டு சுமார் பத்து மைல்கள் தூரம் வரை நடப்பேன். 

 

போத்தல், பத்தரே, பரணயக்கடே என கூவல் சத்தமே எங்களை அடையாளம் காட்டும் சமிக்ஞைகளாகும். இந்த கூவல் சத்தம் கேட்டு வீட்டிலிருப்போர் வீதிக்கு வந்து எங்களை அழைப்பார்கள். அதிகமான வீடுகளின் பெண்களே எங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஆண்களிடம் எதையும் கூறி சிறிது விலை குறைத்து பொருட்களை வாங்கிவிடலாம். ஆனால், பெண்களை ஏமாற்றவும் இயலாது. அவர்கள் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். பேரம் பேசி பொருட்களை வழங்குவதில் பெண்கள் கெட்டிக்காரர்கள். பெண்களே வீடுகளின் தேங்கும் பழைய பொருட்களை சேமித்து வைத்து எனக்கு வழங்குவார்கள்' எனத் தெரிவித்தார் சந்திரசேகர். 

116DSC05846.jpg

திருட்டுப் பொருட்களை வாங்குவீர்களா எனக் கேட்டேபோது, 'ஐயோ, என்னதான் திருட்டுப் பொருட்களின் பெரும் ஆதாயம் கிடைத்தாலும் நான் வாங்குவதில்லை. எனக்கு கிடைத்ததும் இல்லை. இவைகள் தேவையில்லாத விடயம். எவ்வளவு தான் ஆதாயம் கிடைத்தாலும் திருட்டுப் பொருட்களை வாங்கவது பெரும் பாவமானச் செயலாகும். உழைப்பால் பெறப்படும் ஆதாயமே நிம்மதியைத் தரும். எந்தத் தொழிலிலும் நேர்மை அவசியம். என்னிடம் நேர்மையே உழைப்பாக இருப்பதால் எனக்கென சில வாடிக்கையாளர்களை வடிவமைத்துள்ளேன். இவ்வாடிக்கையாளர்களே என்னை வாழ வைக்கின்றார்கள்' என அவர் பதிலளித்தார்.

116DSC05941.jpg

'வீதிகளில் கருத்தையோடு செல்வதால் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவது எண்டா' எனக் கேட்டோம். 

 

'ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கின்றேன். வீதியில் வாகன நெறிசல் ஏற்படுகையில் வாகனத்தின் சாரதிகள் தகராறு செய்வார்கள். ரை, கோட், சூட் உடுத்தியிருக்கும் கனவான்களும் தகராறு செய்வார்கள். அவர்களுக்கு எங்களின் உழைப்பின் கஷ்டமும் பெறுமதியும் தெரியாது. அவர்களால் வெயிலிலும் மழையிலும் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு குடை இல்லாது நடக்க இயலாது. வெயிலிலும் மழையிலும் வாழ நான் பழக்கப்பட்டுவிட்டேன். மழை பெய்தால் எங்கள் வயிற்றுக்கு அடிவிழும். இவைகளையெல்லாம் வாகனத்தில் செல்வோர் அறிந்துக் கொள்ள வாய்ப்பில்லை.

 

வீதியில் செல்லும்போது, பல தடவை பொலிஸார் விசாரித்துள்ளனர். எனது தொழிலைப் பற்றிய விபரத்தை தெரிவித்ததும் அனுப்பிவிடுவார்கள். பொலிஸாருக்கு நல்லனையும் தெரியும் கள்ளனையும் தெரியும். நான் வெயிலில் வியர்வையால் நனைந்தவாறு செல்லுகையில் பார்வையிடும் பல பொலிஸார் தங்களின் கவலைகளை தெரிவிப்பார்கள்.

116DSC05942.jpg

யுத்த காலத்தில் பெரும் கஷ்டப்பட்டேன். அக்காலத்தில் திடீர் சோதனைகள் இடம்பெற்றமையினால் பல இன்னல்களை அனுபவித்தேன். ஆனால், படையினரால்  எவ்வித இன்னலும் ஏற்படவில்லை. எனது வருமானமே குறைந்தது. படையினர் அன்று கருத்தையில் இருக்கும் பொருட்களை கிளறிப் பார்ப்பார்கள். அப்போது 'கவலைப்பட வேண்டாம். இது எங்களின்  கடமை' எனக்கூறி ஆறுதல் வார்த்தைகளையும் கூறுவார்கள். அப்போது எனக்குள் எழுந்த கவலை எங்கோ போய்விடும்' என்றார்.

 

'தராசில் நிறுத்து பொருட்களை வாங்குகிறீர்கள். உண்மையிலேயே உங்களின் தராசு உண்மையான எடையை காட்டுமா' எனக்கேட்டதும் அவருக்கு சற்று கோபம்  ஏற்பட்டதை முகம் காட்டியது. 

 

'மற்றவர்களின் தராசு  பற்றி எனக்குத் தெரியாது. எனது தராசு சரியான எடையைக் காட்டும். இந்த தராசு தான் என்னை வாழவைக்கின்றது. பொருட்களை வழங்குவர்களுக்கும் எனக்கும் மத்தியில் நீதிபதியாக இருக்கின்றது. எனது தராசு நம்பிக்கையானது. அது பொய் சொல்லாது. உண்மையைத்தான் சொல்லும்.  எடையை குறைத்து கொள்ளை அடிப்பது பெரும் பாவம்.  இறப்பின் பின்னர் என்னை குழியில் தான் விதைப்பார்கள். இதனால் எடையை சரியாக எனது தராசு காட்டும்' என உணர்ச்சிவசப்பட்டவராகக் கூறினார்.

 

'தற்போது வீடுகள் மறைந்து தொடர்மாடிகளாக மாறுகின்றன. இந்நிலையில் உங்களால் தொடர்மாடிகளில் தொழில்புரிய முடியுமா?'

 

'எனக்கென வாடிக்கையாளர்களை பாதுகாத்து வைத்துள்ளேன். தொடர்மாடி வீடுகளிலும் பழைய பொருட்களை கொள்முதல் செய்கின்றேன். இதற்கு எனக்கு இம்மாடிவீட்டு திட்டத்தின் பாதுகாவலர்கள் பெரும் உதவியை வழங்குகின்றனர். சில இடங்களில் மாறுவேடத்தில் திருடர்களும் நடமாடுவதால் பலரும். எங்கள் மீதும் சந்தேகம் கொள்கிறார்கள். இது மனித இயல்பு இதை எவராலும் தடுக்க இயலாது. இது காலம் வரை அதாவது 24 வருட இத்தொழில் அனுபவத்தில் எவ்வித பொலிஸ் விசாரணைக்கும் உள்வாங்கப்படவில்லை.' 

 

'இத்தொழிலில்  சந்தோஷமடைகிறீர்களா?'

116DSC05944.jpg

'பெரும் சந்தோசமடைகிறேன். நான் எவருக்கும் அடிமை இல்லை. செலவுப் போக 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை நாள் தோறும் கிடைக்கின்றது. எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை. இத்தொழிலின்  மூலமே எனது நான்கு பிள்ளைகளையும் படிக்க வைத்தேன். நிலம் வாங்கி, வீடு கட்டினேன். பெரிய கோடீஸ்வரர்களுக்கு இல்லாத நிம்மதி எனக்கு இருக்கிறது. நிம்மதியாக இரவில் தூக்கம் போகும். எனக்கு கடன் இல்லை. பணக்காரர்கள் கடன் பயத்தால் நித்திரையை இழந்துவிடுகின்றனர். ஆசை இல்லை. அடிமைத்தனம் இல்லாத தொழில் இது.

 

பறவைகளைப் போன்று சூரியன் உதித்ததும் வீட்டைவிட்டு வெளிவந்து சூரியன் 5 மணிக்கு மறையும் போது பறவைகள் கூடுகளுக்கு செல்வதுப் போன்று நான் உழைத்து முடித்து வீட்டுக்குச் சென்று விடுவேன். பெரியவர்த்தகர்கள் ஆசையால் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வர்த்தக நிலையத்தை திறந்து வைத்து இருப்பார்கள். 

 

இந்த உழைப்பால் எனது மகள்கள் உயர்கல்வி கற்று தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளனர். எனது உழைப்பு இறுதி வரை எனக்குத் தேவை. இறுதி மூச்சு வரை இத்தொழிலை கைவிடமாட்டேன். பத்து ரூபாவை நான் தேடினாலும் எனக்கு நிம்மதி இருக்கிறது' எனத் தெரிவித்தார் எஸ். சந்திரசேகர். உண்மையிலேயே அவரின் கடின உழைப்பு அவரை நிம்மதியாக வாழ வைக்கிறது.

 

(படங்கள் கே.பி.பி.புஷ்பராஜா) 

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=116&display=0#sthash.bHlimpxK.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் இந்த பழைய பேப்பர், போத்தில்,இரும்பு,செப்பு பொறுக்கின நம்மாள் ஏழு வருடங்களில் COBHAM ல் மூன்று மில்லியன் வீட்டில் ராஜவாட்டம் இருக்கிறார் சில பேருக்கு உதாரணபுருஷர். மனுசன் இப்பவும் விடியல்காலமை4.30 க்கு வேலையில் துடிச்சுக்கொண்டு நிற்பார் .

இதுதொழில்; நான்யாருக்கும் அடிமையுமில்லை,எனக்கு கடனும் கிடையாது, நான் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டியதுமில்லை.

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.