Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றோவின் தந்திரம்

Featured Replies

காலி தாக்குதலில் கடற்புலிகள் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது: அவுட்லுக்

வெள்ளிக்கிழமை 20 ஒக்ரொபர் 2006 19:36 ஈழம் ச.விமலராஜ

சிறிலங்காவின் காலி கடற்படைத்தளம் தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தங்களது வலிமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று இந்தியாவின் ஆங்கில வார ஏடான "அவுட்லுக்" தெரிவித்துள்ளது.

அவுட்லுக்கில் இந்திய றோ முன்னாள் அதிகாரியான பி. இராமன் எழுதியுள்ள கட்டுரை விவரம்:

தென் சிறிலங்காவின் காலி வர்த்தக துறைமுகத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்துக்குள் கடந்த ஒக்ரோபர் 18 ஆம் நாள் அதிகாலையில் வெற்றிகரமாக உள்நுழைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் 3 கடற்படை படகுகளை அழித்தமை முற்றிலும் சிறிலங்கா கடற்படைக்கு ஆச்சரியமளித்துள்ளது.

இத்தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டார். பொதுமக்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 26 பேர் படுகாயமடைந்தனர்.

மீனவர்களைப் போல் 7 படகுகளில் 15 கடற்புலிகள் கடற்படை தளம் மற்றும் துறைமுகப் பகுதியைச் சென்றடைந்தனர். 5 படகுகள் தளத்துக்குள் உள்நுழைந்தது கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்று படகுகள் வெடிமருந்துகளுடன் மூன்று கடற்படை கடலங்களை தகர்த்தது. மேலதிக சேதம் ஏற்படுத்தும் முன்னர் இரண்டு படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.

இரு படகுகளில் இருந்த மற்றவர்கள் துறைமுகத்தில் ஊடுருவி ரொக்கெட் புரொபெல்ட் கைக்குண்டுகள் மற்றும் சிறுரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்திவிட்டு அந்த ஆயுங்களை அங்கேயே விட்டுவிட்டு நகருக்குள் தப்பிச் சென்றனர். கடற்படைத் தளம் மீதான தாக்குதல் ஒரு தற்கொலைத் தாக்குதலாக இருந்தபோதும் துறைமுகத்தில் அப்படிச் சொல்ல முடியாது.

கடந்த ஓகஸ்ட் 14 ஆம் நாள் பாகிஸ்தானிலிருந்து சிறிலங்காவுக்கு கப்பல்களில் ஆயுதங்கள் வந்த போது பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் பசீர் வலி மொகமெட்டை கொலை செய்யும் புலிகளின் முயற்சி தோல்வியடைந்ததது. அதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தில் ஆயுதங்களை இறக்குவதை சிறிலங்கா இராணுவம் நிறுத்தியது.

பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் காலி துறைமுகத்துக்கு இறக்குவதற்காக திருப்பிவிடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இருந்த பாகிஸ்தானிலிருந்து வந்த ஆயுதக் கப்பல்களை விடுதலைப் புலிகள் தாக்கக்கூடும் என்பதால் காலிக்கு மாற்றப்பட்டது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில்

- வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் கடல் வலிமைக்கு பாரிய சேதமேற்படுத்திவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் நிலையில் கடற்புலிகளின் வலிமையை வெளிப்படுத்த வேண்டும்

- நத்தார் விடுமுறைக்காக சிறிலங்காவுக்கு வரக்கூடிய பயணிகளை அங்கு செல்ல வேண்டாம் என்று வெளிநாடுகள் கூற வேண்டும்.

காலி ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தளம்.

1997 ஆம் ஆண்டு காலி கடற்படைத் தளபதியை புலிகள் கொல்ல முயற்சித்தது வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் அங்கு எதுவித நடவடிக்கையையும் புலிகள் மேற்கொள்ளவில்லை.

சிங்கள பேரினவாத ஜே.வி.பி.யின் வலுவான பகுதி காலி. காலியில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து உள்ளுர் தமிழர்களின் கடைகள் சிங்களவர்களால் தாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து காவல்துறையினர் நிலைமையை கட்டுப்படுத்தினர்.

ஒக்ரோபர் 11 ஆம் நாள் முதல் தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஜெனீவாவில் ஒக்ரோபர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் பேச்சுக்களை மீளத் தொடங்க விருப்பம் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான விமானப் படைத் தாக்குதலை சிறிலங்கா அரசாங்கம் நீண்டகாலம் நடத்தி வரும்போது வடக்கு-கிழக்குக்கு அப்பால் சிறிலங்காவின் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்.

ஒக்ரோபர் 11 ஆம் நாள் வடபகுதியில் முகமாலையில் இராணுவத்துக்கு எதிராக வலிமையை வெளிப்படுத்திய பின்னர் காலியின் 18 ஆம் நாள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப் படை மற்றும் சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தானிய தூதுவருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தங்களது வலிமையை வெளிப்படுத்தக் கூடும் என்று இராமன் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=29422

எமக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு தமது விசமத்தனமான பிரச்சாரங்களை மறைமுகமாக மேற்கொள்ளும்விதம் சுப்பர்.........

தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா விமானப் படை மற்றும் சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தானிய தூதுவருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தங்களது வலிமையை வெளிப்படுத்தக் கூடும் என்று இராமன் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் பாகிஸ்தான் தூதுவர் மீது மறுபடியும் தாக்குதல்கள் மேற்கொண்டு விட்டு புலிகள் மீது பலி போடப்போகிறார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தானே இலங்கையில் இரண்டு நாடும் களம் திறந்துவிட்டார்கள்.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.