Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலையங்கம்: சிவப்பு கம்பளம் ராஜபக்சேவுக்கு.. சிறுத்தை காடு தமிழ் நிருபர்களுக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் இன்று சுப்ரபாதத்துடன் திருப்பள்ளி எழுந்துகொள்ள வேண்டிய வெங்கடாசலபதி பெருமாள், தமிழ் பத்திரிகையாளர்களின் கூக்குரலை கேட்டுதான் எட்டிப்பார்த்திருப்பார். பிரசாத லட்டு தரும் திருப்பதியில், இன்று போலீசாரின் லத்தி அடிதான் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தது. அமைதி வேண்டி பக்தர்கள் படையெடுக்கும்திருப்பதி இன்று, அதிகாலையிலேயே அல்லோகலப்பட்டது. இத்தனைக்கும் அடிப்படை காரணம் திருவாளர்., ராஜபக்சேவின் திருப்பதி வருகைதான். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த பாவத்தை கழுவவோ என்னவோ, அதிபரான பிறகு இன்றுடன் நான்காவது முறையாக திருமலை வந்து பெருமாளை தரிசனம் செய்துள்ளார் ராஜபக்சே. விவிஐபி அந்தஸ்துடன் அவரை கவனித்துக் கொண்டன மத்திய, மாநில அரசுகள்.

 

10-rajapaksa-tirup-600.jpg

ஆனால், வழக்கம்போல ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்பு கொடி காண்பிக்க கிளம்பினர் மதிமுக மற்றும் தமிழ் அமைப்பினர். ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்துவதை விடவா தமிழக ஊடகங்களுக்கு வேறு முக்கிய செய்தி இருந்துவிடப் போகிறது. எனவே தமிழ் டிவி சேனல்களை சேர்ந்த மூத்த நிருபர்கள், கேமராமேன்கள் அடங்கிய குழு திருப்பதிக்கு நேற்றிரவே சென்று சேர்ந்தது. இன்று அதிகாலை பெருமாளுக்கு நடந்த சுப்ரபாத சேவையை பார்த்து தரிசனம் செய்துவிட்டு ராஜபக்சே வெளியே வந்தபோது எங்கிருந்தோ குவிந்த மதிமுக தொண்டர்கள் கறுப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர். 100க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்தது ஆந்திர போலீஸ். பல இடங்களில் சோதனை சாவடிகளை போட்டும், லாட்ஜ் ரூம்களில் சோதனை நடத்தியும் தமிழர்களை தடுத்தோமே, எப்படி அவர்கள் ஊடுருவி வந்தனர். தமிழர்களின் சாமர்த்தியத்தின் முன்னால் நாம் டம்மியாகிவிட்டோமே என்று ஆத்திரப்பட்டது காவல்துறை.

10-rajapaksa-tirupathi-5687.jpg

 

அப்போதுதான் அந்த கொடூரம் நிகழ்ந்தது. தங்களது கையாலாகாததனத்தை தமிழ் அமைப்பினர் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் கோபமாக திருப்பினர் ஆந்திர காவல்துறையினர். தங்களது இயலாமையை வீடியோ எடுத்து உலகம் முழுவதும் தமிழ் மீடியாக்கள் காண்பித்துவிடுமே என்ற கோபத்தில் போராட்டத்தை படமெடுத்த வீடியோ காமிராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பத்திரிகையாளர்கள் அடித்து உதைக்கப்பட்டனர். நகரமே அல்லோகலப்பட்டது. பத்திரிகையாளர்களை தனி வேனிலும், தமிழ் அமைப்பினரை தனி வேன்களிலும் ஏற்றிக்கொண்டு பறந்தது ஆந்திர காவல்படை. இதில் பத்திரிகையாளர்களை மட்டும் திருப்பதிக்கு வெளியே, 8 கிலோ மீட்டர் தூரத்தில் சிறுத்தை உள்ளிட்ட கொடூர விலங்குகள் நடமாடும் வனத்தில் இறக்கி விட்டுவிட்டு போய்விட்டனர் இறக்கமற்ற போலீசார்.டிசம்பர் மாத அதிகாலை குளிரில், விலங்குகள் நடமாடும் அடர்ந்த காட்டில், தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டும் பரிதாபமாக நடந்தே திருப்பதி வந்து சேர்ந்துள்ளனர். 144 தடையுத்தரவை போட்டிருந்ததை மீறி தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்ததாக காவல்துறை கூறுகிறது. அப்பாவி பத்திரிகையாளர்கள் ஏன் அப்புறப்படுத்தப்பட்டனர் என்பதற்கு காரணம் இல்லை. சீன அரசியல் தலைவர்கள் இந்தியா வரும்போது திபெத்தியர்கள் போராட்டம் நடத்துவது வாடிக்கை. அப்போது எந்த பத்திரிகையாளரும் தாக்குதலுக்கு உள்ளானது கிடையாதே?

10-reporters-dharna-600.jpg

பத்திரிகையாளர்களையும் உரிய காரணத்துடன் அழைத்துச் சென்றிருந்தால் அவர்கள் மீது வழக்குகள் ஏன் போடவில்லை? ஏன் காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் கடும் வனத்தில் தனிமையில் விடப்பட்டனர்? பத்திரிகையாளர்கள் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் யார் பொறுப்பு? எந்த ஒரு சட்ட நடைமுறையும் இல்லாமல் காட்டில் சென்று விடுவதற்கு ஆந்திராவில் காட்டாட்சி நடக்கிறதா? அங்கு தேர்தல் நடந்ததாகவும் அதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் வந்த செய்திகள் வதந்தியா?. வழக்கமாக இந்த மாதிரி வேலைகள் 'மக்களின் முதல்வர்' ஆட்சியில் தான் நடக்கும். இப்போது, ஆந்திராவுக்கும் இந்த நோய் பரவிவிட்டது. பத்திரிகையாளர்கள் மீது நடந்துள்ளது அப்பட்டமான மனித உரிமை மீறல். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறையின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் அத்துமீறல் இன்று ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்திற்கான எதிர்விளைவுகள் தமிழகத்தில் எதிரொலிக்க தொடங்கிவிட்டன. ஆங்காங்கு தமிழ் அமைப்புகளும், பத்திரிகையாளர்களும் வீதிக்கு இறங்கிவிட்டனர். ஆந்திர வங்கி பொள்ளாச்சியில் முற்றுகைக்குள்ளாகியுள்ளது. ராஜபக்சேவின் ஆட்சி நடக்கும் இடம் மட்டுமல்ல, அவரது மூச்சு காற்றுபடும் இடத்திலும் அநீதியின் கரங்கள் ஆக்டோபஸ் போல் நீளுமோ..?

http://tamil.oneindia.com/news/editorial/editorial-attack-on-tamil-media-perons-andhra-pradesh-216717.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

mr%20(1).jpg

இந்தியாவின் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். திருப்பதி கோயிலில் வைத்து, கர்நாடகா அரசாங்கத்தால் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது. 

mr%20(2).jpg

mr%20(3).jpg

mr%20(4).jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

திருமலை: திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ள ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர போலீசார் கடுமையாக தாக்கி, அவர்களை கைது செய்தனர்.

Untitled%201%28401%29.jpg

திருப்பதிக்கு சாமிதரிசனம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே வந்தார். இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் சாமி தரிசனம் முடிந்து வந்த ராஜபக்சேவுக்கு ம.தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்டினர். அவர்கள்  மீதும் ஆந்திர போலீசார் தாக்குதல் நடத்தினர். அப்போது, இந்த சம்பவத்தையும், ராஜபக்சேவையும் சம்பவ இடத்தில் இருந்த தமிழக செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள்  படம்பிடிக்க முயன்றபோது, செய்தியாளர்கள் மீது ஆந்திர போலீசார் காட்டுமிராண்டுத்தனமாக கடுமையாக தாக்கி, அவர்களின் கேமரா, செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து உடைத்தும், அவற்றை பறித்து சென்றுள்ளனர் திருமலை போலீசார்.

மேலும் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர்களை சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகமாக இருக்கும் திருப்பதி பாபவிநாசம் பகுதியிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வேனில் கொண்டு சென்று இரவு 3 மணி அளவில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

ஆந்திர காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் தமிழக பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Untitled%202%28400%29.jpg

தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களுக்கு ஆந்திர அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=36009

 

--------------------------------------

 

 

 

 


பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் எதிரொலி: ஆந்திர வங்கிக்குப் பூட்டு!

 

 

புதுச்சேரி: திருப்பதியில் அதிபர் ராஜபக்‌ஷேவை படம் பிடிக்க முயன்ற தமிழக பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் ஆந்திர வங்கிக்கு பூட்டு போடும் போராட்டம் நடந்தது.

pondy%20andhra%20bank%20500%201.jpg

திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே சாமி கும்பிட வந்தார். அவரது வருகையை எதிர்த்து மதிமுகவினர் போராட்டம் நடத்தியபோது, அதனை படம் பிடிக்க முயன்ற தமிழக பத்திரிக்கையாளர்களை ஆந்திர போலீசார் தாக்கி கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து புதுச்சேரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

pondy%20andhra%20bank%20500%202.jpg

அப்போது புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கிக் கிளைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பத்திரிக்கையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆந்திர போலீசார் மீது மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

-ஜெ.முருகன் 

படங்கள்: அ.குரூஸ்தனம்

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=36003

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.