Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ம(ர)ணமாலை

Featured Replies

ம(ர)ணமாலை

பச்சை நிறமறியா..

இறுகிக்கிடந்த மன

வெற்றுநிலத்தில் வந்து

விதை போட்டாள்..

வெளியில் கிடந்த

விதை...இளகி..

முளைகள் விட

தன்னைப் படுத்தியே..

தண்ணீர் ஊற்றினாள்..

தன் கையைக்கீறியே..

செந்நீர் ஊற்றினாள்..

காளை மனதிலே ஈர

கங்கை பாய்ந்தது..

காதல் முளைத்தது..

காலம் இனித்தது..

பார்வையில்

உயிரைப் பகிர்ந்து

பாவையின்

மடியில் துயின்று...

இதழ்களை இதழ்களால்

இழுத்ததும்..குளித்ததும்..

இருபது விரல்களும்..

பனியில் தளிராய்..

இறுகிக்கிடந்ததும்..

ஊரை இருட்டென

ஏய்த்து

உயிருக்குள்

தீப்பந்தம் கொழுத்தி

வைத்திருந்ததும்..

தெளிந்த நீலவானில்

ஒரு விண்கல

புகையின் கோடாய்

கூட்டத்தில் காதல்

ஜோடி..கூடித்திரிந்தது..

ஐந்து வருடங்கள்

வேகவேகமாய்

சொப்பனகாலமாய்

ஓடிப்போனது...

காதலின் வெற்றி

காலம் யாவிலும்

கூடி வாழ்ந்திடும்..

கல்யாணமல்லவா..

மாலைமாற்றிட

வேளை வந்தது..

இன்னும்

வேலை தேடிடும்

காளையல்லவா..

சிறிது நாட்கள்..

கள்ளி தரிசனம்

காணவில்லையே..

காளை கலங்கித்தேடயில்

ஒரு ஓலை வந்தது...

அவளே வரைந்த

அந்தக் கடிதம்

படித்தான்..

நண்பா..

ஆ.........

மேலே படித்தான்..

ஐந்து வருடங்கள்..

தந்த றட்பினை

எந்த நாளிலும் இப்

பேதை மறந்திடாள்..

எந்தன் திருமணம்

முந்தி வருகுது..

திகதி அறியினும்..

நீ வரவேண்டாம்..

நீ வரவே வேண்டாம்..

நெஞ்சு வெடித்தனன்...

ஒடிந்து விழுந்தனன்..

உடைந்துபோயினன்..

என்ன நேர்ந்தது..

ஏது நேர்ந்தது..

என்று நோக்கிட

நாழியின்றியே..

பாவை மேலை

நாடு பறந்து போயினள்..

ஐந்து நிமிட

அழகே..அன்று

முழுவதும்..நின்றிட..

இங்கோ..

ஐந்து ஆண்டுகள்..

நெஞ்சையாண்டவள்..

பறந்து..போயினள்..

அவன் மனம்

மறக்குமா - உயிர்

நிலைக்குமா..

அவள் மணமாலை

சூடிக்கொண்டாள்

இவன் மரணமாலை

சூடிக்கொண்டான்..

(காதலில் மெய்..பொய் என எதுவும் இல்லை..

ஆண் கெட்டவர்..பெண் கெட்டவர்..என எதுவுமில்லை..

சில பெண்கள் மிக மென்மையானவர்கள்..சில பெண்கள்.. சுயநல நோக்குள்ளவர்கள்..சில ஆண்கள் தற்கொலை செய்யும் தவறை விரும்பும் கோழைகள்..மொத்தத்தில்

காதல் தெய்வீகமாவதும்..தெருப்புழுதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மாலைமாற்றிட

வேளை வந்தது..

இன்னும்

வேலை தேடிடும்

காளையல்லவா..

சிறிது நாட்கள்..

கள்ளி தரிசனம்

காணவில்லையே..

காளை கலங்கித்தேடயில்

ஒரு ஓலை வந்தது... "

என்ன தான் நடக்கிதிந்த உலகத்திலே.....

கவிதை மூலம் அறிவுரை வழங்கும் கவிஞரிற்கு என் வாழ்த்துக்கள்.

நல்ல கற்பனைவளம் விகடகவியாரே

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையா?

கற்பனையா?

கதையல்ல நிஜம்.

அப்படித்தானே விகடகவியாரே

சரி சரி இனிமேலாவது நம்பி நடவாமல் நம்ப நடவுங்க. :arrow:

காதலில் இதெல்லாம் சகயமுங்க

  • தொடங்கியவர்

"மாலைமாற்றிட

வேளை வந்தது..

இன்னும்

வேலை தேடிடும்

காளையல்லவா..

சிறிது நாட்கள்..

கள்ளி தரிசனம்

காணவில்லையே..

காளை கலங்கித்தேடயில்

ஒரு ஓலை வந்தது... "

என்ன தான் நடக்கிதிந்த உலகத்திலே.....

கவிதை மூலம் அறிவுரை வழங்கும் கவிஞரிற்கு என் வாழ்த்துக்கள்.

வாழ்க்கை அழகானது..

உலகம் அதை விட அழகானது..

மனிதனின் மனதில் வாழ்க்கையைப் பற்றியும்..

மரணத்தைப் பற்றியும்...

ஆராய்ச்சி வராத வரை..

நோயின் நிழலும்...

வறுமையின் நிழலும்

நம்மில் விழாத வரை..

காதல் யாருக்கும் வராமல் இருக்கமுடியாது..

கைகூடினால் உங்கள் வாழ்க்கையும் அழகு..

கைநழுவினால்..

ஆண்கள் கண்ணீர் பெண்ணுக்கும்..

பெண்ணின் கண்ணீர் ஆணுக்கும் அழகு..

  • தொடங்கியவர்

நல்ல கற்பனைவளம் விகடகவியாரே

வாழ்த்துக்கள்

:lol::lol::lol: காதல் என்பது..

கற்பனையோ..காவியமோ...

:wink:

:lol::lol::lol: காதல் என்பது..

கற்பனையோ..காவியமோ...

:wink:

கண் வரையும் ஓவியம் :P :wink:

  • தொடங்கியவர்

கதையா?

கற்பனையா?

கற்பனை கலந்த நிஜக்கதை :lol::lol::lol:

  • தொடங்கியவர்

கதையல்ல நிஜம்.

அப்படித்தானே விகடகவியாரே

சரி சரி இனிமேலாவது நம்பி நடவாமல் நம்ப நடவுங்க. :arrow:

காதலில் இதெல்லாம் சகயமுங்க

ஆமாங்க

காதலுல இதெல்லாம் சகஜமுங்கோ...

ஏனோ பெண்கள் நீங்கள் எவ்வளவு சகஜமா எடுத்துக்கிறீங்க..

ஆம்பளைங்க..ஏமாளிங்க..

எல்லாத்தயுமா.. ஸீரியசா எடுக்கிறோம் இல்ல..

பாவம் புள்ளை..

உன்னை லவ் பண்ணுறவன.. சகஜமுன்னு கழட்டி விட்டுறாதம்மா..

ஆமாங்க

காதலுல இதெல்லாம் சகஜமுங்கோ...

ஏனோ பெண்கள் நீங்கள் எவ்வளவு சகஜமா எடுத்துக்கிறீங்க..

ஆம்பளைங்க..ஏமாளிங்க..

எல்லாத்தயுமா.. ஸீரியசா எடுக்கிறோம் இல்ல..

பாவம் புள்ளை..

உன்னை லவ் பண்ணுறவன.. சகஜமுன்னு கழட்டி விட்டுறாதம்மா..[/

யாரங்கே!

விகடகவியாரை கைது செய்து சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யுங்கள்

ஒரு ஆறுதலுக்காக சொன்னால் என்னையே குத்திறாரே :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லையே..ஓஓஓஓஓ உண்மைகள் எப்பவும் உறைக்கத்தான் செய்யும். :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் வரையும் ஓவியம்

இப்பதானே விளங்குது அதென்னத்துக்கு மாயமா மறைஞ்சு போகிறதென்று :P .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கை அழகானது..

உலகம் அதை விட அழகானது..

மனிதனின் மனதில் வாழ்க்கையைப் பற்றியும்..

மரணத்தைப் பற்றியும்...

ஆராய்ச்சி வராத வரை..

நோயின் நிழலும்...

வறுமையின் நிழலும்

நம்மில் விழாத வரை..

காதல் யாருக்கும் வராமல் இருக்கமுடியாது..

கைகூடினால் உங்கள் வாழ்க்கையும் அழகு..

கைநழுவினால்..

ஆண்கள் கண்ணீர் பெண்ணுக்கும்..

பெண்ணின் கண்ணீர் ஆணுக்கும் அழகு..

வாழ்க்கை அழகானது..

உலகம் அதை விட அழகானது..

மனிதனின் மனதில் வாழ்க்கையைப் பற்றியும்..

மரணத்தைப் பற்றியும்...

ஆராய்ச்சி வராத வரை..

நோயின் நிழலும்...

வறுமையின் நிழலும்

நம்மில் விழாத வரை..

காதல் யாருக்கும் வராமல் இருக்கமுடியாது..

கைகூடினால் உங்கள் வாழ்க்கையும் அழகு..

கைநழுவினால்..

ஆண்கள் கண்ணீர் பெண்ணுக்கும்..

பெண்ணின் கண்ணீர் ஆணுக்கும் அழகு..

நன்றி விகடகவி, புரியாத பல விடயங்களை உங்கள் இலகு கவிவரிகள் இலகுவாகப் புரியவைக்கின்றனவே. அவை எல்லாவற்ரிலும் அழகு உங்கள் ஐந்துவரிக் கையெளுத்து.

அவர் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லையே..ஓஓஓஓஓ உண்மைகள் எப்பவும் உறைக்கத்தான் செய்யும். :roll:

என்ன உண்மை உறைக்குது? அவர் என்ன சொன்னவர் ஆ? என்னை லவ் பண்ணுறவனை சகயமுன்னு கழட்டி விட்டிடவேணாமாம். அப்போ என்னை லவ் பண்ணுறவர்களை நான் லவ் பண்ணலாமா? நான் லவ் பண்ணுறவைதான் லவ் பண்ணலாம். அதுக்காக என்னை லவ் பண்ணுற ....................... :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உண்மை உறைக்குது? அவர் என்ன சொன்னவர் ஆ? என்னை லவ் பண்ணுறவனை

அடேங்கப்பா...இப்பவே மரியாதை கொடிகட்டிப்பறக்குது. :P :P

  • தொடங்கியவர்

என்ன உண்மை உறைக்குது? அவர் என்ன சொன்னவர் ஆ? என்னை லவ் பண்ணுறவனை சகயமுன்னு கழட்டி விட்டிடவேணாமாம். அப்போ என்னை லவ் பண்ணுறவர்களை நான் லவ் பண்ணலாமா? நான் லவ் பண்ணுறவைதான் லவ் பண்ணலாம். அதுக்காக என்னை லவ் பண்ணுற ....................... :cry: :cry: :cry:

அடடா வெண்ணிலா தப்பாக எழுதிவிட்டேனா என்ன..

என் கருத்து..

காதலை சகஜமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்...

காதலை உண்மையாக உணர்ந்தால்..

வெற்றிக்காக..இறுதிவரை போராடுங்கள்..

இதைத்தான்.. கருதினேன்..

சில கருத்துகள்.. கருதியவிதம் சொல்லப்படாமல் இருப்பது சகஜம்தானே... :lol::lol::lol:

நிஜம்கலந்த உங்கள் கற்பனைக் கவிதை சிந்திக்கதூண்டுவதாக அமைகிறது.

  • தொடங்கியவர்

நிஜம்கலந்த உங்கள் கற்பனைக் கவிதை சிந்திக்கதூண்டுவதாக அமைகிறது.

ம்...

சிந்தித்து சரியான வழியில் செல்லுங்கள்...

நன்றி ரசிகா..

இதில் என்ன தப்பிருக்கு. சத்தியமாக நான் இப்பவும் டேய் வாடா போடான்னு தான் கதைக்கிறனான். மரியாதை என்பது அன்புக்கு அடுத்ததாக தான் இருக்குது நம் காதலில்.

அடடா வெண்ணிலா தப்பாக எழுதிவிட்டேனா என்ன..

என் கருத்து..

காதலை சகஜமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்...

காதலை உண்மையாக உணர்ந்தால்..

வெற்றிக்காக..இறுதிவரை போராடுங்கள்..

இதைத்தான்.. கருதினேன்..

சில கருத்துகள்.. கருதியவிதம் சொல்லப்படாமல் இருப்பது சகஜம்தானே... :lol::lol::lol:

ஓகோ! அப்படியா? அப்படின்னா சரியுங்கோ. :P

பச்சை நிறமறியா..

இறுகிக்கிடந்த மன

வெற்றுநிலத்தில் வந்து

விதை போட்டாள்..

நல்லவரிகள் - விகடகவி 8)

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

நன்றி வர்ணன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவியாரே..

மிகவம் அருமை உமது கவிதை...

கவிதையின் அர்த்தங்கள் - என்

இதயத்துள் நர்த்தனங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.