Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கு நீர் வராவிட்டாலும் இரணைமடு குளம் புனரமைக்கப்படும்; ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கினால் மாத்திரமே  புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித நிபந்தனைகளும் இல்லாது குளத்தினைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க முன்வந்துள்ளது என வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், உணவு வழங்கல், சுற்றாடல், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் பரவியுள்ளமை தொடர்பான வாராந்தக் கூட்டம் அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

1%28190%29.jpg



அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இரணைமடுக்குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள், தங்களது தேவைகளுக்குப் போதிய நீர் இல்லாத நிலையில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் எடுத்துவருகின்ற மத்திய அரசின் நீர்வழங்கல் மற்றும் வடிகால் சபையின் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றார்கள்.

இதற்கு தொலைநோக்குள்ள புத்திஜீவிகளும் ஆதரவு வழங்கவில்லை. அதனையடுத்து குறித்த திட்டத்துக்குக் கடனுதவி செய்யும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் நாம் மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைத்திருந்தோம்.

 

7%2840%29.jpg



நீர்வழங்கல் வடிகால் அமைச்சுக்கும் இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். எமது கோரிக்கைகளை ஏற்று, இரணைமடுக்குள அணைக்கட்டைப் புனரமைக்க எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி தற்போது முன்வந்துள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தில், இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் எடுத்து வருவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்திலேயே கடல்நீரில் இருந்து குடிநீரைப் பெறுவதற்கான திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மருதங்கேணி கடற்பகுதி இதற்கான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை,   சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பதையும் ஆசிய அபிவிருத்தி வங்கி கருத்தில் எடுத்துள்ளதுடன் தொடர்பான ஆய்வுகளுக்கும், சுத்திகரிப்பு முறைகளுக்கும் நிதியை ஒதுக்கியிருக்கின்றது.

மேலும்  கடல்நீரினைக் குடிநீராக்கி வழங்கும் திட்டத்தின் கீழ் நீர் பெறும் இடங்களில் ஒன்றாகச் சுன்னாகத்தையும் உள்ளடக்கியுள்ளது. இதனை மத்திய அரசின் நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.

இரணைமடு குளத்தை  புனரமைத்தல், கடல்நீரைக் குடிநீராக்குதல், யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் கழிவகற்றும் வசதிகளை ஏற்படுத்தல் ஆகிய மூன்று திட்டங்களுக்கு  390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத் தொகை பழைய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் இரட்டிப்பு மடங்காக உள்ளதுடன் இதில் பெரும் பங்கை ஆசிய அபிவிருத்திவங்கி கடனாக வழங்க முன்வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=856173723313442204#sthash.7Lqy7KAY.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.