Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தேவையா?

புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும்

உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியச்

சடங்கும் ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண் உளரீதியாகவும், உடல் ரீதியாகவும்

மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும்

பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில்

பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில்

நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில்

இருக்கிறோம்.

இந்த விஞ்ஞான யுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச்

சுூழ்நிலையில் இந்தச் சாமத்தியச் சடங்குகள் அவசியந்

தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில்

ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்ற

தான கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ

அல்லது விளக்கங்களோ எனக்கு இதுவரை சரியான

முறையில் கிடைக்கவில்லை.

பல பெரியவர்களுடன் சாமத்தியச்சடங்கு பற்றிப் பேசிப்

பார்த்த போது ஒவ்வொருவரும் சொன்ன அதற்கான

காரணங்கள், ஒவ்வொரு விதமாகவே இருந்தன.

ஆண் பெண் பாகுபாடின்றி விளையாடித் திரிந்தவளை

ஆண்களில் இருந்து பிரித்து வைப்பதற்காக..

எனது வீட்டில் ஒரு குமர் இருக்கிறாள். மணமகன்மார்

பெண் கேட்டுடுவரலாம் என்பதைத் தெரியப்படுத்து

வதற்காக..

ருதுவானால்தான் அவள் முழுமையான பெண் என்ற

உடல் ரீதியான அங்கீகாரம் சமூகத்திடம் இருந்து

கிடைக்கும் என்பதற்காக...

இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள்தான் அவளைக்

காக்க வேண்டும்'

என்று சொல்லி ஊர்மக்களிடம் பிள்ளையை

ஒப்படைப்பதற்காக...சாமத்தியச் சடங்கு நடக்கிறது.

என்றும் ஒரு புலம் பெயர்ந்த பெரியவர் சொன்னார்.

இப்படியானதொரு கருத்தைக் கேட்க...,சிரிப்பாக

இல்லை...! கற்றவர் ஆழ்ந்து ஆராய்ந்து ஆக்க

புூர்வமானதொரு கருத்தை ஆணித்தரமாகத் தருவார்

என்றுதான் எதிர்பார்த்தேன்.கருத்துக்கள

  • Replies 184
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய சடங்கு தேவைதான்

கடந்த வார பெண்கள் பக்கத்தில், இது தேவையா? என்ற தலைப்பின் கீழ், பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்திய சடங்கும் ஒன்று எனவும், அனாவசியமான எந்தவிதமான தர்க்காPதியான காரணங்களும் அற்ற இந்தச்சடங்கைக் களைவதற்கு முன்வருவோமா? என்ற கேள்வியுடன் சந்திரவதனா தனது வாதத்தை முன் வைத்திருந்தா.

இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சுூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள hPதியாகவும், உடல் hPதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் புூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அநுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டி, இனிச் சிறுமி அல்ல இளம் பெண்ணென புடவை கட்டி, பெருமை கூட்டி அவளைப் ஒரு பெண்ணாக்குகிறார்கள்.

ஏமது கலாச்சாரத்தின் பெருமையை பலர் புரிந்து கொள்வதில்லை. எம் மத்தியில் செத்த வீடு நடத்தால் கூட நாம் ஊழரளெநடடiபெ போகாமல் இருப்பதற்கு எங்கள் சமூக சடங்குகள் (கட்டி பிடித்து, வாய்விட்டளுது, ஒப்பாரி வைத்து, சாப்பாடு சமைத்து கொடுத்து, அத்திரட்டி, ஆட்டதிவசம், திவசம் என) பாதிக்ப்பட்டவரை தனித்திருக்க விடாது சடங்குகள் சமூகத்தின் நிழலில் துயர் ஆற வைக்கின்றன.

“இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள் தான் அவளைக்காக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பது” என ஒரு பெரியவர் விளக்கம் சொன்னது நகைப்புக்கு இடமாக கலாச்சாரத்தை அவமான படுதுவதாக இருந்தது எனக்குறிப்பிட்டிருந்தா.. இதில் நகைப்பதற்கு ஒன்றுமே இல்லை. சாமத்திய சடங்கின் மூலம் இன்னாருக்கு இத்தனை பிள்ளைகள், அதில் இந்த பிள்ளை வயதிற்கு வந்த பிள்ளை என அவளை வாழ்த்தும்போது அவள் உருவமும் மனதில் படிகிறது. ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து ஏதும் சிக்கலில் அப்பெண் மாட்டு படப்போகிறாள் என்று தெரியும் இடத்து அதை குடும்பத்திற்கு தெரியப்படுத்தியோ அல்லது அவளைக்கு புத்தி சொல்லியோ அவளைப் பேரிளம்பெண் பருவத்திற்கு வழி நடத்துகிறார்கள்.

இங்கு வெளிநாட்டில் நாம் இன்னும் ஆளை ஆள் சொந்த பந்தங்களைத் தெரிந்து கொள்வதே இப்படியான சடங்குகளின் மூலம்தான். முன்பு பிள்ளை பிறந்தல், 11ம்நாள் , 31ம் நாள் தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பெயர் சுூட்டுதல், ஏடு தொடக்குதல், சாமத்தியம், கொழுக்கட்டை கொடுத்தல்(நிச்சயதார்தம்), கல்யாணம், செத்தவீடு, என பலப் சடங்குகள் எம்மத்தியில் இருந்தன. இப்போ அவை எல்லாம் எதற்கும் பெண்ணியம் பேசி தாங்களும் குழம்பி எங்களையும் குழப்பும் மேதாவித்தனத்தாலோ, நேரம் இன்மையாலோ சுருங்கி ஏதோ ஓன்று இரண்டு மட்டும் நடைமுறையி;ல் உள்ளன.

அத்தோடு வெளிநாட்டு முறையிலான (கேக் வெட்டி சம்பெயின் உடைத்து) பேத்டே பார்ட்டிகள், முதலாவது, 18வது, 21வது, அதைவிட முப்பது, நாற்பது என எண்பது, தொண்ணுhறுவரையும், அத்தோடு கல்யாண நாளுகளும் அதுவிட பாபிக்கியுூ பார்ட்டி, கிறிஸ்மஸ் பாhட்;டி வெடிங் ரிசப்சன் என எல்லா புலம் பெயர் மக்களும் வயது, பால், சாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு கொண்டாடுவது பற்றி சந்திரவதனா ஒன்றுமே சொல்லாது. சாமத்திய சடங்கை மட்டும் பொய்யான திணிப்புகளின் போலிக்கலாச்சாரத்தில் பொசுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறா.

சாமத்திய வீடு ஏன் செய்கிறார்கள் என சந்திரவதனா சொன்ன அதே காரணத்தையே நானும் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கிறேன்.

1) வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக

கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்ரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக்கொண்டு இருப்பீர்களா?

ஒரு சபையில் அந்த பெரிய குடும்பத்தின் முழு வாரிசுகளையுமே காணவும், வேறு வேறு நாடுகளில் வசிப்பவர்கள் கூட இச்சந்தர்பத்தில் ஒன்று கூடவும் வாய்பாகிறது. சடங்குகளின் வீடியோ பார்த்து இரண்டு மூன்று கல்யாணங்கள் கூட சரிவந்திருக்கிறது என்றால் பாருங்களேன். எனது அனுபவத்தில் நடைபெற்ற எல்லாச் சாமத்தியங்களிலும் அப்பெணும் விரும்பி பங்குபற்றுவதை காணக்கூடியதாகவுள்ளது.

2) என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டை விடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்காக

இது சாமத்திய வீட்டுக்கு மட்டும் தான் பொருந்துமா? மனித இயல்பே மற்றவனிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி உயர்த்தி வைக்க முயல்வது தான். பேத்டே கேக்கைக் கூட மற்றவர்கள் செய்யாத புது டிசைனில் செய்வதைத்தான் விரும்புகிறார்கள்.. பாபிக்கியுூவில் அங்கை புதிதாக நண்டு சுட்டார்கள் நல்லா இருந்தது என்று சொல்வதைத்தான் மனம் வரவேற்க்கும். அது சடங்கின் பிழையா?

3) இப்படிப் பெரிதாகச் செய்யாவிட்டால் என்ன நினைப்பார்கள் என்ற போலிக்கௌரவத்திற்காக

போலிக்கௌரவம் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள் ஆகவே அது சடங்கின் தவறாகாது.

4) கொடுத்த மொய்யை திருப்பப் பெற்று கடன் கழிப்பதற்காக

அவரை விட இவர் ஆடம்பரமாக செய்கிறார்; என்று சொல்கிறீர்கள், அப்போ கொடுத்த கடனுக்கு மேலாலே அல்லவா செலவு போகும்.!

சாமத்திய சடங்கு நான் முதலே கூறியது போல, உளவியல் காரணங்களோடு, குடும்பத்தின் ஒற்றுமையை அதிகரிக்கவும் சமூக நெருக்கத்தை கூட்டவும் வழிமுறையாகுகின்றது. ஆனால் அதில் உள்ள சில இடையிட்டு நுழைந்தவைகள் தவிர்க்கபட வேண்டியவையே.

உதாரணமாக சாமத்தியத்தில் முதலில் தமிழ் முறைப்படி புடவை அணிந்து விட்டு பிறகு வடஇந்திய முறைப்படி முன்னால் தொங்கலைவிட்டு இன்னுமொரு புடவை அணிவது. (இரண்டாவது புடவையை வடஇந்திய முறைப்படி கட்டுவது இப்போ எழுதாத சட்டமாகிவிட்டது !)

சாமத்திய சடங்கில் கேக் வெட்டுவது, ஆள் உயரத்தில் ஆண்டாள் மாலை போடுவது ( வீடியோகாரும் கமராகாரரும் மேக்கப் லேடியும் சேர்ந்து சடங்கை சில இடங்களில் சடம்பமாக்கி விடுகிறார்கள்.)

இதை விட இதை ஆங்கில அகராதிக்குள் புகுந்து அப்பிடியே மொழி பெயர்க்க தேவையில்லை. Pரடிநசவல உநசநஅழலெ என்பதை யுபந யவவயinஅநவெ உநசநஅழலெ என்றோ அல்லது ளுயசநந உநசநஅழலெ என்றோ அழைக்கலாம். (இடியப்பத்தை வெள்ளைகாரன் தற்செயலாக அவித்தாலும் என்று ளுவசiபெ உழிpநச என்று அழைப்பவர்கள் அல்லவா நாம்!!)

விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பது எல்லாச்சடங்குக்குமே நல்லது. வீட்டை மீள் அடகு வைத்தோ, தகுதிக்கு மீறி கடன் எடுத்தோ, கடினப்பட்டு உழைத்த சேமிப்பெல்லாவற்றையும் செலவழித்து ஆரம்பரமாக செய்வதை தவிர்த்து கொள்வது எல்லாச்சடங்குக்குமே நல்லது. உண்மையான சடங்கை மாற்றாது, திரிக்காது சிக்கனமாகவும் சிறப்பாகவும் குடும்ப சமூக ஒற்றுமை பேணும் வகையில் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.

-சுந்தரி-

http://www.orupaper.com/issue56/london_edi...ages_K___27.pdf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமத்திய சடங்கு தேவைதான்!

கடந்த வாரங்களில் பெண்களுக்குரிய பக்கத்தில் வந்த சந்திரவதனாவின் சந்தேகங்களுக்கு விடை கிடைக்க வேண்டும். அது தர்க்கரீதியானதாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

சந்திரவதனாவின் சந்தேகத்திற்கு விடை, ஒரு ஆண்மகன் பிறக்கும் போதே விதைகளின் தொழிற்பாடு செயற்படுவதால் அவன் எந்த நேரத்திலும் விந்தினை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் பெண் கரு உற்பத்திக்கு தயாராக இருக்கும் பருவம் சாமத்திய சடங்குதான். ஆணின் வி;ந்து உற்பத்தியின் முடிவுக்காலம் இல்லை. ஆனால் பெண்ணின் கரு உற்பத்தி ஒரு குறிக்கப்பட்ட காலப்பகுதி தான். இதை சுந்தரி அவர்களும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். சிறுவர், சிறுமிகளுடன் ஓடித் திரிந்து விளையாடிய சிறுமிக்கு வறிய நாடுகளாகிய எங்கள் நாட்டில் சீதனம் என்ற பதம் நடைமுறையில் இருப்பதால், பெற்றோர்கள் அந்த சிறுமிக்கு சாமத்திய சடங்கு மூலம் வாழும் வழிமுறைகளைக் கற்று கொடுப்பதோடு கூடித் திரிந்து விளையாடிய சிறுவர் சிறுமிகளிடத்து வேறுபடுத்திக் காட்டுவதுடன் உற்றார் உறவினர் அயலவர் அனைவர்க்கும் இவளுக்கு இனி பாதுகாப்புத் தேவை என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த சாமத்திய சடங்குகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் இல்லாததினால் தான் எத்தனை சிறுமிகள் முதல் கருவிலேயே கர்ப்பம் தரித்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள் என்பதை சந்திரவதனா உணரவேண்டும். உலகிலேயே மிகச் சிறிய வயதில் குழந்தையை பெற்றது என்றால் அது இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் தான. எந்தளவிற்கு மருத்துவ வசதிகள் இருந்தும் இந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் இப்படி குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் என்றால் வளர்ச்சியடைந்து வரும் எங்கள் நாட்டில் எப்படி இருக்கும்? இதற்காகத்தான் எமது இன மக்கள் எமது பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.

வீடியோ என்பது பொதுவாக எல்லா வைபவங்களுக்கும் எடுப்பது நன்று. ஏனெனில் ஒரு நாளில் நடக்கும் விடயம் அதை எப்போதுமே பார்த்து சந்தோசமாக இருக்கவும் அந்த வைபவத்திற்கு சமூகமளிக்காதவர்கள் பார்ப்பதற்கும் நன்று என்பதால் எடுக்கப்படுகிறது.

மற்றது சுந்தரி அவர்கள் கூறிய ஒரு விடயம். இந்த வெளிநாடுகளில் இப்படியான வைபவங்களை சந்திரவதனா குறைகூறவில்லையே என்று சில சம்பிரதாயங்களை எடுத்து கூறினார். இந்த வைபவங்களில் திருமணம் என்ற ஒரு விடயத்தில் எனக்கு ஒரு சந்தேகம். திருமண வீடன்று எழுத்தும் நடக்கிற வைபவத்தில் பந்தி இருத்தும்போது மாமிச உணவு பரிமாறப்படுவதில்லை. சைவ உணவுதான் பரிமாறப்படுகிறது. அதே இடத்தில் எழுத்திற்கு கேக் வெட்டி உணவாக பரிமாறுகிறார்களே. அதுதான் விளக்கமில்லை. ஏன் இந்த இரட்டை வேடம்?

மற்றது சந்திரவதனாவின் புரியாத புதிர் ஒன்றை முன்னைய இதழில் கேட்டிருந்தா. அதாவது நம்ம ஊர் காதல் மட்டுமா காதல் என்று கேட்டு. அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தா. நம்ம ஊரில் பேசி செய்யப்பட்ட திருமணங்களால் எத்தனையோ பெண்கள் துன்பங்களை சுமந்து கொண்டு விவாகரத்துப் பெறாமல் வாழ்கிறார்கள் என்றும் காதலித்து திருமணம் செய்தவர்களும் துன்பப்பட்டு வாழ்கிறார்கள் என்றும் கூறியிருந்தா. அதேநேரம் இங்கு நீண்டகாலமாக ஒருவரோடு பேசி அவரைப் புரிந்துகொண்டு திருமணம் செய்து நீண்டகாலமாக வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தா.

இந்த நாடுகளில் எத்தனை காதலை விவாகரத்து செய்து புதுப் புதுக் காதலை உடன் தேவைகளுக்காக வளர்க்கிறார்கள் தெரியுமா? ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டு விட்டால் அதை ஒரு சாட்டாக வைத்து புதிய காதலை உருவாக்குகிறார்கள் தெரியுமா? சந்திரவதனா கூறிய கலந்து பேசி காதலிக்கிறார்கள் என்பது பொய். இங்கு கண்டதும் காதல் ஒன்று. காசு இன்னொன்று, கார், பங்களா, இன்னொன்று உடலமைப்பு. இவைகளைக் கண்டதும் காதல். இங்கு வெள்ளையினப் பெண்கள் கறுப்பின ஆண்களை கூடுதலாக நாடுவது ஏன்? கலந்து பேசிய காதலா? தயவுசெய்து எங்கள் நாட்டு கலாச்சாரத்தை இங்கே ஒப்பிடாதீர்கள். அந்த கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் மனம் தளரக்கூடாது. தரமான கேள்விகளை கேட்டு தரமான பதில்களை மக்களுக்கு உரைத்து நல்ல சமுதாயம் மலர வைப்பீர்களாக.

“கிளியின் கண் ஊரான்”

http://www.orupaper.com/issue57/pages_K__37

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உஹூம்.. உது பெண்கள் சமாச்சாரம். நான் உதுக்கு பதில் சுட்டுப்போட்டாலும் சொல்ல மாட்டன். ஏனெண்டா பிறகு டிஸ்கிறிமினேஸன் எண்டு சாஜ் பண்ணுப்பட விருப்பமில்லை.

உஹூம்.. உது பெண்கள் சமாச்சாரம். நான் உதுக்கு பதில் சுட்டுப்போட்டாலும் சொல்ல மாட்டன். ஏனெண்டா பிறகு டிஸ்கிறிமினேஸன் எண்டு சாஜ் பண்ணுப்பட விருப்பமில்லை.

ஹா ஹா என்ன பிரின்ஸ் அண்ணா இவ்வளவு பயமா? தங்கை சப்போர்ட்டுக்கு இருக்கு அப்புறம் என்ன துணிஞ்சு சொல்லுங்கோ உங்கள் கருத்தை :wink: :lol::lol:

கோபிதா இவ்வளவும் வாசிச்சு இப்ப பதில் சொல்ல ஏலாது ஆறுதலா வாசிச்சு இதைப் பற்றி பதில் சொல்லுறன். ஒகே இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு பேப்பரில் தற்போது நடைபெற்றுவரும்

ஓரு தலை போகிற

விவாதம் :!:

இத் தேவை

தேவை தானா?

:roll: தேவையில்லையா? :roll:

ஓ..அல்லது...எமக்கு இப்போ..நேரமில்லையா??? :lol: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கேள்விகள், சந்தேகங்கள் கேட்டவர்களுக்கும், அதற்கு விளக்கம் சொன்னவர்களுக்கும் வணக்கம்.

தயவு செய்து தயவு செய்து, நீங்கள் எல்லாம் வயது வந்தவர்கள், அனுபவசாலிகள், இப்படியான கேள்விகள் சந்தேகங்களை கேட்பது தவறு. அதுவும் நமது கலாச்சாரத்தை மற்றைய கலாச்சாரத்துடன் ஒப்பிடுவது தவறு. நீங்களே இப்படி சந்தேகங்களை எழுப்பினால், புலத்தில் பிறந்து வளரும் நமது எதிர்கால சந்ததி எப்படி உருவாகும். ஒரு கலாச்சார சடங்கை தவறு அல்லது தேவை தானா என்று பெரியவர்கள் கேட்டால், எதிர் காலத்தில் நமது கலாச்சாரம் அழிந்து போவதற்கு வழி கோலும், சந்திரவதனா அவர்கள் எழுதி இருந்ததை வாசிக்கும் போது அது சரியாகவே என் மனதில் பட்டது. ஏனெனில் சுந்தரியினதும் கிளியின் கண் ஊரானினதும் விளக்கங்களை வாசிக்கும் வரை எனக்கு சாமத்திய சடங்கு எதற்கு செய்கின்றார்கள் என்று தெரியாது.

விஞ்ஞான காலம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது விஞ்ஞான காலம் தான். ஆனால் ஒன்றை நினைத்துபாருங்கள்... சீனர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களது கலாச்சாரங்களை கொண்டாட்டங்களை சீனாவில் எவ்வாறு கொண்டாடுகின்றார்களோ அதே சிறப்புடன் கொண்டாடுவதை காணக்கூடியதாக இருக்கும்.... இந்த விஞ்ஞான யுகத்த்தில்..... விஞ்ஞான உலகை ஆழப்போகின்றார்கள்... பொறுத்திருந்து பாருங்கள்...

மற்றையது காதல்.... மேலை நாடுகளில் காதல் இல்லை.. வெறும் மோகம்...கிளியின் ஊரான் சொன்னது போல, கலந்து பேசி காதலிப்பது என்பது பொய். ஒரு உறவை கலத்து பேச முடியாது... கலந்து பேசி வியாபாரம் தான் செய்யலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உஹூம்.. உது பெண்கள் சமாச்சாரம். நான் உதுக்கு பதில் சுட்டுப்போட்டாலும் சொல்ல மாட்டன். ஏனெண்டா பிறகு டிஸ்கிறிமினேஸன் எண்டு சாஜ் பண்ணுப்பட விருப்பமில்லை.

தங்கை ரசிகை துணையிருக்க பயமேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஙரழவநசிறீ"சுயளமையi"ஸஜஙரழவநசிறீ"Pசiளெ"ஸஉஹூம்.. உது பெண்கள் சமாச்சாரம். நான் உதுக்கு பதில் சுட்டுப்போட்டாலும் சொல்ல மாட்டன். ஏனெண்டா பிறகு டிஸ்கிறிமினேஸன் எண்டு சாஜ் பண்ணுப்பட விருப்பமில்லை.ஜஃஙரழவநஸ

ஹா ஹா என்ன பிரின்ஸ் அண்ணா இவ்வளவு பயமா? தங்கை சப்போர்ட்டுக்கு இருக்கு அப்புறம் என்ன துணிஞ்சு சொல்லுங்கோ உங்கள் கருத்தை :றiமெ: :னு :னு

கோபிதா இவ்வளவும் வாசிச்சு இப்ப பதில் சொல்ல ஏலாது ஆறுதலா வாசிச்சு இதைப் பற்றி பதில் சொல்லுறன். ஒகே இணைப்புக்கு நன்றிஜஃஙரழவநஸ

உங்கள் ஆறுதலான ஆழமான பதிலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் :lol:

:idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea: :shock: :shock: :shock: :shock:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித வாழக்கை வட்டத்தில் பிறப்பு, யௌவனப்பருவம் எய்துதல், மரணம் எனபன உட்பட அடையாளம் காணக்கூடிய நிகழ்வுகளை வைபவங்கள் மூலம் கொண்டாடி மகிழும் வழக்கம் ஆதி காலந்தொட்டு உள்ளது. குறிப்பாக ஆசிய ஆபிரிக்க யுத கலச்சாரங்களில் உள்ளது. யுூத- கிறிஸ்தவ பண்பாட்டில் வந்த ஐரோப்பியரிலும் இது நடைமுறையில் இருந்ததோ தெரியவில்லை.

இந்தவகையில் பராயம் எய்துவதை கொண்டாடும் பழக்கம் தமிழரைப்போல யுூதர்களிடமும் இன்னமும் இருக்கிறது. நாளடைவில் மாறி வரும் நாகரிகத்தில் அவை குறைந்து போயின. குறிப்பாக நகரப்புறங்களில் வாழ்பவரிடம் அருகி வருகிறது. இதில் பெண்ணடிமைத்தனம் ஏதும் இருப்பதாக தெரியாவிட்டாலும் இதனை பெண் அடிமைத்தனத்தின் வடிவமாக மேற்கத்தைய (அ)நாகரிகத்தில் மூழ்கியிருக்கும் சில பெண்ணியவாதிகள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

சிலவருடங்களுக்கு முன்னர் போராட்டத்தில் தமிழ்பெண்களின் பங்கு என்பது பற்றி ஒரு விரிவுரையாற்றிய ராதிகா குமாரசாமி லண்டனிலும் புலம்பெயரந்த நாடுகளிலும் தமிழர்கள் சாமத்திய சடங்குகள் செய்வதை சுட்டிக்காட்டி தமிழ் பெண்கள் இன்னமும் விடுதலையடையவில்லை என குறிப்பிட்டிருந்தார். பொதுவாகவே கிராமத்து பழக்க வழக்கங்களை படித்தவர்கள் மற்றும் மேட்டுக்குடியினரும் விமர்சிப்பது வழக்கம் அந்த வகையில் இந்தச் சடங்கும் விமர்சிக்கப்படுகிறது.

புலம் பெயரந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் இனப்பிரச்சினையின் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள். அவர்கள் வேறுபட்ட சமூக பொருளாதார தளத்திலிருந்து வந்தவர்கள். கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் நகரப்புறங்களிலிருந்து வந்தவர்களைப்போல் தங்களது பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுப்பதில்லை. அந்த வகையில் இந்தச்சடங்கும் கொண்டாடப்படுகிறது.

இங்கு நடைபெறும் வைபவங்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட இளம்பெண் உட்பட பெண்களின் புூரண விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது. ஆகவே பெண்ணடிமைத்தனம் என்று கூறுவதற்கு எதுவுமில்லை.

வெறுக்கத்தக்க வி;டயம் என்னவென்றால் இந்த வைபவங்கள் வெறுமனே பகட்டுக்கு செய்யும் சங்கதியாகி விட்டது. இதனால் பணம் வீணாக விரயம் செய்யப்படுகிறது. பண்பாடு பழக்க வழக்கம் என்பதற்கு பதிலாக இவை ஒரு சினிமாத்தனமான போலியாக மாறிவிட்டது.

சாமர்திய சடங்கு குறித்து முன்பும் களத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன. அதில் ஒரு தலைப்பை கீழே இணைக்கின்றேன் படித்து பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=235

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசி என்ன படம் மட்டும்தானா:?: :?: :!: :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இப்பிடி சொல்கிறீர் :shock: :shock:

அப்போ இப்ப எந்த பக்க ஆசனத்தில் :?: :wink: :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கேள்விகள்இ சந்தேகங்கள் கேட்டவர்களுக்கும்இ அதற்கு விளக்கம் சொன்னவர்களுக்கும் வணக்கம்.

தயவு செய்து தயவு செய்துஇ நீங்கள் எல்லாம் வயது வந்தவர்கள்இ அனுபவசாலிகள்இ இப்படியான கேள்விகள் சந்தேகங்களை கேட்பது தவறு. அதுவும் நமது கலாச்சாரத்தை மற்றைய கலாச்சாரத்துடன் ஒப்பிடுவது தவறு. நீங்களே இப்படி சந்தேகங்களை எழுப்பினால்இ புலத்தில் பிறந்து வளரும் நமது எதிர்கால சந்ததி எப்படி உருவாகும். ஒரு கலாச்சார சடங்கை தவறு அல்லது தேவை தானா என்று பெரியவர்கள் கேட்டால்இ எதிர் காலத்தில் நமது கலாச்சாரம் அழிந்து போவதற்கு வழி கோலும்இ சந்திரவதனா அவர்கள் எழுதி இருந்ததை வாசிக்கும் போது அது சரியாகவே என் மனதில் பட்டது. ஏனெனில் சுந்தரியினதும் கிளியின் கண் ஊரானினதும் விளக்கங்களை வாசிக்கும் வரை எனக்கு சாமத்திய சடங்கு எதற்கு செய்கின்றார்கள் என்று தெரியாது.

விஞ்ஞான காலம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது விஞ்ஞான காலம் தான். ஆனால் ஒன்றை நினைத்துபாருங்கள்... சீனர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களது கலாச்சாரங்களை கொண்டாட்டங்களை சீனாவில் எவ்வாறு கொண்டாடுகின்றார்களோ அதே சிறப்புடன் கொண்டாடுவதை காணக்கூடியதாக இருக்கும்.... இந்த விஞ்ஞான யுகத்த்தில்..... விஞ்ஞான உலகை ஆழப்போகின்றார்கள்... பொறுத்திருந்து பாருங்கள்...

மற்றையது காதல்.... மேலை நாடுகளில் காதல் இல்லை.. வெறும் மோகம்...கிளியின் ஊரான் சொன்னது போலஇ கலந்து பேசி காதலிப்பது என்பது பொய். ஒரு உறவை கலத்து பேச முடியாது... கலந்து பேசி வியாபாரம் தான் செய்யலாம்.

சும்மா...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி :lol:

சீனர்கள் அவர்களது உணவுமுறையையும் மொழியையும் கூட விடமாட்டார். இரு சீனர்கள் சந்தித்தால் அவர்களின் மொழியில் தான் கதைத்து கொள்வதை காணமுடிகிறது :idea:

நீங்கள் என்ன சொல்;கிறீர்கள் எமது கலாச்சாரங்களையும் கொண்டாட்டங்களையும் அப்பிடியே தொடர்ந்தும் கொண்டாடவேண்மும் என்றா..உங்கள் அகராதியில் காதல் எப்பிடி இருக்க வேண்டும் என்று சும்மா சொல்லுங்கள்... :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கேள்விகள்இ சந்தேகங்கள் கேட்டவர்களுக்கும்இ அதற்கு விளக்கம் சொன்னவர்களுக்கும் வணக்கம்.

ல் காதல் இல்லை.. வெறும் மோகம்...கிளியின் ஊரான் சொன்னது போலஇ கலந்து பேசி காதலிப்பது என்பது பொய். ஒரு உறவை கலத்து பேச முடியாது... கலந்து பேசி வியாபாரம் தான் செய்யலாம்.

சும்மா...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி :lol:

சீனர்கள் அவர்களது உணவுமுறையையும் மொழியையும் கூட விடமாட்டார். இரு சீனர்கள் சந்தித்தால் அவர்களின் மொழியில் தான் கதைத்து கொள்வதை காணமுடிகிறது :idea:

நீங்கள் என்ன சொல்;கிறீர்கள் எமது கலாச்சாரங்களையும் கொண்டாட்டங்களையும் அப்பிடியே தொடர்ந்தும் கொண்டாடவேண்மும் என்றா..

வணக்கம் கோபிதா, உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிகின்றேன்.

அதற்கு முன்னர் ஒரு சிறிய அனுபவத்தை சொல்ல நினைக்கின்றேன். 2002 ம் ஆண்டு நீண்ட காலத்தின் பின்பு யாழ்ப்பாணத்துகு தரைவழியாக சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட அனுபவம். இலங்கையில் எல்லைகளைக் கடந்து, ஈழத்தின் வரிக்கட்டுப்பாடு சோதனைச்சாவடி. எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழ் மட்டுமே. அதை விட நாம் சென்ற வாகனத்தை பதிவதற்காக ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. அந்தப்படிவம் ஜப்பானிய பயண அனுபவங்களை நினைவு படுத்தின. படிவம் முற்றிலும் தமிழில் இருந்தது. நான் ஒரு கணம் திகைத்து விட்டேன். காரணம் அந்த படிவத்தில் அடிச்சட்டக இலக்கம் என்க்கேட்கப்பட்டிருந்தது. நான் அறிந்திராத சொல்லாக இருந்தாலும் ஊகிக்க கூடியதாக இருந்தது. அப்போது ஜப்பானியரின் மொழிக்கொள்கையைப்போல ஈழத்திலும் இருப்பதாக தோன்றியது. ஜப்பானியர்கள் அவர்களது அந்த கொள்கையால் அடைந்த நன்மைகள் பல. எந்த ஒரு வேற்று நாட்டு மொழி ஆதிக்கமும் இல்லாமல் உலக சந்தையில் கோலோச்சினார்கள்... காரணம் அவர்கள் திறமையோடு அவர்கள் வேற்று கலாச்சாரங்களுக்கும் மொழிப்பரவல்களுக்கும் இடங்கொடுக்காமையுமேயாகும்.

நாம் ஜப்பானியர்களுக்கோ சீனர்களுக்கோ சிறிதும் சழைத்தவர்கள் அல்ல. சில ஜப்பானிய மற்றும் சீன நண்பர்களே இதனைத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் நம்மில் பலர், வேற்று கலாச்சார மோகத்திலும், வேற்று மொழிகளின் பேர் கொண்ட ஆர்வங்களிலும் நேரத்தையும் திறமைகளையும் காட்ட முன் நிற்பதால் எம்மால் சாதனைகள் பல செய்து நமக்கென ஒரு இடம் பிடிக்க முடியவில்லை. ( ஈழத்தில் இருப்பவர்கள் சாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது)

ஒரு முக்கியமான் விடயம், நான் அறிந்த வரை, குடியேற்ற நாடுகாளாகிய கனடா, ஆஸ்திரேலியா தவிர்ந்த அனேக நாடுகளில் இன்றும், ஒவ்வொரு மனிதனையும் அவனது வம்சாவளியினை சுட்டிக்காட்ட சொல்கின்றார்கள். முக்கியமாக படிவங்களில். ஒரு 3 வாரங்களின் முன்னர் நடந்த உண்மைச்சம்பவம். ஒரு இந்திய வம்சாவளிப்பெண் தனது படிவம் ஒன்றில் ஆங்கிலேயர் என் பதிவு செய்ததை எதிர்த்தார்கள். அந்தப் பெண் சொன்ன காரணம். அவர் இங்கிலாந்தில் பிறந்தவர், இந்தியா எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.. நான் எப்படி இந்தியர் ஆவேன். ஆன போதிலும் இந்திய வம்சாவளி என்று பதிந்த பின்னர் தான் அந்த படிவம் முழு மனதுடன் ஏற்றுக்க்கொள்ளப்பட்டது.

ஆக நாம் என்ன தான் கலாச்ச்சாரதினை மாற்றினாலும் எங்கு சென்று வாழ்ந்தாலும் நமது வம்சாவழி மாறப்போவது இல்லை.

ஒரு மனிதனை, அவனது கலாச்சார பழக்க வழக்கங்கள், மொழி, வம்சாவழி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு, தமிழர், ஆங்கிலேயர், ஒல்லாந்தர், சீனர் என அழைக்கின்றோம். எமது கலாச்சார பழக்கவழக்கங்களை நாம் தொடராது விட்டால், இன்று புலத்தில் உருவாகிய எமது சந்ததியின் நிலை இன்னும் ஒரு சில வருடங்களில் இது தான். ஒரு வம்சாவழி, இன்னொரு அல்லது கலந்து பட்ட ஒரு கலாச்சாரம், வேற்று மொழிப்பாவனை. இது தான் அவர்களின் வாழ்க்கை முறையாக இருக்கும். ஆக இன்னும் சில காலத்தில் நமது சந்ததியினை எப்படி அழைப்பது? கலாச்சாரத்தை தொடராத நமது சந்ததியினை பார்ப்பவர்களை இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ண வைக்கும். அது புதியதொரு இனத்தினை உருவாக்கும் ( பல நாடுகளின் எல்லைகளில், பல புதிய இனங்க்கள் தோன்றி இருக்கின்றன். பெயர்கள் வாயில் கூட நுழைய கஸ்டமாக இருக்கின்றன) . ஆக நீங்கள் சுயமாக சிந்தித்து செயல்ப்படுங்கள்.

என்னுடைய அகராதியில காதல் என்பதுக்கு சும்மா ஒரு விளக்கம் குடுத்து இருக்கின்றன். அதை அப்படியே இங்கு தருகின்றேன். தப்பாக இருந்தால் அடிக்க வராதீர்கள்.

உண்மைக்காதல் அழியாது என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றன்..... அது என்ன உண்மை பொய் என்று எனக்கு தெரியவில்லை.

ஒரு மனைவி கணவனிடமும், ஒரு கணவன் மனைவியிடமும் சந்தர்ப்ப சூழ் நிலைக்களுக்கு ஏற்ற மாதிரி உறவு முறையினை வளர்க்க வேண்டும் .(சந்தர்ப்பவாதிகளாக அல்ல) அதாவது ஒரு அன்னையாக அல்லது தந்தையாக, நண்பனாக அல்லது நண்பியாக, காதலனாக அல்லது காதலியாக, ஒரு நல்ல ஆசானாக இருக்க வேண்டும். கணவன் அல்லது மனைவி ஒரு தப்பு செய்தால், அன்னையாக அல்லது தந்தையாக அல்லது நண்பனாக அல்லது நண்பியாக எண்ணி, அந்த தப்பு எதிர்காலத்தில நடக்கா வண்ணம் அறிவுரை கூறி அல்லது அன்புக்கட்டளை இட்டு வாழ வேண்டும். இப்படி வாழும் கணவன் மனைவிக்கு இடையில் அல்லது காதலன் காதலிக்கு இடையில் இருப்பது தான் காதல்.... இதில நல்ல காதல் கெட்ட காதல், உண்மைக்காதல் பொய்க்காதல் எல்லாம் இல்லை.....

ஒரு முக்கியமான் விடயம், நான் அறிந்த வரை, குடியேற்ற நாடுகாளாகிய கனடா, ஆஸ்திரேலியா தவிர்ந்த அனேக நாடுகளில் இன்றும், ஒவ்வொரு மனிதனையும் அவனது வம்சாவளியினை சுட்டிக்காட்ட சொல்கின்றார்கள். முக்கியமாக படிவங்களில். ஒரு 3 வாரங்களின் முன்னர் நடந்த உண்மைச்சம்பவம். ஒரு இந்திய வம்சாவளிப்பெண் தனது படிவம் ஒன்றில் ஆங்கிலேயர் என் பதிவு செய்ததை எதிர்த்தார்கள். அந்தப் பெண் சொன்ன காரணம். அவர் இங்கிலாந்தில் பிறந்தவர், இந்தியா எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.. நான் எப்படி இந்தியர் ஆவேன். ஆன போதிலும் இந்திய வம்சாவளி என்று பதிந்த பின்னர் தான் அந்த படிவம் முழு மனதுடன் ஏற்றுக்க்கொள்ளப்பட்டது.

வணக்கம் சும்மா குறுக்கிடுவதற்க்கு மன்னிக்கவும்

சுவிற்சலாந்திலும் நீங்கள் பிரஐாவுரிமை பெற்றால் சுவிற்சலாந்தவர் எண்டு தான் பதியனும் இலங்கை வம்சாவளி எண்டு பதிய இயலாது ஏனெனில் சுவிற்சலாந்து பிரஐாவுரிமை உங்கள் கைகளில் கிடைத்த மறுநிமிடம் உங்கள் இலங்கை பிரஐாவுரிமை கையை விட்டு போய்விடும்

(சிலர் சொல்கிறார்கள் 2உம் வைத்திருக்கலாம் எண்டு நான் கேட்டதுக்கு சொன்னார்கள் தக்கவைக்க இயலும் எண்டு ஆணால் பாவனை செய்ய ஏலாது எண்டு வம்பர் தான் சொல்லனும் பதிலை)

சும்மா உங்கள் தலைப்பை குளப்புவதாக என்ன வேண்டாம்

நன்றீ

வணக்கம்

:oops: :oops: :oops: :oops: :oops:

உண்மைக்காதல் அழியாது என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றன்..... அது என்ன உண்மை பொய் என்று எனக்கு தெரியவில்லை

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

மகனே காதலித்து இருக்கிறீரா ????

இல்லையாாாா அப்ப அத முதலில செய்யும்

:evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

மகனே காதலித்து இருக்கிறீரா ????

இல்லையாாாா அப்ப அத முதலில செய்யும்

யோவ் சின்னப்பு சார் இப்ப்டி மொட்டையா சொன்னா எப்படி அதற்கு வழியும் பண்ணிக் கொடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சும்மா குறுக்கிடுவதற்க்கு மன்னிக்கவும்

சுவிற்சலாந்திலும் நீங்கள் பிரஐாவுரிமை பெற்றால் சுவிற்சலாந்தவர் எண்டு தான் பதியனும் இலங்கை வம்சாவளி எண்டு பதிய இயலாது ஏனெனில் சுவிற்சலாந்து பிரஐாவுரிமை உங்கள் கைகளில் கிடைத்த மறுநிமிடம் உங்கள் இலங்கை பிரஐாவுரிமை கையை விட்டு போய்விடும்

(சிலர் சொல்கிறார்கள் 2உம் வைத்திருக்கலாம் எண்டு நான் கேட்டதுக்கு சொன்னார்கள் தக்கவைக்க இயலும் எண்டு ஆணால் பாவனை செய்ய ஏலாது எண்டு வம்பர் தான் சொல்லனும் பதிலை)

சும்மா உங்கள் தலைப்பை குளப்புவதாக என்ன வேண்டாம்

நன்றீ

வணக்கம்

:oops: :oops: :oops: :oops: :oops:

சின்னப்பு வணக்கம்.

பிரஜாவுரிமை, வம்சாவளி, இனம் என்பன வெவ்வேறு. பிரஜாவுரிமை அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கும் நாட்டினது இறைமைகளுடனும் சம்பந்தப்பட்டது.

பிரஜாவுரிமை Nationality

வம்சாவளி Ethnic Origin

இனம் Race

ஒரு உதாரணம், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், பிரித்தானியாவில் 3 மொழிகள் இருந்தன. ஆங்கிலம், வெல்ஸ், கேலிக். கேலிக் என்ற மொழி காலப்போக்கில் இல்லாமல் போய் விட்டது.. இன்றும் சிலர் பிரித்தானியாவின் வடக்கு தீவுகளில் பேசுகின்றார்கள்.

ஆங்கிலம் பேசுபவர்கள் ஆங்கிலேயராகவும், வெல்ஸ் பேசுபவரை வெல்ஸ் என்றும், கேலிக் பேசியவரை ஸ்கொட்டிஸ் என்றும் அவர்களுடைய கலாச்சார பழக்க வழக்கங்களினதும் மொழியின் அடிப்படையிலும் அழைத்தார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் பிரித்தானிய பிரஜைகள் தான். சின்னப்பு... ஸ்கொட்டிஸ் காரர்கள், அதாவது ஆண்களின் கலாச்சார உடை கில்ட் என்று பெயர். நம்மூரில் நமது பெண்கள் போடும் முழங்கால் அளவு பாவாடை போல இருக்கும்... அதில ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அதனை அணியும் போது, உள்ளாடை அணிவது கிடையாது. அது அவர்களின் உடை சம்பந்தமான கலாச்சாரம். இன்றும் கூட திருமணங்களுக்கு அந்த கில்ட் தான் அணிகின்றார்கள்.... நாம் சூட்ஸ் போடுறம்...இல்லை என்றால்... என்னவோ குர்த்தாஸ் என்ற ஒன்றை அணிகின்றோம்.

உங்களுடைய பிரதான பிரஜாவுரிமையின் நாட்டின் சட்டத்துக்கு அமைய இரண்டு பிரஜாவுரிமையை இருக்காலாம். உதாரணத்துக்கு நீங்கள் இலங்கை குடியுரிமையை விரும்பினால், இலங்கைக்கு சென்று, குடியுரிமை பெறலாம் உங்கள் தற்போதைய குடியுரிமையை பொறுத்து, பணம் வேறு படலாம். எந்த ஒரு பிரஜாவுரிமை உடையவரும் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெறலாம், அத்தோடு தனது பிரஜாவுரிமையையும் தக்க வைக்கலாம். residentship or second home என்று சொல்லுவார்கள். நாட்டுக்கு நாடு பெயர் மாறுபடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

மகனே காதலித்து இருக்கிறீரா ????

இல்லையாாாா அப்ப அத முதலில செய்யும்

:evil: :evil:

கேள்வியையும் கேட்டு பதிலையும் நீங்களே சொல்லிட்டு...செய்ய வேண்டியதை மட்டும் என்னை செய்ய சொன்னால் எப்படி சின்னா...... :oops: :oops: :cry: :cry: :cry:

எனக்குதெரியாத விசயம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சின்னப்பு சார் இப்ப்டி மொட்டையா சொன்னா எப்படி அதற்கு வழியும் பண்ணிக் கொடும்

பாருங்க கறுப்பி....சின்னா இப்படி நடு றோட்டில விட்டிட்டார்...... ஆசையைக்காட்டி மோசம் பண்ணுற மாதிரி இருக்கு....... யாரும் கிடைத்த்திருந்தால் லவ் பண்ணாமல் விட்டிருப்பேனா......... நானே கவலையில இருக்கின்றன்... இதுக்குள்ள சின்னப்பு வேற......

சின்னப்புக்கு இப்ப 60ம் கலியாணமாம் சும்மா இவரிட்டை கேளும் கலியாணத்தை பற்றி அதுவு காதல் கலியாணத்தை பற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.