Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

500 தீவிரவாதிகள், தூக்கிலிடப்படுவர்: பாகிஸ்தான் அரசு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22-1419216802-hang-6-600.jpg

 

500 தீவிரவாதிகள் அடுத்தடுத்து தூக்கிலிடப்படுவர்: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு.

 

இஸ்லாமாபாத்: தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் 500 பேர் இனிவரும் 2 அல்லது 3 வாரங்களில் தூக்கிலிடப்படுவர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

 

தீவிரவாதிகளின் கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்ட்டன. இதனால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் மொத்தம் 500 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட உள்ளனர்.

 

இப்படி தூக்கிலிடுவதால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தப் போரில் நிச்சயம் நாங்கள் வெல்வோம்.

 

இவ்வாறு நிசார் கூறினார்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் பதிலடி: பாகிஸ்தானில் மேலும் 4 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்!

 

பைசலாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல முயன்ற வழக்கில் 4 தீவிரவாதிகள் நேற்று தூக்கிலிடப்பட்டனர். பெஷாவர் தாக்குதலுக்குப் பின்னர் 6 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

 

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தெஹ்ரிக் இ தலிபான் இயக்க தீவிரவாதிகள் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 148 பேர் பலியாகினர்.

 

இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தூக்கு தண்டனை மீதான தடையை பாகிஸ்தான் அதிரடியாக ரத்து செய்தார். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டு அறிவித்தார் நவாஸ் ஷெரீப்.

 

இந்த அறிவிப்பையடுத்து பாகிஸ்தான் முழுவதும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் 3 ஆயிரம் தீவிரவாதிகளை 48 மணிநேரத்தில் தூக்கிலிட வேண்டும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி கோரிக்கை விடுத்தார். பாகிஸ்தான் அதிபரும் தம் பங்குக்கு தம் முன் நிலுவையில் இருந்த தீவிரவாதிகளின் கருணை மனுக்களை அடுத்தடுத்து நிராகரித்தார்.

 

இந்நிலையில் 2009-ம் ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையிடத்தை தாக்கிய அகீல் என்கிற டாக்டர் உஸ்மான், 2003-ம் ஆண்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தாக்குதல் நடத்திய அர்ஷத் முகமது ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று பைசலாபாத் சிறையில் தூக்கில் போடப்பட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பை கொல்லும் நோக்கில் கடந்த 2003-ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல் நடத்திய வழக்கில் ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த அக்லாஸ் அஹமது(எ) ரூஸி, குலாம் சர்வார், ஜுபைர் அஹமது, ரஷித் டிப்பு ஆகிய 4 பேரும் நேற்று அதே பைசலாபாத் சிறைக்குள் தூக்கிலிடப்பட்டனர்.

 

இதில் அக்லாஸ் அஹமது(எ) ரூஸி ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாட்டு குடியுரிமை பெற்றிருந்தவன். இதனால் இவனை தூக்கிலிட வேண்டாம் என்று ரஷ்யா முறைப்படி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பாகிஸ்தான் இதனை நிராகரித்து தூக்கிலிட்டது.

 

இதே பைசலாபாத் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 30 தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் அடுத்தடுத்த நாட்களில் தூக்கிலிடப்படக் கூடும் என்று தெரிகிறது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

http://tamil.oneindia.com/news/international/four-convicts-musharraf-attack-case-executed-faisalabad-217505.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சுளகு தனக்குத் தனக்கு என்றால் படக்குப் படக்கும் என்னுமாம், அப்படித்தான் பாகிஸ்தானின் நிலை. ஆனால் பயங்கரவாதம் தண்டிக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பயங்கரவாதிகளை உருவாக்கியது மதபோககர்களும்,ஆத்மீக தலைவர்களும்,அரசியல்வாதிகளும்தான்....ஆனால் அவர்கள் இப்ப சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்... உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட இளைஞர்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள் ஆசிய கண்டத்தில் ஏன் கொத்து கொத்தாக இவ்வளவு பயங்கரவாதிகள் உருவாகின்றார்கள் என்பதை சர்வதேச அமைப்புக்கள் விசாரனை செய்யவேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு கேடானவற்றை 

மக்களுக்கு தீங்கு விளைவிப்பனவற்றை வளரவிட்டார்கள்

வளர்த்தும் விட்டார்கள்

 

இன்று அவை பல்கிப்பெருகி

இவர்களையே நாசம்  செய்யத்தொடங்கியதும்

எலிகளை

கொசுக்களை அழிப்பதுபோல்  கொல்கிறார்கள்...

ஆனால் காலம் கடந்த ஞானம்.. :(

இது சிறீலங்காவுக்கும் பொருந்தும் :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.