Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தகத் திருவிழா 2015 : தவறவிடக் கூடாத புத்தகங்கள்

Featured Replies

தவறவிடக் கூடாத புத்தகங்கள்: சந்தி பிரிக்கப்பட்ட பாரதி

 

spb_2254053f.jpg

பதிப்பாசிரியர்: பழ.அதியமான் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…

 
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகிவிட்ட பாரதி கவிதையில் அவர் என்ன நவீனமான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் இன்றைய நவீன வாசகனுக்குப் பொருள் தெரியாத சொற்கள் அதிகமாக இருக்கின்றன. பழந்தமிழ்ச் சொற்கள், தமிழாகிய சம்ஸ்கிருதச் சொற்கள், சித்தாந்த சொற்கள், சென்ற நூற்றாண்டில் மிகுதியும் பயன்படுத்தி, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள் என அவை பலவாறு அமையும்.
 
பழந்தமிழ் சொற்களில் சில அல், எல், அளி, முரல், வாலை, நால்வாய், தூத்திரை என்பன சில சான்றுகள். தமிழாகிய சம்ஸ்கிருத சொற்களில் சில கன்னன் (கர்ணன்), வன்னக் களஞ்சியம் (வர்ணக்களஞ்சியம்) போன்றன. தொடக்க காலத்தில் கர்ணனை, தமிழாக்கி கன்னன் என்றெழுதிய பாரதி பின்னால் பாஞ்சாலி சபதத்தில் கர்ணன் என்றே குறிப்பிடுகிறார் (150). சித்தாந்த சொற்கள் அத்துவாக்கள், கரணம், கைதவம் முதலியன. சென்ற நூற்றாண்டில் மிகுதியாகப் பயன்பட்டு, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள். அவையாவன: நவை, நசை, மிசை, நிருதர், கரிசகல், நொய்ம்பு, மொய்ம்பு.
 
நூறாண்டு கடந்த பின்னரே பாரதிக்குப் பொருள் எழுத வேண்டியிருக்கிறது என்று எண்ண வேண்டியதில்லை. பாரதியே பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்துக்குப் பொருள் விளக்கமும் குறிப்புகளும் எழுதி வைத்துள்ளார். அக்குறிப்புகள், இப்பதிப்பில் அவ்வவ் இடத்தில் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஓரிரண்டு.
 
மலர் விழிக் காந்தங்கள் காந்தத்திற்குரிய கவர்ச்சித் தொழில் செய்து கொண்டிருக்கும் (மாதர்) விழிகள். உரியோர் பந்துக்கள் (பந்துகளுக்கு உறவினர் என்று பொருள் கொடுக்க வேண்டியது இன்றைய நிலைமை), கதலி ஒருவகை மான்.
 
இந்தப் பதிப்பு யாருக்கு?
 
பாரதி கவிதைகளை இக்காலத் தலைமுறையினரும் வெகு சரளமாக படிக்க இப்பதிப்பு வசதி செய்துள்ளது. சந்தியின் இருப்பால் சரளமாகப் படிக்க இயலாதவர்கள் இனி வேகமாகப் படித்துச் செல்ல முடியும். பாரதியின் தமிழைப் பொருள் புரிந்து நுணுக்கமாகப் படிக்க இப்பதிப்பு உதவி புரியும். பாரதி ஆய்வில் ஈடுபடுவர்களுக்கும் பாரதியை மொழி பெயர்ப்பவர்களுக்கும் இப்பதிப்பு உதவும்.
 
என் மகள் ஆழி அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் காலை நான் படித்துக்கொண்டிருந்த பாரதி பாடலைப் பக்கத்தில் வந்து நின்ற அவளை எதேச்சையாய் வாசிக்கச் சொன்னேன். அவளால் வாசிக்க முடியவில்லை. அவள் வாசிக்குமாறு பாரதியை எழுதித் தருவதாக அப்போது உறுதி அளித்தேன். பள்ளி இறுதிக்குள்ளாவது முடித்துத் தருவதாகச் சொன்ன நான் அவளது மூன்றாண்டுக் கல்லூரி கல்வி நிறைவுறும் சமயம் வாயில் நுரை தள்ள அப்பணியை முடித்து அவள் கையில் தருகிறேன். இனி அவள் தடுமாறாமல் படிக்கக்கூடும் ஆயிரமாயிரம் இளைய தமிழ்த் தலைமுறையுடன் இணைந்து.
 
ரூ. 750 மதிப்புள்ள இந்த நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 490-க்குக் கிடைக்கும். இந்தச் சலுகை ஜனவரி 5, 2015 வரை மட்டுமே.
 
தொடர்புக்கு: காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
 
தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com, chennai@kalachuvadu.com
 
  • தொடங்கியவர்

தவறவிடக்கூடாத புத்தகங்கள்: தமிழ்த் தாத்தாவின் முன்னுரைகள்

 

sami_2254055f.jpg

 

உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்களின் தனிச்சிறப்பு அவற்றில் இடம்பெற்ற முன்னுரைகள் என்பதில் சந்தேகமில்லை. பதிப்பாசிரியர் ப.சரவணன் உ.வே.சா. முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாகப் பதிப்பிக்கவிருக்கிறார். காலச் சுவடு பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் இந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் கொடுத்த அணிந்துரையிலிருந்து சில பகுதிகள் இங்கே…

 
உ.வே. சாமிநாதையரின் முன்னுரைகள் பெரும் தகவல் களஞ்சியங்களாகவும் ஆவணத் தன்மை கொண்டவையாகவும் விளங்குகின்றன. அவை பலதரப்பட்டவை. நூற்செய்திகள் அனைத்தையும் ஒருசேரக் கொடுத்துவிடும் முன்னுரைகள் உண்டு. தமிழ்விடு தூது நூலுக்கான முன்னுரை அதற்கு பொருத்தமான சான்று. தூது இலக்கணம் தொடங்கி தமிழ் விடு தூதின் பொருளைச் சுருக்கித் தருதல் எனத் தொடர்ந்து பதிப்பு சார்ந்த விஷயங்களைப் பேசி முடிகிறது அது. பல சிறு நூல்களுக்கு இத்தகைய முன்னுரைகள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலான சிற்றிலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றின் முன்னுரைகள் இத்தன்மையவை. சில பொதுச் செய்திகளையும் பதிப்புத் தகவல்களையும் மட்டும் கொடுக்கும் முன்னுரைகள் இன்னொரு வகை. சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்டவற்றின் முன்னுரைகளை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். இத்தகையவற்றில் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் என விரிவான பகுதி தனியே எழுதப்பட்டிருக்கும்.
 
அவர் பதிப்பித்த நூல் பட்டியலைக் காணும்போது சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் பதிப்பித் தவர் சாதாரணமான புராணங்களையும் சிற்றிலக்கியங் களையும் பதிப்பிக்க ஏன் முனைந்தார் என்று தோன்றும். அந்நேரத்தைச் சிறந்த நூல் ஒன்றைப் பதிப்பிக்கச் செலவிட்டிருக்கலாமே என்றும் எண்ணம் வரும். அகநானூற்றைப் பதிப்பிக்க எண்ணியுள்ளார். கம்பராமாயணத்தைப் பதிப்பிக்கும் எண்ணமும் இருந் துள்ளது. இம்முன்னுரைகளை வாசிக்கும்போது சாதாரண நூல்களைப் பதிப்பிக்க அவர் நேரம் செலவிட அவசியம் நேர்ந்துள்ளது எனப் புரிகிறது. அவர் நபர்களையும் மரபான நிறுவனங்களையுமே சார்ந்து தம் பணிகளைச் செய்ய முடிந்தது. அச்செயல்பாட்டில் ஒருவரின் வேண்டு கோளை ஏற்று அதற்காக ஒரு சாதாரண நூலைப் பதிப்பிக்க நேர்ந்திருக்கிறது.
 
தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு முறையாக எழுதப்பட இவற்றில் பல தரவுகள் உள்ளன. ஏடுகளின் குடிவழி அறிவதற்கு அவர் ஏடு தேடிய இடங்கள், குடும்பங்கள், புலமை மரபினர் பற்றிய பல்வேறு தகவல்கள் சான்றாகும். பதிப்பை உருவாக்கவும் அதை அடுத்தடுத்து மேம்படுத்தவும் அவர் கையாளும் முறைகள், அவற்றைக் கற்றுக்கொண்ட செயல்கள், நாடிய உதவிகள், பின்னிணைப்புகளின் அருமையை உணர்ந்த பாங்கு ஆகியவற்றைக் கண்டறியலாம். தமிழ் நூல் பதிப்புகளுக்கென உள்ள தனித்தன்மைகளை விரிவாக இவை கொண்டிருக்கின்றன. ஒரு நூலின் முன்னுரையில் அடுத்து அவர் பதிப்பிக்க உள்ள நூல் பற்றிய விவரத்தை வெளிப்படுத்துவது உண்டு. அதன் தேவையும் அப்படிப்பட்ட பதிப்பு மரபு ஒன்றையே அவர் உருவாக்கியமையும் முக்கியமானவை.
 
ரூ. 1000 மதிப்புள்ள இந்த நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 650-க்குக் கிடைக்கும். இந்தச் சலுகை ஜனவரி 5, 2015 வரை மட்டுமே.
 
தொடர்புக்கு: காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
 
தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com, chennai@kalachuvadu.com
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டும் தானா ????

  • கருத்துக்கள உறவுகள்

BarathiBook.jpg

பல காலமாக உரிய முறையில் அணுகப்படாது பல அறிஞர்களாலும் வேதாந்த

விளக்கங்கள் கொடுக்கப்பட்ட பாரதியின்; குயில்பாட்டின் உள்ளர்த்தம் அவரது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளே, அந்த வாழ்க்கைப் பின்னணியையே வேதாந்தத்தின் துணைக்கொண்டு பூடகமாகப் பாரதி கொடுத்துள்ளார் என்பது வரிக்குவரி இந்நூலில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் கடந்த 2010 செப்டம்பர் முற்பகுதியில் சென்னையில் அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனால் ஆய்வுரை செய்யப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டபோது அவரால்: 'இதுவரை குயில் பாட்டை யாரும் இவ்வகையில் அணுகி அறுதியானவோர் விளக்கத்தை அளிக்கவில்லை. ஆசிரியரே இதனை முதன் முதலாகக் கூறியுள்ளார். பாரதி இலக்கியத்தின் மகுடத்திற் சூட்டப்பட்டவோர் வைரமாக இந்நூல் திகழ்கிறது' என்ற பாராட்டையும் பெற்றுக்கொண்டது. பக்கங்கள்:165

ISBN: 978-81-89748-90-6
1A Rookery Close
Colindale
London, NW9 6QJ.
Tel: 0208-200 4651, 07932627864
Email:karunanandarajah@yahoo.co.uk

 

Edited by karu

  • தொடங்கியவர்

கவனிக்க வேண்டிய புத்தகங்கள் : வன்னி நிலத்தின் விரிவான ஆவணம்

 

 

vanni_2255055h.jpg
 
வன்னி நிலத்தின் விரிவான ஆவணம்
 
இலங்கைத் தமிழர்களின் தாயகப் பகுதியாகக் கருதப்படும் வன்னி நிலத்தைப் பற்றிய விரிவான ஆவணம் இந்தப் புத்தகம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வன்னி நிலத்தில் வாழ்ந்த மனிதர்கள்பற்றிய பதிவு என்று தொடங்கி, வன்னிப் பகுதியின் தொல்லியல் மையங்கள், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மீன்பிடித் தொழில், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலை, அப்பகுதியின் வனப் பகுதிகள், வன்னி இலக்கியப் பதிவுகள், வன்னி சிறுதெய்வ வழிபாடுபற்றிய தகவல்கள் என்று ஏராளமான விஷயங்களின் தொகுப்பாக இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது.
 
வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், ஜெயமோகன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. நார்வேயில் வசிக்கும் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் தனது கடும் உழைப்பின் மூலம், இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார். இந்தப் புத்தகம், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியைப் பற்றிய விரிவான அறிமுகத்தை வாசகர்களுக்குத் தரும்.
 
வன்னி: வரலாறும் - பண்பாடும் 
பதிப்பாசிரியர்: கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம், 
பக்கங்கள்: 655, விலை: ரூ. 900, 
கிடைக்குமிடம்: குமரன் பப்ளிஷர்ஸ், 
நெ.3, மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, சென்னை - 600 026.
 
 
வியர்வை உடல்களின் வேர்கள்
 
அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 18-ம் நூற்றாண்டில் அடிமைகளாக விற்கப்பட்டு, அமெரிக்க நிலத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள். அங்கு கிடைத்ததெல்லாம், உயிரை உடலில் தக்க வைத்துக்கொள்ளப் போதுமான உணவு மட்டும்தான்.
 
வசைகள், சித்தரவதைகள் என்று பல்வேறு துன்பங்களுக்கு இடையில் பணிசெய்ய அமர்த்தப்பட்ட பரிதாப உயிர்கள் அவர்கள். அப்படி, மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக வேலைபார்க்க நேர்ந்த குண்டா கின்டே என்பவரின் வழிவந்த ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவர், தனது மூதாதையரின் கிராமத்தைத் தேடிச்சென்று அவர்களது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார்.
 
அதுதான் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம், 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
 
 
vergal_2255054a.jpg
வேர்கள் 
 
அலெக்ஸ் ஹேலி, தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன், 
பக்கங்கள்: 910, விலை: ரூ. 999.
 
மறக்கப்பட்ட பேரரசரின் சரித்திரம்
 
கி.மு. 304-ல் பிறந்த அசோகச் சக்ரவர்த்தி கி.மு. 270 முதல் கி.மு. 233 வரை, இந்தியாவின் தென் பகுதி நீங்கலாக மொத்த நாட்டையும் ஆண்டவர். ‘சாலை ஓரங்களில் மரத்தை நட்டார்’ என்ற அளவில் அவரைப் பற்றிய அறிமுகம் நம் அனைவருக்கும் பரிச்சயம். அசோகரின் வாழ்க்கை, இந்தியாவின் பேரரசராக அவரது வரலாறு, புத்த மதத்தைத் தழுவியதற்கான காரணம், பயணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், வெளிநாடுகளிலும் புத்த மதத்தைப் பரப்ப அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்று பல்வேறு தகவல்களுடன் விரிவான புத்தகமாக வெளிவந்திருக்கிறது, ‘பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’.
 
ஆங்கிலோ இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி. இந்த வரலாறு நேர்க்கோட்டில் அல்லாமல், பல்வேறு காலகட்டத்தில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இருப்பது வாசகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்.
 
 
asokan_2255057a.jpg
பேரரசன் அசோகன் 
 
சார்ல்ஸ் ஆலன், எதிர் வெளியீடு, 
தமிழில்: தருமி, பக்கங்கள்: 496, விலை: ரூ. 400
 
மேற்கண்ட இரண்டு நூல்களையும் வெளியிட்டவர்கள்: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002. தொலைபேசி: 04259-226012, 98650 05084.
 
அ. மார்க்ஸ் புத்தகங்கள்
 
 
marx_2255056a.jpg
சோவியத்துக்குப் பிந்தைய உலகம்
 
அரபுலக எழுச்சிகள் தொடர்பாகத் தான் எழுதிய புத்தகத்துக்குப் பின்னர், உலக அரசியல்பற்றி எழுதியிருக்கும் புத்தகம் இது என்று அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இடதுசாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள், வால்ஸ்ட்ரீட் போராட்டம், காஸா பிரச்சினை உள்ளிட்ட விஷயங்கள் இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அ. மார்க்ஸ் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…
 
“90-களில் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையில் இருந்த அரசுகள் பொலபொலவெனச் சரிந்தன, இரு துருவ உலகம் ஒரு துருவ உலகமாக மாறும் நிலை ஏற்பட்டது, ‘கம்யூனிசப் பயங்கரவாத’த்தின் இடத்தில் ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ கட்டமைக்கப்பட்டது முதலியன அடுத்தடுத்த நிகழ்ச்சிகளாயின. சோஷலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சியின் இன்னொரு பக்கம் உலகமயமும் தாராளமயமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் அவர்கள் உரிமை கொண்டாடியதுபோல உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்கின.”
 
பக்கங்கள்: 166, விலை: ரூ. 130,
 
இராணுவமயமாகும் இலங்கை
 
இலங்கையில் 2009-ல் நடந்த இறுதிக் கட்டப் போருக்குப் பின்னர் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக அ. மார்க்ஸ் எழுதியிருக்கும் புத்தகம் இது. 2011-13 காலச் சூழலில் அசுரவேகத்தில் ராணுவமயமாகி வரும் இலங்கையின் நிலை, 13-வது சட்டத்திருத்தத்தின் அபத்தங்கள், கொழும்புவில் அமைச்சர்களைவிட அதிக அதிகாரத்துடன் வளையவரும் ராஜபக்ச குடும்பம் உள்ளிட்ட பல விஷயங்களை இந்தப் புத்தகம் பேசுகிறது.
 
பக்கங்கள்: 88, விலை: ரூ. 70,
 
கரையும் நினைவுகள்
 
காத்திரமான அரசியல், சமூக விமர்சனக் கட்டுரைகள் எழுதும் சமூக ஆர்வலராக வாசகர்களால் அறியப்பட்ட அ. மார்க்ஸ், தனது அனுபவ நினைவுகளின் தொகுப்பாக எழுதியிருக்கும் புத்தகம் இது.
 
‘இரவு 11 மணி வாக்கில் ஓய்வான, குதூகலமான, உள்நோக்கிய சிந்தனைவயப்பட்ட தருணங்களில்’ தனது வலைப்பூ, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றிய அனுபவக் குறிப்புகளைப் புத்தகமாக்கியிருக்கிறார் அ. மார்க்ஸ். அனுபவக் குறிப்புகள் என்றாலும், அ. மார்க்ஸின் அலாதியான நடையால் படைப்பிலக்கியத் தன்மை கொண்டதாக இருக்கிறது இந்த நூல்.
 
பக்கங்கள்: 144 , விலை: ரூ. 115,
 
இந்த மூன்று புத்தகங்களையும் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தொடர்புக்கு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 600 018, தொலைபேசி: 91-44-24993448, மின்னஞ்சல்: uyirmmai@gmail.com
 
 

 

  • தொடங்கியவர்

book56_2256141f.jpg
 

சகாயம் செய்த சகாயம், பள்ளிப் பருவம், மோடி அரசாங்கம், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும் ஆகிய புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்.

 

 

book1_2256144a.jpg

book2_2256146a.jpg

book2_2256146a.jpg

book3_2256147a.jpg

book4_2256143a.jpg

 
 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

kavani3_2277499g.jpg

  • தொடங்கியவர்

kavani4_2278533g.jpg

 

gavani5_2279407g.jpg

  • தொடங்கியவர்

top_5_2281611g.jpg

 

 

top5_jan19_2282517g.jpg

 

 

enna_2283433g.jpg

 

 

  • தொடங்கியவர்

enna_2284473g.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.